ஜூலை 25, 2011

திருநங்கைகள் தோற்றம் ஒரு ஆய்வு




இப்போதெல்லாம் திருநங்கைகள் எல்லா இடங்களிலும் காண முடிகிறது . மனிதகுலத்தின் இந்த இலக்கண பிழைகளை நாமும் தெரிந்து கொள்வோமே என சிந்தித்தேன் . இந்த திருநங்கைகளின் வாழ்க்கை சற்று மாறுபட்டதாக இருக்கிறது . இவர்கள் உடலால் ஆணாக இருந்தாலும் உள்ளத்தால் பெண்ணாகவே இருக்கிறார்கள் . தங்களின் இயற்கைக்கு மீறிய இந்த நிலைபாட்டை இவர்கள் விரும்பி ஏற்கிறார்கள் . குடும்பம் இந்த உலகம் எவரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளது தமது வழித்தடத்தில் தானே பயணிக்கிறார்கள் .

புதிய பறவை புதிய வீடு

தங்களின் கூடுகளை பிரிந்த இந்த பறவைகள் வண்ணவண்ண கனவுகளுடன் புதிய வேடந்தாங்கலை உருவாக்கி கொள்ளுகிறது ..
இங்கு இவர்களில் சிலர் பாலியல் வெட்கைகொள்ளுவோர்களுக்கு . தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்டு விட எண்ணி உடலை அதற்க்கு தகவமைத்து கொள்ளுகிறனர் .அதாவது தங்களின் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அங்கே பெண்ணுருப்பினை போல செயற்கையாக உருவாக்கி கொள்ளுகிறார்கள் .

மருத்துவர் கை மாதா கை

தங்களின் ஆணுறுப்பை பெண்ணாக மாற்றிக்கொள்ள இவர்கள் பெரிதும் மருத்துவமனைகளை நாடி செல்லுவதில்லை . அதாவது முறையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளுவதில் இவர்களிடம் அதிக நாட்டமில்லை காரணம் மருத்துவர் களிடம் அது பெரிய மருத்துவ நடுவமாக இருந்தாலும் இவர்களுக்கு பிடிப்பதில்லை காரணம் முறையான மருத்துவமனை களுக்கு சென்று அறுவை செய்து கொண்டால் பின்னாளில் சிக்கல் உண்டாகிறதாம் செயற்கையான அந்த பெண்ணுறுப்பு வழி அடைத்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கு கிறதாம். விரைந்து காயம் ஆறுவதில்லை என்கிறான் (ள்) சினேகா என்ற திருநங்கை. எனவே தாயம்மா எனப்படும் ஒரு முதிய திருநங்கை ஒரு நல்ல நாளில் கூரிய ஆயுதம் கொண்டு தன்னுடைய கைகளினாலே ஆணுறுப்பை நீக்கி விடுகிறாராம் . இந்த நேரத்தில் வலி மிகையாக தெரிவதில்லை என்கிறான்(ள் ) முத்தழகி என்ற திருநங்கை .
.
இந்த உறுப்பு மாற்றம் செய்து கொண்ட பிறகு நற்பது நாட்கள் கடுமையான உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க படுகிறது .ஆண்களையும் பார்க்க கூடாதாம் .இதனால் நோயில் இருந்து காத்து கொள்வதுடன் உடல் பெண்களைப்போல மாறுகிறது மயிர் நீங்குகிறது என நம்புகின்றனர் . அதுமட்டும் அல்லது பிற மக்களைபோலவே இவர்களிடம் கட்டுபடுத்த முடியாத மூட பழக்கங்களும் குடி கொண்டிருப்பதை கானலாகிறது
அதுமட்டுமின்றி இவர்களின் பாலுறவு வேட்கை இவர்களை பெண்ணாக பாவித்து கொள்ளுவதால் ஆணின் தேவையை விரும்புவதாக கூறுகிறனர் .பாலுறவில் பெண்களைப்போலவே ஆர்கசம் எனப்படும் உச்சநிலை அடைவதாக கூறு கிறாள் (ன்)பவித்த்ரா .

சித்த மருத்துவ அறிவியல் பார்வையில் திருநங்கைகள் .

சித்த மருத்துவம் அறிவியலை உள்ளடக்கியது என்பதை நாமறிவோம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமூலர்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்தது முதலைந்து உயிரோடே ஏறி

என பதிவு செய்கிறார் . பாலுறவு கொள்ளும் காலத்தில் தாய் , தந்தை உளநிலை , உடல் நிலை போன்றவற்றையும் மிக நுணுக்கமாக பர்க்கவேண்டியத்தின் காரணத்தை பதிவு செய்கிறது . பாலுறவு காலமும் அதன் பின் தாயின் கருக்கலமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதின் தேவையை உணத்துகிறது . இப்படி முறையாக தாய்மைப் பேற்றைக் கடைபிடித்தால் வன்முறையற்ற சிறந்த அறிவு நிறைந்த தமிழ் குமுகத்தை தோற்றங்கொள்ள செய்யலாம் .

திருநங்கைகள் தோற்றம் .....

ஆண்மிகில் ஆணாம் பெண்மிகில் பெண்ணாம்
பூணும் இரண்டோன்றிப் பொருந்தில் அலியாகும்

என்கிறார் திருமூலர் அதாவது கணவனும் மனைவியும் குழந்தை வேண்டி கூடுகையில் கணவனின் மூச்சு காற்றுவலப்பக்கம் நடந்தால் ஆண்குழந்தையும் இடப்பக்கம் நடந்தால் பெண்குழந்தையும் இரண்டு பக்கமும் உயிர்வளி நடந்தால் அலியாகவும் பிறக்கும் என்கிறார் . சித்தமருத்துவம் அறிவியல் வழிபட்டது என்கிறோம் எந்த மூகந்திரமும் இல்லாமல் முழுமையாக இவற்றை வாசிக்காமல்அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் வாட்டுவதம் புரியும் சிலர் இது அறிவியல் இல்லாததது என்கிறனர் . . இந்த கூற்றை முழுமையாக ஆய்வு செய்தால் எல்லாம் புரியும் தானே செய்யுங்கள் என்கிறோம் அல்லது செய்கிறவனை விடுங்கள் செய்து கட்டுகிறோம் இங்கே தானும் படுப்பதில்லை தள்ளியும் படுப்பதில்லை .
அன்புள்ளம் கொண்டோரே சித்தமஆத்துவ அறிவியல் இந்த உலகபந்தே பின்பற்றவேண்டிய சிறந்த அறிவியல் என்கிறேன் . சித்தர்களின் கூற்று என்றும் பொய்த்ததில்லை பொய்க்காது எனவே சித்தர்களின் மருத்துவ அறிவியல் பார்வை இன்றைய நிலையில் நுணுகி நுணுகி ஆய்ந்து மக்களுக்கு கொடுக்கவேண்டிய சிறந்த மருத்துவம் பின்பற்றுவோம் . காப்போம் .
ஆக சித்த மருத்துவ அறிவியலின் படி முறையாக குழந்தை பேற்றிற்கு முயன்றால் சிறந்த எதிர்காலத்தை நோயற்ற ஒரு குமுகத்தை உண்டாக்க முடியும் என்பது நமது வாதமாகும்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

அறிவான குழந்தை அறுவை சிகிச்சை இல்லாத குழந்தை சாத்தியமா?.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...