ஆகஸ்ட் 22, 2011

ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்





ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வியக்கத்தக்க கலைகளை நம்முன் கொடையாக வழங்கி சென்று உள்ளார்கள் அதை இன்று பல மேலை நாடுகள் ஆய்வுகள் என்ற பெயரில் தமதாக்கி கொண்டு வருகிறது தமிழர்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என்றுதான் புரிய வில்லை . சரி செய்திக்கு வருவோம்.இந்த எண்ணெய் கொப்பளித்தல் நமது முன்னோர் தொண்டைபகுதி( கண்ட ) தூய்மையாக்கல் என்ற பெயரில் வழங்கி வந்த ஒரு முறையாகும் .

எண்ணெய் கொப்பளித்தால்

இந்த எண்ணெய் கொப்பளித்தளுக்கும் நோய் நீங்குதளுக்கும் என்ன ஒற்றுமை என வினவாலாம் பல்வேறு வகையில் மனிதனின் நோய்களை நீக்கு கிறது என்பதை மேலை நாடுகள் தமது ஆய்வுகளின் வழி காட்டுகிறது இதை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.

எண்ணெய் கொப்பளித்தால் செயல்முறை


தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும் .

இந்த வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம் இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் கொப்பளிப்ப்பதால் உண்டாகும் சிறப்புகள் .

இந்த காலங்களில் எந்த உணவு கட்டுபடோ வேறு ஏதும் செய்து கொள்ளத் தேவையில்லை முறையான உணவு திட்டத்தை பழகினால் ஏன் நோய் வரப்போகிறது என நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது இப்படி செய்வதால் எந்த பின் விளைவும் இல்லை என்பது இனிப்பான செய்தி சிலர் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை (இப்படி பட்டவர்கள் காலையில் கழிவறைக்கு செல்கையில் செய்யலாமே நான் மாலையில் தான் மலம் கழிக்கிறேன் என்றால் நாம் பொறுப்பல்ல )என்பார்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதாவது வேறு யாருக்காகவோ செய்வது போல இருக்கிறார்கள் அவர்கள் அல்ல நமதுஇலக்கு நோயின்றி இருக்க வேண்டும் என எண்ணுகிறவர்கள் நமது இலக்கு. இந்த எண்ணெய் கொப்பளிப்ப்பதால் பல்வேறு நோய்கள் நீங்குவத மருத்துவ வல்லுனர்கள் கூறு கின்றனர் .புற்று நோய் கூட கட்டு படுகிறது என்கிறார்கள்

.எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling ) செய்வாதால்

நல்ல உறக்கம் உண்டாகிறது
பற்கள் வெண்மை நிறமடைகிறது.
வாய் புண் நீங்குகிறது.
வாயு தொந்தரவு நீங்குகிறது.
தசை நோய்கள் விலகுகிறது
மார்பு நோய் நீங்கு கிறது.
நெஞ்சக தடுமன் (சளி )நீங்குகிறது
இரைப்பிருமல் நீங்குகிறது .
முதுகு வலி குறைகிறது .
இதய நோய்கள் நீங்குகிறது .
பல் நோய்கள் விலகுகிறது
காதுநோய்கள் விலகுகிறது
கண் நோய்கள் விலகுகிறது
குடல் தொடர்பான நோய்கள் விலகுகிறது
நீண்டகால இரத்த நோய்கள் விலகுகிறது.
மூச்சு குழல் நோய்கள் விலகுகிறது
நரம்பு நோய்கள் விலகுகிறது
தோல் நோய்கள் விலகுகிறது
கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது
மூல நோய்கள் விலகுகிறது
காச நோய்கள் விலகுகிறது
சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .
பக்கவாத நோய் விலகுகிறது.
வலிப்பு நோய்கள் விலகுகிறது
புற்று நோய் கட்டிகள் ,மாதவிடாய்
ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
இப்படி பலவேறு நோய்கள் விலகு கிறது இது அறிவியல் அடிப்படையிலானது தான் எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம் .

இந்திய அரசே தமிழக மீனவர்களை துன்புறுத்தும் சிங்களவன் மீது நடவடிக்கை எடு இல்லையென்றால் தமிழ மீனவர்களுக்கு, ( சிங்களவனுக்கு கொடுத்த கருவிகளை )தமிழக மீனவர்களுக்கும் கொடு .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்


More than a Blog Aggregator

ஆகஸ்ட் 15, 2011

மார்பகம் பெரிதாக ( Breast Develop )



கடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று

நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை 50 கிலோ என் மார்பகம் சிறியதாக இருக்கிறது மார்பக வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் இதற்காக உணவு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டுமா ?இப்படியாக வினா தொடுத்து இருந்தார் .

இது ஒரு கல்லுரி மாணவியின் வினா. இப்படியான வினாக்கள் படித்தவர்களிடம் இருந்து தயக்கமின்றி வருகிறது ஆனால் பெரும்பாலும் நோய்களைப்பற்றி மிகையாக சிந்தப்பதாக தெரியவில்லை நாம் குறையாக கூறவில்லை இருந்தாலும் மார்பகம் என்பது தாய்மையின் உயர்ந்த ஒரு உடல் உறுப்பு இதே மாதிரியான வினாக்கள் ஆண்களிடமும் இருந்து வருகிறது அதாவது என் ஆண்குறி சிறியதாக இருக்கிறது இதற்க்கு என்ன செய்யவ்ண்டும்? என்பதுமாதிரியான வினாக்கள்தான்

உடல் உறுப்புகள் ஆண்குறி சிறியதை பெரியதக்குகிறேன் பெண்களின் மார்பகத்தை பெரியதாக்கு கிறேன் என தமிழ இதழ் களில் மிகுதியான விளம்பரங்கள் வருகின்றன இதையும் .கண்டு பெரும்பான்மை மக்கள் தங்களின் அறியாமையால் தேடவைக்கிறது
பெரும்பான்மை படிக்காத வர்களிடம் இதுமாதிர்யான வினாக்கள் வருவதில்லை வாழ்வில் மகிழ்வுடன் பெரும்பாலும் இருக்கின்றனர் இவர்க்ளைடம் கடுமையான உழைப்பு இருப்பதால் இவர்களின் தேவை இருப்பதை கொண்டு சிறப்புடன் வழவைக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது .

மனித உடல் அமைப்பு நாம் உண்ணும் உணவு செய்கிற பயிற்சிகள் வாழ்கை நடைமுறை போன்றவற்றின் அடிப்படையிலும் மரபியல் கூறுகள் அடிப்படையிலும் பெரியதோ அல்லது சிறியதோ
தோற்றம் அளிக்கிறது . இந்த உறுப்புகளை பெரியாதாக்கும் எந்த மருந்துகளும் பெரும்பாலும் மாற்றத்தை உண்டாக்குவதில்லை ஆனால் சில முறையான பயிற்சிகளை பழக்குவத்தின் மூலம் நம் உடல் அமைப்பை மாற்றி கொள்ளலாம். அதற்க்கு அரிதின் முயன்று பயிற்ச்சி செய்ய வேண்டும் முறையான உணவு திட்டத்தை கைகொள்ள வேண்டும் .
பெண்களை பொறுத்தவரை அவர்களின் பூப்புக்கு பின்னர் அவர்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள் அடிப்படியிலேயே உடலுறுப்புகள் உருவாகிறது . ஈஸ்ரோஜென் ஹார்மோன் சுரப்பு சிறப்பாக இருக்கையில் அவர்களின் உடலமைப்பு நல்ல கட்டுடலாக மாற்றி இந்த உலகிற்கு அறிவிக்கிறது

உடலுருப்புகளை பொறுத்தவரை முறையான உணவு திட்டத்தில் இருந்து தோற்றம் கொள்ளுகிறது . முன்பெல்லாம் பெண்களின் பூப்பு கலத்திக்கு முன்பாகவே பெண்களின் தாய்மைகருதி அவர்களை ஆயத்தபடுத்துவார்கள் . இந்த விரைவு உலகத்தில் எல்லாவற்றையும் மருந்தில் இருந்து தொடங்கு கிறார்கள் . பழங்காலங்களில் பெண்களுக்கு அவர்களின் எதிர்கால பெண்மையை ஊக்கு விக்கும் விதமாக புரத உணவுகளையும் கொழுப்பு உணவுகளையும் முறையாக வழங்கி வந்தனர் அவர்கள் பத்து குழந்தைகள் பெற்றெடுத்தும் இளைமை குறையாமல் நீண்ட நாள் வாழ்ந்தனர் இன்று அவ்வாறு இல்லாமைக்கு முறையில்லாத உணவு பழக்கமே காரணம் எனலாம்.

தீர்வுகள் .

பெண்களின் ஏழு அகவையில் இருந்தே பெண்மையை போற்றும் உணவுமுறைகளை வழங்க கற்க வேண்டும் . தரமான தாவர , விலங்கு புரதங்களை உண்ண பழக வேண்டும் .உளுந்து ,பச்சைபயறு ,சோயா , போன்ற பயறுவகைகள் பெண்மையை வளர்க்க கூடியன .கீரைகள் மற்றும் சரிவிகித உணவுகளை எடுக்கும் போது இந்த சிக்கல் தோன்றுவதில்லை .முறையான கொழுப்பு உணவுகளை முறையாக கொடுக்க வேண்டும் இல்லையெனில் மிகவும் குறித்த அகவையிலேயே பெண்குழந்தைகள் பூப்பு எய்தி விடுவார்கள் .ஆசனங்களில் சர்வாங்காசனம் பெண்களின் பெண்மையை வளர்க்க கூடியது .இவற்றை முறைப்படி பழகுக .நேரே நின்று கையை மேலே உயர்த்தி மேலும் கீழுமாக சீரான வேகத்தில் ஐந்து முதல் பத்து எண்ணிகையில் இரண்டு கைகளையும் தனித்தனியே சுற்றுக.இரண்டு உள்ளங்கைகளையும் தோள்மீது வைத்து கொண்டு முன்னும் பின்னும் இயக்குக . அதாவது வாயற்படி அருகில் நின்று வயற்படியின் மீது இரண்டு கைகளையும் வைத்து கொண்டு முன்னும் பின்னும் உடலை இயக்குக இந்த பயிற்சியினால் நல்ல பலனை எதிபார்க்கலாம். அதிமதுரம் என்ற மருந்தை வாங்கி வந்து தூளாக்கி துணியில் வடிகட்டி தாய்பாலில் குழைத்து மார்பகத்தில் பூசி சற்று பிடித்துவிட நல்ல பலனை எதிர்பார்கலாம் இந்த மருந்தை இரவில் பூசி காலையில் குளிப்பது சிறந்தது . பாலியல் தொடர்பான குறைபாடுகளை மட்டும் அல்லது மனிதனின் எல்லா நோய்களையும் நீக்க வல்லன நம் சீரிய சித்த மருத்துவம் .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .

நாம் முன்னமே குறிப்பிட்டபடி பார்த்தீனியம் என்ற நச்சு செடியைமுற்றாக நீக்கவேண்டும் என எழுதி இருந்தோம் .கடந்த வாரத்தில் இதை முற்றாக நீக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு நன்றி களையும் பாராட்டுகளையும் கூறி வணங்கி மகிழுகிறோம் .

அதேவேளை ஈழம் தொடர்பான முதல்வரின் நடவடிக்கை களை கொச்சை படுத்திய இனவெறி சிங்களனை வன்மையாக கண்டிக்கிறோம் .
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 07, 2011

கணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )




இன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படுத்துவதால் பல்வேறு சிக்கல்கள் வந்து விடுகிறதே என கவலைப்படுகிறவர்கள் மிகுதியாக இருக்கிறனர் அதில் கண்களுக்கு உண்டாகும் சிக்கலும் மிகையாக இருக்கிறது என்பது உண்மை .

உடலோம்பளும் கண் பாதுகாப்பும்

முன்பே கண் பற்றிய தனியான இடுகையில் பல செய்திகளை குறிப்பிட்டு இருந்தேன் . இருப்பினும் இதில் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறேன் . தேவையை ஒட்டியே இந்த செய்தி. மனித உடல் பெரும்பாலும் விரைவில் கெடுவதில்லை . இயன்றவரை தன்னை முழுமையாக அர்பணித்து கொள்ளவே விரும்புகிறது நமது உடலுறுப்புகள் . இருப்பினும் தொடர்ந்து நாம் அவற்றிற்கு முறையான பயிற்ச்சி வழங்காமையால் மனிதனுக்கு கேடுகள் உண்டாகிறது இந்த கேட்டில் இருந்து மனிதன் தப்பித்து கொள்ள விரும்பின் எல்லா பிணிகளில் இருந்தும் தன்னை பாது காத்துக் கொள்ளலாம். எனவேதான்
முறையான வழிமுறைக்கு வருவதை பற்றி சிந்திப்போம் .

இன்றைய முறையல்லாத உணவு பழக்கம் முறை இல்லாத வாழ்க்கைமுறை போன்றவற்றின் காரணமாக கண் தொடர்பான பிணி தோற்றம் கொள்ளுகிறது .தாய் கருவுற்றிருக்கும் போது புளி /புளிப்பு சேர்ந்த உணவுகள் மிகையாக எடுக்கும் போது குழந்தையின் . கண் பார்வையை அது பாதிப்பதாக சொல்லப்படுகிறது . இதுமாதிரி உணவுகளை நீக்கி விடலாம் அல்லவா?

பார்வை குறைபாடு நோயா

மனித உடல் நோய்க்கு காரணமாக வாழ்க்கைமுறை சூழலும் ஒரு காரணம் என குறிப்பிட்டு இருந்தோம் . இரவில் மிகையாக கண் விழித்தல் மயக்கப் பொருட்களான மது ,புகை மிகையாக எடுத்தல் உப்பு உணவில் மிகையாக எடுத்தல் எல்லா நேரங்களிளுக் மிகையாக கவலையுடன் இருத்தால் போன்ற காரணங்களும் நோய்க்கு காரணமாக இருக்கிறது.

இவை எல்லா வற்றையும் விட சத்து பற்றாக்குறை பற்றி நம் மக்கள் கவலை கொள்ளுவதே இல்லை . பெரும்பாலும் நோய்களுக்கு சத்து பற்றாக்குறையும் ஒரு மூகாமையான காரணமாக இருக்கிறது . எல்லா உடல் உறுப்புகளுக்கும் தனியான சத்து தேவையிருக்கிறது இந்த தேவையை அறிந்து இட்டு நிரப்பாமையினால் நோய் நம்மோடு ஒட்டிக்கொள்ளுகிறது.

கண் பாதுகாப்புகள்

எந்த ஒரு பொருளையும் மிகையாக பயன் படுத்தும் போது அது கேடு அடையும் தானே? கண்களை கடினமாக வேலை வாங்கினால் விரைந்து அது ஓய்வு எடுத்து கொள்ளுகிறது . கடினமாக வேலை வாங்கும் போது அதை முறையாக பழக்கினால் அதனால் வரும் கேடுகளை நீக்கி கொள்ள லாம்

கண்ணிற்கும் கணினிக்குமான இடைவெளியை முறைபடுத்துக .
கண்ணிற்கு தொடர்ந்து களைப்பு தரும் வேலையை குறைத்து கொள்க .
சிவப்பு வண்ணங்களை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்கவும்.
கண்களுக்கு நாளும் முறையான பயிற்ச்சி தருக அதாவது அதிகாலையில் வயிற்றை தூய்மை செய்து கொண்டபின் நேரே நின்று இடம் ,வலமாக முறையே கழுத்தை திருப்பும் ஆசன பயிற்ச்சி செய்க . பின்னர் நேரே நின்று மூஞ்சியை திருப்பாமலே கண்களை மட்டும் எல்லா பக்கங்களையும் பார்க்கும் படி சுழற்றுக . தலை அசைய கூடாது கண்களை மட்டுமே சுற்ற வேண்டும் .முறையே மூன்று ,மூன்று முறை மாற்றி மாற்றி செய்க .
உணவில் முருங்கை கீரை , சிறுகீரை, குறிப்பாக கண்களை பலப்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரையை நாளும் உணவில் பயன்படுத்துக .கேரட் முறைப்படி பயன்படுத்துக.
தலைக்கு நாளும் திரிபலா என அழைக்கப்படும் நெல்லிக்காய் ,தான்றிக்காய் ,கடுக்காய் சேர்ந்த எண்ணெய் தலைக்கு தடவி குளிக்க செய்க.
பகல் உணவிற்கு பின் பத்து நிமிடம் கருப்பு துணி கட்டி ஓய்வு எடுக்கவும் தூங்க கூடாது தூங்கினால் தீங்கில்லை பகலுறக்கம் கூடாது என்பது சித்தமருத்துவ விதி .
இவற்றை முறைப்படி பழக கண் இரவிலும் உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கும் .
நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...