ஏப்ரல் 10, 2011

அம்மை நோய் (chicken pox)




அம்மை நோயை பொறுத்தவரை "அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் " என்ற சித்தர்களின் வாக்கிற்கு
ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு மாந்த உடல் தட்ப வெப்ப மாறுதலடையும். கோடைகாலத்தில் வெய்யலின் கொடுமையால் மனித உடல் சூடாகி அழல் குற்றம் (பித்தம் ) மிகுந்து அந்த சூழலில் மழை பெய்தால் ஐ (கப ) குற்றம் சேர்ந்து அழலையமாகி இந்த நோயை உண்டாக்குகிறது.

இதே மாரிக்காலத்தில் உயிரில் ஐ குற்றம் மிகுந்து அந்த வேலை வெய்யலினால் அழல் (பித்தம் )சேர்ந்து ஐயழல் குற்றம் உண்டாகி இந்த அம்மை நோய் தோற்றம் கொள்ளும் என்கிறனர் சித்தர்கள்.

இந்த நோய் வகைகள்

பனை முகரி, பாலம்மை, வரகு திரி , கொள்ளம்மை , கல்லுதிரி , கடுகம்மை , மிளகம்மை , உப்புத்திரி , கரும்பனிசை , வெந்தய அம்மை , பாசிபயரம்மை , விச்சிரிப்பு , குளுவன், தவளையம்மை , என பதினான்கு வகைப்படும் .

இவைமட்டும் அல்லது

பெரியம்மை .
சிறிய அம்மை (.விளையாட்டம்மை)
தட்டம்மை .
புட்டாலம்மை . எனவும் வழங்க படுகிறது.

அம்மை நோயின் பொதுவான குறி குணங்கள் .

சுரம் காய்தல் , உடல் வலி,தலைவலி , இடுப்பில் உளைசல் , தலைபாரம், உடம்பு எரிதல், கண் சிவத்தல் , தும்மல் , கக்கல் (வாந்தி )மூக்கில் நீர்பாய்தல் , வாயில்/ உடம்பில் ஒருவித நெய் மணம் . போன்றவை இருக்கும். இவற்றுடன் மூன்று ,நான்கு நாளில் காய்சல் குறைந்து தலையில் குருக்கள் தோன்றி உடம்பெல்லாம் பரவும் . கொப்புளங்கள் நீர்கோர்த்து பெரிது ஆகும் . சிறுநீர் தடைபடும் . மலமும் கட்டும்.

தொண்டைவலி மயக்கம் பிதற்றல் உடல் வீங்குதல் கொப்புளங்கள் , தாமே உலர்ந்து தோலுரித்தல் நடந்து நோய் குணமாகும்.

இந்த நோயின் காரணமாக நரம்புகள் ,கீல்கள் ஆகியவற்றை தாக்கி முடங்க செய்யும். முறையாக பராமரிப்பு இல்லை எண்டால் உயிருக்கே பாதிப்பை உண்டாக்கலாம். ஆண் மலடு, பெண் மலடு ,போன்றவையும் உண்டாக்கும் .

அம்மை நோயில் உணவுகள் .

சுரம் உள்ள போது கருங் குருவை அரிசி மாவுக் கஞ்சி,பார்லி மாவுக் கஞ்சி , கூவை மாவுக் கஞ்சி ,
ஆகியவற்றை கொடுக்கலாம். சுரம் தணிந்த பின் குளிர்ச்சியான உணவுகளை கொடுக்க வேண்டும் . கேழ்வரகு மாவும் அரிசி நொய்யும் கலந்து தண்ணீர் விட்டு புளிக்க வைத்து கூழ் காய்ச்சி வெங்காயம் அறிந்து போட்டு கொடுக்கலாம் இவை வெப்பத்தை தணிக்கும் . நோய் உள்ள போது ஆறின அரிசி சோறு மிளகு நீர் கூட்டி அருந்தலாம். அம்மை நோய் நீங்கி விட்டால் நீர் மோரும் சோறும் உண்ணலாம் .
காரம் கூடாது. எலுமிச்சை ,பழம்புளி , நெல்லிக்காய் பனைகற்க்கண்டு கறிவேப்பிலை , பச்சைபயறு ,காராமணி , அத்தி பிஞ்சு ,சீனி , கற்கண்டு , முறையாக கொடுக்கலாம்.

படுக்கை

மென்மையானதாக இருக்க வேண்டும் . வேப்பிலையில் படுக்கை தயாரித்ததை பயன் படுத்தலாம் .இது நாம் முன்னோர் கண்டது. இதுவே சிறந்தது. .

ஆகாதவை

தேங்காய் , மாங்காய், நல்லெண்ணெய் , இலுப்ப எண்ணெய், சோற்று ஆவி , நெல் ஆவி , கறிகள் அவித்த வாடை ,பாலுறவு கூடவே கூடாது
.
நோய் எதிர்ப்பாற்றல் பெற

இந்த அம்மை நோயை பொறுத்தவரை அழல் குற்றம் மிகை யாவதால் தோன்றுகிறது எனவே அழல் (பித்தம் ) குறைக்கும் படியான உணவுகள் தேவை .பித்தத்தை வாழை குறைக்கும் என்பதால் இதை நாளும் எடுக்கலாம் .

ஆள்காட்டி குருவிஅமிழ்தம் சித்தமருத்துவர்கள் இதனை பரிந்துரைக்கின்றனர் . இதனை தடைமருத்துவமாக கருதுகின்றனர் . இந்த ஆள்காட்டி குருவியின் முட்டையை உடைத்து சட்டியில் விட்டு சம்பா புழுங்கல் அரிசியை மேற்படி கருவில் அடுப்பேற்றி கருகாமல் பொரியரிசியாக வறுத்து தரம் கண்டவுடன் இடது கை நிறைய கொட்டி வலது கையில் மாற்றி ஒருபிடி அரிசி சாப்பிட வேண்டும் . நோய்க்கு அச்சப்பட தேவையில்லை என்கிறனர் சித்த மருத்துவர்கள்.

மென்பானங்களை நீக்கி இளநீர் ,நுங்கு , தர்பூச்சுனை பழம் எடுக்கலாம் .
வாரம் இரண்டு நாள் எள் நெய் குளியல் செய்யலாம்.
நோய் கடுமையாக முற்றிய நிலையிலும் தேர்ந்த சித்த மருத்துவர்களிடம் சென்றால் நல்ல விரைந்த குணத்தைஅவர் களினால் தரமுடியும் முறையான சித்த மருத்துவத்தை அணுகி நோய் வெல்வோம் .

நோய் வெல்வோம் சித்தமேருத்துவம் காப்போம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...