ஏப்ரல் 23, 2012

கோடை நமக்கு வழங்கும் கொடை வரிசை 2


  நமது தமிழ் சூழல் என்பது பல்வேறு மாறுபட்ட பருவ நிலைகளைக் கொண்டது . எதற்கும் கட்டுபடாத ஒரு சிறந்த சூழல்.இந்த சூழல்தான் வியக்கத்தக்க அளவிற்கு உலகின் முதன்மையான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கிறது என பல்வேறு மேலை நாடுகள் தெரிவிக்கின்றன. அதோடு மட்டும் அல்லாமல் இங்கு இருந்து பலவேறு மூலிகைகளை தருவித்து பயன்படுத்திக் கொள்ளுகிறது . ஆனால் தமிழர்கள்தான் பாவம் இன்னும் படித்தவர்கலனாலும் பாமரரர்கள் ஆனாலும் அந்த ஆங்கில மருத்துவத்தை விட்டு விலக மாட்டேன் என அடம் பிடித்து மடிந்து போகின்றனர்.

மேலை நாடுகளில் முதலில் மருத்துவர்கள் இயற்க்கை மருத்துவத்திற்க்கே முன்னுரிமை கொடுக்கிறனர் . வலிந்து அனுப்பிவைக்கப் படுகிறனர் . ஆனால் யார் என்ன சொன்னாலும் நாங்கள் கவலை கொள்ளுவதில்லை என்ற நிலைபாட்டை தமிழர்கள் எடுத்து விட்டார்கள். எதற்கும் மேலைநாட்டு மோகத்தில் அடிமைத்தனத்தோடு சுற்றித்திரியும் நபர்களும் உண்டு. உலகினுக்கே அறிவியலை கற்றுத் தந்தவர்கள் தமிழர்கள் என்பது தெரியாது இவர்களுக்கு.

இந்த கொடுமையான வெம்மை தமிழகத்திற்க்கே உரியது. இந்த கோடையை சற்று மென்மையாக அணுக வேண்டும். எல்லா காலங்களிலும் நன்மையும் தீமையும் உண்டு.  கோடையின் வெம்மைத்தான் எல்லோருக்கும் கொடுமையாக தெரிகிறது, உடலில்  உள்ள கழிவுகளை வியர்வை வழியாக வெளியேற்றுகிறது ,சிறுநீரகங்களுக்கு  கடுமையான பணியை அளிக்காமல் உடலில் உள்ள தோள்களின் வழி வியர்வை நாளங்கள் நன்கு செயல் பட்டு தோலின் வழி அழுக்குகளை நீக்குகிறது. சிறுநீரகம் சற்று ஒய்வு கொள்ளுகிறது எனலாம். உடலில் உறைந்து கிடக்கும் ஐ (கபம் ) கதிரவனின்  ஆளுகையால் உறைந்து வெளியேறுகிறது. இந்த ஐ குற்ற நோய் கண்டவர்கள் சற்று  நிம்மதி பெருமூச்சு விடுகிறனர் . இந்த நேரத்தில் உணவுமுறையும் நடவடிக்கை களும்  முறைப்படி அமைந்து இருந்தால் பின்னாலில் நோயில் இருந்து விலகி இருக்க இயலும் .

அனைவருமே கோடைகாலத்தில் வெண்மை பருத்தி ஆடையை பயன்படுத்தலாம் .

மதுப் பழக்கம் உள்ளவர்கள் இந்த கொடுமையான வெம்மையை கருத்தில் கொண்டாவது  அதை தவிர்க்கலாம். காரணம் இந்த கால மதுப் பழக்கம் சிறுநீரகத்தில் கற்களை  உண்டாக்கும் . எனவே கண்டிப்பாக மதுப் பிரியர்கள் மதுவில் இருந்து விலகி இருக்கலாம்.

கோடையில் மிகையாக வெய்யலில் சுற்றித்திரியாமல் அதன் தாக்குதல் குறைந்த போது பணி முடிக்கலாம்.

கண்ட கடைகளில் கவர்சிகரமாக, வண்ண வண்ணமாக விற்கப் படும் குடிநீரை பயன் படுத்தாமல் இயற்கையான இளநீர் , முலாம் பழம் , தர்பூசணி, போன்றவற்றை  பயன்படுத்தலாம்.

இரவில் உள்ளங் காலுக்கு விளக்கெண்ணை தடவி விடலாம். கண்ணையும் பாதுகாக்கும் உடலையும் குளிர்விக்கும் . தலையிலும் விளக்கெண்ணெய் தடவி  நீராடலாம். குளிக்க குளிர்ந்த நீர் சிறப்பானது.

வாரம் இரண்டு நாள் எண்ணைக்குளியல் சிறந்தது.

உடலுக்கு வழலைக் கட்டி (சோப்பு ) போட்டு குளிப்பதை தவிர்க்கலாம்.
வெட்டிவேர் , சந்தனம், ஆவாரை,கோரைக் கிழங்கு, பூலாங் கிழங்கு , கார்போக அரிசி , போன்றவற்றை பயன் படுத்தலாம் .

இளநீரில் பனங் கற்கண்டு கலந்து அருந்தலாம் .


சித்த மருத்துவங்காப்போம் நோய் வெல்வோம் 
More than a Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...