செப்டம்பர் 03, 2012

சுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்



      இன்றைய  விரைவு  உலகத்தில் இளசுகள்  பாடு மிகவும்  போரட்டமானதே    காரணம்  அவன் கெட்டுப் போவதற்கு  எண்ணற்ற  வாய்ப்புகளை  வாரிவழங்கி  விடுகிறது  இன்றைய உலகம்  இவற்றை மீறி  ஒருவன்  நேர்மையாக  இருப்பது  சிக்கலானதாக  இருக்கிறது . காரணம்   இன்றைய சூழல்  என்பதை நாம் அறிவோம் . இப்படிப்பட்ட சூழலில்  தன்னையும்  பாதுகாத்துக் கொண்டு இந்த குமுகத்தை  பற்றி  சிந்திக்கிறார்கள்  எனறால்  அவர்களை வணங்கி  வரவேற்க வேண்டும்  ஆனால் அப்படி எல்லாம்  இந்த  போலியுலகம்  செய்வதில்லை  மாறாக  அவனை கேவலப்படுத்தவே  செய்கிறது .
      இன்றைய  முறைதவறிய  உலகம்  எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க செய்வதில்லை. போராட்டமான  உலகத்தில் இருந்து  தன்னுடைய   வாழ்நாளை  ஓட்ட  வேண்டி இருகிறது வேண்டிய  கல்வி , வேலைவாய்ப்பு  பொருளாதார சூழல்  இவற்றிற்கு  இடையே  இந்த  சமூகம்  கொட்டும்  போலித்தனத்திக்கும்,  திரைப்பட , தொலைகாட்சி , பாலுறவு கட்சி  போன்றவற்றின்  தாக்கத்தினால் தானாய்  அவற்றில்  கரைத்துக் கொள்ளுகிறான்  அல்லது  அவற்றில் இருந்து விலகி இருபவனை  கண்டு கொள்வதில்லை  அல்லது கேவலப்படுத்துகிறது என்பது உண்மையே . இல்லை என்பவர்கள் வரலாம் சான்று  கட்டுகிறேன் .
       இப்படிப்பட்ட  சூழலில்  பலவிதமான  உளவியல்  ரீதியான  போராட்டங்களுக்கு  ஆளாகிறான் இதன் தாக்கத்தினால்  உணவு பிடிக்காமை அல்லது முறைதவறிய உணவு  தூக்கமின்மை  அல்லது முறைமீறிய  இரவு பகல் என பாராது  தூங்குவது  என  உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு  தன்னுடைய  வாழ்நாளை  கடத்துகிறான் . இது போராட்டம் மிகுந்த  வாழ்வியலை  அடிப்படையாக  கொண்டு  இயங்கு கிறவர் களின்  நடைமுறையாக இருக்கிறது .
         இப்படி பட்ட  சூழலில் இளசுகள் பலவிதமான  போரட்டங்களுக்கு  ஆளாகிறார்கள்  அவர்களை  கண்டு கொள்வதுமில்லை  வழிகட்டுவதுமில்லை  இந்த சூழலில்  இயற்க்கை  அவனை பாலுறவிற்கு  தூண்டுகிறது  இந்த சூழலில்  பல  இளைஞ்சர்கள்  சுய  இன்பத்தில் ஈடுபடுவாதாக  கூறுகிறார்கள் . இதற்க்கு விடிவு ? சுய  இன்பம் தவறில்லை  நன்மையே  என தவறன  வழி  காட்டும் நல்லவர்களும்  உள்ளார்கள்  சுய இன்பத்தால்  உடலின் சக்தியெல்லாம்  வீணாகிவிட்டது  பலமிழந்து விட்டேன்  உடலே   பலமின்மையல்  அவதிப்படுயறேன் . கண்கள்  குழிவிழுந்து  பலவீனப் பட்டுவிட்டேன்  என கூறிவருகிறார்கள் .
        இளமை  நீர்மேல் எழுத்தாம் என்பார்கள்  இந்த அகவையில்  கல்வியும்  பொருள் தேடலும்  அதற்க்கு பின்னலான  கலவியும்  தேவை  இதை  நிறைவு  செய்து கொள்ளாமையால்  தவறான பாதைக்கு பயனமாகிரார்கள்  

 என்ன  செய்யலாம் ?
உங்களின் இலக்குகளை  தீர்மானியுங்கள் .
தவறான  வழிகாட்டலை  தீர்கமாக  நிராகரியுங்கள்
முறையன  எதிர்காலத்தை  திட்டமிடுங்கள்
சுய  இன்பம் தவறானது  என  கருத்தில் கொள்ளுங்கள்
இந்த  எண்ணம்  வரும்  போது  ஒக (யோகாசனம் )இருக்கை கடைபிடியுங்கள் .
இரவில்  தூக்கமின் மையால்  பல இளஞ்சர்கள்  சுய இன்பம் பழகுவதா தெரிவிக்கின்றானர்
தூக்க மின்மைக்கு காரணங்களை  கண்டறிந்து  விடை தேடுங்கள் .
 தூக்க மின்மைக்கு  கனவுகளும்  ஏக்கங்களும்  காரணகிறது  அவற்றை  நீக்கி  மூச்சு பயிற்சி  பழகி  நீண்ட  உறக்கத்திற்கு  வித்திடுக .
சிக்கல் கள் எனின்  சிக்கலின்  அளவு நீளத்தை  நீண்ட  பட்டியலிடுக . பின்னர்  தியானம்  செய்து  உறங்க செல்க .

சிக்கல்  எனின் அந்த  சிக்கலின் தன்மையை முழுமையான பட்டியல்  இடுக  அதற்கான தீர்வுகள்  உண்மையில் பின்னர் கிடைக்கும்  என முழு நிறைவோடு  உறங்க செல்க .
 வாழ்கை  உங்களுக்கானது  உங்களின் இந்த   பட்டறிவு  இந்த குமுகத்திற்க்கனது  உணர்ந்து வாழுங்கள் .
வாழ்க்கை  உங்களுக்கானதே






சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 




 
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 27, 2012

தமிழ வலைப்பதிவர் குழுமம்



இது ...
பன்முகத்தன்மை கொண்டவர்கள்
பறைசாற்றுகிற களம்.

இங்கு ...

விடிந்தால்  புதிய புதிய செய்திகள் .
மாறுபட்ட  சிந்தனைகள்
மகத்தான  கண்ணோட்டங்கள் .

மனிதனை

" மா " மனிதனாக ஆக்குகிற
கோட்பாடுகளை  விதைக்கும் அறச்சாலைகள்
புதியன படைக்கத்தூண்டும்
வேள்விச்சாலைகளும் உண்டு .

இங்கு ...

மூழ்கி  முத்தெடுத்து
சமூகத்திற்கே  அர்ப்பணிக்கிறவர்களும்உண்டு.
காட்டாற்று  வெள்ளமாய்  பாயும்
கருத்துப்  பட்டறைகளும்  உண்டு .

இங்கு ...

தன்னுணர்வில்  வீழ்ந்து 
கிடப்பவர்களும் உண்டு
மக்கள்  நலன்பேசும்
சமத்துவ
வாதிகளும்  உண்டு.

சிந்தையுள்  பட்டதை

சந்தைப்  பொருளாக்குகிறவர்களும்
கண்ணில்  பட்டதை
ஓவியமாக்கி  வண்ணச் சிறகு
விரித்து விண்ணில்
பறக்கிரவர்களும்  உண்டு .

சின்னத்திரையையும்

வண்ணத்திரையையும்
பக்கம் பக்கம்மாய்
ஆய்வு  செய்கிறவர்களும்  உண்டு .

செப்படி  வித்தைபோலே

கண்கட்டி  வித்தை  காட்டி
கவர்ந்திழுக்கும்  நல்லவர்களும்  உண்டு.
உள்ளங்  கவர்  கள்வர்போலே
கருத்துகளை  களவுசெய்து
பட்டைதீட்டி  பதிப்பிக்கும்
பண்பாளர்களும்  உண்டு .

ஆனாலும்  நாமனைவரும்

ஓர் சாதி ஆம்
தமிழ்  வலைப்பதிவர்சாதி .

பதிவுலகச்  சான்றோரே !

நமக்கென  ஒரு பெருங்
கூட்டம்  கூட்டினீர்  நன்றி .

இனி ...

ஊர்தோறும்  வேடந்தங்கலாய்
கிளை  பதிப்போம் அதில்
நாமனைவரும்  ஒன்றுகூடி
புதியன  படைப்போம் .

கருத்துக்  களின் கருவூலமாய்

தமிழர்தம் உயரிய  கலைகள்
பண்பாடு நாகரீகம்
தமிழர்  தத்துவம்
தமிழ  மருத்துவம் -ஆம்
சித்தர்களின்   சீரிய
சித்தமருத்துவம்
விளையாட்டு ...
கட்டிடக்கலைகள்
ஒக  இருக்கை...
இசை  நடனம்
போன்ற  வற்றோடு  நம்
புறநானூற்றையும்  புரட்டி
அகநானூற்றையும்  அகழ்ந்தெடுத்து
இந்த  சமூகத்தை
வழி  நடத்துவோம் .

பொழுது  போக்கு

அம்சங்கள்    தேவைதான்   அது
ஊருகாய்போல  இருந்தால்    நன்று
ஊறுகாய்  உணவும்   ஆகிவிடாது
ஆகிவிடக்கூடாது .
 .

அறிவு 
சான்றீர் 
அறத்தை  விதைப்போம்  
நல்லன  அறுவடை  செய்வோம்
களத்தில்  இருக்கும்  நாம்
கருத்தினில்  ஒன்றிணைந்து
புதியன புகுத்துவோம் 


அன்பும்
  அமைதியும் 
பெருக்கெடுக்க  
நன்மையையும்   நேர்மையும்
செழித்தோங்க 

அறிவெனும்  கருவி  ஏந்தி
வென்றெடுப்போம்  புத்துலகை .

நேற்று  நடந்த  பதிவர்களின்  சந்திப்பில் நடந்த  பாவரங்கில்  கலந்து கொண்டு  வாசித்த  பா .
விழா மிகவும் சிறப்பாக  நடந்தேறியது . விழாக்குழுவினருக்கு நமது  பாராட்டுகள் .

                     தமிழன்புடன் ...... போளூர்  தயாநிதி 

 .



 
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 21, 2012

மிளகின் மருத்துவக் குணங்கள்



     பொதுவாகவே  தமிழர்களின்  எளிமையான உணவுப் பொருளே  தீவீராமான  நோய்களை நீக்கக் கூடிய சிறந்த மருந்தாக வினை புரிகிறது என்பது நாம் அறியாத  செய்தியாக தெரிகிறது  காரணம் தமிழர்கள் பெரும்பாலும்  தமிழ மருந்துகளைத்  தேடி  அலைவதில்லை  ஆனால் நோயில் வீழ்ந்து கிடக்கறான் அதானல் தான்  குறிப்பிடுகிறேன் .
     மிளகின் மருத்துவ குணம்
வாயு
கபம்
இருமல்
செரியாமை
மிகுஏப்பம்  ஆகியன நீங்கும்
பசிமிகும் .
மூன்று  கிராம் மிளகை குடிநீராக்கி அருந்த
செரியாமை
காய்ச்சல்
வயிற்றுப் பொருமல்  ஆகியவை  தீரும்  மருந்து வீறு தணியும்.

அரைகிராம் மிளகுப் பொடியுடன் ஒருகிராம் வெல்லம் சேர்த்து உண்ண

பீனிசம்
தலைப்  பரம் குறையும்.
தலைவலி  தீரும்.

மிளகு நான்கு  கிராம் பெருங்காயம்  ஒருகிராம் கழற்சிப் பருப்பு பத்துகிராம் பொடித்து தேனில் அரைத்து  மருந்தாக்கி அகவைக்கு ஏற்ப  காலை, மாலை கொடுக்க

காய்ச்சல்
குளிர்காய்ச்சல்
யானைக்கால்  காய்ச்சல் தீரும்.

பொதுவாக இதன் குணம்

காரல் உண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றும்
முறை வெப்பம் அகற்றுதல்
தடிப்பு உண்டாக்குதல்
வெப்பம் உண்டக்குகுதல்
வீக்கங்களைக் கரைத்தல் 
வாத  மடக்குதல்
வாத நோய்களையும்
சீழ்  மூலத்தையும்  குணமாக்கும்

அளவை ஊராக் காரம் அடைந்திருக்கும்  வாத

விளைவைஎல் ல்லாம் அறுக்கும்  மெய்யே - மிளகின் காய்
கண்டவர்க்கும்  இன்பமாம் காரிகையே ! சீழ் மூலங்
கொண்டவர்க்கு  நன்  மருந்தாங்  கூறு      (குணபாடம்)

என்னதான்  இருந்தாலும் மிகளின் தனிசுச்வை  அதன் குணங்கள்  எல்லாமே சிறந்தவைகள் ஆனால் இது  குருதியை  குடிக்க கூடிய தன்மை கொண்டது விந்துப்  பொருளை  வற்றச்  செய்யக் கூடியது  அளவுடன் உண்ண எந்த  பின்விளைவும்  இல்லை என அறிக .


முந்தய  பதிவு களில்  இடம்பெற்ற  சுக்கு, திப்பிலி , இந்த பதிவில்  இடம் பெற்ற  மிளகு இந்த மூன்று மருந்துப் பொருட்களும் மிகசிறந்த மருத்துவ பயன் நிறைந்தவைகள் . மருத்துவத்தில் இவைகளின் கூட்டுப் பெயர்  திரிகடு  இந்த மருந்துப் பொருள் இல்லாதவர் மருத்துவரே  இல்லை எனலாம்  இது காயகல்ப  மருந்துப்  பட்டியலில் உள்ள மா மருந்து .

முறைப்படி பயன் படுத்தி நோய் வெல்வோம் .


சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .

.
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...