டிசம்பர் 16, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் 6



    உறவுகளே  வணக்கம் .

    குறிப்பாக  உண்மையில்  எனது குமுகம்  மிகவும்  சிறப்பான  ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது  எண்ணமாக  இருக்கிறது  மற்ற  வலைப்பூக்களைப் போல அல்லாமல்  மீண்டும் மீண்டும்  நாம்  கேள்வி கேளுங்கள்  கேள்வி கேட்கும் பக்குவத்தை  வரவழைத்துக் கொள்ளுங்கள்  என பதிவு செய்கிறோம் . ஒருமாணவன்  என வைத்துக் கொள்ளுவோம் .அவனுக்கு  நாளும்  உணவு கொடுங்கள்  நான் பணம் கொடுத்துவிடுகிறோம்  என சொல்லி குறிப்பிட்ட பணம் கொடுத்து இட்டு சென்றபிறகு  அந்த மாணவனின்  உணவு  தேவை பற்றி  தெரியாத நிலையில் முதலில் நான்கு  இட்டலி  கொடுத்தல் அதில் மூன்றை எடுத்துக் கொண்டு  மீதம் ஒன்றை வைத்து விட்டால்  உணவு கொடுப்பவர் என்ன செய்வர்  மூன்று இட்டலிகள் போதும் என நினைத்து  அவருக்கு  மேலும் உணவு வழங்குவது பற்றி  சிந்திக்க மாட்டார்கள் . அனால்  நான்கையும்   தின்றுவிட்டால்  மேலும் உணவு கொடுக்க தீவிரமாக சிந்திப்பார்கள் . அதுபோல தான்   உண்மையில் என சமூகத்திக்கு   எதாவது செய்ய வேண்டும் என வாழ்கை பற்றியும் உண்மையான மற்றம் வேண்டும் என   சிந்திக்கிறோம்  கேள்வி கேளுங்கள்  என கோருகிறோம்  எங்கிருந்தும் பதில் இல்லை என்பதால்  நமது பதிவில்  ஏனோதானோ  என  முறையான குறிப்புகளை  எடுத்துக்  கொள்ளாமலே பதிவு செய்கிறோம்   சரி  கொஞ்சம்  கேள்வி கேட்க பழகுங்களேன்  காசு எல்லாம் ஒன்றுமில்லை . சரியா  இனி.....

        இந்த பதிவில் திருமூலர்  குழந்தைப்பேறு பாற்றி என்ன பதிவு  செய்கிறார் என பார்ப்போம்....
பாய்கின்ற  வாயு  குறுக்கில்  குறளனனாம்
பாய்கின்ற  வாயு வலையின்  முடமாகும்
பாய்கின்ற  வாயு நடுப்படில்  கூனாகும்
பாய்கின்ற  வாயு மாதாவுக்கு இலை  பார்க்கிலே.

   ஆண்  பெண் இருவரும்  கூடும் போதுமூச்சுக் காற்று  அளவிற்கு குறைந்தால்  பிறக்கும் குழந்தை குறுகிய  வடிவமாக இருக்கும். அதேபோல மூச்சுக் காற்றானது  இளைத்தவன் மூச்சுக்  காற்றுபோல வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். அதேபோல மூச்சானது மேற்க்கூரியதைபோல இல்லாமல் நடுவு நிலையாக இறந்தால் பிறக்கும் குழந்தை கூனுள்ளதாக இருக்கும் . இது ஆணுக்கே  அன்றி பெண்ணிற்கு அல்ல   என்கிறார்.

இன்னொரு இடத்தில் ...

மாதா  வுதரம் மலமிகில் மந்தனாம்
மாதா  வுதரம் சலமிகுள் ஊமையாம்
மாதா  வுதரத்தில்  இரண்டொக்கில்  கண்ணில்லை
மாதா  வுதரத்தில்  வந்த குழவிக்கே .

  தாயும் தந்தையும் கூடும் பொது தாயாரின் வயிற்றில் மலம் மிகில்  துப்புரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால் பிறக்கும் குழந்தை  மந்தமாக பிறக்கும்  இதே போல சலமான சிறுநீர் துப்பரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும்  இரண்டு  வகையான கழிவுகளும்  சம அளவில்   இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாக்  இருக்கும் இது தாயின்  வயிற்றில்  தோன்றும் செய்கைக்கே என அறிக.......

ஆண்  பெண்  அலி இரட்டைப் பேறு

குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது  ஆகில்
குழவியும் இரண்டாம்  அபான னெதுகில்
குழவியும் அலியாம்  கொண்ட காலோக்கில் .

 கணவன்  மனைவி இருவரும்  கூடுங்காலத்தில் வலது மூக்கின் வழியாக  உயிர்ப்பு  வந்து கொண்டு இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் .இதேபோல உயிர்ப்பு இடது புறமாக இருந்தால்  பெண் குழந்தையாக இருக்கும் .இவ்வுயிர் பிற்கு அபானன் எதிர்ப்பட்டு வந்தால் குழந்தைகள் ... அதாவது இரட்டைக்  குழந்தைகளாய்  இருக்கும் . இரு  மூக்கின் வழியாக இருந்தால்  குழந்தை அலியாக  இருக்கும் என்கிறார் .

அப்படியானால்  நன்றாக அறிவாளியாக அழகாக ... குழந்தை  பிறக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என  கேட்க தெண்ற  வேண்டும்   தொன்று கிறதா   சரி நானே சொல்கிறேன் ....

கொண்ட  நால்வாயு இருவர்க்கும் ஒண்டிடில்
கொண்ட குழவியும்  கோமள  மாய்விடும் .
கொண்ட இவ்வாயு குறிப்பறிந்து இவ்வகை
கொண்டதும்  இல்லை கோலம்  உன்னதே .

 மருவிப் புணரும் காதலர்  இருவருக்கும் வருகின்ற உயிர்ப்பு ஒரே அளவகியதாய் இருக்க வேண்டும்  அங்கனம்   ஒரே  அளவு  கொண்டதாக இருந்தால்  பிறக்கும் குழந்தை  அழகும்  சிறப்புமாக பிறக்கும் என்கிறார்  .அவ்வாறு  இல்லாமல்  மூச்சுக்  குழன்று போனால்  பெண்ணின் வயிற்றில்  கரு  தங்கது  என கூறுகிறார். .

சரி மேலும் விவரம் அடுத்த பதிவில்  சிந்திப்போம் .....

சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .


More than a Blog Aggregator

டிசம்பர் 10, 2012

திருமணத்திற்கு ஆயத்தமாவோம் 5



    இந்த பதிவில் சில புள்ளிவிவரங்கள்  கொடுக்கிறேன்  என சொல்லிருந்தேன் . பார்க்காலாம் . இன்றைய தமிழ்  சமூக  வாழ்வியல் முறை  மிகவும்  மாறித்தான்  போய்  இருக்கிறது . எதிர்கால  நோயில்லாத  வாழ்க்கை பற்றி  சிந்திப்பதாக  தெரியவில்லை  முறையில்லாத உணவுமுறை  முறையில்லாத  வாழ்க்கைமுறை  ஆகியவற்றால்  மனித இனம்  நோயாளி ஆகிக் கொண்டு இருக்கிறது   என  எழுதினால்  எப்போதும்  நீங்கள்  எதிர்மறை  சிந்தனையுடன்  எழுது கிறீர்கள்  எனவே சலிப்படைய  வைக்கிறது  என்று  கூறுகிறார்கள்  உண்மைதான்  உண்மையை  சொன்னால் சலிப்படையவே   செய்யும் .

      இன்றைய  முறைதவறிய  வாழ்க்கைமுறை  இயற்கையில் இருந்து  முரண்பட்டு நிற்கிறது . வாரட்டுத்தனமான  வாழ்க்கைகளுக்கு  ஆசைப்பட்டு  இயற்கையை  வேருப்பதனால்  உண்டானது . செயற்கை வண்ணம் பூசப்பட்ட ... இயற்கையில் இருந்து  தவறிப்போய்   வெகுதொலைவுக்கு  வந்துவிட்டோம்  ஆகையால் தான்  மீண்டும்  நாம் இயற்கையில் இருந்து தொடங்க  வேண்டும் என்கிறோம்  இரசாயன கலப்பில்லாத  ஒரு இனிய  உலகை படைக்க  வேண்டும்  இப்போது பாருங்கள்  படித்தவர்கள்  பதவியில்  உள்ளவர்கள்  பணக்காரர்கள் இப்படி எல்லோருமே  உடலைப் பற்றியோ  முறைதவறிய  உணவு முறைபற்றியோ  கொஞ்சமும்  சிந்திப்பதில்லை  அதற்குதான்  நாம் அப்படி  எழுதுகிறோம்  கொஞ்சமாகிலும்  மாற்றம் . உண்டகட்டுமே என்றுதான் .

      திருமணம்  ஒரு புனிதமான  வாழ்க்கைப் பயணம் இதில் பயணப் படும் இரு உள்ளங்கள்  வாழக்கை என்ற கப்பலை எப்படி பயன்படுத்துவது  என்பது  தெரிந்து கொள்ளாமலே பயணிக்கத்  தொடங்கி  பயணத்திலேயே  பிரிந்து போகின்றனர் . காரணம்  வாழ்க்கை குறித்தான  முறையில்லாத  புரிதல் .முதலில்  எங்கு  எப்படி பயணம் செய்யப் போகிறோம்  எந்த  வாகனத்தைப் பயன்படுத்தப் போகிறோம்  என்பது பற்றியான  ஒரு திட்டமிடலை  வகுத்துக் கொள்ள வேண்டும் . இது  உறுதியான  இல்லறத்திற்கு  ஒரு தொடக்கமாக இருக்கும்  முறையான திட்டமிட்ட  தொடக்கம்  பாதி  வெற்றி என்பார்கள்  முறையான திருமணமோ  காதல் திருமணமோ  எதிர்கால வாழ்க்கை குறித்து  நிறைய பேசுங்கள்  என்கிறோம் .பேசி பின்னர்  இலவாழ்விற்கான  தாம்பத்திய  உறவுகள் குறித்தான  திட்டமிடலை  முறையாக  செய்க . எப்போது குழந்தைபேறு  எங்கு  என முழுமையாக எல்லாவற்றையும்  திட்டமிடுங்கள் .பின்னர்  இல்வாழ்க்கையை தொடங்குங்கள் .

       பாலுறவு  குறித்து  முறையாக  தெரிந்து  கொள்வது மிகவும் சிறந்தததே  காரணம்  இதில்தான் பலர் தவறி விடுகிறார்கள்  வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள் . குடும்பமும் சிதைகிறது. இல்லறமேர்க்கு புதியதில்  இல்லற இன்பம்  குறித்து தவறான புரிதலால்  சிக்கல் தோன்றுவதால் இங்கு  சரியான  புரிதல்  பெற  ஆற்றுப் படுத்துனரை  கலந்து  ஆலோசிப்பது  மிகவும் சிறப்பானதாக இருக்கும் முதலில் உணர்வு  அடிப்படையில்  கணவன் மனைவியாக  வாழத் தொடங்க வேண்டும்  பாலுறவில்  முதலில் முன் விளையாட்டுகள்  சிறப்பான இடத்தை  வகிக்கிறது  பழங்காலங்களில்  திருமண  விழா  நீண்ட  நாட்களை  கொண்டதாக  இருக்கும்  இரண்டு  வீடுகளுக்கு இடையேயான பாண்பாட்டு ரீதியான  வாழ்க்கை முறை உணவு முறை  நடத்தை முறை  இப்படி  மாற்றி மாற்றி  இரு வீடுகளுக்கும்  புது மண  தம்பதிகள் சென்று  தெரிந்து கொள்வதனால்  இரண்டு வீட்டு  பழக்க நடைமுறைகளையும் அறிந்து கொண்டனர்   அந்த   காலத்தில்  மணமுறிவுகள்  தோற்றம் கொள்ளவில்லை . இன்று அப்படி இல்லை  எனவேதான் பல சிக்கல்  இதை முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் எனபதற் காகத்தான்  பதிவு செய்கிறோம் .

        குழந்தைபேறு வேண்டிய  நாள்களில் எப்படி இருக்க வேண்டும்  என்பதை  திருமந்திரம்  பதிவு செய்வதை பார்ப்போம் .
பய்ந்தது    முன்னைந்தொடிற் பார் ஆயுளு  நூறாம்
பாய்ந்தது  பின்னைந்தோடிற்  பார் வயது ஐம்பதாம்
பாய்ந்திடும்  வாயு பகுத்தறிந்து  இவ் வகை
பாய்ந்திடும்  யோகிக்கு பாய்ச்சலு  மாமே .

      அதாவது கணவனும் நமைவியும் தம்பதிய  உறவு கொள்ளும் பொது அன்றைய  மூச்சுக் காற்று  ஐம்பூதங்களிலும்  பாய்ந்து ஓடினால்  பிறக்கு குழந்தை  அகவை நூறு . அதனால் தான் குழந்திப் பெறுக் காண  திட்டமிடலில்  உள்ளம்  மிகவும் சலனம் அடையாமலும்  மிகையான பாலுறவு   வேட்கையினால்  இருக்கையில்  அது பிறக்கும் குழந்தையின்  ஆயுளையும்  அவனின்  எதிர்காலத்தையும்  அது பதிப்பு அடைய செய்கிறது . இந்த சூழலில் உள்ளமும் உடலும் பதட்டம்   அடையாமலும்  பொறுமையாகவும்  திட்டமிட வேண்டும் என்கிறது மருத்துவக்குறிப்புகள் .
 

     
More than a Blog Aggregator

டிசம்பர் 03, 2012

திருமணத்திக்கு ஆயத்தமாவோம் 4




      வணக்கம் உறவுகளே . உங்களின் அளப்பரிய பின்னூட்டங்கள்  என்னை  உண்மையில் வியக்க வைக்கிறது  எப்படி  தமிழர்கள்  அறிவிற்கு  அறிவியலிற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள்  உடலை எப்படி பேணி வளர்க்கிறார்கள் என  பார்க்கும் பொது மிகவும் மகிழ்வாகவும்  பாராட்டும் படியாகவும்  நோய் நீங்கி  எந்த மருத்துவ நடுவத்தையும் தேடாமல்  எளிமையான  மூலிகைகளைக் கொண்டு  நோய் நீங்கி  நீடு  வாழ்ந்து  வருவது குறித்தும் நோய் கொள்ளுவது குறித்து எல்லை  இல்லா  அம்கிழ்வைத்தருகிறது பாராட்டுகள்  இங்கு எல்லோரும் நல்லவர்களே  உண்மையில்  மது அருந்து  கிறவர்களும் புகை பிடிப்பவர்களும்  ஏன்  செய்கிறார்கள்  குறிப்பிட்ட அந்த தொழிலை மேற்க்கொல்லுகிறவர்கள் .... கொல்லு ... பிழைப்பு  நடத்த வேண்டாவா  நமது விஜய்  மல்லையா போன்றவர்களும்  itc  போன்ற  நிறுவனங்கள்   வளர வேண்டாவா  எப்படி சிந்திகிறார்கள்  பாருங்கள்   தமிழர்கள் எப்போதும் பரந்த உளப்பாங்கு  உள்ளவன்  எவனாவது பசி  என்று வந்துவிட்டால்  ஓடி சென்று  தான் பட்டினியாக இருந்தாலும் அவனுக்குப் போட்டு  இவன் பசித்து இருப்பான் . பாருங்க  இவன்  தமிழன் வரலாற்றில்  இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக  தமிழ நாட்டை  ஆண்டதாக  வரலாறே  இல்லை எவ்வளவு  பரந்த மனப்பான்மை கொண்டவன் தமிழன்  ஈழத்தில்  கொத்து கொத்தாக   கொன்றார்கள்  அமைதி  காத்தோம் ... காவிரி , முல்லைபெரியாறு , கிருஷ்ணா  தண்ணீர் தரவில்லையா  நாங்கள் வெக்கமும் பட மாட்டோம் வேதனையும் பட மாட்டோம்  எங்கள்  தலைவர்கள் எல்லோரும்   தமிழர்களுக்கு பெரும் தீங்கு  செய்தார்களா  யார் சொன்னது அவனை உடனே காட்டிக் கொடு  இப்படி எல்லா  வேலைகளையும்  நாங்களே  தமிழர்களே  தமிழர்களை  அழிப்பெம் ...

         சரி செய்திக்கு வருவோம்  முற்போக்கான  இரண்டு குடும்பம்  இந்த குடும்பங்களில்  இருந்து திருமணம்  இனிதாய்  முடிகிறது . எல்லாமே எளிமையாக  பின்னர்  மணம்  முடிந்து பிள்ளை வீட்டாருக்கு மிகப் பெரிய குறை  காரணம்  பெண் வீட்டில்  மணமகனுக்கு மணக்கொடை (வரதட்ச்சனை ) கொடுக்க வில்லையாம்   போகட்டும்  இந்த பெண் மிகவும் அறிவாளி  அனால்  கொஞ்சம்  யாரு பேச்சையும்  கேட்பதில்லை  உணவு முறை  பெண்ணின் வீட்டில்  உள்ளது மாதிரித்தான்   சமைப்பர்கலாம் இங்கு மாமனார் , மாமியார் , மைத்துனர்  கணவர்  இப்படி  எவர் உணவுப் பழக்கத்தை பற்றியும் கவலை கொள்ளுவதில்லை   உண்மையில் மிகவும் மகிழ்வாக இருந்த கூட்டுக் குடும்பம்  பிரிவை எதிர்  நோக்கி காத்தது  இருக்கிறது. இது முற்போக்கனவர்கள்  என கூறிக் கொள்ளுகிற குடும்பம்  இங்கே இப்படி என்றல்  சராசரி  குடும்பம் எப்படி இருக்கும் பாருங்கள் ....

     எதற்கு பதிவு செய்கிறேன் என்றல்  ஒரு குடும்பம் என்பது    கோவில் போன்றது  இனிமைதரக் கூடியது  மகிழ்வை ஊட்டக் கூடியது   எப்போது வீட்டிற்கு போவோம்  ஆனந்தத்தைக் களிப்போம் என  இல்லாமல்  வெறுப் பேற்றிக்  கொள்ளவா வீட்டிற்கு போவது ? இல்வாழ்வு  கணவனும் மனைவியும் மட்டும் அல்லமால்  அந்த கூட்டுக் குடும்பமே  மகிழ்வை  சந்தித்து  இன்பம் துய்ப்பதாகும்  இப்படி எல்லாம் தமிழ் நாட்டில்  படம் கூட  எடுப்பதில்லை  என்கிறார்கள்  பாவம்  விடுங்கள்   அதற்குதான்  உங்களுக்கான  குடும்பத்திற்கான  ஏற்றதான  மணப்பெண்ணை  தேர்ந்து எடுங்கள்  எல்லா வகையிலும் உங்களுக்கு பேருந்தும் படியான   குடும்பத்தை  உண்டாக்க முயலுங்கள்  இன்று  படித்தது படிகாதது  எல்லாம் பெண்களுமே  எளிமையையும்  முறையான வாழ்வையும்  வாழ்வதில்லை   தெரியவும் இல்லை  இதனால்தான்  மருத்துவத்தை மட்டும் அல்லாது வாழ்வியலையும்  இங்கு பேசுகிறேன் .... போதுமா ?

      உங்களுக்கு ஏற்ற வாழ்வை தேடும் போதுதான்  நோயில்லாத குடும்பத்தை உண்டாக்க இயலும்  உணவுகள் இயற்க்கை   சார்ந்து  சிறுதானியங் களுக்கு முக்கியத்துவம் அளித்து  குடும்பத்து உணவு முறைகளை முறைப் படுத்துங்கள் . நாட்டுப் புற காய்களுக்கு  முக்கியத்துவம்  அளியுங்கள் . உணவில் கீரைகள்  முக்கிய பங்கு வகிக்கட்டும்  இயற்க்கை  சார்ந்த  வாழ்க்கை முறை  நீடிக்கட்டும் . தானியங்கள் , கொட்டைகள்  போன்றவற்றை மிகையாக பயன்படுத்துங்கள் . வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்யுங்கள்  உங்களின் உணவில்  எள் , நிலக்கடலை  பேன்றவை  மிகையாக  இருக்கட்டும் .
வாழ்வு  இனிதாகும்  அடுத்த பதிவில்  சற்று விரிவான புள்ளி விவரங்களுடன் ....

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்


பிழைகள்  மிகுதிக்கு  பொறுத்து அருள்க ...

      
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...