ஜனவரி 31, 2012

௨.மண் குளியல் (Mud bath )



       இன்றைய  வாழ்க்கை முறை  மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை  மாறி புதுமை  அந்த  இடத்தை  பிடித்துவிட்டது கூடவே நோயும்.  பழமை நமது  உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல்  நோக்கில் இருந்தன  அதை நாம் மறந்து விட்டோம்  அதனால்  நோய்கள்  நம்மை பின்தொடர  விட்டுவிட்டோம் . முன்பு  குளிக்கும் முறைகூட  அறிவியல்  அடிப்படையில்  இருந்து நோயில்  இருந்து காத்தத்து  இன்று  குளியலே  நோயை  உண்டாக்குவதாக  இருக்கிறது . இன்றைய  வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா  போட்டு குளிப்பதால்  உடலில்  இருந்து  இயற்கையாக  சுரக்கும்  எண்ணத்  தன்மை  முழுவதும்  நீங்கி  எலும்புகள்  கலகலத்து போய் நோயில்  மரித்து போகிறனர் .

       இந்நிலை  கூடாதென  என  எண்ணிய  நமது  பழம் பெரும்  சித்த மருத்துவ அறிவர்கள் மனிதனை நோயில் இருந்து விடுவிக்க  பல நிலைகளை  கண்டறிந்து மக்களுக்கு கொடையாக  வழங்கினர் . அவற்றில்  ஒன்றுதான்  மண் குளியல் (Mud  bath ) இந்த  குளியல்  சிறந்த  குளியல் முறைகளில்  ஒன்றானது  என  நாம்  சிந்திக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம் .

           புற்று மண்  , களிமண் , இவற்றை  எதை  தெரிவு  செய்து  குளிக்க முயண்டறாலும் தேவையான  மண்ணை  தூய்மையான  இடத்தில்  இரண்டு  அங்குலம்  அளவிற்கு   எடுத்துவிட்டு  தூய மண்ணை  எடுத்து தேவையான அளவு  நீர்விட்டு  குழைத்து  உடல் முழுவதும்  பூசி  இள வெயிலில்  அரை  அல்லது முக்கால் மணிநேரம்  இருந்து குளிர்ந்த நீரில் குளிப்பது  மிகவும்  சிறந்தது  இந்த குளியல் தோல்  சம்பந்த  நோயில்  சிறந்த பலனைத்தரும் .

        பெரும்பாலும்  குளிப்பவர்கள்  வெந்நீரில்   குளிக்கின்றனர்  இது தவறானது எண்ணெய்த் தேய்த்த நிலையில்  வெந்நீரில்  குளிக்கலாம்  ஆனால்  எண்ணெய் தேய்த்து  குளிக்கத நிலையில்  வெந்நீர்  குளியல்  நோயை  உண்டாக்கும்  என்பதறிக  எண்ணைக் குளியல்  செய்த  அன்று  வழலைக்  கட்டியை  பயன்  படுத்த  தேவையில்லை . சீயக்காய்  போட்டி குளிக்க வேண்டும்

மீண்டும்  அடுத்த இடுகையில்  சிந்திப்போம் .
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .










More than a Blog Aggregator

ஜனவரி 23, 2012

எண்ணைக் குளியல் (oil bath )

            மாறிவரும்  இன்றைய  சூழலில்  பழமையும்  பாரம்பரியமும் மறந்து  வருகிறது . நாற்றமெடுக்கும்  போலித்தனமும்  மேலை  நாகரீகமும்  கடைபிடிக்கப்  பட்டுவருகிறது . இதனால்  நோய்கள்  பெருகுகிறது .பழமையான  நமது  மருத்துவமுறை  சிறந்த  வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டது . அந்த வகையில்  எண்ணெய் குளியல்  இன்றைய  விரைவு  சூழலில் மறந்து  போன  ஒன்றாகி  விட்டது.  வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்வது சிறந்த முறையாகும் .

        வேறெந்த  மருத்துவ முறைகளிலும்  இல்லாத சிறப்பு  நமது சித்த மருத்துவத்திற்கு  உள்ளது. அதுதான் மனித வாழ்வியலோடு  இணைந்த  மருத்துவமுறை. வாரம்  இருநாள்  எண்ணெய் குளியல்  செய்க.காரம், புளி குறைத்து  உண்ணுக என  கட்டளையிட்டு  மனிதனை  வழி  நடத்தும் .

        எண்ணைக்  குளியல்  காலை 6 .30  க்குள் தொடங்கிவிட  வேண்டும் .இள வென்நீரில்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . சீயக்காய்  அல்லது நலுங்குமா  பயன் படுத்தலாம் . எளிமையான  உணவுகள் உண்ணவேண்டும்.  எண்ணைக்  குளியல் செய்த அன்று  பாலுறவு  கூடாது . பகலுறக்கம் கூடாது .கடுமையான  வெய்யலில்  வேலை  செய்யகூடாது  .குளிர்ந்த உணவுகள்  கண்டிப்பாக கூடாது .

எண்ணைக்குளியல்  செய்வதால் பலன்கள் . 

உடற்சூடு  சீராகும் .
அழகுகூடும்.
சருமம்  மென்மைபெரும்.
ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும் .
தலைமயிர்  நன்கு  வளரும் .
நல்ல குரல் வளம்  கிடைக்கும் .
 எலும்புகள்  பலப்படும் . 

 இப்படி  பல பலன்கள்  இதனுள்  பொதிந்து  கிடக்கிறது.  எனவே  முறைப்படி  எண்ணக் குளியல்  செய்வோம் .

சித்தமருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம்.
More than a Blog Aggregator

ஜனவரி 15, 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள் & தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

              பண்டைய  தமிழ  அறிவர்கள் எல்லாவற்றையும்  அறிவியல்  அடிப்படையிலேயே  பகுத்தும்  தொகுத்தும்  செய்தனர் . இது பறந்து பட்ட  மக்களை  நல்வழிப்படுத்தவும்  அறிவியல் அடிப்படையில்  சிந்திக்கவும்  செய்தன .  அதே  அடிப்படியில்தான்  தமிழர்களின்  ஆண்டின்  தொடக்கத்தை  அறிவியல் அடிப்படையிலேயே " தை " திங்களில்  இருந்தே கணக்கிட்டனர்  இது  சிந்துவெளி  காலங்களிலேயே  தொற்றங்க்கொண்டதகும். என்கிறனர்  தமிழ  அறிவர்கள் .

    எனவே  ஆண்டின்  தொடக்கம்  சுறவத்(தை ) திங்களில்  இருந்து தொடங்குவதே  அறிவியல்  அடிப்படையிலானது .

     தமிழினிய  வணக்கங்களும்  வாழ்த்துகளும் .

தமிழர்களின்  கலைகளைக்  காப்போம் .

சித்தமருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...