இயற்கை வளத்தை
போற்றிடுவோம் .
உலகில் இன்பம்
கண்டிடுவோம் .
காற்றில் கலக்கும்
மாசினை தான்
கலந்தது விடாமல்
காத்திடுவோம் .
விரும்பிய மரங்கள்
வளர்த்திடுவோம்
வேண்டிய மழையினை
பெற்றிடுவோம்
அணுவின் அழிவை
தடுத்திடவே
இயற்கை வளத்தை
காத்திடுவோம் ....
இன்பம் நிறைந்த
வழ்விதுவே
இயற்கை சார்ந்து
வாழ்வதுதான் .
உயிரை போற்றி
வளர்ப்பது போல்
இயற்கை வளங்களை
வளர்த்திடுவோம் .
சித்தர்கள் - நம் முன்னவர்கள்
காட்டிய வழிதன்னில்
சென்றிடவே -தீதில்லை .....
ஈட்டிய பெருஞ்செல்வம்
அழித்திட தேவையில்லை
காட்டிய வழிதன்னில்
கடுமையில்லை --அனால்
கட்டுப் பாடுண்டு .
வைகறை துயில் எழுந்து ...
ஈற்று உணவை (கழிவுகள் )
நீக்கிக் கொண்டு
தூய நீர்பருகி
எரியோம்பல் (ஆசனபயிற்சி )
செய்திடவே உடல்
அனைத்தும் உறுதிபெறும் .
வளியை(காற்றை) நெறிப்படுத்தி
உள் வாங்கி கொண்டல்தான் ...
உளவாட்றல் உயர்வடையும்
உள்ளத்தை செழுமையாக்கி ...
ஓரம்ச சிந்தையாலே(தியானம் )
நாளைத்தான் செலவிட்டால் ...
அந் ந்ளெல்லாம் இனியநாள்.
கம்போ , கேழ்வரகோ ,சோளமோ
கைகுத்தல் அரிசியோ ...
பக்குவமாய் உணவாக்கி
கீரை ,காய்கள் , தூய்மை
செய்த பருப்புகள் பழம்சேர்த்து
இளியம்(இரசாயணம் )
நீக்கி -மண்ணில்
ஏனம்(பாத்திரம்) செய்தது
மகிழ்வோடு உண்டிடவே ...
நோய் இன்றி வாழ்ந்திடலாம் .
இடை உணவாய்
பழசாறும் பாகுநீரும் (பானகமும் )
பருகிடலாம் .
வாரத்திற்க் இருநாள்தான் வெந்நீரில்
எள் நெய்குளியல் ...
ஆண்டிற்க் கிருநாள்தான் ....
கழிச்சல் செய்துகொள்க
திங்களிர்க் கிருநாள்தான் ...
இல்லற உறவு ...
நூறாண்டு வாழ்ந்திடவே ...
நல்லநெறி இதுவாமே.