ஆகஸ்ட் 01, 2011

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )




இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.

கருப்பை சார்ந்த குறைபாடுகள் .

வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்
குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .
1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்
கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவை களுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .

மண்சோறு

இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.
இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும்.

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் .

முன்னர் குறிப்பிட்ட மாதிரி நாம் நோயில்லாத குழந்தைபேறு பற்றி இந்த இடுகை செய்ய எண்ணினோம் . மண் சோறு பற்றிய செய்தி நாளிதழ் களில் இருந்தது நம் கண்ணில் பட்டுவிட இந்த இடுகை பதிவிட வேண்டிய தாயிற்று .


வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .

சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .More than a Blog Aggregator

ஜூலை 25, 2011

திருநங்கைகள் தோற்றம் ஒரு ஆய்வு




இப்போதெல்லாம் திருநங்கைகள் எல்லா இடங்களிலும் காண முடிகிறது . மனிதகுலத்தின் இந்த இலக்கண பிழைகளை நாமும் தெரிந்து கொள்வோமே என சிந்தித்தேன் . இந்த திருநங்கைகளின் வாழ்க்கை சற்று மாறுபட்டதாக இருக்கிறது . இவர்கள் உடலால் ஆணாக இருந்தாலும் உள்ளத்தால் பெண்ணாகவே இருக்கிறார்கள் . தங்களின் இயற்கைக்கு மீறிய இந்த நிலைபாட்டை இவர்கள் விரும்பி ஏற்கிறார்கள் . குடும்பம் இந்த உலகம் எவரை பற்றியும் எந்த கவலையும் கொள்ளது தமது வழித்தடத்தில் தானே பயணிக்கிறார்கள் .

புதிய பறவை புதிய வீடு

தங்களின் கூடுகளை பிரிந்த இந்த பறவைகள் வண்ணவண்ண கனவுகளுடன் புதிய வேடந்தாங்கலை உருவாக்கி கொள்ளுகிறது ..
இங்கு இவர்களில் சிலர் பாலியல் வெட்கைகொள்ளுவோர்களுக்கு . தங்களை பெண்ணாக மாற்றிக் கொண்டு விட எண்ணி உடலை அதற்க்கு தகவமைத்து கொள்ளுகிறனர் .அதாவது தங்களின் ஆணுறுப்பை வெட்டிக்கொண்டு அங்கே பெண்ணுருப்பினை போல செயற்கையாக உருவாக்கி கொள்ளுகிறார்கள் .

மருத்துவர் கை மாதா கை

தங்களின் ஆணுறுப்பை பெண்ணாக மாற்றிக்கொள்ள இவர்கள் பெரிதும் மருத்துவமனைகளை நாடி செல்லுவதில்லை . அதாவது முறையான அறுவை சிகிச்சை செய்துகொள்ளுவதில் இவர்களிடம் அதிக நாட்டமில்லை காரணம் மருத்துவர் களிடம் அது பெரிய மருத்துவ நடுவமாக இருந்தாலும் இவர்களுக்கு பிடிப்பதில்லை காரணம் முறையான மருத்துவமனை களுக்கு சென்று அறுவை செய்து கொண்டால் பின்னாளில் சிக்கல் உண்டாகிறதாம் செயற்கையான அந்த பெண்ணுறுப்பு வழி அடைத்து சிறுநீர் வெளியேறுவதில் சிக்கலை உண்டாக்கு கிறதாம். விரைந்து காயம் ஆறுவதில்லை என்கிறான் (ள்) சினேகா என்ற திருநங்கை. எனவே தாயம்மா எனப்படும் ஒரு முதிய திருநங்கை ஒரு நல்ல நாளில் கூரிய ஆயுதம் கொண்டு தன்னுடைய கைகளினாலே ஆணுறுப்பை நீக்கி விடுகிறாராம் . இந்த நேரத்தில் வலி மிகையாக தெரிவதில்லை என்கிறான்(ள் ) முத்தழகி என்ற திருநங்கை .
.
இந்த உறுப்பு மாற்றம் செய்து கொண்ட பிறகு நற்பது நாட்கள் கடுமையான உணவு கட்டுப்பாடுகள் கடைபிடிக்க படுகிறது .ஆண்களையும் பார்க்க கூடாதாம் .இதனால் நோயில் இருந்து காத்து கொள்வதுடன் உடல் பெண்களைப்போல மாறுகிறது மயிர் நீங்குகிறது என நம்புகின்றனர் . அதுமட்டும் அல்லது பிற மக்களைபோலவே இவர்களிடம் கட்டுபடுத்த முடியாத மூட பழக்கங்களும் குடி கொண்டிருப்பதை கானலாகிறது
அதுமட்டுமின்றி இவர்களின் பாலுறவு வேட்கை இவர்களை பெண்ணாக பாவித்து கொள்ளுவதால் ஆணின் தேவையை விரும்புவதாக கூறுகிறனர் .பாலுறவில் பெண்களைப்போலவே ஆர்கசம் எனப்படும் உச்சநிலை அடைவதாக கூறு கிறாள் (ன்)பவித்த்ரா .

சித்த மருத்துவ அறிவியல் பார்வையில் திருநங்கைகள் .

சித்த மருத்துவம் அறிவியலை உள்ளடக்கியது என்பதை நாமறிவோம்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய திருமூலர்

விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்தது முதலைந்து உயிரோடே ஏறி

என பதிவு செய்கிறார் . பாலுறவு கொள்ளும் காலத்தில் தாய் , தந்தை உளநிலை , உடல் நிலை போன்றவற்றையும் மிக நுணுக்கமாக பர்க்கவேண்டியத்தின் காரணத்தை பதிவு செய்கிறது . பாலுறவு காலமும் அதன் பின் தாயின் கருக்கலமும் மிகவும் கவனத்துடன் அணுக வேண்டியதின் தேவையை உணத்துகிறது . இப்படி முறையாக தாய்மைப் பேற்றைக் கடைபிடித்தால் வன்முறையற்ற சிறந்த அறிவு நிறைந்த தமிழ் குமுகத்தை தோற்றங்கொள்ள செய்யலாம் .

திருநங்கைகள் தோற்றம் .....

ஆண்மிகில் ஆணாம் பெண்மிகில் பெண்ணாம்
பூணும் இரண்டோன்றிப் பொருந்தில் அலியாகும்

என்கிறார் திருமூலர் அதாவது கணவனும் மனைவியும் குழந்தை வேண்டி கூடுகையில் கணவனின் மூச்சு காற்றுவலப்பக்கம் நடந்தால் ஆண்குழந்தையும் இடப்பக்கம் நடந்தால் பெண்குழந்தையும் இரண்டு பக்கமும் உயிர்வளி நடந்தால் அலியாகவும் பிறக்கும் என்கிறார் . சித்தமருத்துவம் அறிவியல் வழிபட்டது என்கிறோம் எந்த மூகந்திரமும் இல்லாமல் முழுமையாக இவற்றை வாசிக்காமல்அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தாமல் வாட்டுவதம் புரியும் சிலர் இது அறிவியல் இல்லாததது என்கிறனர் . . இந்த கூற்றை முழுமையாக ஆய்வு செய்தால் எல்லாம் புரியும் தானே செய்யுங்கள் என்கிறோம் அல்லது செய்கிறவனை விடுங்கள் செய்து கட்டுகிறோம் இங்கே தானும் படுப்பதில்லை தள்ளியும் படுப்பதில்லை .
அன்புள்ளம் கொண்டோரே சித்தமஆத்துவ அறிவியல் இந்த உலகபந்தே பின்பற்றவேண்டிய சிறந்த அறிவியல் என்கிறேன் . சித்தர்களின் கூற்று என்றும் பொய்த்ததில்லை பொய்க்காது எனவே சித்தர்களின் மருத்துவ அறிவியல் பார்வை இன்றைய நிலையில் நுணுகி நுணுகி ஆய்ந்து மக்களுக்கு கொடுக்கவேண்டிய சிறந்த மருத்துவம் பின்பற்றுவோம் . காப்போம் .
ஆக சித்த மருத்துவ அறிவியலின் படி முறையாக குழந்தை பேற்றிற்கு முயன்றால் சிறந்த எதிர்காலத்தை நோயற்ற ஒரு குமுகத்தை உண்டாக்க முடியும் என்பது நமது வாதமாகும்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

அறிவான குழந்தை அறுவை சிகிச்சை இல்லாத குழந்தை சாத்தியமா?.More than a Blog Aggregator

ஜூலை 18, 2011

உங்கள் உடலை அறிய.......உங்களுக்கு வரும் நோய்களை அறிய ...



தேர்ந்த சித்த மருத்துவர் நோய்கண்டவர்களின் நாடியை முறைப்படி கண்டறிந்து என்ன நோய் வந்திருக்கிறது என சொல்லிவிடுவார்கள் அவர்கள் நோயாளிகளிடம் என்ன நோய் என கேட்டு கொண்டு இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு சித்த மருத்துவத்தின் நாடியரிதல் துல்லியமாக கணக்கிட பட்டு உள்ளது சித்தமருத்துவத்தின் என்வகைதேர்வு மனிதனின் நோய்களை அறிந்து முறைப்படி பட்டியலிடுகிறது .

மனித உடல்வகை

மனிதர்களின் உடல்வகை சித்தமருத்துவம் துல்லியமாக ஒன்பது (9 ) என கணக்கிட்டு உள்ளது .அவை வளி ,அழல் , ஐ , எனப்படும் இவற்றோடு தொந்தம் எனவும் உண்டு அதாவது வதமும் பித்தமும் கலங்கி நடந்தால் அதாவது வாதத்தின் பங்கும் பித்தத்தின் பங்கும் ஒன்றி இருப்பின் இது வாத பித்த தொந்தம் எனப்படும்

வாத உடல்வகை .

வாத உடல்வகை குளிர்ந்தும் மூக்கு ,விழி,பல், நாக்கு, ஈற்றுணவு (மலம் ) எல்லாமே கருத்து காணப்படும் .கண்ணில் நீர்வடியும் .நாக்கு கருப்பாக வறண்டு இருக்கும் . சிறுநீர் பொருமி கருமையாக இருக்கும் . ஈற்றுணவு வெளியேறுவதில் சிக்கல் காணப்படும்.
இவர்கள் தீனி மேல் மிகையான நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . தவறான செயல்கள் நடத்தைகள் இருக்கலாம் .வளமான உடல் மற்றும் வலிமை மிகுந்த உடலை பெற்று இருப்பார்கள் . இவர்கள் காற்று பிடிப்பு நோய் களால் அவதிப்படுவர்கள்.


பித்த உடல்வகை




இவர்கள் உடல் நெருப்பாக கொதிக்கும் . மூஞ்சி ,நாக்கு ,பல், ஈற்றுணவு , எல்லாமே மஞ்சளாக இருக்கும் . வியர்வை மஞ்சளாக இருக்கும் .அதோடு இவர்களின் வியர்வை வாடை அடிக்கும் என்னதான் குளித்தாலும் இந்த சிக்கல் தீராது . இவை நீங்க கடுமையான உணவு, உள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும் . இவர்கள் அறிவில் சிறந்து விளங்குவார்கள் . ஒருதடவை படித்தாலே இவர்களின் நினைவாற்றல் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் பெற்றதாக இருக்கும். இவர்களிடம் நேர்மை இருக்கும் இளமையில் /இளைய அகவையில் மயிர் நரைக்க தொடங்கும் . எப்போதும் இவர்கள் உடல் பலவீனமாக இருப்பதாக உணர்வார்கள் . இவர்களுக்கு வயிறு தொடர்பான நோய்கள் , உளம் தொடர்பான நோய்கள், வரலாம்.

கப உடல்வகை

இவர்கள் உடல் மிகையாக வியர்க்கும் மூஞ்சி ,பல்,நாக்கு, சிறுநீர், ஈற்றுணவு,(மலம் )எல்லாமே வெண்மையாக இருக்கும்.கண்ணில் பீளை கட்டும்.இவர்களின் உடல் செழுமையாக அழகாக இருக்கும். எதையும் நிதானமாக செய்வார்கள். பாலுறவில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள் . இவர்களின் அகவை நீண்டதாக இருக்கும் . இவர்களுக்கு தடுமன் ,( சளி )மூச்சிறைப்பு கபம் திட்ர்பன பிணிகள் தோன்றும் என சித்தமருத்துவம் பகுக்கிறது .
இது தொடர்பான விரிவான தகவல் பின்னர் விரிவாக எழுதப்படும்

சித்தமருத்துவம் காப்போம் நோய்வெல்வோம்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...