அக்டோபர் 22, 2012

மஞ்சளின் மகிமை வரிசை 2


                                                      


  மஞ்சள் பற்றி விரிவாக எழுத தொடங்கினேன்   இருந்தாலும்  நேரமின்மை காரணமாக   விரிவாக எழுத இயலவில்லை  தமிழர்களின்  பண்பாடு என்பது உண்மையில் விரிந்த அறிவியலை உள்ளடக்கியதாகும்.பழந்தமிழர்கள்  அறிவியல் அடிப்படையிலேயே  எல்லாவற்றையும் பகுத்தும் தொகுத்தும்  இந்த உலகினுக்கு  கொடையாக வழங்கினார்கள் . மஞ்சள்  மருத்துவக்   குணம்  நிறைந்தது  உடலில்  தோன்றும்  தோல்  சம்பந்தமான  பிணிகளை  நீக்குவதில்  சிறந்த  இடத்தில் நிற்கிறது . பெண்களின்  பூப்பு  காலத்தில்  அவர்களின்  உடலில் பலவேறு  மாற்றங்கள்  நிகழுகிறது  பெண்களின் உடலமைப்பு  வெளிப்புறமாக  இருப்பதனால்  அவர்களுக்கு  பலவேறு நோய்  தொற்றுகள்  வர வாய்ப்பு  உள்ளமையை  அறிந்த பழந்தமிழர்கள்  அவ்வாறு  எந்த தீங்கும்  வரகூடாது  என  எண்ணியே  பண்பாட்டு முறையை  ஆழப் புகுத்தினார்கள் . எனவே இந்த நாளில்  பெண்களுக்கு  மஞ்சள்  நீராட்டுவிழா  எடுத்தார்கள் . இதனால்  தோல்  சம்பந்த  மான  பிணிகளும்  மற்றும் பல்வேறு  தொற்றுகளும்  வராது    தடுத்தனர் .

     இன்றைய  நிலையில்  இதளியம்(இரசாயணம் ) கலந்த மஞ்சள்  உடலுக்கு கேட்டையும்  பலவேறு  நோய்களையும்  உண்டாக்குகிறது  இவற்றில் இருந்து  தப்பிக்க விழைவோர்  கடைகளில்  விற்கப்படும்  மஞ்சள்  கொம்புகளை  வாங்கி    நீரில்  தூய்மையாக   கழுவி  பின்னர் நன்றாக  வெய்யலில்  காயவைத்து  பின்னர் அரைத்து  பயன் படுத்தலாம்  கரணம் மஞ்சளை  பாதுகாக்கும் பொது அவற்றை செயர்க்கை  வண்ண மூட்டிகளை  சேர்த்து  கலந்து    சந்தைக்கு அனுப்புகிறார்கள்  இந்த செயற்கை  நிறமூட்டிகள்   பலவேறு   நோய்களை  உண்டாக்குகிறது  இதை  பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்ளாமல்   பணம் ஈட்டுவதைப்  பற்றியே  கவலை கொள்ளுகிறனர்   இது சுவர் இல்லாமல்  சித்திரம்  வரைவதற்கு ஒப்பாகும் .

       இன்றைய உலகில்  பணம் மட்டுமே குறிக்கோளாக  கொள்ளபடுகிறது  அதுமட்டும்    இன்றி  மட்டரகமான   நாளிதழ்கள் , ஊடகங்கள்  போன்றவற்றில்  வரும் கருத்துகளை  வேத வாக்காக  கருதி  நடைமுறைப் படுத்துகிறார்கள்  . இது  பிழையனானதகும் . வெளியிடுபவர்கள்  யார்   என்பதைப் பற்றி   எல்லாம்  கருத்தில் கொள்ளுவதில்லை .இந்த சிந்தனையும்  வருவதில்லை   அனால் மூடத்தனங்களை  சொன்னால்  அது காட்டுத்தீயாய்  பரவி உந்த குமுகத்தை  நாசப்படுத்துகிறது .

      முன்பெல்லாம்  பெண்கள்  மங்கள  நாண்  பயன்படுத்துவது பெரு வழக்காக  இருந்தது  இன்று  பெண்கள்  மங்கள  நாணுக்கு (தாலி )பதிலாக  பொன்  நகைகளை  அணிந்து  அழகுபடுத்திக்  கொள்வதிலும் அதில்  தாலியை  இனித்துக் கொள்ளுகிறனர்  . இதனால் வரும் கேடுகள்  எண்ணிலடங்கா  அனால்  அதைப் பற்றி எல்லாம் கவலை  கொள்ளுவதாக  தெரியவில்லை  கரணம் இன்று பெண்கள் மார்பக  புற்று நோய்க்கு  பெரும்பான்மையோர்  ஆளாகி  வருகிறார்கள் .

பழந்தமிழரின்  அறிவு மரபை  மதிப்போம்
சித்தர்தம் அறிவினை ஏற்ப்போம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்   வென்று  நீடு வாழ்வோம் .




More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...