ஏப்ரல் 02, 2012

செய்யக் கூடியதும் கூடாததும் ...



உண்டதும்  தூங்கலாமா?
கூடாது .

உண்டதும் பாலுறவு  கொள்ளலாமா?
கூடவே கூடாது .

உண்டபின்  குளிக்கலாமா?
கூடாது

உண்டபின் குளிர்ந்த நீர்   அருந்தலாமா?
கூடாது .

உண்டபின்  இனிப்பும் , பழவகைகளும்  எடுக்கலாமா?
கூடாது .

பால் அருந்தி  அறுசுவை உணவு உண்ணலாமா?
 கூடவே கூடாது

பகலில் தூங்கலாமா ?
கூடாது .

எண்ணெய் குளியல் செய்யாமல்  வெந்நீரில்  குளிக்கலாமா?
கூடவே கூடாது .

நண்பகலில்  தேன் அருந்தலாமா?
கூடவே கூடாது .

மீன் பொருட்கள் உண்டபின்  பால்  பொருட்கள் எடுக்கலாமா?
கூடவே கூடாது .

கோடையில்  மிக குளிர்ந்த நீரும் பனி காலத்தில்  வெந்நீரும்  அருந்தலாம?
கூடாது .

முதல் நாள் செய்த உணவை அமுதாக  இருந்தாலும்  உண்ணலாமா?
கூடவே கூடாது

பாலுக்குப் பின்  பழம் அருந்தலாம?
கூடவே கூடாது .(விதிவிலக்கு  பேரிட்சை )

இயற்க்கை  (சமைக்காத)  உணவையும்  சமத்த உணவையும்  எடுக்கலாமா?
கூடாது.

இரண்டுவகை  பழங்களை  ஒரே நேரத்தில் எடுக்கலாமா?
கூடாது.

இரண்டுவகை  கீரைகள் ஒருசேர  எடுக்காலாமா?
கூடாது.

அலுமினிய  ஏனத்தில் சமைத்து உண்ணலாமா?
கூடாது .

விலையில்லா(இலவச  ) மது அருந்தலாமா ?
கூடவே கூடாது .

மூன்று  வேலைக்கு மேல்  உண்ணலாமா?
கூடவே கூடாது .

More than a Blog Aggregator

மார்ச் 26, 2012

வாயுத் தொந்தரவு வரிசை 3




    தூய்மையில்லாத  உணவுகளும்  மொச்சை , காராமணி,  பட்டாணி , சோயாமொச்சை , கிழங்குகள் , போன்றவைகள்  முறைதவறி  தவறாக  உண்ணப்பட்டால் இவைகள்  நீண்ட  நேரம் குடலில் தங்கிமட்கி  அங்கு ஒருவித  வளியை(காற்றை)  உற்பத்தி செய்கிறது . இந்த உணவுகளை  துணை  உணவுகளுடன்  அதாவது  சுக்கு , மிளகு,  இஞ்சி , எண்ணைவகைகள் போன்றவற்றுடன்  எடுக்கும்போது  பெரும்பாலும்  சிக்கலை உண்டாக்குவதில்லை .

     இயல்பாகவே  மனிதன்  நாள் ஒன்றுக்கு  இரண்டு  முறை  ஈற்று உணவை (மலம் ) கழிக்கச்  செய்ய வேண்டும்.  இந்த  நடைமுறை  தவறும்போது மனிதன் நோயாளியாகிறான்.  மனிதனின்  பதிமூன்று  வேகங்களை  வலுக்கட்டாயமாக  அடக்குவதால்  வலிந்து  நோயைத்  தழுவு  கிறான். இதயம் தொடர்ந்து  தொழிற்ப்படும்போது  அதன் பாதையில் எந்த  குறுக்கீடும் இருக்கலாகாது  அனால் வலுக்கட்டாயமாக  குடல்  காற்று அழுகை,  கண்ணீர் , சினம்  , ஈற்றுணவு  , இப்படி  அடக்குவதால் இதயத்தின் பதை  மாறிப்போகிறது  இதயம்  சிரமப் படுகிறது. 

        இன்று  நமது வாழ்க்கை  முறையும்  உணவு முறையும்  மாறித்தான் போனது  இப்போது நமது உணவை  தீர்மானிப்பது முட்டாள்களின்  பெட்டி  யாகிவிட்டது  முட்டாள்களின் பெட்டி ? (டிவி ) இந்த தொலைகாட்சி  களில் ஒரு விளம் பரம் வந்துவிட்டால்  அதுதான் தமிழர்களுக்கு  பொன்னான  நாள்  தமிழன்  திரைப்படங்களையும்  இந்த முட்டாள்  பெட்டி  களையும்  விட்டொழித்து  என்று  அறிவைத்  தேட புறப்படுவானோ? குறிப்பிட்ட உணவின்  தன்மை என்ன  எந்த அளவிற்கு  அது உடலை பாதிக்கிறது எந்த  கேட்டை  உண்டக்குகியது  என்ற  அடிப்படை  அறிவைக்கூட  பெறாதவன்  ஆசிரியராகவும்   ஆட்சியாளராகவும்  இருந்து தொலைக்கிறான் . கேடு நிகழ்வதே    இங்குதான் . முறையான  உணவுகளைத்  தேடுவோம் .முறையனவர்களை ?  தேர்வு ? செய்வோம்??????


      புட்டியில்  அடைக்கப் பட்ட பளபளப்பான  பன்னாட்டு  நிறுவங்களின்   தயாரிப்புகளான  கோக் , பெப்சி  போன்றவை  மனிதன் இதயத்தையும்  சிறுநீரகத்தையும்   செய்யும்  கேடுகள் எண்ணிலடங்கா  இவற்றை விட்டொழிப்போம்  நோய் நீங்கி வாழ்வோம் . சித்த மருத்துவத்தையும்  காப்போமே ?

சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator

மார்ச் 19, 2012

வாயுத் தொந்தாரவு வரிசை 2


        இன்றைய  சூழலில் இந்த  வாயுத் (குடல் கற்று )  தொந்தரவு  பல்வேறு நோய்களை  தோற்றங் கொள்ளச்  செய்கிறது என கடந்த இடுகையில்  பதிவு செய்து இருந்தேன் . இன்றைய உணவுமுறை  அப்படியாகி விட்டதன் காரணத்தை  நாம் அறிந்து கொண்டுதான்  தீரவேண்டும் .முதலில் உணவுமுறை ஒரு கட்டுக்கடங்காத நிலையில்  நம்  வைத்து இருக்கிறோம் . அறிவைத் தேடி  அதன் அடிப்படையில்  நமது வாழ்வை  கட்டமைப்பதில்லை . உணவைத்தேடி  உண்பதில்லை  முறையான வாழ்வு , உணவுமுறை, வாழ்க்கைமுறை  எப்படி பாட்டதாக இருக்கவேண்டுமென  ஒரு வரைபடத்தை வகுத்துக் கொள்வதில்லை. அல்லது  அதுபற்றி  தேடலும் இருப்பதில்லை  இதுதான் இன்று நோயாக பரிமாணம் அடைந்து மனிதத்தைக்  கொல்லுகிறது.

           வறட்சி நிறைந்த  உணவுகள்  குடலில்  ஒருவித நைப்புத் தன்மையை உண்டாக்குவதில்லை  இதனால்  குடலில்  செரிக்கும் தன்மை குறைதல் ,குடல் பலவீனம் அடைதல் கழிச்சல் காணுதல்  குடல் கற்றுத் தொந்தரவு என பலவேறு  நோயாக வந்து சேருகிறது . வறட்சி நிறைந்த உணவுகள் என்பது எலுமிச்சை  , தக்காளி , இப்படியான பொறிக்கப்பட்ட  உணவுகளும்  துரித  உணவுக்களுமான  இந்த உணவுகள்  குடலில்  நைப்புத்தன்மையை  உண்டாக்குவதில்லை  இந்த உணவுகளை தொடர்ந்து  உண்பதால்  குடல்  கட்டுப் பட்டை இழக்கிறது . முன்பே சொன்ன மாதிரி  பல நோயாக பரிமாண மற்றம் அடைகிறது.

     பழந்தமிழரின்  முந்தய உணவு முறையை  கடைபிடிக்கமையால்  பலவேறு நோய்களையும்  கேட்டுப் பெறுகின்றனர். குறிப்பாக சுவையை உண்டாக்கும்  எண்ணையில்  பொறிக்கப்பட்ட  உணவுகள் சில கிழங்குகள்  துரித உணவுகள் 
எல்லாமே வறட்சியைத்  தரும் உணவுகள் என கண்டோம் பருப்பு வகைகளும்  இன்று  முறையில்லாமல்  முறையாக பதப் படுத்தாமல்  உணவில் சேர்ப்பதால்   நோய் உண்டாகிறது என்பதையும் கணக்கில்எடுத்துக்  கொள்ளவேண்டும் . முளை  கட்டி பயன்படுத்தப் படும்  பருப்பு வகைகள்  செரிப்பதற்கு நீண்ட  நேரம் எடுத்துக்  கொள்வதில்லை  உணவுத்துனுக்குகள்  குடலில் நீண்ட நேரம் தங்குவதால்   பலவேறு  நோய்கள்  தோற்றம் கொள்ளுகிறது செரிப்பதற்கு எளிமையான உணவுகளை  நாம் எடுக்க வேண்டும்  இப்படி  முறைப்படி  உணவு திட்டத்தை  வகுத்துக் கொள்வதால்  நோயில் இருந்து விலகி இருக்க  முடியும் . முளைகட்டாமையால்பருப்பு  வகைகள்  அதும் புரதம்  நிறைந்த பருப்பு உணவுகள்   உண்ட உணவு நீண்டநேரம்  குடல் பகுதியில்  தங்கி அழுகி  அங்கு ஒருவித  வளியை(காற்றை ) உற்பத்தி செய்கிறது . இதுதான்  பலருக்கு சங்கடத்தைக் தருகிறது .  பலமருத்துவ  வல்லுனர்கள்  இந்த குடல் காற்று உணவின் வழி  செல்லும்  காற்று என  புரியாமல் பாவம் பிதற்றக் கேட்டு இருக்கிறேன்    அவர்களை விடு விடுவோம் . நாமும்  சரியானவர்களை  முதன்மைப் படுத்த பழகுவோம் .மீண்டும்   அடுத்த பதிவில்  சிந்திப்போம்  அதுவரை ....

சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...