அக்டோபர் 24, 2011

நோய் இல்லாத உலகு சிந்திப்போமே




இன்றைய நிலையில் நோயில்லாத உலகம் என்பதுவெறுங் கனவாகி போகிறது ஆனால் நாம் தொடர்ந்து நோயில்லாத உலகம் பற்றி எழுதுகிறோம் . இது இயலுமா? சாத்தியமா? என்ற வினாவும் தொடுக்கவில்லை எப்படி என கேட்கவும் இல்லை . இப்படி கேள்வியில்லை எனின் எங்கோ பிழை என பொருள் கொள்ளவேண்டி இருக்கிறது. தமிழர்கள் எங்கும் கேள்வி கேட்கும் உள ஆற்றலை பெறவேண்டும் என்பதே எமது பேரவா.

கடந்த இடுகைகளில் நாம் குழந்தை களுக்கு உரை மருந்து பற்றி எழுதி இருந்தேன் . அவைகளில் மூகமையான மருந்து பற்றி எழுத வில்லை இது தற்செயலாக நேர்ந்துவிட்டது இப்போதெல்லாம் நாம் குறிப்பெடுத்துக் கொண்டு வலைபூ எழுதுவதில்லை காரணம் புரியவில்லை .சுக்கு . சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் ,குலக்காய் (ஜாதிக்காய் )இந்த வரிசையில் மூகமையான மருந்துப் பொருள் அதாவது தமிழரின் பண்பாட்டில் சிறந்த இடத்தை வகிக்க கூடிய மருந்து எனின் அது வசம்பு . இதன் பெயரையே ஊர்ப்புறங்களில் குறிப்பிட மாட்டார்கள் காரணம் இதற்க்குதரும் மதிப்பு அப்படி இதை ஊர்ப்புறங்களில் பிள்ளை வளர்த்தி என குறிப்பிடுவார்கள் . அந்த அளவிற்கு குழந்தை வளர்ப்பில் சிறந்த பங்காற்ற கூடியது .

இன்று குழந்தை வளர்ப்பில் பல்வேறு நோய்களுக்கு காரணம் இந்த வசம்பை முறைப்படி பயன் படுத்தாமைதான் இதன் பயனை நாய்பெற்ற தெங்கம் பழம்போல தமிழர்கள் விட்டுவிட்டார்களோ என எண்ணத்தூண்டுகிறது .செரிக்காமை, வயறு உப்புசம் மலசிக்கல் காற்று பிரியாமை இப்படி பல நோய்களை நீக்கி குழந்தைகளை வளர்த்து உடல் பலத்திலும் ஆள்பலத்திலும் அறிவு பலத்திலும் உயர்ந்தோங்க செய்ததது இந்த மருந்து இன்று பலகுழந்தைகள் சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருப்பதற்கு இந்த மருந்தை முறைப்படி குழந்தை களுக்கு வழங்காமைதான் எனநான் அடித்து கூறுவேன் .

இந்த மருந்து அறிவை செழுமைப்படுத்து வதில் சிறந்த பங்காற்றுகிறது என்பதில் எள் முனையளவும் ஐயம் வேண்டாம் . அது மட்டும் அல்லாமல் பினார் உண்டாகும் கைகால் வலிப்பு நோய் களும் இந்த மருந்தை முறைப்படி எடுக்கும் குழந்தை களுக்கு வருவதில்லை . ஆக நோயை நீக்கும் மருத்துவ முறையான சித்த மருத்துவ முறைகளை பின்பற்றி நோய் வென்று நீடு வாழ்வோம் .

இப்போது புரிகிறதா நோயில்லா குமுகத்தை உண்டாக்க முடியும் என்பதை ....
சிந்திப்போம் .....More than a Blog Aggregator

அக்டோபர் 18, 2011

நோயில்லா குழந்தை ......


கடந்த இடுகைகளில் குழந்தைபேறு அதன் முதன்மையான குறிக்கோள் இன்றைய சமூகம் சித்த்ம்ருத்துவ்த்தை முறையாக பயன் படுத்திக் கொள்ளாமைஅதைபற்றிய நமது விமர்சன கண்ணோட்டம் போன்றவை மற்றவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கலாம் காரணம் உண்மைகள் முறையான விமர்சனங்கள் பலரை எரிச்சல் அடையவே செய்யும் . இந்த உலகமே நோயின்றி வாழுகிற சிறந்த ஒரு முறை அதாவது தமிழ கலைகள் இருக்கிறது அவற்ற்றை பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் இன்று அந்த சித்தர்களே என்றாலும் எரிச்சல் அடைவார்கள் அவர்கள் (சித்தர்கள் )உண்மையில் இந்த உலகம் முழுமையும் நோயின்றி வாழ்வதற்கான அரிய கலை தங்களின் கூரிய மதி நுட்பத்தால் பறந்து பட்ட மக்களுக்கு வழங்கு கிறார்கள் அதையோ பயன் படுத்திக் கொள்ளவில்லை என்றால் சினம் உண்டகும்தனே .

இன்றய குழந்தைப் பேற்றிற்கு முன்னதாக நாம் சிந்திக்க வேண்டியது தாய்மையின் கருப்பையைதான் இதை கண்ணேபோல காக்கவேண்டும் பருவ அகவையில் கண்மூடித்தனமாக பெண்மையை இழந்து இளமையிலேயே உடலை நாசப்படுத்திக் கொள்ளுகிறார்கள் இதனால் கருவை தாங்கி நிற்கும் கருப் பையில் பல்வேறு நோய்கள் தாக்கி குழந்தைப் பெற்றிக்கு ஆயத்தமகா நிலையில் இருக்கிறனர் அல்லது நோயாளியாகி விடுகிறனர் . இளமையில் திருமணத்திற்கு முன்னதாக கரு உண்டாகமால் தடுக்கும் கருத்ததடை மத்த்ரைகள் பயன்படுத்துவது கண்டிப்பாக எல்லோரையும் நோயாளியாக்கும் என்பது உண்மை . இதுபற்றி தனியாக ஒரு இடுகை வரும்.முதல் குழந்தையை கருக்கலைப்பு செய்து கொள்வது முற்றிலும் பிழையானது பின்னர் குழந்தைபேறு உண்டாகமால் போக வாய்ப்புமுண்டு .

முந்தய இடுகையில் குழந்தைப் பெற்றிக்கு பிறகு உரைமருந்துகள் பற்றி எழுதிஇருந்தேன் கடுக்காய் , மாசிக்காய், குலக்காய் (ஜாதிக்காய் )சுக்கு ,சித்தரத்தை ,போன்ற மருந்துப் பொருட்களை நெல்லாவியில் வேகவைத்து தூய்மையாக்கி கொண்டு மருந்துகளை அரைக்க தூய்மையான கல்லை ஒன்றை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும் இந்த உரைமருந்துகளை நோய்க்கு தக்கபடி பயன் படுத்தி குழந்தைக்கு வரும் எல்லா நோய்களில் இருந்தும் விடுவிக்கலாம். அதுமட்டும் அல்லாமல் தாய் முறையான மருந்துகளை எடுப்பதன் மூலம் தாயையும் சேயையும் பாதுகாத்துக் கொள்ளமுடியும் இந்த கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கு பதிவு செய்கிறோம் .இந்த காலத்தில் தாய்க்கு தாய்பால் இல்லாமை அல்லதுவேலைக்கு போகிறவர்கள் தாய்ப்பாலை வலுக்கட்டாயமாக நிறுத்த முயலுதல் போன்ற செயல்களில் ஈடு படுகிறனர் இதற்க்கு முறையான சித்த மருந்துகள் எடுக்க நாம் விரும்பும் எல்லாவற்றையும் பெறாலாம் . குழந்தைக்கு ஓராண்டு வரையில் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் பிறந்த ஆறுமாதத்திற்கு பின்னர் இணை உணவு கொடுக்க பழக வேண்டும் இந்த சூழலில் டப்பாவில் அடைக்கப் பட்ட உணவுகள் கண்டிப்பாக கூடாது இது குழந்தையின் பசியை அடக்கிவிடும் குழந்தையின் எதிர்கால வாழ்வை முடமாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் தரமான பருப்பு வகைகள் கீரைக்ச்ல் நெய் சேர்த்து கொடுக்க பழக வேண்டும்

அடுத்த இடுகையில் வரிவாக சிந்திப்போம் .....

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்More than a Blog Aggregator

அக்டோபர் 10, 2011

எளிமையான குழந்தைப் பேறு நோயில்லா இன்ப வாழ்வு


இப்போது எல்லாம் குழந்தை பருவத்திலேயே நோயாளி ஆக்கிகிவிடுவது பழக்கமாக இருக்கிறது இதற்க்கு அடிப்படியில் காரணம் என்ன வென்றால் நம்மிடையே கொட்டி கிடக்கும் சித்த மருத்துவ முறையை பற்றி அறியாமல் இருத்தல் எனலாம் நாம் கடந்த நானூறு , நானூற்றைம்பது ஆண்டுகளாக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் அடிமைத்தனத்தில் இருந்தமையால் நமது கலைகளை மறந்தோம் அல்லது மறக்க அடிக்கப் பட்டோம் ஆக இன்று பெரும்பான்மையான மக்களுக்கு நமது மிகப் பெரிய கலையான சித்தமருத்துவத்தைப் பற்றி நாம் விளக்கி சொல்ல வேண்டி இருக்கிறது நமது கலைகளை நம் மக்களிடமே தொடக்கத்தில் இருந்தே கற்பிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது ஆங்கில வருகையை இன்னும் சிறப்பித்துக் கூறும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இந்த அடிவருடிகள்தான் நமது கலைகளுக்கு அடிப்படியில் பகைவர்களாக இருக்கிறார்கள் .

தண்டாமைறையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்..... என்பதைப்போல தாமரையின் மலரில் உள்ள சுவையை அறியாத தவளையைப் போல நமது சிறந்த மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் உள்ள சிறப்புகளை அறியாமல் அதன் பயனையும் அறியாமல் அவற்றில் உள்ள சிறப்புகளை அறியாமல் கேலி பேசி நம்மை நோக செய்வர் பாவம் இவர்களை விட்டு நமது இலக்கை தொடருவது தான் சிறப்பாக இருக்கயியலும் ஆக இந்த அறியாமையில் உழலும் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்ல வேண்டி இருக்கிறது சித்தமருத்துவம் ஆலமரமாக வளர்ந்து இருக்கிற மருத்துவமுறை உலகினுக்கே வழிகட்டியகவும் நோய்களை நீக்க கூடிய நல்ல வாய்ப்பினை பெற்று இருந்தும் நமது மக்கள் நோயில் வீழ்ந்து கிடப்பதை எண்ணி வேதனை பட வைக்கிறது .

சிலமாதங் களுக்கு முன் தமிழகத்தின் நாளிதழான தினமணியில் ஒரு செய்தி பழநியருகே மலைவாழ் மக்கள் மகப்பேறுக்காக முதல் முறையாக மருத்துவ மனைக்கு செல்ல அங்கு குழந்தைபேறு சிக்கலாகியுள்ளது பெரிய மருத்துவ மனைக்கு செல்லுங்கள் அங்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுப்பார்கள் எனகூறி பெரிய மருத்துவ மனைக்கு அனுப்ப அவர்களில் பட்டறிவு நிறைந்த ஒருவர் இதுக்கெல்லாம் அறுவை சிகிச்சையா என கேட்டு எளிமையாக குழந்தையை திருப்பி குழந்தைப் பேற்றை உண்டாக்கி இருக்கிறார் அங்கிருந்த பெரிய மருத்துவர்களே வியந்து போயிருக்கிறார்கள் ஆக நமது பழமையான கலைகள் முறையாக பயன் படுத்தும் போது இந்த மண்ணில் மிகப் பெரிய மருத்துவ மாற்றத்தை உண்டாக்க இயலும் .

குழந்தைப்பேறு என்பது இயற்க்கை இந்த உலக உயிரினங்களுக்கு வழங்கிய மிகப் பெரிய கொடை இது எளிமையாகவும் சிக்கலின்றியும் மிகவும் நேர்த்தியாகவும் நடைபெறக் கூடியது அனால் இன்று இது அச்சப்பட கூடிய அளவிற்கு மாறியுள்ளது முன்பு குழந்தை களுக்கு பிறந்தது முதல் முறையாக சித்த மருந்துகள் வழங்கி நோயில் இருந்து வென்று எடுப்பார்கள் அதை உரைமருந்துகள் என வழங்குவர் இந்த மருந்துகள் சுக்கு, சித்தரத்தை . கடுக்காய் , மாசிக்காய் , குலக்காய்(ஜாதிக்காய் ) போன்ற மருந்துப் பொருட்களை முறைப்படி தூய்மைப் படுத்தி வைத்துக் கொண்டு நோய் நிலைக்கு ஏற்ப மருந்துப் பொருட்களை பயன்படுத்தி எல்லாவித நோயில் இருந்தும் வென்று நலமுடன் வாழுவர் . அதேபோல தாயையும் பாதுகாப்பதில் தமிழர்கள் சிறந்து விளங்கினர் இந்த மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்மையை வலிமையுடன் போற்றி வளர்த்து வந்தார்கள் அந்த குழந்தைகளும் வலிமையுயடன் இருந்தார்கள் ..

குழந்தைகளும் முறையான சித்த மருந்துகளும் அடுத்த பதிவில் சிந்திப்போம் ...

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் நோவில் இருந்து இந்த உலகத்தை காப்போம்.More than a Blog Aggregator

அக்டோபர் 03, 2011

நல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறு



நல்லதோர் தாய்மை நல்லதெரு குழந்தைப்பேறு


இன்று பலர் குழந்தைபேறு என்றாலே அச்சப்படுகின்றனர் கரணம் எதற்கு எடுத்தாலும் அறுவை சிகிச்சை தான்தீர்வு அதாவது தாய் அல்லது சேய் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற இயலும் அல்லது அறுவைசிகிச்சைதான் தீர்வு என கூறுவார்கள் ஒரு சின்ன அறுவைசிகிச்சை தானே செய்து விட்டு போகட்டுமே என எண்ணம் கொள்ளலாம் தவறில்லை . ஆனால் இந்த அறுவை சிகிச்சையால் எதிர் காலத்தில் என்ன சிக்கல் நேரும் என பெரும்பாலும் நம் மக்கள் அறிந்து இருக்கவில்லை .

அப்படி என்னதான் சிக்கல் நேரும்?

குழந்தைபேறு என்பது நம் நாட்டில் மிகவும் எளிமையாக சிக்கலின்றி பெரும்பாலும் நடந்து வந்திருக்கிறது முன்பெல்லாம் பத்துக்கு
மேற்பட்ட குழந்தைகள் மிகவும் எளிமையாக பெற்றுக்கொண்டார்கள் இந்த சூழலில் அடுத்த குழந்தைக்கு ஆயத்தமாகி விடுவார்கள் எப்படி அவர்களால் முடிந்ததது? எதாவது கண் கட்டி வித்தை கற்றிருந்தார்களா என்ன? அது எல்லாம் இல்லை அவர்களின் வாழ்க்கை முறை இயற்கையை ஒட்டிய முறையில் இருந்தாது . சீரான வாழ்க்கைமுறை நல்ல உணவுத்திட்டம் கடுமையான உழைப்பு எதையும் பதற்றமின்றி செய்யும் உளவாற்றல் என பழைய வாழ்க்கைமுறை இயற்கையும் எளிமையையும் ஒட்டியதாக இருந்தது . இன்று வாழ்வே சிக்கலாகி நாற்றமெடுக்க தொடங்கி விட்டது இதனால் நோய்கள் வானாளாவ வளரத்தொடங்கி விட்டது . இந்த சிக்கலான வாழ்க்கை முறையால் குழந்தைப்பேறு சிக்கலாகிறது
சிக்கலாகும் குழந்தைப் பேறினால் பலநோய்கள் தோற்றம் கொள்ளுகிறது அளவுக்கதிகமாக முக்கி முக்கி உந்தித்தள்ளி குழந்தைபெற்றிக்கு ஆயத்தமாகும் போது கருப்பை சார்ந்த நோய்கள் பல அதாவது கருப்பை இறக்கம் முதல் பல்வேறு நோய்கள் ... அதுமட்டுமின்றி அறுவைசிகிச்சையால் அல்லது வலுக்கட்டாயமாக குழந்தையை இழுக்கப்படும் போது பல நோய்கள் தொடருகிறது கொஞ்சம் இருமினால் ,அல்லது சிரித்தால் , அல்லது தும்மினால் தம்மையும் அறியாமல் சிறுநீர் வெளியேறிஆடையை மாற்றும் அளவிற்கு சூழ்நிலை உண்டாகிறது இப்படி உளவியல் ரீதியான சிக்கலை உண்டாக்கி தொடர் நோயாளியாக்குகிறது .

இதற்க்கு எல்லாம் காரணம் முறையில்லாத வாழ்க்கைமுறை என நாம் கூறத் தேவையில்லை முறையில்லாத உணவுத்திட்டம் . இந்த காரணங்களினால் சிக்கலான குழந்தைப் பேறு உண்டாகிறது அவைமட்டுமின்றி உணவுத்திட்டம் மிகையான கொழுப்பு உணவுகள் மிகையான இனிப்பு வகைகள் இந்த இனிப்பு உணவுகள் குழந்தையை சற்று மிகையான எடையுள்ளதாக ஆக்கும் இப்படி உழைப்பு இல்லமால் மிகையான உணவு எடுத்துக் கொள்ளும் பொது குழந்தை மிகையான எடையுடன் பிறக்கிறது அதற்க்கு ஏற்றபடி தமது உடலை ஆயத்தப் படுத்திக் கொள்ளுவதில்லை ஆறாவது ஏழாவது மாதத்தில் இருந்து குழந்தைப் பேற்றிற்கு தமது உடலை ஆயத்தப் படுத்தும் சிலவகை இதற்க்கெனசித்த மருத்துவத்தில் சிறப்பாக தயாரிக்கப் படும் எண்ணெய் வகைகளை பிறப்பு உறுப்பு, இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் நாளும் பூசிவர உடல் குழந்தப் பேற்றிக்கு ஆயத்தமாகி எளிமையான குழந்தைப் பேறு கிடைக்கிறது .

அடுத்தப் பதிவிலும் விரிவாக தொடர்வோம்....
தாய்ப்பால் சீராக கிடக்க .....
தாய்ப்பால் பெருக .....
நோயில்லா குழந்தை வளர்ப்பு.... .
குழந்தை பேற்றிற்கு பின் .....மற்றும் உங்களின் வினாக்களுடன் ......

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...