நவம்பர் 26, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் வரிசை 3

     இது தொடராக வரப்போகிறதா இல்லையா என புரிய வில்லை எனக்கு எங்களின் உறவுகளுக்கு சொல்வதற்கு நெறைய இருக்கறது காலச்சூழல்தான் . இல்லைஇன்றைய நிலையில் திருமண வாழ்வை முறையாக அணுகி வாழ்ந்து கட்டுகிறவர்கள் மிகசிலரே . வாழ்கை என்பது கணவனும் மனைவியும் குடும்பமும் சேர்ந்து வாழ்வது எத்தகைய இன்பம் நிறைந்தது .? இதை இந்த மூடத்தனம் நிறைந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை . கூட்டுக் குடும்ப வாழ்கை முறை நமக்கே யுரிது இன்று ஐரோப்பிய நாடுகளில் இது காணமல் போய் விட்டது சில நாள் களுக்கு முன் ஒரு நீதியரசர் (நீதிபதி இப்படி சொன்னதன புரியும் !) ஒருவர் எரிவளி நிறுவனம் ஒரே குடும்பத்தில் பல இனைப்புகள் உள்ளது எனவே தனியாக அடுப்புகள் இல்லை எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட எரிவளி இணைப்பை துண்டிக்கிறோம் என அறிவித்தமைக்கு கடுமையாக சாடி இன்றைய நிலையில் குடும்பங்கள் சிதறிக்கொண்டு இருக்கிறது இந்த்த சூழலில் ஒற்றுமையாக ஒரு குடும்பம் இருக்கிறது என்றல் பாராட்டாமல் இனைப்பை துண்டிப்பதா என கேட்டு மீண்டும் எரிவளி இனைப்பு கொடுக்க ஆணை பிறப்பித்தது உண்மையில் பாராட்டும் படி இருந்தது .

        இப்படிதத்தானே ஊக்குவிக்க வேண்டும் . உண்மையில் இன்றைய இளசுகள் எதையும் பொறுமையுடன் அணுகுவதில்லை நாம் சொல்லுவது இருபாலரையும்தான். எதிலும் விரைவு விரைவு ... எனவே வாழ்வும் விரைந்து கசந்து விடுகிறது பின்னர் மணமுறிவை நாடி போய் சீரழிகின்றனர் . இதற்கான காரணங்களை கண்டறிந்து சிக்கல்களை தீர்த்துக் கொள்ளுவதில்லை தீர்வு இருக்கிறது என புரிந்து கொள்ளுவதும் இல்லை . குடும்பம் வாழ்க்கை என்பது ஒரு கலையாக எண்ணப் பட வேண்டும் அதைவிடுத்து வரட்டுத் தனமாக வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விட்டில் பூச்சிகளாகி மடிந்து போகின்றனர் ஏன் இப்படி நிகழுகிறது என்பதை சிந்திக்க மறுக்கின்றனர் . இந்த்த வரட்டுத் தனம்தான் மனிதனை சீரழிக்கிறது . இல்வாழ்வை எடுத்துக் கொள்ளுவோம் தாம்பத்திய உறவை வள்ளுவர் மலரினும் மெல்லிது காதல் ... என்கிறார் இன்று கண்மூடித்தனமான பாலுறவுக் காட்ச்சிகளை பார்த்து விட்டு அதை அப்படியே நடைமுறைப் படுத்தத் தொடங்கி விடுகிறார்கள் இதனால் நிலை குலைந்து போன ஆணோ அல்லது பெண்ணோ பாலுறைவே வெறுக்கிறார் அல்லது இல் வாழ்கைகை முறித்துக் கொள்ளவிழைகிறார் . இதுதான் நடைமுறையா என தெரிந்து கொள்ளுவதில்லை இன்று இவர்களின் வழிகாட்டி மட்டரகமான செய்தி ஊடகங்களும் தொலைகாட்சிகளும் தான். காதலை அறிந்து கொள்ள இலக்கியங்களை கற்க வேண்டும் அகநானூறையும் , குருந்தொகையையும் அணு அணுவாக கற்க வேண்டும் குறிப்பாக வள்ளுவத்தை இன்பத்துப் பாலில் கூறியுள்ள எல்லோ பாடல் களையும் இருவரும் சேர்ந்தே வாசிக்க வேண்டும் . அப்போதுதான் காதல் புரியவரும்.

        இல்வாழ்க்கைப் பற்றி ஒரு புரிதல் கிடக்கும் இன்று முதல் இரவிலேயே எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என எண்ணுகிறார்கள் பழங்காலத்தில் திருமண விழாவே பதினைந்து நாள் களுக்கு மேல் நடக்கும் காரணம் இருவரையும் முறையாக புரிந்து கொள்ள வேண்டும் எனற உயரிய நோக்கம்தான் அன்றி வேறல்ல. சில நண்பர்கள் தங்களது ஆண்மையை நிலை நாட்ட பொது மகளீரை நாடுவதுண்டு இது பணத்திற்கான நடத்தப் படும் ஒரு அழிவு விளையாட்டு அப்படி அவள் நடக்க வில்லை என்றால் அவளுக்கு வருவாய் கிடைக்காது வீட்டில் உள்ளவள் விலை மகளீர் அல்லவே வேண்டும் பொது முறையாக பாலுறவு துய்த்துக் கொள்ளலாமே என் இதை புரிந்து கொள்ளுவதில்லை இது குறித்தான விரிந்த விமர்சனங்கள் வரவேற்க்கப் படுகிறது விமர்சனங்கள் இல்லை எனின் கருத்துகள் இல்லை என இந்த தொடர் நிறைவு அடையும் .

 சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .







           தமிழீழ  போராட்டத்தில்  ஈகா  சாவடைந்த  போராளிகளுக்கு
எமது  இதயம்  கனிந்த  கண்ணீர் அஞ்சலி .




 
More than a Blog Aggregator

நவம்பர் 19, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் -2

ஒரு பொறியாளர் பெங்களூருவில் வசிக்கிறார் நாங்கள் பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள் இதில் இருந்து விடுபட நீங்கள்தான் வழிசொல்ல வேண்டும் . அதை விடுத்து எங்களை சாடுவது சரியில்லை என்கிறார் . உண்மைதான் இந்த சமூகம் மாற்றம் பெற வேண்டும் என என்னும் போது நாம் உடனே பலனை எதிர் பார்க்கிறேன் பலன் இல்லை என்றால் நமது விமர்சனம் தொடருகிறது. முறையில்லாத உணவுப் பழக்கம் முறையில்லாத வாழ்க்கைமுறை இவைகள் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறது . என சான்றுகளுடன் கோரினால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கு எமது விமர்சனம் தொடருகிறது..... இன்றைய முறையில்லாத உணவுமுறை முறையில்லாத வாழ்க்கைமுறை எல்லாமே கேட்டை செய்யக் கூடியது மயக்கப் பொருட்கள் (குடி,புகை ) இரண்டுமே உடலை அழிக்கக் கூடிய நச்சுகள் தீபாவளிக்கு நாட்டில் மிகவும் பின் தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் எட்டு கோடிக்கு மது விற்பனை எனக்கு இவர்களைப் பார்த்து மகிழவா தோணும் ? அதனால் தான் திட்டித் தீர்க்கிறேன் போதுமா நண்பரே . இந்த மயக்கப் பொருட்களினால் விந்தணுக்கள் பாதிக்கப் படுகிறது அடுத்த கட்ட தலைமுறை நோயாளியகித் தானே போகும் . நேரந்தவறிய முறையில்லாத உணவுகள் நோயைத்தனே உண்டாக்கும் ? நீங்கள் நோயாளியாக இருந்தால் மரபு வழியான உங்களின் விந்தணுக்களில் இருந்து உயிர் பெரும் குழந்தைகள் நோயாளியாகிப் போவார்கள் தானே ? நீங்கள் முறையில்லாது விழுங்கப் படும் மேலை நாட்டு மட்டரக உணவு உங்களை நோயாளியகத்தானே செய்யும் எனவே முறையில்லாத தவறான பழக்கங்களை விட்டொழிக்க வேண்டுகிறேன் உணவு முறையில் இயற்கை சார்ந்த உணவு தேவை ஒருவேளை சமைக்கப் படாத உணவாக இருத்தல் மிகவும் நல்லது கரணம் இந்த சமைக்கப் படாத உணவு குருதியை முழு தூய்மையாக்கும் . எனக்கு தேவை எதிர்கால தலைமுறையினர் நோயில்லாத இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என்பதே எனவே முதலில் உங்களில் இருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன் இன்று இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் புத்துயிர் பெற்று வருகிறது இதே சிறப்புடன் முன்னெடுக்கும் பொது உண்மையில் அடுத்த சில தலை முறைகளில் பழந்தமிழரின் வாழ்க்கை முறையை கட்டமைத்து விடலாம் இயற்கையை மீட்டெடுத்து விடலாம் . பெண்ணோ அல்லது ஆணோ அழகாக இருக்கிறார்களா என பார்க்க வேண்டாம் உங்களுக்கு ஏற்ற வர்காளாக உங்களின் பழக்க வழக்கங்களுக்கு வாழ்க்கை முறைக்கு ஏற்ற வர்களாக இருக்றார்களா என்பதை கவனியுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை நோயில்லாமல் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலை வைத்து இருக்கிறார் என அறிந்து கொள்க . குழந்தைப் பேறு தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் கொஞ்சம் நாள் கழித்து அல்லது உடனே என்பதை முடிவு செய்க . உங்களின் அகவை குறைந்தது இருபத்தைந்திற்கு மேற்பட்டதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் . உங்களின் பேறு கல மருத்துவ முறை ஆங்கில அல்லது மாற்று மருத்துவமுறை பற்றிய தெளிவான முடிவு செய்க . உங்களின் மருத்துவரை முதலில் முடிவு செய்க . எல்லாவற்றிற்கும் இருவரும் முதலில் ஆற்றுப் படுத்துனர் (கவுன்சிலிங் ) பார்த்து முடிவுகள் செய்க . எதிர்காலம் குறித்து முழுமையான திட்டமிடல்கள் செய்க . அடுத்த இடுகையில் விரிவாக பேசுவோம் .... சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் More than a Blog Aggregator

நவம்பர் 12, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம்

இன்றைய இளசுகள் எதிர்கால வாழ்வை பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை முறையில்லாத உணவு பழக்கத்தாலும் முறையில்லாத வாழ்க்கை முறையாலும் தங்களுடைய வாழ்கையை வினக்குரியாக்கிக் கொள்ளுகிறனர் . இதைப் பற்றி சிந்திப்பதாகவும் தெரியவில்லை . இதை பொறுமையாக சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சற்று கடினமாக பேசவேண்டி இருக்கிறது நாங்கள் எல்லோருமே அப்படித்தான் இருக்கிறோம் நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்கிறனர் . நாம் சரி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் அனால் உணவு வாழ்கை முறை எல்லாவற்றையும் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டுமே இப்படி உணவு முறை இயற்க்கை சார்ந்த உணவுமுறை வரம் இருநாள் எண்ணை தேய்த்து குளித்துக் கொள்ளுதல் மூகமையாக வயிற்றை தூய்மையாக்கி கொள்ள வேண்டியது தேவையானது . முந்தய பதிவு களில் சொல்லிய படி வேறு எதாகிலும் நோய் இருந்தால் அதை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும் குருதி(இரத்தம் ) அளவு சரியாக இருக்கிறதா உடலில் வலி இருக்கின்றனவா என சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை முறையாக நீக்கிக் கொள்க . பெண் , அல்லது ஆண் எவராக இருந்தாலும் வளமையான அதாவது பணம் , பொருள் போன்றவற்றை பார்க்காமல் முதலில் இருவருக்கும் பிடித்தமானவர்கள் இருக்கிறீர்களா சிக்கல் நேரும் பொது எப்படி அதை அணுகுவது என முடிவு செய்து பின்னர் வாழ்கையை தெரிவு செய்வது மிகவும் சரியானது . பாலுறவைப் பொறுத்தவரை இளமையில் எல்லாமே சரியாகத்தான் தோன்றும் பின்னர் எது முன்பு இனித்ததோ அதுவே கசப்பானதாக மாறும் எனவே எல்லா சிக்கல் களுக்கும் முறையான தீர்வு இருக்கிறது பிரிவு என்பது எங்களிடையே வராது வந்தால் முறையாக பேசி தீர்த்துக் கொள்வோம் என முடிவு செய்து கொள்ள வேண்டும் நம் முதலில் பாலுறவு கட்சிகளை பார்க்க வேண்டாம் என கூறியதி பொருள் இதுதான் அதாவது உரையில்லாத அந்த பாலுறவு கட்சிகளை பார்த்து விட்டு இயல்பான பாலுறவு எளிதில் சலிப்பைத்தரும் இதனால் வாழ்கையே வினாக்குரியவதும் உண்டு அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
More than a Blog Aggregator

நவம்பர் 05, 2012

புதிய வாழ்க்கை முறை நோயில்லாத குழந்தைப்பேறு ....



 நமது வலைபூவிற்கு  வந்திருந்த  கேள்வி நோயில்லாத  குழந்தைபேறு  உண்டாக்க  சொல்லுங்கள்  என  இதுகுறித்து நாம் முன்னமே பேசி இருக்கிறோம் . அருள் கூர்ந்து விரிவாக வாசியுங்கள்  அப்படி  வாசித்து இருந்தால்  அவற்றில் இருந்து வினா தொடுக்கலாம்  .சரி நானும்  பதில் எழுத ஆயத்தமகிவிட்டேன் . இன்று கணிசமாக  நமது மரபு ரீதியான  மருத்துவ முறைக்கு  இளைய  சமூகம்  வருவது  நமக்கு  உண்மையில் மகிழ்வைத்  தருகிறது .

திருமணத்திற்கு  ஆயத்தமாவோம் ...

 இன்றைய  விரைவு  உலகத்தில்  பணம் மட்டுமே  குறிக்கோளாக  கொள்ளப்பட்டு  இளைய தலை முறையினரை    பணம் காய்க்கும் மரமாக  பெற்றோர்கள்  பார்க்கிறார்கள் . அப்படியே அவர்களை  பழக்குகிறார்கள்  பணம் சமபதித்து  சிறிய அகவையிலேயே  நோயில் விழ்ந்து  துடிக்கிறனர்  இவர்களைப் பார்த்தல் வேதனைப் பட   நேருகிறது. பொருளீட்டுவது  முறையான  வாழ்விற்க்குதத் தானேயன்றி  வேறல்ல  இதை  எண்ணம் கொள்ளவும்
      இல்வாழ்க்கை  என்பது  வாழப்போகும் காலங்களில்  ஈடுபாட்டுடன்  வழ முயலுவதாகவும்  இன்பத்தையும் துன்பத்தையும்   முழு ஈடுபாட்டுடன்  எதிர் கொள்வதாகவும் இருக்க வேண்டும் .  வரட்டுத்தனமான   அழகோ ... பணமோ  உண்மையில்  நிம்மதியை  கொடுத்துவிடாது  என்பதை  உள்ளத்தில் கொள்ளவேண்டும்    திருமணம்  ஏற்ப்பாடு  செய்யப்பட பின்னர்  பாலுறவு  தொடர்பான  கட்சிகளை கண்டிப்பாக   பார்க்க கூடாது  காரணம்   இது  அளவிற்கு மிகையான  பாலுறவு என்னத்தையோ  அல்லது அதற்க்கு நேர்மாறான   உலவியலையோ தரும்  அருள் கூர்ந்து  விட்டுவிடுங்கள்.
   திருமணத்திற்கு  முன்னதாக  இரண்டு  அல்லது மூன்று மதங்களுக்கு முன்னமே  இதற்க்கு ஆயத்தம் ஆகிவிட வேண்டும்   பாலுறவு காலத்தில்  கண்டிப்பாக வெறித்தனம் கூடாது  வள்ளுவம்  இதை  பாலுறவைஎன்ன சொல்லுகியது என்பதை  படியுங்கள்  குறைந்தது காதலர்கள் ( கணவன் மனைவி )
இருவரும் வள்ளுவரின்  இன்பத்து பால்  பாடல்களை  எல்லாவற்றையும்  இருவரும் முழு ஈடுபாட்டுடன்  படிக்க வேண்டும்   அப்போது தன என்ன சிக்கல் கல் எல்லாம் இல்வாழ்க்கையில் வரும் எப்படி தீர்ப்போம்  என தெரிந்து கொள்ளவியலும்
 மலரினும் மெல்லிது காமம்  என்பர் வள்ளுவர்  அதுபோல  பாலுறவை கைக்கொள்ள வேண்டும்  கண்மூடித்தனமாக  கையாளக் கூடாது   எல்லா வற்றையும்  முதலில்  நிறைய கணவனும் மனைவியும்  பேசவேண்டும்   அப்போதுதான் இருவரின்  உளநிலையை  அறிந்து கொள்ளவியலும்  பதற்றம் வேண்டாம் இன்று  எண்பது  விழுக்கடு  இளைய  தலைமுறைக்கு  எப்படி பாலுறவு வைத்து கொள்ளுவது என  தெரிய வில்லைஎன்கிறது ஒரு புள்ளிவிவரம் .

பாலுறவில்  உச்ச  நிலை என்பது என்ன ?

வீட்டு விலக்கு  நாளில் பாலுறவு கொள்ளலாமா ?
உச்சகட்டம் இருவருக்குமா ? எப்படி அடைவது ?
தங்களின்  பாலுறுப்புகளை  எப்படி  வைத்துக் கொள்ளுவது ?
கருக் கால  பாத்து காப்பு என்பது என்ன ?
கருக்கலத்தில்  பாலுறவு வைத்துக் கொள்ளலாமா?
பெண்மையை இந்த  காலத்தில் எப்படி கையாளவேண்டும் ?
கருக்கால  நோய்கள் என்ன தேர்வு என்ன ?
அறிவான குழந்தை  கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
நோயில்லாத குழந்தை  பேறு  கிடைக்க  என்ன செய்ய வேண்டும் ?

இப்படி வினாக்களை தெரிவு  செய்து  வினாக்களைத் தொடுத்து  விடை  விடைதேடினால்  வாழ்வு இனிதாகும் தானே  என்ன தேடுவோமா ?


சித்த மருத்துவம் காப்போம்  நோய் வெல்வோம் .
 
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...