செப்டம்பர் 26, 2011

எளிமையான குழந்தைப்பேறும் நோயில்லா வாழ்க்கைமுறையும் ...




எமது முந்தைய இடுகையில் திருமணத்திற்கு முன் ஒரு ஆற்றுபடுத்துதல் அதாவது வழிகாட்டல் என குறிப்பிட்டு இருந்தேன் . இன்றய சூழல் குழந்தைப் பெறில் இருந்தே நோய்களை உண்டாக்கி மனிதனை முற்றாக நோயாளியாக்கு கிறது இந்த சூழலை மாற்றி முற்றாக ஒரு புதிய உலகை தோற்றங் கொள்ளசெய்ய இயலுமா? என நாமே வினா கேட்டு நமே விடைதேடினோம் அதற்க்கான விடைதான் இந்த இடுகை . உண்மையில் அப்படி ஒரு உலகத்தை கானவியலுமா? முடியும் ....அதற்க்கு நீங்கள் சிரமப் படாமல் இருக்க வேண்டுமானால் சிரமப் பட்டே யாகவேண்டும்

இன்று குழந்தைப்பேறு என எடுத்துகொண்டாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கு வந்துவிட்டது அதாவது குழந்தைப்பேறு எளிமையாக நடைபெறுமா? அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா? இந்த அறுவை சிகிச்சை நமது முறையில்லாத நட வடிக்கையினால்தான் வருகிறது என நமக்கு புரிவதில்லை . சித்த மருத்துவம் திருமணத்திற்கு முன்பிருந்தே முறையாக குழந்தைப் பேற்றிற்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறது இருந்தாலும் நாம் அதை எப்போதும் பொருட் படுத்துவதில்லை . தாய்மை பேறு என்பது உண்மையில் ஒரு புனிதமான இடம் அது இன்று வேதனையோடு எதிர் கொள்ளகூடிய ஒன்றகாகிவிட்டது .

வீட்டு விலக்கு முடிந்து முதல் பத்து நாட்கள் மற்றும் கடைசி பத்து நாட்கள் பாதுகாப்பான் நாட்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது அதாவது இந்த நாட்களில் பெரும்பாலும் குழந்த்ப்பேறு உண்டாவதில்லை அதாவது இடைப்பட்ட பத்து நாட்கள் தாய்மை பேற்றிக்கு உகந்த நாள்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுவத நாம் அனைவரும் அறிந்ததுதான் இந்த காலத்தில் பாலுறவை முறைப்படி வைத்து கொள்ள தாய் கருவுருவாள் என குறிப்பிடு கிறார்கள் .

இப்படி தாய்மை அடைந்து விட்டால் குழந்தைபேறு உண்டாகும் வரை எல்லா மாதங்களும் முறைப்படி சிச்த்த மருத்துவம் குறிப்பிடும் மருந்துகளையும் வழிகாட்டல் களையும் கடைபிடித்தால் குழந்தைப்பேறு எளிதாகும் பிறந்த குழந்தை பின்னாளில் நோய் இல்லாமல் நீடு வாழ முடியும்
சிலருக்கு தாய்மைக் காலத்தில் குழந்தையை தாங்கி பிடித்து வாளர்க்க கருப்பையில் வேண்டிய சக்தி இன்மையால் கரு கலைந்து விடுகிறது இதற்க்கு சித்த மருத்துவத்தில் கருவளர்க்கும் எண்ணெய் ஒன்று இருக்கிறது இதை முறைப்படி கருக்கலத்தில் அருந்திவார இப்படி உண்டாவதில்லை இதை பதிவு செய்யக்காரணம் இப்படி ஒரு தீர்வு இங்கு சித்த மருத்துவத்தில் இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் பத்தாவது மதம் வரை மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்க்கும் சேய்க்கும் எந்த பதிப்பும் இல்லமால் எளிமையான குழந்தைப்பேறு கிடைக்கும் .
அடுத்த இடுகையில் மீண்டும் சிந்திப்போம்
சித்த மருத்துவம் காப்போம் நோய் வேண்டு நீடு வாழ்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...