மே 02, 2011

நரம்பு தளர்ச்சியா (இஸ்டீரீயா) பேய் பிசாசா?




இப்போது ஊர் புறங்கள் முதல் பட்டணம் வரை நோய்கள் கண்டுவிட்டால் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் முன் மூடபழக்கவழக்கங்களை நாடும் பழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பழமை என்பது அறிவர்கள் (சித்தர்கள் ) கண்டதுஅறிவர்களின் இந்த காலம் சித்தமருத்துவத்தின் பொன்னுலகம் எனலாம். மனித இனத்தின் மருத்துவ மறுமலர்ச்சி யின் காலமான இந்த காலத்தில்தான் அறிவியல் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நின்றன. இவர்கள்தான் அறிவியல் அடிப்படையில் நோய்களை இனங்கண்டனர்.

வளர் இளம் பருவம்.

மனித இனத்தின் முகாமையான காலம் என்றால் துள்ளித்திரியும் விடலைபருவம்தான் எனலாம். அந்த காலம் உன்னதமான வசந்த காலம் . இந்த காலத்தில் தான் முறையான சரிவிகித உணவு தேவை குறிப்பாக பெண்குழந்தைகள் எனில் கூடுதல் கவனிப்பும் கூடுதல் உணவுகளும் தேவை . அப்படி இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் நோயுடன் கூடிய போராட்டம் தான் எனலாம்.




சரிவிகித உணவுகள்

இதற்கான சரிவிகித உணவுகள் என தனியான எனது இடுகை காண்க ... இந்த விடலைபருவத்தில் பதின் பருவத்திலும் முறையான வழிகாட்டலும் நேரிய வாழ்கை முறையும் முறையான ஊட்டமுடன் கூடிய உணவுகளும் தேவை.தரமான தவச (தாணிய உணவுகள் ) கீரைகள், பழங்கள் , கொழுப்பு நிறைந்த கொட்டைகள் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் . இதனுடன் எரிச்சல், பதற்றம் , போராட்டம் போன்ற உளவியல் போராட்டம் பெண் குழந்தைகளிடம் காணப்பட்டால் இந்த உளவியல் போராட்டங்களும் நோய்களை உண்டாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். பல்வேறு நோய்களை போலவே நரம்பு தளர்ச்சி நோயும் உண்டாகி விடலை பருவபெண் குழந்தைகளை நோவில் ஆழ்த்து கிறது.




நரம்பு தளர்ச்சியா ? பேயா ?

முறையான உணவுகளும் முறையான வாழ்க்கை முறையும் கொண்டிராத பதின்பருவத்தினார் குறிப்பாக பெண்குழந்தைகள் நரம்புதளாச்சி நோயாளி யாகின்றனர் . இந்த நோயை இனங்கான முடியாத மேதாவிகள்? பெண்குழந்தை களின் எதிர்காலத்தை கேள்விகுறியாகிறனர் . அறியாமையில் உள்ள பெற்றோர்கள் இதை பேய் , பிசாசு ,காட்டேரி, முனி, கன்னி , என தங்கள் அறிவிற்கும் ? அறியாமைக்கும் ஏற்றபடி பெயரை இட்டு அழைகிறனர்.

அறியாமையில் உழல்பவர்களே ...

இப்படி பேய் பிசாசுகளும் இருப்பது உண்மை என்றால் பல்வேறு வகையில் கொலைக்கு உள்ளாகிறவர்கள் எவரும் பேயாக மாறி கொன்றவரை பயமுறுத்தி அல்லது அவரை கொன்றதாக வரலாறு இல்லை . குறிப்பாக எடுத்து கொள்ளுவோம் . ஈழத்தில் பல இலட்சம் பேரை படுகொலை செய்தான் சிங்களவன். எந்த சிங்களனையும் பேயாக மாறி பழிவாங்க வில்லை அல்லது கொன்று அழிக்கவில்லை. இதிலிருந்து தெரிவது யாதெனில் பேய் என்பது மூடத்தமானது முட்டாள் தனமானது எண்பது தெளிவாகலாம்.

அறியாமையில் உழல்கிறவர்கள்...

நரம்பு தளர்ச்சிக்கான காரணங்களை நீக்கி நோயை வென்றெடுக்க ஆங்கில முறை மருத்துவத்தில் மருந்துகள் இல்லை அதனால் நோய்க்கான காரணங்களை அவர்கள் வேறுவிதமாக திசை திருப்பி விடுகின்றனர் . இந்நோய்கள் கண்டவர்களை பாவப்பட்டவர்களாக பாவிக்கின்றனர் . ஆனால் தமிழ மருத்துவத்தில் இன் நோய்க்கான காரணங்களும் மருந்துகளும் உண்டு . சித்த மருத்துவம் நோய்களுக்கு மருந்து அளிப்பதில்லை என்பது தெரிந்ததே ஆனால் நோய்க்கான காரணங்களை கண்டறிந்து நோயை வென்று எடுக்கிறது .
பெண்மையின் மிக மூகாமையான உடல் உறுப்புகளில் வியக்க தக்க உறுப்பான கருப்பையின் உட்சுவர்களில் உண்டாகும் குறைபாடு எனலாம் . கருப்பையின் உட்சுவர்களை காக்கிற அரத்த நரம்புகளில் உண்டாகும் பழுதே இந்த நோய்க்கான காரணமாகும். இதனால் கருப்பையின் நரம்புகள் செயலற்று போவதால் வளர் இளம் பெண்களுக்கு மயக்கம் வருவதும் ,தன்னையறியாமல் பேசுதல் ,சிரித்தல் , ஆடுதல், குதித்தல், பம்பை உடுக்கைகளுக்கு ஆடுதல் போன்ற செயல் களை செய்ய தூண்டுகிறது . இந்த சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்கள் ஆகிறார்கள் . இப்படிப்பட்ட வளர் இளம் பருவத்தினர் ( விடலை பருவத்தினர் ) கனவுலகிலேயே வாழுகிறனர் . கருப்பை சார்ந்த நரம்பு தளர்ச்சி நோயே இப்படி செய்விக்கிறது . முறையான தமிழ மருத்துவத்தில் எண்ணற்ற மருந்துகள் உண்டு .

தீர்வுகள்...

இன் நோய்க்கு எண்ணற்ற மருந்து உண்டு என்றாலும் இந்த நோய்க்கு உளவியல் காரணங்களை நீக்கி முறையான உணவுதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உடலையும் உள்ளத்தையும் நேர் வழியில் செலுத்த வேண்டும் . சரிவிகித உணவுகளும் தரமான தவச (தானிய ) உணவுகளும் கீரைகளும் பழங்களும் , கொழுப்பு நிறைந்த கொட்டைகளும் உணவில் சேர்க்க வேண்டும் .
நோய் முற்றிய நிலையில் எட்டிமர பட்டை கொண்டு வந்து பத்து கிராம் எடுத்து தட்டி போட்டு இருநூறு மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி குடிக்க நல்ல பலனை அடையலாம்
.
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் திடமான குமுகத்தை படைப்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...