மே 16, 2011

மருத்துவ ஆய்வுகளை சித்தமருத்துவகண்ணோட்டத்திலிருந்து தொடங்குக ....




இப்போது பல மருத்துவ ஆய்வுகளை கானலாகிறது இவைகள் எல்லாமே ஆங்கில முறைமருத்துவத்தின் கண்ணோட்டத்திலேயே செய்யபடுகிறது . இவைகள் தவறானவை பிழையானவை என்கிறேன். இவைகள் சித்த முத்துவ கண்ணோட்டத்திலிருந்து தொடங்க பெறவேண்டும் என்கிறேன் . மொழி ஆய்வுகளும் மெய்மங்களும் (தத்துவம் ),பண்பாடு , கலை இலக்கியங்கள் உள்ளிட்ட எல்லாமே தமிழிலிருந்து தொடங்க படவேண்டுமே யன்றி வெறுமனே தமிழுக்கு பின் தோன்றிய மொழிகளில் இருந்து ஆய்வுகளை தொடங்கினால் எந்த முடிவும் முழுமையாக கிடைக்காது . இந்த உலகம் இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறது.

மொழியரிஞ்சர் கள்

இன்றைய தமிழ முன்னோடியான மொழியரிஞ்ச்ர்கள் எல்லாமெய்மங்களுக்கும் (தத்துவங்களுக்கும் ) நாக ரீகங்களுக்கும் , மொழிகளுக்கும் தமிழே முதன்மையானது என சான்று காட்டுகின்றனர் . தமிழிலிருது ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்பது போலவே மருத்துவம் குறித்த ஆய்வுகளையும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் இருந்தே தொடங்க படவேண்டும்.

சித்த மருத்துவத்திலிருந்தே ஆய்வுகளை தொடங்குக...

இன்று பல ஆய்வுகள் செய்யபடுகின்றன . இவைகள் ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் செய்யபடுகிறது . அதாவது மனிதனின் உடலை பொறியாக (இயந்திரமாக ) பார்க்கும் கண்ணோட்டம் கொண்டது ஆங்கில மருத்துவம் . ஆனால் சித்த மருத்துவம் மனிதனின் முழுமையான உடலை ஒருநோய்க்கு ஆய்வுக்கு எடுத்து கொள்ளுகிறது . அதாவது மனிதனின் நோய் நிலையறிய எண்வகை தேர்வை சித்த மருத்துவம் கடைபிடிக்கிறது . அதேபோல சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது .

மனித மூன்று வகை உடல்கள் ...

சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது அதாவது
வளி (வாதம் ) , அழல் (பித்தம் ) , ஐ (கபம் ) மூன்று வகை உடல்களையும் பருண்மையாக ஆய்வு செய்து
விளக்கிறது இந்த மூன்று வகை உடல்கள் இவற்றிற்கு உரிய குணன் நலன்கள் இந்த உடல்களுக்கு உரிய உணவு பழக்க வழக்கங்கள் என பருண்மையாக பட்டியலிடுகிறது சித்தமருத்துவம் . இப்படி இருக்கையில் ஆங்கில மருத்துவமோ மனிதனை பொறியாக (இயந்திரமாக ) கணக்கிட்டு ஆய்வுகளை செய்கிறது .

அறிவியல் விதிக்கு பொருந்தாதது...

வளி (வாத ) வாகு உடல் என எடுத்து கொள்வோம் . இந்த வளி (வாத ) வாகு உடலுக்கு என பல நோய்களை பட்டியலிடுகிறது "" காணப்பா வாதம் மீறில் கால்கைதான் வலிக்கும் நோவும்..."" என உடல் வாகுக்கு ஏற்ற நோய்களை பட்டியலிடுகிறது வாத வாகு உடல் கொண்டோர் கிழங்கு வகைகள் எடுத்து கொண்டால் நோய்கள் மிகையாகும் என்பது சித்த மருத்துவ விதி இது உண்மையும் அறிவியல் அடிப்படையில் ஆனதும் கூட ஐ (கப ).வாகு உடல் கொண்டோர் உப்பையும் , இனிப்பையும், புளிப்பையும் குறைத்து உண்ண பரிந்துரைக்கிறது .காரணம் இவைகள் நோயினை மிகையாக்கும் என்பதால் . இப்படி இருக்க குறிப்பிட்ட மக்களை ஆய்வு செய்கிறேன் என ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்களின் ஆய்வு முடிவுகள் தவறு உண்டாக்க வாய்ய்பு உள்ளது என அறியலாகிறது .

தமிழிலிருந்து....

ஒரு மருந்தை ஆய்வு செய்ய மனிதனின் உடல் வாகை அறிந்து ஆய்வு செய்தால் உண்மைகள் புரியும் சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் தொடங்க பட வேண்டிய மருத்துவ ஆய்வு முடிவுகள்



நாடி நடை

பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே !

மனித உடல் 72 இலட்சம் நாடிகளை கொண்டது . அதை குறுக்கி 72 ஆயிரம் நாடிகளாக பகுத்தனர் அதையும் துய தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் எண்ணிக்கை மிகுதி என்பதால் இவற்றை கணக்கிட இயலாது என பத்து (தச) நாடிகளை கொண்டனர் இதுவும் கணக்கிட இயலாது என்பதால் எளிமையாக கணக்கிட மூன்று நாடிகளை எடுத்துக்கொண்டனர்.

மூன்று நாடிகளும் ஒன்பது வகை மனித உடலும்

இப்படிமனித உடலை மூன்று நாடிகளாக பகுத்து மனித உடலின் நோய்களை கணக்கிட வளி(வாதம்
) அழல் (பித்தம் ) ஐ (கபம் ) என குறுக்கி வகைபடுத்தினர் .இவற்றினூடே நுட்பமாக தொந்தம் என்பதையும் கணக்கிட்டனர் .வாதத்தில் வாதம் ,வாத்தத்தில் பித்தம், வாதத்தில் கபம் , என மனித உடலை ஒன்பது வகையாக கணக்கிட்டனர் .
இந்த உடல் வகை மனிதர்கள் ஒருநோய்க்கு ஒரேவித மருந்து ஏற்று கொள்ளது என பருண்மையாக ஆய்வு செய்து கண்டறிந்தனர் சித்தகள் .அதேபோல எல்லோருக்கும் எல்லாவகை உணவுகளும் பொருந்தாதது என்பது சித்த மருத்துவ கோட்பாடு .
வளி (வாத ) உடல் குளிர்ந்து காணப்படும்.. அழல் (பித்த )உடல் சூடாகி காணப்படும் .ஐ (கப ) உடல் செழுமையுடன் வியர்த்து காணப்படும் என மனித உடல் வகையை பகுக்கிறது . இவற்றினுடன் தொந்த வகை உடல் இந்த உடல் வகைகள் முறையே ஒரேவகையான மருந்து களையும் ஒரேவகை உணவுகளையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை என துல்லியமாக பட்டியலிடுகிறது சித்த மாத்துவம் .
ஆக முறையான உணவுகளை எடுத்து கொண்டால் நோயிலிருந்து விடுபட முடியும் என்பது சித்தமருத்துவ கோட்பாடு .
அனால் ஆங்கில முறை மருத்துவ ஆய்வுகளில் மனிதர்கள் என்கிற வகையில் பலரை ஆய்வுக்கு (சித்த மருத்துவ கண்ணோட்ட முறைப்படி ஆய்வுக்கு ) உட்படுத்துவதில்லை . இது அறிவியலுக்கு முரணாகவே இருக்கும் என்பது எமது கோட்பாடு .

உணவுகளும் சுவையும் ....

இனிப்பு சுவையை எடுத்து கொள்வோம். இந்த இனிப்பே உடலின் ஏழு தாதுக் களையும் வளர்க்க்கும் மனித உயிரை வளர்க்க கூடியது உறுதிபடுத்தக் கூடியது. வளி (வாதம்) ,அழல் (பித்தம் ), இவற்றை
போக்கி உடல் எரிச்சல் , மயக்கம் போக்கி நாவரட்சியை தணிக்க கூடியது .

இனிப்பு சுவை எண்ணெய் பசை உடையது .செரிப்பதக்கு கடினமானது. இந்த சுவை கொண்ட உணவுகளை ஐ (கப ) வகை உடலினர் எடுத்து கொண்டால் நோயை மிகையாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . இப்படி ஒவ் ஒரு உணவும் ஒருமாதிரியான குணத்தை கொண்டிருப்பதால் ,
ஒரே மாதிரியான உணவு முறை மனிதனுக்கு நோயை உண்டாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு .

சித்த மருத்துவ கண்ணோட்டத்தின் படி ...

மூன்று வகை நாடிகளின் படி மனிதனை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்களின் உடல் வகைக்கு ஏற்றவகையில் பிரித்து ஒருமருந்தையோ அல்லது உணவையோ , கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும் .நாடிகளின் படி மனித உள்ளமும் வேறுபட்டு இருக்கும் என்பது சித்த மருத்துவம் கூறும் கோட்பாடு . ஆக மனித உடலை சித்த மருத்துவ கோட்பாட்டின் படி உடல் வகைக்கு ஏற்ற படி பிரித்து ஆய்வுகள் தொடங்கினால் மனித இனம் அடைய போகும் பலன் எண்ணிலடங்காத வகையில் இருக்கும் என்பது எனது எண்ணம் .அறிவுலகமே இனி சித்த மருத்துவ கோட்பாட்டின்படி உடல் வகைக்கு ஏற்ற வகையில் பிரித்து ஆய்வுகளை மேற்கொண்டால் நல்லதுதானே ?

பழமையை காப்போம் புதியன வெல்வோம் !More than a Blog Aggregator

மே 10, 2011

தமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது?





இப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என
எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்களை காணலாம்.
அப்படி என்ன தமிழகத்து ஆண்கள் ஆண்மையற்று போய்விட்டனர்? திருமணமே வேண்டாம்
என்கிறார்களா? பிறப்பு விகிதம் குறைந்துபோய் இருக்கிறதா ? அல்லது வேறு ஏதாவது
குறைபாடா? நாம் சிந்திக்க தொடங்கினோம்.


இன்றைய நிலையில் இப்படி பட்ட விளம்பரங்களை விட முறையான
மருத்துவத்தை முன்னெடுத்து மக்களை நல்வழிபடுத்தவேண்டிய சூழலில்
பெரும்பான்மை மாத்துவார்கள் இல்லை என்பதாக கொள்ளலாமா ? தெரியவில்லை
நீங்கள்தான் சிந்திக்கவேண்டும். உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

இன்றைய சூழலில் ஆண்மை குறைவிற்கு எந்த கேடும் நிகழவில்லை ஆனால் இதை
தவறாக புரிந்து கொள்ள பட்டு இருக்கிறது அல்லது தவறாகபுரியவைக்கப்பட்டு உள்ளது
தவறான கருத்தாக்கத்தை புகுத்தப்பட்டு உள்ளது .பழங்கலங்களில் பாலியல்
குறைபாடுகள் இப்படி பேசப்படவில்லை காரணம் அண்டைய சூழல் அப்படி அனால்
எல்லாவற்றிற்கும் தெளிவான விளக்கங்கள் கிடைத்து வந்தன .

உடலை கண்ணேபோல் காத்து வந்தனர் கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை
மனிதத்தை முறையாக பராமரித்து வந்தது. இன்றைய தனியுடமை அமைப்பு மனிதனை
பேயாட்டம் ஆடவைக்கிறது .காரணம் மனிதன் இன்று பொறியாகி (இயந்திரம் ) போனான் உடல் நிலை
சரியில்லை என்றாலும் ,அல்லது உடலியல் குறைபாடு என்றாலும் மனிதன் பொறி ( இயந்திரம்)
போல உடலை வெட்டி எடுக்கும் மாற்று (பொறி )இயந்திரத்தை பொருத்தி மனிதத்தை
ஊர்ந்து செல்ல வைக்கும் செப்படி வித்தைகள் செப்பனே நடக்கிறது ஆனால் மக்களோ
அறியாமையில் உழல்கிறனர்.

இன்றைய ஆண்மைக்குறைபாடு என்பது பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது .
சித்தமருத்துவம் மனிதனின் வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்து காட்டுகிறது
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை
பாலுறவு கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. மூத்த பெண்களுடன் பாலுறவு கூடாது
பகலில் பாலுறவு கூடாது . என்னை தேய்த்து குளித்த அன்று பாலுறவு கூடாது என
பல்வேறு வாழ்க்கைமுறை மெய்மங்களை பாமரத்தனமாக பட்டியலிட்டு காட்டுகிறது

இன்றைய அவசர உலகம் எல்லா இன்பங்களையும் உடனே பெற்றுவிட வேண்டும் என
தூண்டுகிறது . பாலுறவை சிற்றின்பம் என்றனர் முன்னோர் . அதை பேரின்பமாக
கருதி விரைந்து எல்லா இன்பங்களை பெற்றுவிட துடித்து இளமையிலேய முடங்கி
போகின்றனர் . இவர்களுக்கு நாம் பொறுமையாகவும் அமைதியாகவும் சொல்லுவது
புரியாமலே போகிறது . பாலுறவு இன்பத்தினை நீடிக்க வேண்டி பல்வேறு ஆங்கிலமுறை
மருத்துவத்தை நாடுகிறனர் இது மாட்டிற்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கு
ஒப்பானது மாட்டிற்கு தீனிபோட்டு பால்கறக்கும் பழக்கம் போய் இன்று ஊசி
போட்டு பால்கரப்பது வழக்கமாகிப்போனது இது எப்படி சரியாகி வரும் என்பது
புரியவில்லை . இது மாட்டையும் மனிதனையும் அல்லவா நோயாளியாக்கும்?

வேதனை தரக்கூடிய செய்தி என்னவென்றால் இன்று பாலியல் இன்பத்தை, பாலியல்
தொடர்பான படங்களை பார்த்து அதில் வரும் காட்சிகளைபோன்று தானும் அப்படி
பாலுறவு கொள்ள வண்டும் என என்னுகிறனர். பாலுறவு காட்சிகள் படமாக்குவது ஒரு
நாளில் எடுப்பது அல்ல பலநாளில் எடுக்கப்பட்டதாகும் அதை பார்த்து தானும் நீண்ட
நேரம் பாலுறவு கொள்ள நினைப்பது நுகர்வு பண்பாடு இது மனிதத்தை
நோயாளியாக்கும். பாலுறவு காலத்தில் உடல் அளவில் பல மாற்றங்கள் நிகழுகிறது மனித
உடல் வெப்பமடைகிறது இந்த வெப்பத்தை தணித்து கொள்ள எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை . இவற்றால் பல்வேறு பாலுறவு கோளாறுகள் நிகழுகிறது. அதேவேளை மனித
உடல் விந்துவை உற்பத்தி செய்யும் பொறி (இயந்திரமல்ல ) நல்ல தரமான உணவுகள்
காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளவேண்டும்.கீரைகள் எடுக்கவேண்டும்

மனிதனின் இரத்தத்தில் சர்கரையின் அளவு கூடினால் பாலுறவு இன்பம்
குறையும் .அது தான் சர்க்கரை நோய்கண்டவர்கள் பாலுறவு சிக்கல் களுக்கு
ஆளாகின்றனர் .மிகையான அச்சம் , சினம் போன்ற நிலைகளிலும் பாலியல் கோளாறுகள்
உண்டாகிறது. உடலில் பவேறு நோயுள்ள நிலையில் பாலுறவு கோளாறுகள் உண்டாகிறது .
எனவே பாலுறவு கோளாறுகளுக்கு அது என்ன காரணத்தினத்தல் உண்டாயிற்று என
கண்டறிந்து முறையாக தீர்க்க வேண்டும் . பெரும்பாலும் சிக்கலே இருப்பதில்லை .
சிறிய சிறிய சிக்கல் கலை பெரிதாக்கி கொள்ளுவதுமுண்டு .தரமான தவச(தானிய ) முளைகட்டிய
உணவுகளை எடுத்து கொள்ளுவதாலும் . தரமான பழங்கள் , முறையான உணவுகள் எடுத்து
கொள்ளுதல் , எண்ணெய் தேய்த்து குளித்தல் பதினைந்து நாளுக்கு ஒருமுறை பாலுறவு
கொள்ளுதல் இப்படி முறையான பழக்கங்களை கடைபிடித்தால் பாலுறவு சிக்கல்கள் தோன்ற
வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

*சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .*More than a Blog Aggregator

மே 02, 2011

நரம்பு தளர்ச்சியா (இஸ்டீரீயா) பேய் பிசாசா?




இப்போது ஊர் புறங்கள் முதல் பட்டணம் வரை நோய்கள் கண்டுவிட்டால் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் முன் மூடபழக்கவழக்கங்களை நாடும் பழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பழமை என்பது அறிவர்கள் (சித்தர்கள் ) கண்டதுஅறிவர்களின் இந்த காலம் சித்தமருத்துவத்தின் பொன்னுலகம் எனலாம். மனித இனத்தின் மருத்துவ மறுமலர்ச்சி யின் காலமான இந்த காலத்தில்தான் அறிவியல் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நின்றன. இவர்கள்தான் அறிவியல் அடிப்படையில் நோய்களை இனங்கண்டனர்.

வளர் இளம் பருவம்.

மனித இனத்தின் முகாமையான காலம் என்றால் துள்ளித்திரியும் விடலைபருவம்தான் எனலாம். அந்த காலம் உன்னதமான வசந்த காலம் . இந்த காலத்தில் தான் முறையான சரிவிகித உணவு தேவை குறிப்பாக பெண்குழந்தைகள் எனில் கூடுதல் கவனிப்பும் கூடுதல் உணவுகளும் தேவை . அப்படி இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் நோயுடன் கூடிய போராட்டம் தான் எனலாம்.




சரிவிகித உணவுகள்

இதற்கான சரிவிகித உணவுகள் என தனியான எனது இடுகை காண்க ... இந்த விடலைபருவத்தில் பதின் பருவத்திலும் முறையான வழிகாட்டலும் நேரிய வாழ்கை முறையும் முறையான ஊட்டமுடன் கூடிய உணவுகளும் தேவை.தரமான தவச (தாணிய உணவுகள் ) கீரைகள், பழங்கள் , கொழுப்பு நிறைந்த கொட்டைகள் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் . இதனுடன் எரிச்சல், பதற்றம் , போராட்டம் போன்ற உளவியல் போராட்டம் பெண் குழந்தைகளிடம் காணப்பட்டால் இந்த உளவியல் போராட்டங்களும் நோய்களை உண்டாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். பல்வேறு நோய்களை போலவே நரம்பு தளர்ச்சி நோயும் உண்டாகி விடலை பருவபெண் குழந்தைகளை நோவில் ஆழ்த்து கிறது.




நரம்பு தளர்ச்சியா ? பேயா ?

முறையான உணவுகளும் முறையான வாழ்க்கை முறையும் கொண்டிராத பதின்பருவத்தினார் குறிப்பாக பெண்குழந்தைகள் நரம்புதளாச்சி நோயாளி யாகின்றனர் . இந்த நோயை இனங்கான முடியாத மேதாவிகள்? பெண்குழந்தை களின் எதிர்காலத்தை கேள்விகுறியாகிறனர் . அறியாமையில் உள்ள பெற்றோர்கள் இதை பேய் , பிசாசு ,காட்டேரி, முனி, கன்னி , என தங்கள் அறிவிற்கும் ? அறியாமைக்கும் ஏற்றபடி பெயரை இட்டு அழைகிறனர்.

அறியாமையில் உழல்பவர்களே ...

இப்படி பேய் பிசாசுகளும் இருப்பது உண்மை என்றால் பல்வேறு வகையில் கொலைக்கு உள்ளாகிறவர்கள் எவரும் பேயாக மாறி கொன்றவரை பயமுறுத்தி அல்லது அவரை கொன்றதாக வரலாறு இல்லை . குறிப்பாக எடுத்து கொள்ளுவோம் . ஈழத்தில் பல இலட்சம் பேரை படுகொலை செய்தான் சிங்களவன். எந்த சிங்களனையும் பேயாக மாறி பழிவாங்க வில்லை அல்லது கொன்று அழிக்கவில்லை. இதிலிருந்து தெரிவது யாதெனில் பேய் என்பது மூடத்தமானது முட்டாள் தனமானது எண்பது தெளிவாகலாம்.

அறியாமையில் உழல்கிறவர்கள்...

நரம்பு தளர்ச்சிக்கான காரணங்களை நீக்கி நோயை வென்றெடுக்க ஆங்கில முறை மருத்துவத்தில் மருந்துகள் இல்லை அதனால் நோய்க்கான காரணங்களை அவர்கள் வேறுவிதமாக திசை திருப்பி விடுகின்றனர் . இந்நோய்கள் கண்டவர்களை பாவப்பட்டவர்களாக பாவிக்கின்றனர் . ஆனால் தமிழ மருத்துவத்தில் இன் நோய்க்கான காரணங்களும் மருந்துகளும் உண்டு . சித்த மருத்துவம் நோய்களுக்கு மருந்து அளிப்பதில்லை என்பது தெரிந்ததே ஆனால் நோய்க்கான காரணங்களை கண்டறிந்து நோயை வென்று எடுக்கிறது .
பெண்மையின் மிக மூகாமையான உடல் உறுப்புகளில் வியக்க தக்க உறுப்பான கருப்பையின் உட்சுவர்களில் உண்டாகும் குறைபாடு எனலாம் . கருப்பையின் உட்சுவர்களை காக்கிற அரத்த நரம்புகளில் உண்டாகும் பழுதே இந்த நோய்க்கான காரணமாகும். இதனால் கருப்பையின் நரம்புகள் செயலற்று போவதால் வளர் இளம் பெண்களுக்கு மயக்கம் வருவதும் ,தன்னையறியாமல் பேசுதல் ,சிரித்தல் , ஆடுதல், குதித்தல், பம்பை உடுக்கைகளுக்கு ஆடுதல் போன்ற செயல் களை செய்ய தூண்டுகிறது . இந்த சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்கள் ஆகிறார்கள் . இப்படிப்பட்ட வளர் இளம் பருவத்தினர் ( விடலை பருவத்தினர் ) கனவுலகிலேயே வாழுகிறனர் . கருப்பை சார்ந்த நரம்பு தளர்ச்சி நோயே இப்படி செய்விக்கிறது . முறையான தமிழ மருத்துவத்தில் எண்ணற்ற மருந்துகள் உண்டு .

தீர்வுகள்...

இன் நோய்க்கு எண்ணற்ற மருந்து உண்டு என்றாலும் இந்த நோய்க்கு உளவியல் காரணங்களை நீக்கி முறையான உணவுதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உடலையும் உள்ளத்தையும் நேர் வழியில் செலுத்த வேண்டும் . சரிவிகித உணவுகளும் தரமான தவச (தானிய ) உணவுகளும் கீரைகளும் பழங்களும் , கொழுப்பு நிறைந்த கொட்டைகளும் உணவில் சேர்க்க வேண்டும் .
நோய் முற்றிய நிலையில் எட்டிமர பட்டை கொண்டு வந்து பத்து கிராம் எடுத்து தட்டி போட்டு இருநூறு மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி குடிக்க நல்ல பலனை அடையலாம்
.
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் திடமான குமுகத்தை படைப்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...