ஜூன் 27, 2011

மாட்டின் பால் மனிதனுக்கு ஏற்றதா?




விலங்கு களில் இருந்து பெறப்படும் பால் மனிதனுக்கு ஏற்றதா ? இது என்ன
கேள்வி இன்றைய அறிவியல் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தி பால்
எல்லோருக்குமான உணவு என பட்டியல் இடுகிறதே ? இந்த வில்லங்கம் பிடித்த
சித்தமருத்துவர்களே இப்படித்தான் ஏதாவது சொல்லி மக்களை குழப்புவதே அவர்களின்
வேலை என முனுமுனுப்பது நமக்கு கேட்கிறது.

வேண்டாம் விபரீதம்

வேண்டாம் விபரீதம் என நினைப்பவர்கள் தொடரவேண்டாம்,இதோடு நிறுத்திவிடுங்கள்
படிப்பதை . இல்லை படித்தேதான் தீருவேன் என நீங்கள் முடிவு எடுத்தால் , முதலில்
இதயத்தை திடப்படுத்திகொள்ளுங்கள்.
மாட்டுப்பால்,மனிதனின் தமனியில் கால்சியத்தை அதிக அளவில்
படியச்செய்கிறது . அதேசமயம் மனிதனுக்கு விரைவில் முதுமைத்தன்மையை
உண்டாக்குகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம்.மாட்டுபாலை அருந்துவதால்
மாடுகளுக்குவரும் பல்வேறு நோய்கள் மனிதனை தாக்குகிறது என்பது உண்மையே.

மனிதனின் ஆயுள் 300 ஆண்டுகள்

மனிதனின் ஆயுட்காலம் 300 ஆண்டுகள் என ஒருபதிவில் எழுதியிருந்தேன்
, இந்த ஆண்டுகளில் மனிதன் 20 ஆண்டுகளை தன்னுடைய முழுமையான வளர்ச்சிக்கு
எடுத்துகொள்ளுகிறான் . மனிதனின் உடல் முழுமையடைய இருப்பது ஆண்டுகள் ஆகிறது
.ஆனால் விலங்குகள் அங்கனம் இருக்கவில்லை ,பிறந்த சில மணி நேரங்களில் தனது
நடவடிக்கைகளை தொடங்கி விடுகிறது அதாவது நடக்கவும் தாய்ப்பாலை அருந்தவும்
பழகி விடுகிறது. இந்த அதிவிரைவான விலங்குகளின் வளர்ச்சி இருபதாவது
அகவையில் தன் வாழ்நாளை நிறைவு செய்துவிடுகிறது. இப்படிப்பட்ட விலங்கு
களின் பாலை அருந்தி விரைவில் மனிதன் முதிர்ச்சியை தேடிக்கொள்வானேன்.

இதளியமே (இரசயனமே ) இன்றைய மாட்டின் பால்

முன்பு மாடுகள் புல்தின்று பால் கறந்ததது. இன்று இரசாயணம் கலந்த
தீவனங்களை தின்று பால் கறக்கிறது. இவைமட்டும் இல்லாமல் பால் குளிரூட்டும்
நிலையங்களில் சேர்க்கப்படும் கலப்புகள் எண்ணிலடங்கா. பாலை இப்படியே
அருந்தினால் கூட பரவாயில்லை . ஆனால் இன்றைய வெள்ளை சர்க்கரை சேர்த்து பால் அருந்துவதால்
நோய் பலமடங்கு அதிகமாகிறது. இந்த வெள்ளை சர்க்கரை அதன் தயாரிப்பு
முறையே மனிதனை நோயாளி ஆக்குகிறது. வெள்ளை சர்க்கரையை தூய்மையாக்க
(Bleaching ) செய்ய பயன்படுத்தும் இரசாயணம் மனித உடலுக்கு ஏற்றதல்ல
என்பதுதான் . அதுமட்டும் இல்லாமல் இந்த வெள்ளை சர்க்கரை உடலில் உள்ள
வைட்டமின்களை அழிக்கிறது அதாவது சர்க்கரை வைட்டமின்களின் திருடன் .(White
sugar is a vitamin thief ) என்கிறார்கள்.

கருப்பே சிறப்பு

தமிழ் மருத்துவம் எப்போதும் கருப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் .
கருநொச்சி, கருந்துளசி இப்படி...இந்த வகையில் கருப்பட்டி வெல்லம்
போன்றவையும் சிறப்பானவைகள் . அதேபோல வெண்மை நிறத்தை சித்தமருத்துவம் வெள்ளை
விசம் என்கிறது அதாவது சர்க்கரை , உப்பு ,மட்டைதீட்டபட்ட அரிசி இவைகள்
வெள்ளை விசங்கள் .

விலங்கா மனிதனா

இன்று விலங்குகளே உயர்வானவை. பிறந்த விலங்கு சில ஆண்டுகளில் தாய் பாலை
மறந்துவிட்டு இயற்கை உணவிர்விற்கு திரும்பிவிடுகிறது. அவைகள் பாலை தேடி
அலைந்து கொண்டிருப்பதில்லை மனிதன்தான் மரித்துபோகும் வரை பாலைத் தேடுகிறான்
எந்த விளங்கும் தன்னினத்தை கொள்ளுவதில்லை ஆனால் மனிதன்தான் சக மனிதனையே
கொல்லுகிறான். அதற்க்கு துணையும் போகிறான் .நாம் காடையன் இராஜபக்சே வையும் . இங்குள்ள மேனன்களையும் சோனியாவையும் கூறுகிறேன் என நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்யட்டும்.?

பாலா விசமா ?

இயற்கையான காய்கள் கனிகள் போன்ற வற்றை கொடுத்து குணமாகி வரும்
நோயாளிகளுக்கு முறையே மாட்டின் பாலையும் மோரையும் வழங்கியதில் தடுமன் (சளி
) உண்டானதாகவும் அடிபட்டவருக்கு சீழ் பிடித்ததாகவும் மற்ற நோயாளிகளுக்கு
நோய் தீவிரம் அடைந்ததாகவும் கண்டறியப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கிறது. பால்
பொருட்களை உண்பவர்களுக்கு சளி தோன்றுவதை தவிர்க்க முடியாது. சளி நிறைந்த உடலை
தேடி நோய்கள் குடிகொள்ளத்தொடங்கும். நுரையீரலில் சளி நிறைந்தால் மிகையாக
உயிர்வளி (ஆக்சிஜன் )கிடைக்காமல் போகும் உயிர்வளி கிடைக்காவிட்டால் மனிதன்
நோயாளி ஆவான்தனே ?

பாலுக்கு மாற்று என்ன ?

அப்படியானால் பாலுக்கு இணையான உணவு என்ன என்பது உங்கள் வினா .
இயற்கையான முறையில் காய்த்த பழுத்த விளைந்த பழம்தான் முழுமை நிறைந்த
உணவாகும் . பால்தான் வேண்டும் என அடம் பிடித்தல் எமது முந்தய இயற்கை உணவுகள்
குறித்த இடுகையில் இயற்கை பால் தயாரிக்கும் முறை உள்ளது . அதன் மூலம்
தேங்காய், நிலக்கடலை, எள் , நெல். பாதம், போன்றவற்றில் இருந்து முறையான சத்து
நிறைந்த இயற்கை பால் தயாரித்து பயன் படுத்தி நீடு வாழலாம்.

*சித்த மருத்துவம் காப்போம் நோய்வென்று நீடுவாழ்வோம்.*More than a Blog Aggregator

ஜூன் 20, 2011

கால்கை( காக்கா )(Epilepsy) வலிப்பு தீர்வுகள் காரணங்கள் .....


கால்கை வலிப்பு நோய் பற்றிஎழுதுங்கள் என ஒரு வலைபதிவர் கேட்டு இருந்தார் இன்றைய நிலையில் இந்த காக்க வலிப்பிற்கு பாதிக்கப் படுகின்றவர்கள் மிகையாகி வருகின்றனர். பழைய காலங்களிலும் இந்நோய் இருந்ததனால் இந்த நோய்க்கு முறையான மருத்துவம் கண்டு இருக்கிறார்கள் சித்தர்கள் . இந்நோய் பற்றிய குறிப்புகள் சித்த மருத்துவத்தில் காணக்கிடக்கிறது . இந்நோய் அடிப்படையில் மூளை சார்ந்ததே . .

நோயின் தன்மை

இந்நோய் அறிவு குன்றி தன்னிலை மறந்து தன்னை முற்றிலும் மறந்த மயக்க நிலையில் கையும் காலும் வலித்தது இழுத்தல், வாய் கோணுதல், வாயில் நுரை தள்ளுதல் , கண்பார்வை குன்றுதால் ,, ஒருபக்கமாக இழுத்தல், என பல அறிகுறிகளை காட்டும். இந்த நோய் கண்டவர்கள் இந்த பாதிப்புகள் வரும் முன் சில அறிகுறிகளை காட்டுகிறது என்று கூறுகின்றனர் .
இந்த நோய் இருபத்தொரு வகையாக அழைக்கபடுகிறது இந்த இருபத்தொருவகை வலிப்பு நோய்களுக்கும் தனியான முறையான மருந்து களை சித்த மருத்துவம் கூறுகிறது .

நாடி நடை

சிறுவிர லிரண்டு பக்கம்
நாடிதான் சிதறி யோடில்
மருவிய காலுங் கையுங்
வலித்துடன் மிகவே நோகும் .

என தெளிவாக இந்நோயை பகுக்கிறது சித்த மருத்துவம் .சித்தமருத்துவம் என்பது அறிவியலை உள்ளடக்கியது என்பது நாம் அறிந்தது .

பொதுவாக வலிப்பு நோய் கண்டவருக்கு அந்நேரத்தில் சாவிக் கொத்தையோ அல்லது இரும்பு களையோ ஏதாவது ஒன்றை கொடுப்பார்கள் . இதில் அறிவியல் இருப்பதாக தெரியவில்லை.அந்த நேரத்தில் அவரை தனிமைபடுத்தி ஆடைகளை தளர்த்தி நாக்கை பல் இடுக்கு களில் மாட்டிகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறு கட்டைகலையோ வேறு ஏதாவது பொருளையோ கொடுத்து நாக்கை கடிக்காமல் செய்ய வேண்டும். அதே சமயம் சுவாசத்தை சீராக்க வேண்டும் . அந்த நேரத்தில் அவருக்கு தூய உயிர்வளி (ஆக்சிஜன் )தேவை எனவே கூடி நின்று வேடிக்கை பார்க்காமல் அவருக்கு வெளிச்சத்தை தந்து சங்கடப்படுத்தாமல் அவரை தனிமைபடுத்தவேடும்.

நோய் கராணங்கள்

வலிப்பு நோயை பொறுத்தவரை பல காரணங்கள் கூறப்பட்டாலும் சித்தமருத்துவம் தெளிவான கருத்தாக்கங்களை கொண்டு இருக்கிறது.
சிலர் பரம்பரை யாக வரும் என்கிறார்கள் சில குடும்பங்களில் இது உண்மையாகிறது . நம்மை பொறுத்தவரை இந்நோயில் மூளைக்கு செல்லும் அறத்த நாளம் தடைபடுவது ஒரு காரணமா கொள்ள வழி இருக்கிறது. குழந்தைகளில் பலர் நோய் எதிர்ப்பின்மையால் அடிகடி தடுமன் (சளி )தொந்தரவு உண்டாகிறபோது மூளைக்கு செல்லும் நரம்புகள் பலமிழந்து போவதால் மூளைக்கு உயிர்வளி (ஆக்சிஜன் )மாற்றும் தேவையான சத்துகள் செல்லாமல் போகவே இந்நோய் தோன்றுவதாக படுகிறது . காரணம் இந்நோக்கு நாம் பலருக்கு மூளையை பலபடுத்தபடும் மூலிகை மருந்துகளையும் வலிப்பிற்கான மருந்துகளையும் அளிக்கும் போது நோயில் நல்லபலனை எதிர்பார்க்க முடிகிறது.

தீர்வுகள்

முறையான சித்தமருத்துவரின் கீழ் இந்நோய்க்கு தீர்வு கிடைக்கும். இந்நோய்கும் மூளைக்கும் நொறுங்கிய தொடர்பு இருப்பதால் மூளையை பலப்படுத்தப்படும் மருந்துகள் தேவைப்படலாம். நெய் ,தேன். வல்லாரை , பிரம்மி போன்ற மருந்துபொருட்கள் நல்ல பலனை தரும். தரமான தாவர புரதம் கொழுப்பு சேர்ந்த உணவுகள் தேவைபடல்லாம். பழங்காலங்களில் மணமான பெண்ணிற்கு ஐந்தரை பெட்டி வழங்குவார்கள் இந்த ஐந்தர பெட்டிகளில் உள்ள மருந்துகள் குழந்தை பிறந்தத்தில் இருந்தே வழங்குவார்கள் . அதில் ஒன்றுதான் வசம்பு இந்த வசம்பை பிள்ளை வளர்த்தி என்றே வழங்குவார்கள்
இம்மருந்தை முறைப்படி குழந்தைகளுக்கு வழங்குவது தமிழர்களின் மறிவு மரபில் தோன்றியதாகும். மேல்பூச்சகவும் உள்ளுக்கும் கொடுப்பார்கள் இந்த மருந்து மூளைவளர்ச்சியை துரிதப்படுத்தகூடியதாகும் . இப்படியாக சித்தமருத்துவத்தை முறைப்படி குழந்தையிலிருந்தே கொடுத்துவர வலிப்பு நோயும் மற்றும் பிற நோய்களும் வர வாய்ப்பே இல்லைநோய்கண்டவர்கள் மூளை வளர்ச்சிக்கான மேற்கண்ட வல்லாரை, பிரம்மி , தேன், நெய் போன்றவற்றை எடுத்தும் முறையான மருத்துவரை நாட நல்ல பலன் கிடைக்கும் முறையான நமது சித்த மருத்துவத்தை பயன் படுத்தி நோய் வென்று நீடு வாழ்வோம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.More than a Blog Aggregator

ஜூன் 13, 2011

சமைக்காத இயற்க்கை உணவுகள் வந்த நோய் விலக நோய் வராதிருக்க(Organic Food)



இன்று இயற்க்கை சார்ந்த சித்தமருத்துவம் / இயற்க்கை உணவுகள் குறித்த விழிப்புணர்வு உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் பொறியாக (இயந்திரமாக ) கடைபிடிக்க படுகிறதே யன்றி அதன் உண்மை தன்மையுடன் கடைபிடிக்க படுவதில்லை என கானலாகிறது .
நட்சத்திர உணவு விடுதிகளில் (star hotels ) கொடுக்கப்படும் இவ்வகை இயற்க்கை காய்கறிகள் பொழுது போக்கிற்காகவோ அல்லது அறியாமையின் பொருட்டோ இயந்திரத்தனமாக கடைபிடிக்கபடுவதை காணமுடிகிறது.

இயற்கையும் செயற்கையும்

இயற்கை உணவுகள் உண்ணும்போது காய்கள், மூலிகைகள்,பழங்கள், இவைகள் எல்லாமே சமைக்கப்பட்ட உணவுகளுடன் சேர்த்து உண்ணக்கூடாது.
இவைகள் எடுக்கும்போது நன்கு தூய்மையாக கழுவப்பட்டு மேல்தோல் செதுக்குவது எனின் செதுக்கி உடனே உண்ணப்படவேண்டும். நீண்டநேரம் இருப்பின் அவற்றில் உள்ள தாதுப்பொருட்கள் எல்லாம் வீணாகிவிடும் .
அதேபோல பாலுண்ணும் போதும் அதனுடன் வேறு எந்த சமைக்கப்பட்ட உணவுகளையோ அல்லது பழங்களையோ கண்டிப்பாக எடுக்கலாது .இயற்க்கை உணவுகளுடன் எப்போதும் உப்பு சேர்ப்பதோ அல்லது இயற்க்கை உணவுடன் தண்ணீர் அருந்துவதோ கண்டிப்பாக கூடாது .அவைகள் பிவிளைவை உண்டாக்கும் .
அதேபோல காய்களை பல காய்களுடன் கலந்து கூட்டாக எடுக்கலாம் ஆனால் பழங்களையும் கீரைகளையும் எப்போது தனித்தனியே தான் எடுக்கவேண்டும் .

இயற்க்கை உணவுகள்

இன்று மனிதனுக்கு தேவையான சத்துகளாக புரதம் (protin ) தரசம் (carbohydrates ) கொழுப்பு (fat )
மற்றும் தாதுப்பொருட்கள் (minerals ) தேவை என்கிறது இன்றய அறிவியல் ஆனால் தமிழர்களின் உணவு இந்த அறிவியலின் அடிப்படையிலேயே கடைபிடிக்க பட்டு வருகிறது இது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கடைபிடிக்க பட்டுவருவதாகும்



தரமான தவச (தாணிய ) உணவுகளில் கிழங்குகளில் இருந்தும் தரச (carbohydrates )களும் , கொட்டைகள், வேர்கடலை, எள், தேங்காய் , சில பருப்புகள் ஆகியவற்றில் இருந்து கொழுப்பு (fat )ம் ,
தரமான கொட்டைகள் பாசிபருப்பு , மொச்சை , காராமணி , சோயா மொச்சை போன்றவறில் இருந்து புரதமும் (protin )ம் கிடைகிறது . அதேபோல தூய்மை செய்த காய்களில் எண்ணற்ற தாதுப்(minerals ) பொருட்கள் காணக்கிடைக்கிறது . இவைகளை முறையாக உண்டுவர சமைக்காமலே மனிதன் நலமோடு வாழ முடியும்.

இயற்க்கைபால்

இப்போது மனிதன் விலங்குகளில் இருந்து மாமிசத்தை மட்டுமின்றி அவற்றை கொல்லாமலே அவற்றை சக்கையாக பிழிந்து அதன் அரத்தத்தை குடிக்க தொடங்கிவிட்டன என்ன புரிய வில்லையா விலங்கு களின் பாலை தான் சொல்கிறேன் . இந்த விலங்கு களின் பாலும் இன்று மனிதனுக்கு நோயாக பரிணாமம் அடைந்து வருகிறது பின்னர் தானிய ஒரு இடுகையில் இதை பார்போம்
விலங்கு களின் பாலைவிட பன்மடங்கு சத்து நிறைந்தது மான இயற்க்கைப்பால் நமக்கு கிடைத்த ஒரு கொடையாகும். விலங்கு களின் பால் நோய் மட்டுமின்றி உப்பு காரம் போட்ட எந்த உணவுகளுடன் பாலை அருந்த கூடாது என்பது நமக்கு தெரிந்ததே . ஆனால் இந்த இயற்கைப்பால் அப்படி எல்லாம் இல்லை முறைப்படி செய்யப்பட்ட பாலை எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம் குறைந்த அளவே எடுத்த பதிலும் இதன் பலன் அளப்பரியது .

இயற்கை பால் செய்முறை


வேர்கடலை பால் என எடுத்து கொள்வோம் . தரமான வேர்கடலை எடுத்து கொண்டு அவற்றில் தூசு சொத்தை இல்லாமல் எடுத்து கொண்டு அதை தூய்மை நிறைந்த மணல் பரப்பிய தட்டில் பரப்பி நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி வார நாற்பத்தெட்டு மணி நேரத்தில் முளைக்க தொடங்கும் இந்த வேளையில் அந்த வேர்கடலையை தூய்மையாக கழுவி பின்னர் உலக்கையில் இடித்தோ அல்லது அம்மா புரட்சி தலைவி கொடுக்கும் (வெளிநாடுகளில் வாழ்பவர்கள்?சொம்மா நகை சுவைக்காக )மிக்சியில் அடித்தோ அதிலிருந்து வரும் சாற்றை பிழிந்து விலங்கு களின் பாலைபோலவே பாலாகவும் மற்றபடி தயிர் ,மோர் ,வெண்ணை , நெய் என எல்லாவகையிலும் பயன் படுத்தலாம்.

இயற்கை உணவுகள் மட்டுமே எடுத்து வாழ முடிமா ?

இன்றைய நிலையிலும் இயற்கை உணவுகளை மட்டுமே எடுத்து மனிதன் வாழ முடியும் இயற்கை உணவுகளில் மனிதனுக்கு தேவையான எல்லா சத்துகளையும் தன்னகத்தே கொண்டு உள்ளது என்னவெனில் எளிதில் செறித்து விடும் உடல் உழைப்பில் ஈடுபடுகிறவர்கள் கொஞ்சம் அவல் சேர்த்து அவல் தேங்காய் துருவல் அவல் இயற்கைபால் , அவல் வாழைபழம் , அவல் காய்கள் , என சுவைக்கு ஏற்றபடி எடுத்து அடுப்பில்லாமலே முறையாக உணவு எடுத்து மனிதன் நீண்ட நாள் வாழ முடியும் .
இயற்கை உணவுகளாக இயற்கைப்பால் , காய்கள் , பழங்கள் , கீரைகள் , மூலிகைகள் , தேன் தானியங்கள், கொட்டைகள் , தேங்காய் ,எள், என எல்லாவற்றையும் முறையாக உணவாக எடுக்கலாம் இயற்கையாக எடுக்க முடியாத உணவுகளை ஆவியூட்டி மிளகு சேர்த்து உண்ணலாம் .

குறிப்பு : நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை உணவுகளை உண்டுவிட்டுத்தான் மற்றவர்களுக்கு போதிக்கிறோம் .

பழமையான சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

ஜூன் 06, 2011

டையாலிஸ்(Dialysis ) தேவையா ? (நடிகர் ரசினி )




இன்று சராசரி களுக்கே பெரிய பெரிய நோய்கள் வரத்தொடங்கி விட்டது காரணம் இன்று முறை இல்லாத சில பழக்க வழக்கங்களினால் மயக்க பொருள்கள் (மது ,புகை ) போன்றவற்றினாலும் சில ஆங்கில முறை மருந்துகளினாலும் பலவித நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது . இவைகள் சிறுக சிறுக மனிதத்தையே அழித்துவருகிறது டையாலிஸ் தேவையா ? என்ற அளவிற்கு ஒரு திரைப்பட நடிகருக்கு அவரின் முறையில்லாத நடவடிக்கை காரணமாக வந்த நோய் இன்று தமிழக மக்களின் அவசியமான பேச்சாக மாறியுள்ளது யார் அந்த நடிகர் ?

.


மும்பையை பூர்விகமாக கொண்டு கர்நாடகத்தில் இருந்து கோடம்பாக்கம் (சென்னை ) வந்த வர்தான் இந்த ரசினி தொடர் புகைபழக்கத்தினால் மூச்சுத்திணறல் , நுரையீரல் தொற்று , அளவிற்கு மீறிய குடிபழக்கத்தினால் சிறுநீரக மாற்று அல்லது டையாளிசு ஆகியவை செய்யும்படி நேர்ந்திருக்கிறது .


நோய்காரணங்கள்

குறிப்பாக சிறுநீரகம் மனிதமூளை இதயம் போன்றவை அவ்வளவு எளிதில் கேடு அடைவதில்லை காரணம் இவைகள் மனிதனின் மூகமையான உடலுறுப்புகள் .என்பதால் . இந்த முறையில்லாத மது ,புகை அளவுக்கு அதிகமான வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் மனிதனின் சிறுநீரகத்தை சல்லடையாக ஆக்கிவிடுகிறது. மென்பானங்களும் விதி விளக்கில்லை என்பது இரு செய்தி .

இரும்பு அல்ல மனித சிறுநீரகம்

மனிதனை தவிர வேறு எந்த விலங்கு களுக்கும் இந்த அறுவை மருத்துவமோ மாற்று உறுப்புகள் பொருத்துவதோ நிகழுவதில்லை காரணம் அவைகள் இன்னும் இயற்கையை ஒட்டியே வாழுகிறது . ஆனால் மனிதன் தன்னோடு பட்டணங்களில் (நகர்புறம் ) சமைக்கப்பட்ட உணவுகளையும் செயற்கை உணவுகளையும் விலங்கு களுக்கு கொடுப்பதால் அவைகளும் நோயாளியாகிபோகிறது.

ஒரு மனிதனிடம் பத்து இலட்சம் சிறுநீர் வடிப்பிகள் இருக்கிறது இவைகள் மனிதனின் முறையில்லாத நடவடிக்கை களினால் நாளும் சில பழுதடைகிறது இவைகளின் பணியை எஞ்சியுள்ள சிறுநீரக வடிப்பிகள் செலாற்று கிறது .

சிறுநீரக செயலிழப்பும் டயாலிசிசும்

இப்படி தாக்குதலுக்கு ஆளாகும் சிறுநீர் வடிப்பிகள் (Nephrons ) ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழந்து போகிறது தன்னுடைய இயலாமையால். இந்நிலையில் உடலியக்கம் தொடர ஆங்கில மருத்துவ முறையில் செயற்கை கருவிகள் கொண்டு சிறுநீரகத்தை தூய்மையாக்கு கிறார்கள் . என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். இந்த டையாளிசிசு செய்யும் நிலையில் உடல் கடுமையாக சூடு அடையும் எனவும் , இந்த டையாளிசிசு செய்து கொண்ட அன்று உணவு எடுக்க முடியாது எனவும் கக்கல் (வாந்தி )ஏற்டும் எனவும் கடுமையான போராட்டம் நிறைந்த நாட்கள் என்கிறார் கருவி மூலம் சிறுநீரகத்தை தூய்மை செய்தும் பலன் கிட்டாமல் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்ட நண்பர் கணேசுமூர்த்தி.

சித்த மருத்துவத்தால் சிறுநீரகத்தை தூய்மையாக்கல்

சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்க்கும் எனவும் அது மனிதனை பொறியாக பார்க்காது எனவும் முன்பே குறிப்பிட்டு இருந்தேன் . அதே போல அப்படிப்பட்ட சித்த மருத்துவம் சிறுநீரகத்தை தான் தொண்ணுறு விழுக்காடு கெட்டுபோன நிலையிலும் தன்னுடைய முறையான மருத்துவத்தினால் மூலிகைகளை கொண்டு முன்போலவே செயல்பட வைக்க இயலும் என்கிறது சித்த மருத்துவ சித்தாந்தம் .மனிதனின் அரத்தத்தில் கலந்து உள்ள உப்பு தன்மையை நீக்க பாகல், வாழைபூ, வல்லாரை,சுண்டை, பெருமளவில் உதவுகிறது . இந்த பொருட்களை எடுக்காமல் மீண்டும் மீண்டும் முறையில்லாமல் சிறுநீரகத்தை கெடுக்கும் மயக்க பொருள் வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் கேடு அடைய செய்கியது.

நாள்பட்ட சிறுநீரக செயல்திறநிழப்புஆங்கில மருத்துவர் விளக்கம்

இது முற்றிலும் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையாகும் . சிறுநீரகம் செயலிழந்த நிலை சிறிதளவே காணப்படும் . தொடக்கத்தில் எந்த அறிகுறியும் காட்டுவதில்லை . என்கிறனர் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் .
சிறுநீரகத்தில் (Urea ) என்ற கழிவு மிகையாக இருக்காது . ஆரோகியமான ஒருவருக்கு யூரியாவிண் அளவு 20 -40 மில்லி கிராம் 100 மில்லி இரத்தத்தில் . இது சிறுநீரகம் முற்றும் செயலிழந்த நிலையில் இவைகள் மிகையாக இருக்கும்.

சிறுநீர் வெகுவாக வெளியேறினாலும் வெறும் நீரேயன்றி எந்த கழிவுப்போருளும் இருக்காது .

இரத்த சோகை (Anemia ) உண்டாகும்.

இரத்தத்தில் சுன்ன சத்து (Calcium )குறைந்து இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைந்து தானே முறியும்.

கடைசியில் நோய்கண்டவர் பேசவும் நடக்கவும் இயலாமல் வலு வின்றி ஆழ்ந்த மயக்க (Coma stage ) நிலை அடையக்கூடும்.

சில சமயம் கை கால் வலிப்பு உண்டாக்கலாம்.

நாவரண்டு மூச்சு கெட்ட வடைவீசும் .

பசி இன்மை, வயிறுபுரட்டல் , கக்கல் தோன்றும் .
தோலில் வறட்சி உண்டாகி தாங்க முடியாத அரிப்பு உண்டாகும்.

இந்த நிலையில் கூழ்மாறி (Dialysis ) எனப்படும் சிகிச்சை வயிற்று உள்ளுறை மூலம் இரத்தத்தில் நேரடியாகவும் செய்யப்படும்

அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்தப்படும் என்கிறார் ஆங்கில முறை சிறுநீரக இயல் மருத்துவர் செல்வராஜ்

சித்த மருத்துவம்

இரத்தத்தில் உள்ள மிகையான உப்பை குறைக்க சித்த மருத்துவத்தில் பல்வறு மூலிகைகளும் மருந்துப் பொருட்களும் கொடையாக கொட்டி கிடைக்கிறது. இவற்றை முறையாக பயன் படுத்தினால் சிறுநீரகம் கெட வாய்பில்லை .
அப்படி கேடு அடைந்த நிலையிலும் தேர்ந்த மருத்துவர் நோய்கண்டவருக்கு செயற்கையாக சமைக்க பட்ட உணவை நீக்கி முறையான சித்த மருந்துகளை பரிந்துரைப்பார். நோய்கண்டவருக்கு எனிமா எடுக்கப்படும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் பட்டினி மருத்துவம் கொடுப்பார் பழச்சாறுகள் கொடுக்கப்படும் பின்னர் மண் குளியல் செய்வார் பின்னர் மூலிகைகள் கொண்டுணவு பட்டியலை தருவார் சிலவாரங்களில் சிறுநீரகம் தன் பணிசெய்யத் தொடங்கும் இந்நிலையில் எளிய மூலிகை மருந்துகளும் இயற்கை உணவுகளும் வழங்குவார் இதில் கவனிக்க வேண்டியது இனிப்பு, உப்பு மென்பானங்கள் , சமைக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்படும் இந்த நிலையில் நோய்கண்டவர் நோயில் இருந்து மீள்வார் மாற்று சிருநீரகமோ அல்லது கருவி வழி சுத்தகரிப்போ எள் முனையளவும் தேவையில்லை என்பது இம் மருத்துவத்தின் சிறப்புகள் எனலாம் .

இது எமது மேலோட்டமான இடுகையாகும்

சித்தமருத்துவத்தை நாடுவோம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...