செப்டம்பர் 28, 2010

சித்தர்கள் ஒரு பார்வை

சித்தர்கள்   ஒரு  பார்வை
         காலத்தின்  சூழளிக்கு  ஏற்ப   அறிஞர்கள் தோற்றம்  கொள்ளுவது இயல்பே  அதுபோல தமிழகத்தில்  சித்தர்களின்  தோற்றம்  நம்மை  உயர்ந்த  நிலைக்கு  இட்டுச்சென்றது  எனலாம் .சித்தர்களின்  காலங்களில் அவர்களுக்கு  அரசோ  மக்களோ  எந்த  உதவியும் செய்ய  வில்லைஎனலாம் . சித்தர்களே  கடுமையான  அர்ப்பணிப்போடு  மருத்துவத்தையும் மொழியையும் , பொன்னேபோல்  காத்தனர் . உலகம் முழுவதும்  சித்தர்கள் தோன்றினாலும் , தமிழகத்து  சித்தர்கள்  தான்  நம் சித்த  மருத்துவத்தை  கண்டனர் .
     பல்லாயிர  கணக்கில்  சித்தர்கள்  இருந்தாலும்  பதினெட்டு  சித்தர் களையே  முதன்மை சித்தர்களாக இனம்கண்டு , முதன்மை  படுத்தினர் .
பதினெட்டு  சித்தர்கள் .
1 . திருமூலர்               2 .போகர்           3 .அகத்தியர்            4 .காலாங்கனி  
5 .அழுகண்ணார்         6 .கொங்கணர்  7 .கருவூரர்               8 .புலிப்பாணி
9 .சட்டைநாதர்            10 .மச்சமுனி    11 .கமலமுனி         12 .நந்தி
13 இடைக்காடர்          14 .புலத்தியர்     15.பாம்பாட்டி           16 .கோரக்கர்
17 புண்ணாக்கீசர்         18 .இராமதேவர்  
  என்பவர்கள்    தான்  அவர்கள் .சித்தர்கள்  எல்லோருமே  தனக்கென  வாழாமல்  மக்களுக்காகவே  வாழ்ந்து  வந்தனர்
.
       பொன்வள்ளி  செய்கின்றவன்  பெரியோன்  அல்ல ,
       புகழான  அட்ட  சித்தி  பெரியோன்  அல்ல
       முன்னின்ற  வைத்தியனும்  பெரியோன்  அல்ல
       மூச்சடக்கி     எழும்பினவன்  பெரியோன்  அல்ல
       சின்னமுள்ள  குழி இருப்பான்  பெரியோன்  அல்ல
       திறமுடனே கேவனமிட்டோன்  பெரியோன்  அல்ல
       தன் நிலையை  அறிந்தவனே  பெரியோனாவான்
        தனையறியான்  வகைகெட்ட  சண்டி  மாடே .
            என்கிறார்கள் சிதர்கள் . தேர்ந்த வாதி  கணப்போதில்  பொன்  வெள்ளி  செய்வான்  வாத  வித்தைகள்    தெரிந்தால் பெரியோன்  ஆகிவிடமாட்டான் .தேர்ந்த  வைத்தியராகஇருந்தால்  பெரியவன்  ஆகிவிடுவதில்லை .மூச்சடக்கி  ஆகாயத்தில்  எழும்பி  நிற்கும்  அடயோகியும்  பெரியவனாகி  விடமாட்டன் .சமாதியில் இறங்கிப்  பத்தாண்டுகள்  இருபது  ஆண்டுகள்  கழித்து  வந்தாலும் . விண்ணில்   நடந்தாலும்  பெரியவன்  ஆகிவிடுவதில்லை . தன் யார்  என்பதை  அறிந்தவனே , உணர்ந்தவனே பெரியவன்  ஆகிறான்  என்பது  சித்தர்கள்  கோட்பாடு     .
              நல்லொழுக்கத்தை  பாடும்போது...
       கோபம்  பொறமை கொடுஞ்சொல்  வன் கோள் இவை
      பாபத்துக்  கேதுவடி - குதம்பாய்
      பாபத்துக்  கேதுவடி
.
       கள்ளங்கள்  கபடங்கள்  கொலைகள்  கபடங்கள்
      பள்ளத்தில்   தள்ளுமடி  குதம்பாய்
     பள்ளத்தில்  தள்ளுமடி.

     பொருளாசை  உள்ள்விப்  புவியிளுல்லோற்கு
   இருளாம்  நரகமடி - குதம்பாய்
இருளாம்  நரகமடி .   எனபாடுகின்றனர்                           

அறிவு  பெரும்  வழியை  ஒரு சித்தர்  விளையாட்டாக  சொல்ல  அவரை  விளையாட்டு   சித்தர் என்று  அழைத்தனர் .


செத்தோர்க்  கழுவதுவும்  விளையாட்டே  சுடலை
சேரும்வரை  யழுவதும் விளையாட்டே
மெத்த அறிவை  பேசுவதும்  விளையாட்டே  -குளித்து
வீடு  வந்து  மறப்பதும்  விளையாட்டே
நம்பினோருக்கு  ஆசை  சொல்லல்  விளையாட்டே -பின்பு
நட்டாற்றில்  கைவிடுதல்  விளையாட்டே
கும்பிகிறை தேடுதல்  விளையாட்டே - கடன்


சாதிகளை   பற்றி

ஆண்சாதி  பெண்சாதி  யாரும்  இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் - குதம்பாய்
வீண்சாதி  மற்றவெல்லாம் .
பார்பனர்கள்  மேல் என்றும் பறையர்கள்  கிழஎன்றும்
தீர்ப்பாக  சொல்வதென்ன - குதம்பாய்
தீர்ப்பாக  சொல்வதென்ன .
நீதி  மனேன்றே நெறியா இருப்போனே
சாதிமானா  வனடி -குதம்பாய்
சதிமானா   வனடி.
சதியோன்றில்லை  சமயமொன்றில்லை  யென்
றோதி  உணர்ந்தறிவாய்  -குதம்பாய்
றோதி  உணர்ந்தறிவாய் .
செங்கோல் செலுத்திய  செல்வமமும்  ஓர்  கலாம்           
தங்கா  தழியுமடி -குதம்பாய்
தங்கா  தழியுமடி .
                     எந்த  சமுகம்  மக்களை  ஏற்றதழ்வோடு  பார்க்க  வைக்கிறதோ  அந்த  சமுகத்தை  சாடுகின்றனர் . இவர்கள் சமுக  மாற்றத்திற்கான  பணியை  திறம்பட  செய்து  முடித்தனர் .
  எளிமையான  சொல்லாடல்கள் , எளிமையான  சந்தங்கள் , மக்களிடத்தே  வாழ்ந்து   படைக்கப்பட்ட  மாபெரும்  மறுமலர்ச்சி  பாடல்கள்  இவைகள் .
                  சித்தர்கள்  பற்றி  வரும் கட்டுக்  கதைகளையும் அறிவியலுக்கு  அப்பார்பட்ட
செய்தி  களையும்  நீக்கிவிட்டு  பார்த்தால் தனியான  சித்தர்  களின் மருத்துவரீதியான  பங்களிப்பு  என்பது  நம்மை  வியக்கவைக்கிறது . போகர்  என்ற சித்தர் அவரின்  மருத்துவப்பணி இரசாயன  மருந்துகள்  செய்   முறைகளையும் இன்றைய  உலகினர்  செய்த  ஆய்வுகளை  விட  அதிகமாக  செய்துள்ளார் .                        
         போகர்  7000  என்ற பெருநூல்  அந்த  மருத்துவ  நூலை  செய்ய  அவரால்  எங்ஙனம் முடிந்தது .  அந்  நூலில்  கண்டுள்ள  மருத்துவ  முறைகள் இந்த  உலகில்  உள்ள  அனைவரையும்  நோயில்  இருந்து  வென்று  விடுவிக்குமே .
    வேதியல் துறையில்  உலகம் முழுவதும்  செய்த  ஆய்வுகளைவிட  தனிப்பட்ட  போகரின்  ஆய்வு  மேன்மையானது. மனித  உடலையும் , இயற்க்கை  மூலங்களையும்   வேர் , தண்டு , பட்டை,  மூலிகை , பூ , கனி , காய் , ஆகியவற்றை நுணுகி நுணுகி  ஆய்ந்து  மூலிகை  களில்  உள்ள மருத்துவக்  குணங்களை  எந்த  நுண்ணிய  ஆய்வுக்கருவி  களும்   இல்லாமல்  எப்படி  கணிக்க முடிந்தது ?   ஆய்வுக்குரியதுதனே ?  உயரிய  மருத்துவத்தை  மீட்டெடுப்போம் . நோய் வென்று  நீடு  வாழ்வோம் .





                                                More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...