மே 14, 2012

மூப்பை வெல்லலாமே




     இன்று   சித்த  மருத்துவத்தின்  முழுமையான  பரிமாணத்தை  பெரும்பான்மை  மக்கள்  புரிந்து  கொள்ள  வில்லை  அல்லது  புரிய  வைக்கப்  படவில்லை  நானூறு  ஆண்டுகால  அடிமைசிந்தனை தமிழனை  மிகையாகவே  பாதிக்கச்  செய்து   விட்டது  அதனால்  தான்  தமிழில்  உள்ள  சிறப்புகளை  தேடிதேடித்  தந்தாலும்  அவனுக்கு  செரிக்க  வில்லை  தன்னுடைய  இனத்தின்  அறிவை   பலத்தை  அவனால்  புரிந்து  கொள்ளப்  படவில்லை   மருத்துவத்தை  எடுத்துக்  கொண்டால்  உலகினுக்கே  சித்த  மருத்துவம் கொடுத்ததது   எண்ணிலடங்கதவைகள்   இருந்தாலும்  தமிழன்   அடிமைத்தனத்திலேயே   கிடக்கிறான்  என்றால்  நானூறு  ஆண்டுகளின் அடிமைத்தன  மிச்ச  சொச்சம்தனே  ? அதனால்தான்  நோவில் வீழ்ந்து கிடக்கிறான்

      மூப்பை  தவிர்க்கலாமே  என  எழுதிவிட்டு  அறவுரை  கூற தொடங்கி விட்டீரே  என  கேட்பது புரிகிறது சிந்திக்க தெரியாதவர்கள் சிந்தனையை  ...  தமிழில் உள்ள அறவியலை...  புரிய வைப்பதர்க்குதான் . மனிதம் மீண்டும்  மரணத்தை இளமையிலேயே  சந்திக்க தொடங்கி விட்டன இது அவனின் அறியாமையின் வெளிப்பாடு என்பதுதானே...  உன்னத்தெரிந்தவனுக்கு நோயில்லை என்பார்கள் . அதுபோல நீடுவாழும் நெறியை உங்களுக்கு  அறிமுகப் படுத்துவது எனது தேவையாகிவிட்டது உலக மருத்துவ  முறைகளில் சிறந்த மருத்துவம் சித்த மருத்துவமே என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை  இதில்  உள்ள சிறப்புகளைதனே  தமிழன் தொலைத்துவிட்டான்  அதைத்தான் அறிமுகப் படுத்துகிறேன் .

    சித்த மருத்துவத்தில்  நூற்றிஎட்டு  கற்ப மருந்துகள்  உள்ளது அதாவது கற்பம் என்றாலே  அழிவில்லாத   என்ற  பொருளை உடையது  இந்த உடலை அழியாமல் கக்கும் மருந்து என்பது
பொருள் இதையும் கூட

        மூலிகைக் கற்ப  முயன்ற அறுபத்தும்
        பாவி யுபரசம்  பாங்காய்  அறுபது
       வாழிய சூதமும்  தங்கம் மிகரண்டு
        யொலி யொருநூற்றுப் பத்திரண் டொன்றே.

      உடலை திடப்படுத்தி உயிரை நிலைக்கசெயும்  சக்தி கொண்ட  கற்பங்கள்  நிறைவே உள்ளது  ஆனால் அவற்றில் மிகவும் மூகமையனது கர்ப்பங்கள் மொத்தம் நூற்றி இருபதொருவகைகள்  உள்ளது இதில்
மூலிகைகள் அறுபதும் உபரசங்கள் அறுபதும் தங்கமும் இரசமும்  சேர்ந்த கர்ப்பம் ஒருவகையும் அடங்கும் என்கிறார்  திருமூலர்    இவற்றை முறைப்படி  பயன்படுத்த  வேண்டும் என்றாலும்  அதற்குரிய கட்டுப்பாடுகளை  கடைப்பிடிக்க வேண்டும்.

       உடலை  கட்டுக் காப்புடன் வைத்து  கொள்ள வேண்டும்  உணவை  முறைப்படி முறையான உணவை  முறைப்படி  எடுக்க வேண்டும்.

                அண்டம்  சுருங்கில் அதற்கோர்  அழிவில்லை
              பிண்டம்  சுருங்கில் பிராணன் நிலைபெறும்
                உண்டி  சுருங்கில் உபாயம்  பலவுள
                  கண்டம்  கருத்த  கபாலியும்  ஆமே .

      ஒரு மனிதனுடைய உடல் இளைத்து விட்டது என்று வருந்த வேண்டியதில்லை. உடல் இளைத்தால் நாம்  நீண்டநாள் வாழலாம்.உடலுக்கு அழிவில்லை. வயிறானது பெருத்து இருந்தால் மூச்சு  விடுவதற்கு சிரமப்படுவான் .வயிறு சிறுத்து இருந்தால் மூச்சுவிட  ஏதுவாகும் உணவு குறைத்து உண்ணும்போது உடல் எளிதாக  இயங்கும். அதாவது  உயிர்ப்பற்றலை முறைப்படுத்தி  மூச்சுக் காற்றை முறைப்படி பயன்  படுத்த  உயிர் நிலைபெறும்  மூச்சை  முழுமையாக உள்வாங்கி  வெளிவிடும்   ஆமை  ஆயிரமாண்டுகள்  வாழுகிறது  மூச்சை  விரைந்து செலவழிக்கும் உயிரினங்கள் விரைந்து  மரணத்தை  தழுவுகிறது .

    மூச்சை  அடக்கும்  வித்தையை  திருமூலர்  அழகாக  விளக்குகிறார்  இந்த  சிறந்த முறையை  கடைபிடிக்கும் போதுதான்  உயிர்ப்பாற்றல்  கூடும்

                      ஏற்றி  இறக்கி இருகாலும் பூரிக்கும்
                      காற்றைப்  பிடிக்கும்  கணக்கறி வாரில்லை
                      காற்றை பிடிக்கும்  கணக்கறி  வாளர்க்கு
                      கூற்றை  உதைக்கும்  குறியது  வாமே .
 
      இங்கு கூற்று  என்பது எமன்  என்று  நம்மக்கு தெரியும்  ஆக மரணத்தை வெல்லும்  மா  மருந்து
 காற்றை  அதாவது மூச்சுப் பயிற்சியை  முறைப்படி  செய்யும் போது  கிடைக்கிறது  என்பது  உண்மைதானே .        வளரும் அடுத்த  இடுகையில்  விரிவாக  சிந்திப்போம் . அதுவரை

சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம்  
More than a Blog Aggregator

மே 07, 2012

அயோடின் (ayodin salt) உப்பே தப்பு ... தமிழா என்ன செய்யப் போகிறாய்?


    அண்மையில் கலப்பட  உப்பு  தடைச்  சட்டத்தை  நடுவணரசு  முன்வைதத்தாம்( நீண்ட  நாளாகவே  வந்து விட்டது)  இது யாரை  பாதுகாக்க  அல்லது  யாரை  அழிக்க  என நீங்கள்தான்  முடிவு  செய்து கொள்ள வேண்டும் .

     முன்பு எல்லாம்  எதாவது ஒரு  பொருளில்  கலப்படம்  செய்தால்தான்  தவறு என  அரசு குறைகூறும்  . இன்று  கலப்படம் செய்யவிட்டாலே  கம்பி  என்ன வேண்டி  இருக்கும்  இது  எங்கோ  வெளிநாட்டில்  இல்லை  இந்தியாவில்தான் . அதும்  தமிழன் என்றால்  அவன் ஒரு மனிதனே  இல்லை  ஒரு மலையாளியோ  அல்லது  சீக்கியனோ  சின்ன  எறும்பு  கடிபட்டு விட்டால் கூட  திருவாளர்  பரிசுத்தம்  ஓடோடி  வருவர்  அனால்  தமிழன் .... அவன் கிடக்கிறான் விடுங்கள் ... என .... தூங்க  தொடக்கி விடுவார் .

      உப்பு  இயற்க்கை  அன்னையின் செல்லப்  பிள்ளையான  ஆதவனின்  பார்வைப்  பட்டு கடல் நீரே  உப்பகிவிடுகிறது . இந்த உப்பை அப்படியே  விற்றால்    கலப்படமாம் . கூடவே  கொஞ்சம்  அயோடினை  கலந்து விட்டால்  அது  நல்ல உப்பு ? இது சரியா என யாரவது கேட்டீர்காளா இல்லைதானே   கொஞ்சம்  உங்களின்  இரத்தத்தை  சோதித்துப்  பார்த்துக்  கொள்ளுங்கள்  கப்படமான  இரத்தம்  எதையும் சிந்திக்காது  ...

        அயோடின் சத்து குறைபாட்டுடன்  பிறக்கும்  குழந்தை மந்தத்தன்மை  கொண்டு இருக்கும்  என இன்றைய  மருத்துவம்  கூறுகிறது . இது  பத்தாயிரத்தில் ஒன்று  என்ற  விகிதத்தில்தான்  அதுமட்டும் அல்ல  இந்த அயோடின்  குறைபாடு  மலைப் பிரதேசங்களில்  தான்  இந்த    மிகையாக  இருக்கும். இதை  தடுக்க கருவுற்று இருக்கும்  பெண்களுக்குஅயோடின் கொடுக்க வேண்டும் .

         இதை விட்டுவிட்டு  குறைபாடு இல்லாத  வர்கள்  எல்லோரும்  அயோடின் கலந்த   உப்பை  தின்று  நோயை  பெற்றுக் கொளுங்கள்  என கூறுவது  அறிவுடைமையா ? என  கொஞ்சம்  சிந்திக்க  வேண்டாமா? அது சரி  இந்த அயோடின்  உப்பை தின்று தான் தொலைப்போமே   இதை ஏன்  வேண்டாம்  என  கூறுகின்றார்கள்  என  நீங்கள்  கேட்பது புரிகிறது இந்த  அயோடின் கலந்த உப்பை தின்று  தீர்ப்பதால் பல்வேறு நோய்கள் நம்மை தாககுகிறதாம். அதை தெரிந்துகொள்ள  நீங்கள்  இந்த கட்டுரையை  முழுமையாக படிக்க வேண்டும் . நமது  இடுகையை  எப்போதுமே  முழுமையாக  படித்தால்தான்  என்ன நோக்கத்திற்காக  எழுதப் படுகிறதோ  அது முழுமையாக  புரியும்.. படிக்கின்றீர்களா...?

      இந்த  அயோடின்  கலந்த  உப்பைத்  தின்பதால்  கழுத்து வீங்கித்  தொங்குதல், சிறிது நடந்தாலும்  மூச்சு  வாங்குதல்  எடைக்குறைவு , பசி இன்மை , கை , கால் , நடுக்கம்  என பல  நோய்கள் தாக்கி இருக்கிறதுஎன தமிழ நாடு   அரசு பொது மருத்துவ மனை நாளமில்லா சுரப்பிகளின் பிரிவின் தலைவர்  கூறுகிறார் .மேலும் எவ்வளவு   . எவ்வளவு  சாப்பிட்டாலும்  பசி அடங்காது ...  80   கிலோ  இருந்தவர்கள் கூட  நாற்பது  நாற்பத்தைந்து  கிலோவிற்கு வந்து  விடுவார்கள்  என  இதே  போல  பெண்களும்  இளம்  அகவையில்  இருந்து அறுபது அகவை  வரை  கழுத்தில் அறுவை  சிகிச்சை  செய்யப் பட்டு கைகள் நடுங்கி , உடல் மெலிந்து கண்கள்  வெளியே  தள்ளி   பெரிய நோவில் வீழ்ந்து கிடப்பதை  சான்று களுடன்  கூறுகிறார் .

      தைராய்டு  என்பது நம்  கழுத்துப் பகுதியில் இருக்கும் ஒரு நாமில்லா  சுரப்பி  இது  தைராக்சின்  டி3 ,டி 4  என்ற ஹார்மோனை  சுரக்க செய்கிறது .இது  அளவோடு சுரக்க வேண்டும் . எந்த அளவிற்கு  சுரக்க வேண்டும்  என மூளையின்  பிட்யூட்டரி சுரப்பியில்  சுரக்கும்  தைராய்டு  ஸ்டி முலேட்டிங்  ஹர்மன் கட்டுப் படுத்து  கிறது  தைரசின்  குறைபாடு இருந்தால்      அதாவது குறைவாக  சுரந்தால் அது ஹைபோ  தைரடிசம்  இதன் பதிப்பால் குழந்தை  மூளை வளர்ச்சி  குறைந்து காணப்படும். இந்த குறைபாடு தமிழகத்தை ப்ருத்தவரை மிகவும்  குறைந்த அளவிலேயே  காணப்படுகிறது . எங்கு குறைந்து காணப்படுகிறதோ  அங்கு கண்டு  இந்த  அயோடினை  கொடுக்கலாம்.

         ஒரு மனிதனுக்கு   அயோடினின்  தேவை மிகவும் குறைவு  அதாவது எழுபது  அகவை  நிரம்பிய  ஒருவர் அவர் வாழ்நாளில்  ஒரு  தேக்கரண்டி  அளவு தான் .  ஆனால் இதை நாளும்  எடுத்துக் கொள்வாதல்  எதிர்கால  குழந்தைகள் முதல் எல்லோருக்கும்  ஜீவனில்  ஆட்டோ  இம்யூன்  தைராய்டைஸ்  என்ற  நோய் தாக்க வாய்ப்பு  இருக்கிறது என்கிறார்  அரசு  பொது மருத்துவர் . அளவுக்கு  மிகையான  அயோடின் மனிதனின் தைராய்டு  சுரப்பியை  சிதைக்கும்    சிதைவுற்ற  அந்த செல்கள் இரத்தத்தில் கலந்து விடுகிறது.  உடனே நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது தைராய்டு செல்லுக்கு எதிர்ப்பான நோய் எதிர்ப்பு பொருளை (அன்டிபாடிஸ் ) உற்பத்தி  செய்து விடுகிறது அந்த நோய்  எதிர்ப்பு பொருளானது கொஞ்சம் கொஞ்சமாக தைரய்டை அழித்துவிடும் . முழுவதும் அழிந்து விட்டால்  வாழ்நாள் முழுவதும்  தைரக்சின் ஹார்மொனுக்காக மருந்து எடுக்க  வேண்டும்    . நோய் முற்றிய நிலையில் அறுவை  சிகிச்சைதான்  தீர்வாம் ... தேவையா  முறைய இயற்கையாக கிடைக்கும்  உப்பை தின்பதை விட்டுவிட்டு டாட்டா வையும்  அம்பானிகளையும்  வாழ வைத்து  தமிழன்  நோயாளியாக வேண்டுமா ? சிந்திப்பாயா தமிழனே ?.......
சூடு  சுரணை உள்ளவன்  போராடி  பெறுகிறான்  இல்லாதவன்  நோயில் வேழ வேண்டியதுதானே ?

சித்த மருத்துவங் காப்போம்  நோய் வெல்வோம்













More than a Blog Aggregator

ஏப்ரல் 30, 2012

விசமாகும் மாங்கனிகள் ( mango froot) எச்சரிக்கை



         தமிழர்  உணவில் மாங்கனி  முதலிடத்தில்  இருப்பதுநமக்கு தெரியும்.  அதாவது  மா,பலா,வாழை , என முக்கனிகளை  இணைத்து உணவு வழங்குவார்கள் . இந்த மாங்கனி  இன்று  நச்சாகி  மரணத்தையும்  புற்று நோயையும்  தரும்  என எத்தனைபேர்  அறிவார்கள்? ஆம்  இந்த முதன்மையான கனி  இன்று நோயை பரப்பிக் கொண்டு  இருக்கிறது  எப்படி? இன்றைய  விரைவு உலகம்  எதையும் பொறுமையாக  அணுகுவதில்லை  விரைவு  அதாவது  இன்றய  முதலீடு  நாளை  கொள்ளை  இலாபம்   என வந்துவிட்ட  தனியுடமை  காலம். எனவே  விரைந்து  பழங்களை  பழுக்க வைத்து  காசாக்க நினைக்கிறது . நாம் ஏன் நோயாளியாக  வேண்டும்  எத்தனைபேர்இதை   சிந்திப்பார்கள்?

      மனிதன்  சிந்திக்கும் திறன் பெறவேண்டும்  என்பதே  நமது அவா. இயற்கையாக  காய்த்த மாங்காய்களை நீண்டகம்புகளைக் கொண்டு வலையமைத்து பறித்து பயன் படுத்த வேண்டும். பயன் படுத்தி  இந்த மாங்காய்களை இயற்கையாக  பழுக்க வைக்க  குறைந்தது  ஐந்து , அலது ஆறு  நாட்கள்  ஆகும் ஆனால் இன்றைய  விரைவு  உலகம்  சில இதளியங்களை(இரசாயணம் )  கொண்டு  பழுக்க  வைக்கப் படுகிறது  எப்படி?

      முன்பெல்லாம்  பழங்களை இயற்கையாக ... இயற்கைன  முறைகளை   கொண்டு  பழுக்க வைத்தனர் .முற்றிய  காய்களை வைக்கோலைப்  பயன் படுத்தி  பழுக்க வைத்தனர் . அல்லது மண்  பானை  கொண்டு  பழுக்க வைத்தனர். இந்த  பழங்கள்  மிகையான  கவர்ச்சி  இல்லாமல் மிகுந்த சுவையுடன்  இருந்தது  அது ஒரு காலம்  இப்போது  அதை  எதிர்ப்பார்க்க  இயலாது .

    விரைந்து  மாங்காய்கள்  பழுக்க கால்சியம் கார்பைடு  இரசாயன  கட்டிகளைக் கொண்டு  பழுக்க வைக்கின்றனர். இந்த பழங்களை உண்பதால்  வயிற்று  கோளாறுகள்,  பல்வேறு உடல் நலக் கேடுகள்  உண்டாகிறது.  இந்தவகையில் பழுக்க வைக்கப் பட்ட  பழங்கள் சுவையும் மனமும்  இருப்பதில்லை . இயற்கைத்தனமையோடு  இருப்பதில்லை  அதாவது இன்றைய  இளசுகளைப்  போலவே  வெறும் கவர்ச்சியை  மட்டுமே  கண்டு காமுருவதுபோல  பலர்  கவர்ச்சியை  மட்டுமே கண்டு  பொருளை வாங்கி  மடிந்து போகின்றனர் . கவர்சிக்குள்ளும்  மிகப் பெரிய கேடுகள்  மறைந்து உள்ளதை  எத்தனைபேர்  அறிவார் ?

    இந்த பழங்களில்  பாஸ்பரஸ்  ஹைட்ரைடு, மற்றும் ஆர்கானிக்  இரசாயணம்  போன்றவை  பழத்தில் சேர்ந்து விடுகிறது  இது உடலுக்கு  கழிச்சல் , கக்கல்( வாந்தி ) வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல்  , வயிற்று எரிச்சல் , மிகையான தாகம், பலவீனம் மறந்து போகுதல், பேச்சுக் குறைபாடு, ஆகியவை உண்டாகிறது. இந்த கலவை  அதாவது இந்த பழங்கள் புற்று  நோயை உண்டாக்க வல்லன .  இந்த பழங்களை  உண்ணுவதால்  உடல் சீர்கேடு அடைகிறது. உடலில் உள்ள கோடானுகோடி  செல்கள் மரித்துப் போகிறது  பலவேறு மாற்றங்களை சந்திக்கிறது, தேவையா ? எப்போது  சிந்திப்போம்?

இந்த வகைப் பழங்களை எப்படி அடையாளம் காணுவது  இதுதானே உங்களின் வினா?
பழம் முழுவதும்  ஒரேமாதிரியாக  மஞ்சளாக  இருக்கும்  பழத்தில் கரும் புள்ளிகள் இருக்கும் .பழத்தின் உள்ளே  பழத்திற்கு உரிய  மனமும்  சுவையும் இல்லாமல்  வெண்மையாக  இருக்கும். பழம் மிருதுவாக  இருக்கும் . சுவை குறைந்து இருக்கும் . சொல்ல வேண்டியதை சொல்லி விட்டேன்  நீங்கள் மாம்பழம் வாங்க  போகின்றீர் களா?
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...