ஜனவரி 09, 2012

நோய்களை  நீக்கும் மருத்துவக்  குளியல்கள்

  பழந்தமிழர்கள்  நோயின்றி  வாழ்வதற்க்கான  கட்டமைப்பை  குளியல்  மூலமாகவும் மருத்துவ  ரீதியான  குளியல்கள்  முறையிலும்  கண்டறிந்தார்கள்   தமிழர்கள் அறிவு  சார்ந்து சிந்தித்தார்கள்  நான் கடந்த காலத்தில் இருந்தார்கள் என  குறிப்பிடுகிறேன் . இப்போது இல்லையா என்றால்  இருக்கிறார்கள் அவர்கள் மண்ணிற்குள்  வேராக பழமையை  முறைப்படி காத்து வருகிறார்கள் . இந்த அறிவு  சார்ந்து சிந்தித்ததின்  பலனான  நோயின்றி  வாழ்தலை  மக்களுக்கு கொடையாக  வழங்கினார்கள். அந்த கொடைதான். இன்று நமக்கு புதையலாக  நோயின்றி  வாழ  வழிகாட்டுகிறது  அந்த புதையலினுள்  நுழைவோமே ?

       பழமையை  கடைபிடிப்பதும் , காப்பதும்  சிரமம்  என இன்றைய  சமகால  இளசுகள்   சொல்லும் போது   என்ன செய்வது  என புரியாமல்  தவிப்பதுண்டு  சரி அது கிடக்கட்டும்  மீண்டும் வேதாளம் முருங்கை  மரத்தில் ஏறிய கதையாக ஆகிவிடும்  ஆகையால்  நேரே  செய்திக்கு செல்வோம்.

     நோயை நீக்குகிற  குளியல் முறைகளை  தமது பட்டறிவால்  பழந்தமிழர்களும்  சித்தர்களும் நமக்கு கொடையாக  வழங்கினார்கள் . அவைகள்
.
௧.மழை நீரில்  குளித்தல்      (Rain  bath  or  natural  bath )
௨.மண் குளியல்                      (Mud  bath )
௩.வாழை இலைக் குளியல்   (Sun  bath  through  the bnana  leaves )
௪.தொட்டிக் குளியல்               (Tup  bath )
௫.எண்ணைக் குளியல்          (Oil  bath )
௬.முதுகுத் தண்டு குளியல்  (Spinal cord )
௭.இடுப்புக் குளியல்                  (Hip  bath )
௮.குறிக் குளியல்                      (Chits  bath )
௯.நீராவிக் குளியல்                 (Steam bath )
௧௦.ஆதவக் குளியல்                 (Sun  bath )

       என பலவகைக்  குளியல் முறைகள்  தமிழகத்தில் இருந்து வருகிறது  இந்த முறைகள்  நோய் வராமல் காக்கவும்  வந்த நோயை  நீக்கவும்  செய்கிறது .

௧.மழை நீரில்  குளித்தல்  (Rain Bath )
      இந்த குளியல்  உலக  உயிர்கள்  அனைத்திற்கும்  ஏற்றதான ஒரு குளியல் முறையாகும்.மழை நீரில்  அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) கொட்டிக்  கிடக்கும்  என்பது  நமக்குத்  தெரியும்  இந்த நீரை  நாம்  அமிழ்தம்  என்போம்  இந்த நீரின்  சுவையும்  தூய்மையும்  எங்கும்  கிடைக்காதவை  என்பதும் நாமறிந்த ஒன்றே  ஆனால்  அதை  நாம்  குடிக்க மாட்டோம் என்பது வேறு  செய்தி . இந்த மழை நீரில் அளவற்ற  உயிர்வளி (ஆக்சிஜன் ) உள்ளமையால்  உடலில் உள்ள  மயிர்க்  கால்கள்  வழியே  உள்சென்று  குருதி  ஓட்டத்தை  சீராக்குகிறது . இதனால்  உடல்  புத்துணர்வு  பெற்றுவதுடன்  நோயற்ற  வாழ்வை  தருகிறது .

௨.மண் குளியல் (Mud Bath )

   பழங்  காலந் தொட்டே  மண்குளியல் சிறப்பான  இடத்தில்  நிற்கிறது  இந்த மண் குளியல்  பல்வேறு வகையானது  குளிப்பதற்கு  பல்வேறு வகையான மண்ணை  பயன் படுத்தி  வந்து இருக்கிறார்கள்

௧.புற்று  மண்
௨. செம்மண்
௩.களிமண்

 இப்படி  பல்வேறு வகையான  மண் குளியல்கள்  இருந்து  வந்து இருக்கிறது  அடுத்த பதிவிலும்  முறையாக  தொடர்வோம் ......


சித்தமருந்துவங்  காப்போம்  நோய்வென்று  நீடு  வாழ்வோம் .


கூடுதலான  தமிழ் புத்தாண்டு  மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்

More than a Blog Aggregator

ஜனவரி 02, 2012

குண்டானவர்  இளைக்க  இளைத்தவர்  குண்டாக  ஆக  வேண்டுமா ?.


      இப்போதெல்லாம் இருபாலரும்  நான்  குண்டக்க  ஆகவேண்டும்  அல்லது ஒல்லியாக  ஆகவேண்டும்  என சொல்லி மருந்து கேட்டு  வருகிறார்கள் .  இந்த பாழாய்  போன உலகம் நம்மை  எப்படி  மாற்றி விட்டு  இருக்கிறது எண்ணி  நகைக்க  வேண்டி  இருக்கிறது  நிலமென்னும்  நல்லாள்  மெல்லநகும் .... என்பது போலத்தான் .உண்மையில்  இதற்கு  மருந்து வேண்டுமா  ?நமது கல்வி  முறையில்  வந்த பெரும்  பிழைதானே ?

       இந்த  வலைபூவிற்கு வந்தாலே  நம்மையே  திட்டுகிறார்களே  என எண்ணம்  கொண்டவர்கள் சற்றே  பொறுப்பீராக . மனித  உடலுக்கான  சக்தி  வளி (காற்று) மண்டலத்தில் இருந்து  வருவதில்லை  நமது உணவு  பழக்க வழக்கம் வாழ்வியல்  நடைமுறை  உளவற்றால்  இன்னபிற காரணங்களினால்  உடல்  பருத்தும்  சிறுத்தும்  காட்சி தருகிறது . உண்மையில் சற்று  குண்டான  உடல்வாகு  கொண்டவர்கள்   உள்ளத்தில்  ஒன்றும்  உதட்டில்  ஒன்றும்  வைத்துக் கொள்வதில்லை  அதனால் முறையான  உணவு கூட  சற்று  ஊட்டத்தை தந்து விடலாம் .

    பருத்த உடல்வாகு  கொண்ட வர்கள்  உடலை இளைக்க  செய்ய  உப்பை குறைத்து  உண்ணலாம் .
நேரத்திற்கு  முறையான உணவை  எடுக்கலாம். நொறுக்கு தீனி  உண்பதை  நிறுத்தலாம். உணவுநேரத்தில் முறையாக  உண்டபின்னர்  குறுநடை  பயிலலாம் .உணவில் நிறைய  காய்களையும் கீரைகளையும் சேர்க்கலாம் . குறிப்பாக  வாழைத்தண்டு , சுரைக்காய் , முள்ளங்கி  போன்றவற்றை  எடுக்கலாம் . வாழைத்தண்டு  வாரம் இருமுறை  எடுப்பது சிறந்தது . இது பொதுவான   நடைமுறை என்றாலும்  உண்மையில் நடைமுறையில்   நல்ல சில  மாற்றங்களை  செய்ய  வேண்டி  இருக்கிறது .

     நான்  எதைவேண்டுமானாலும்  தின்பேன்  அதனிடையே  மருந்து  எனது உடலை இளைக்க  அல்லது  பருக்க செய்ய வேண்டும்  என எண்ணுவது  எப்படி  சரியாக  இருக்கும்  சிந்தித்தோமில்லை.?
வாய்  இருப்பதே  எதையாகிலும்  தின்பதர்க்குதன்  என தவறாக  எண்ணி விடுகிறார்கள்  பின்னர்  உடல் பருத்து வேதனை படுகிறார்கள் . சிலருக்கு  உடல்வாகே அப்படி  குண்டாக அமைந்து விடுவதுண்டு . உணவு திட்டத்தில்  முறையான மாற்றத்தை செய்து கொண்டாலே  எந்த மருந்தும் இல்லாமல்  நல்ல மாற்றத்தை செய்து கொள்ள முடியும் .

       சற்று  பருத்தவர்கள் காலை உணவை இயற்கையாக  அதாவது  சமைக்கப் படாமலே  உண்பது மிகசிறந்த  உணவுமுறையாக இருக்கும் . அதோடு  எந்த உணவையும் நன்கு மென்று  உன்னப் பழகினால்  இந்த உடல் பருத்தல்  சிக்கலே வர வாய்ப்பு இல்லை என்றே  சொல்லலாம் .  நன்கு  மென்று  உன்னப் படும் போதும்  உப்பைக் குறைத்து உன்னப் படும் போதும்  அளவிற்கு  மேலாக  உன்னத்தேவையிருக்கது அல்லவா? இவர்கள் உண்ட முன்பும்  பின்ன்பும்  குறைந்த அளவு  நீர்  பருக வேண்டும் . அது வெந்நீராக  இருந்தால்  சிறப்பு .

      இளைத்தவர்கள்  முதலில்  செரிமான மண்டலங்களை  தூய்மையாக்கிக் (கழிச்சல்  மருந்துகள்  எடுத்து   வயிற்றை  தூய்மை செய்து )கொண்டு கரிசாலை , அல்லது  வில்வம்  இதில் ஏதாவது ஒன்றை  காலையில்  பச்சையாகவோ  அல்லது உலர்ந்த நிலையிலோ நீரில் கலக்கி அருந்தி  செரிமானத்தை கூடிக் கொண்டு உடலுக்கு ஊட்டமான  உணவை  எடுக்க  வேண்டும். உணவுக்கு பின்னர் சற்று  வேண்டிய  அளவு நீர்  அருந்தலாம்   இனிப்பு வகைகள் எடுக்கலாம் . பகல் உணவை  முக்கால் வயிறு    அளவு எடுக்க வேண்டும் . இரவு  உணவு  கண்டிப்பாக எடுக்க வேண்டும்  வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . நேரத்திற்கு  தூங்க செய்க . பகல்  உறக்கம் கூடாது என்பது  சித்த மருத்துவ  கோட்பாடு  என்றாலும்  சற்று படுத்து  எழலாம் . இதை  முறையாக கடை பிடித்தால்  இரு தரப்பிற்கும் நல்லமாற்றம் வரும்  என்பது நூறு  விழுக்காடு  உண்மை .


சித்தமருத்துவம்  வெல்லட்டும்  தமிழன் முதலில்  நோயின்றி  வாழட்டும் .
சித்தமருத்துவ்ங்  காப்போம்  நோய் வெல்வோம்.


       எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் பற்றிய  முறையான புரிதல்  உண்டாக்குதல் .

தமிழ  கலைகள் கற்றுக்  கொடுத்தல்  அல்லது அறிமுகப் படுத்துதால் .
தமிழர்  பண்பாட்டு  மீட்டுருவாக்கம்  செய்தால் .
சித்தமருத்துவம் தொடர்பான புரிதலை உண்டாக்குதல் .
ஒக இருக்கை (யோகாசனம் ) பழக்குதல் .

தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாட்டு

  விழாக்களை  நடத்தலாமே  ?

இந்த அறிவிப்பை  கண்டதும்  karaiseraalai .blogspot .com  அரசன்  எங்கள்  ஊரில்  செய்கிறோம்  என  பின்னூட்டம் அளித்து இருந்தார்  அவருக்கு நன்றி  எல்லோரும்  பின்பற்றலாமே .


      இந்த அறிவிப்பினை இடுகைகளில்  செய்யுங்கள்  என கூரிய நண்பர்  சுகுமாருக்கு எமது  நன்றியும்  பாராட்டுகளும் . அதேபோல  வலைப்பூவில்  பலமாதங்களுக்கு முன்பாகவே பல மாற்றங்களை  செய்தமைக்கும்  உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றியும் .





 
More than a Blog Aggregator

டிசம்பர் 27, 2011

வயிற்று பூச்சிகள் தொந்தந்தரவு ஏன் ? .
        இப்போது பலர் வயிற்று பூச்சி தொந்தரவோடு வருகிறார்கள் . இது எப்படி வருகிறது ஏன் வருகிறது எப்படி தீர்ப்பது என மிகப் பெரிய வினாக்குறியோடு வருகிறார்கள் . இது மிகப் பெரிய தீர்க்க இயலாத சிக்கலோ அல்லது மிகப் பெரிய நோயோ அல்ல .இந்த சிக்கலுக்கு ஆளாகாத வர்களே இல்லை எனலாம் இதற்க்கு பல விதமான மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள் . இதனால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்ட்டீரீயாக்களும் மரித்துப் போகிறது என்பது அனைவரு அறிந்துகொள்ள வேண்டிய செய்தியாகும் .

இன்றய நுகர்வு பண்பாடு எப்படி வேண்டுமானாலும் பொருளீட்டலாம் எதைவேண்டுமானாலும் தின்று தீர்க்கலாம் என வந்தாகிவிட்டது . இதனால் முறையில்லாத சில கேடுகள் மனிதனுக்கு வந்து சேருகிறது .உணவு பழக்கம் என்பது உடலை வளர்ப்பதற்கும் நோயின்றி வாழ்வதற்கும் என இருந்த காலம் போய் நாவை அடக்கமால் கண்டபடி தின்று நோவை பெற்றுக் கொள்கிறார்கள் . உணவு எல்லா சுவைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும் .கசப்பு, துவர்ப்பு, காரம் , இனிப்பு ,உப்பு ,புளிப்பு என அனைத்தையும் முறையாக எடுத்துக் கொண்டால பொரும்பாலும் நோய் கொஞ்சம் தள்ளியே நிற்கும் . அப்படி இல்லமால் வெறுமனே இனிப்பையும் புளிப்பையும் காரத்தையும் எடுக்கும் பலர்கசப்பையும் , துவர்ப்பையும் தள்ளிவிடு கிறார்கள் இதுதான் நோய்க்கு அடிப்படை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . இந்த முறையில்லாத இனிப்பும் சில சுவைகள் மட்டுமே வயிற்றில் பூச்சிகள் வளர காரணமாகி விடுகிறது . 

இந்த வயிற்று பூச்சிகள் சிலசுவைகளுக்கு அச்சப்பட்டு தள்ளியே நிற்கும் அதுதான் கசப்பு இதை நேரடியாக இல்லாமலும் சில காய்கள் மூலம் பெறலாம் .பாகல், சுண்டை , வேப்பம் பூ , வாழைப்பூ , தேங்காய் போன்றவை இந்த வயிற்று பூச்சிகளை நீக்க கூடியது நாளும் தேங்காயை வெறும் வயிற்றில் உண்டுவர பூச்சி தொந்தரவு நீங்கும் . எனவே மேற்கண்ட இந்த சுவைகளை முறையாக எடுத்துவர வயிற்று பூச்சிகள் இல்லாமல் நீடுவழ முடியும் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் 

        எதிர் வரும்  தமிழர்  புத்தாண்டு  மட்டும்  பொங்கல்  திருநாள்  முன்னிட்டு  எங்களின் ஊர் பகுதிகளில்  

தமிழறிஞ்சர்கள் 
தமிழ  கலைகள் 
தமிழ  விளையாட்டுகள்
பேச்சு போட்டிகள் 
பா வரங்கம் 
கட்டுரைபோட்டி 
 என  நடத்துகிறோம்  வெளிநாட்டு தமிழர்கள் இதே வடிவத்தை  தங்களின் இருப்பிடங்களில்  செய்யலாம் தமிழ  நாட்டிலும்  எல்லா இடங்களிலும்  இப்படி  பண்பாடு  விழாக்களை  நடத்தலாமே  ?









More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...