ஏப்ரல் 04, 2011

வெள்ளை விசம்

வெள்ளை  விசம்

     இப்போதைய  பெரும்பான்மை  மக்களின் உணவு பழக்கம்  என்பது  விடம்  கலந்த உணவுகளே  இடம்பிடிக்கிறது  . காரணம்  எது  விடம் . எது  நல்லது என்ற  கண்ணோட்டம்  பெறாமைதான்   எனலாம் . இதற்க்கு என்ன செய்வது ? துறை  சார்ந்த  அறிஞ்சர்  களிடம்  விடை தேடவேண்டியதுதான் .  வெள்ளை விடம் என்பது என்ன ? கதைப்போமா ?

     இன்று கரும்பில் இருந்து பெறப்படும்  சர்க்கரையை  உணவாக  கொள்ளுகின்றனர்  இது இருநூறு ஆண்டுகளாக தான் . இந்த கரும்பில் இருந்து பெறப்படும்  சர்க்கரை  உடலில்  என்ன மாற்றத்தை செய்கிறது? உடலில் பல்வறு நோய்கள்  உள்வாங்கி  கொள்ளுகிறோம்.  அதாவது  உடலில் உள்ள இரும்பு  சத்து , சுன்ன(சுண்ணாம்பு  சத்து )வைட்டமின்கள் போன்றவற்றை உடலில்  இருந்து நீக்குகிறது . இந்த காரணங்களினால் இரத்த சோகை , உடலில்  வலுவின்மை ,தசைகளில் வலி  வலுவற்ற  எலும்புகள்  பற்களில்  சிதைவு  போன்றவை  உண்டாகிறது .

     நாம்  உண்ணும் சர்க்கரை உடலில் உள்ள சுன்ன சத்தை  நீக்குகிறது . இதன் இரசாயன அமைப்பே  மனிதனுக்கு ஏற்றதல்ல என்கிறனர்  ஆய்வாளர்கள் . இதன் தாக்கத்தினால் வயிற்றில்  எரிச்சல் , மற்றும் இரைப்பையில்  புண்ணை  உண்டாக்கும்  என்கிறார்கள் .  அமிலத்தன்மை  வளி(வாயு  தொந்தரவு )உண்டாகும்  என்பது  ஆய்வாளர்கள்  கூறும் விளக்கம் .

    சர்க்கரை  நம் உடலில்  சேர்ந்த போதே  சிறிதளவு வளியுடன்(ஆக்சிஜன் )சேந்து தீவிரமாக மாற்றம்  அடைந்து உணவு மண்டல உறுப்புகளை  திடீரென  தூண்டி  வேலையை  மிகையாக்குகிறது . குபீர் என  தீப்பற்றி  எரிந்து எராளமான  வெப்பத்தையும் சக்தியையும் தந்து விரையில் மறைந்து  விடும் பொருள் போல  வினைநிகழ்த்தி  உடலில் மாற்றத்தை  நிகழ்த்தி  நரம்பு மண்டலத்தை  தளர்ச்சி அடையசெய்கிறது .
இதன் தொடர்ச்சியினால்  ஊட்ட குறைவு  உண்டாகிறது . இதனை செரிக்க  கணையம்  மிகையாக  பணிசெய்ய  வேண்டி   இருக்கிறது . இப்படி தொடர்ந்து  பணியாற்றும்  கணையம்  ஒருநாள்  ஓய்வெடுக்கிறது  அதுதான்  சர்க்கரை  நோய் .  குழந்தைகளுக்கு  சர்க்கரையை  தரவேகூடாது  என்கிறனர் . குழந்தையால் இந்த  கரும்பு  சர்க்கரையை  செரிக்க இயலாது  ஏன் எனின்  இதனை  செரிக்க  குழந்தை  களின் உடலில்  போதிய என்சைம்கள்  இல்லை என்பதுதான்  .
     சர்க்கரையை  உண்ணும்  குழந்தைகள் ஊட்டம் குறைந்து  அமைதியற்று   எளிதில்  உணர்சி யற்று பொலிவு  குன்றுகிறது . மலசிக்கல் , பற்கள் சிதைவு ,போன்ற பல நோய்கள்  தொடருகிறது.  வாயிற்று போக்கு , தொடர்ச்சியினால்  முடக்குவாதம் , மூட்டு  அழற்சி , மூட்டுவலி , இடுப்புவலி , தொண்டை  அழற்சி ,  போன்றவை  உண்டாகிறது .  தொடர்ந்த  மலசிக்கல்  காரணத்தினால்  தோல் நோய்கள் , சொறி  சிரங்கு , போன்ற நோய்களும்  மனிதனுக்கு வருகிறது .
     எவ்வளவு  உண்டலும்  தீராத  பசி  ஏப்பம் , நெஞ்சு  வளி  நெஞ்சு  எரிசிச்சல்  போன்ற நோய் கள்   வருகிறது . இதனால் செரித்தல்  தொல்லை , நாம்பு கோளாறுகள்  என பல நோய் கள் வருகிறது . 

       சர்க்கரை  தின்னாமல் வேறு என்னத்தை தின்னட்டும் என்பது தானே  உங்கள் வினா ? வெல்லம்  இருக்கிறது ,தேன்  இருக்கிறது  பனைவெல்லம்  இருக்கிறது  இவை எல்லாம்  நோயை  உண்டாக்காதா ? என வினவலாம்  இவைகளினால்  மிகையாக எடுத்து கொண்டால்தான்  நோய்  ஆனால் கரும்பு  சர்க்கரை  எடுத்து கொண்டாலே  நோய் . மேலும்  இன்று உள்ள நிலையில் வெல்லமும், தேனும் , பனைவெல்லமும் வேளான்  பெருமக்களை  வாழவைக்கும்  அல்லவா ? அதனால்  நாமும்  நோய் இல்லாமல்  வாழமுடியும்  எல்லோருக்கும்  வேலை  வாய்ப்பும்  கிடைக்கும் சோழியன்  குடுமி  சொம்மா  ஆடாது தயாநிதி சொன்னா அது  எல்லோருடைய  நலனை  உள்ளடக்கியதாக  இருக்கும்தானே ?              இவற்றோடு  மட்டை  தீட்டிய  அரிசியும் , உப்பும்  விடமே  இவற்றை  குறித்தும் நாம்  அறிந்து கொள்ள வேண்டும்    மட்டை தீட்டாத   அரிசியை பயன் படுத்தவும்  வேண்டும் .
வாழ்க  வேளான் பெருமக்கள்  நோய் நீங்கி  நீடுவழ்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...