பிப்ரவரி 15, 2012

நோயின்றி வாழ இயற்கைக் குளியல் வரிசை ......


                                                 தொட்டிக்குளியல்  (Tub Bath )

   தொட்டிக் குளியல் மூலம் முதுகுத் தண்டு , இடுப்பு, மற்றும் பிறப்புறுப்புகளை  தூய்மைப்படுத்துதல்  அவற்றில் உள்ள நோய்களை நீக்குக் கொள்ளல்  போன்றவற்றிக்கு  பயன்படுத்தி நலம் பெறலாம்.  ஒரு செவ்வக  வடிவ  தொட்டியில் கால்பகுதி  நீரை நிறப்பி முதுகெளும்ம்பு மட்டும் நினையும் படி  படுத்து இருந்து  அரைமணிநேரம் இருந்து குளித்துவிடலாம், அதேபோல  இடுப்பு மட்டும் நனையும்படி தொட்டியில் நீரை  ஊற்றி அதில் இடுப்பை மட்டும் நனையும்படி  செய்து  பின்னர் எழலாம்.

     ஆளுக்கு தகுந்த மாதிரி  தொட்டியின் அளவை  கூட்டியும் குறைத்தும் பயன்படுத்தி  நீர்வூற்றி தலையும் காலும் வெளியில்      இருக்கும்படி   செய்து இந்த  குளியலை எடுக்கலாம்.. இதனால் முதுகுத் தண்டு குளிர்ந்து இரத்த ஓட்டம் மிகுந்து    உடல்  சுறுசுறுப்பு  அடைகிறது  உடலின்  வெப்பம்  தணிந்து  உடலின் பகுதிகள்  துரிதமாக  பணிசெய்கிறது   இந்த குளியல் முதுகு வலி  உள்ளபோதும்  இடுப்பு வலியுள்ளபோதும்  தேவைக்கு தகுந்தபடி  எடுக்கலாம்.  

 நீராவிக்  குளியல்   (Steam   Bath ) 
       

      மாதந்தோறும்  இந்த குளியல் எடுக்கலாம். தண்ணீரில் நீலமலைத்தழை(நீலகிரி  தழை ) போட்டு  ஆவிக்குளியல் செய்யலாம் . உடலில் திசுக்களில் தேங்கி இருக்கும்   அழுக்குகுகளை  நீக்கி  வியர்வையாக  மாற்றி  வெளியேற்றிவிடும்   உடலில் தேங்கியுள்ள  கெட்ட  நீர் வெளியேறி உடல் தூய்மையடைகிறது  .
       இந்த குளியல் செய்வதால்  உடல்வலி , தலைபாரம் , மண்டையிடி   மூக்கடைப்பு , தலைவலி , தடுமன் ,( ஜலதோஷம் ) கபகட்டுமுதலிய  நோய்கள்  நீங்கும் . 

குறிக்குளியல்  (Chits   Bath  ) 

       உடல்  சூட்டினால்  தக்குதலடையும்போது  நீர் சுருக்கு உண்டாகும்  இந்த சமயத்தில்  குறிக்  குளியல் செயாலாம் . குறி  (பிறப்பு  உறுப்பு  ) ஒரு முக்காலியின்  மேல்  உட்கார்ந்து  கொண்டு   கால்களை  அகட்டி வைத்தது   பிறப்பு உறுப்பை  சில்  என்ற தண்ணீரில் கழுவ  வேண்டும்  பின்னர் வேண்டிய  அளவு நீர் அருந்த  வேண்டும்  பின்னர் உள்ளாடையை   குளிர்ந்த நீரில்  நினைத்து  கட்டிக்  கொண்டு ஐந்து  நிமிடம்  இருந்து பின்னர் அவிழ்த்து விடலாம் . நோய்  நீங்கும் .

 சித்தமருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 
More than a Blog Aggregator

பிப்ரவரி 06, 2012

வாழை இலைகுளியல் (Sun Bath through the banana leaves )

நோய் நீக்கும் மருத்துவக்  குளியல் வரிசை.௩


                  மண் பட்டிக் குளியல்  (  mud  pack )
  இந்த குளியலை மண் முடிச்சி  என கூறுவார்கள் பொதுவாக  மனிதனுக்கு  வரும்  தலைவலி , மார்புவலி , இடுப்புவலி, காய்ச்சல் , வயிற்றுவலிபோன்ற  நிலைகளில் இது பயன்படுத்தப் படுகிறது.  தூய்மையான மண்ணை குழைத்து நூல்  துணி எடுத்து நீலவட்டத்தில் கிழித்து மண்ணை அதில் குழைத்து  வயிற்றுப் பகுதியில் தொப்புளுக்கு கிழே அடி வயிற்றில் மண் பட்டியை வைத்து கட்டி  இருபது அல்லது முப்பது நிமிடங்கள்  வைத்து இருந்து  நீக்கிவிடலாம்..
      இந்த மண்ணின் குளிர் தன்மையினால்  அடிவயிற்றில் உள்ள இரத்த  நாளங்கள் சுருக்கமடைந்து உடலின் கழிவுகள்  எல்லாம் வெளியேறி  நச்சுநீக்கம்  உண்டாகி குடலையும் உடலையும் தூய்மையாக்கு கிறது . இந்த சூழ்நிலையில் நோய் நீங்கும் தானே ?
     இதேமாதிரி  பலநிலைகளில்  மண் குளியல் செய்யலாம்  மனிதனுக்கு  எந்த  இடத்திலகிலும்  நோய்  வீக்கம்  இருந்தால்  இந்த மாதிரி வலியும் வீக்கமும்  தீரும்.
வாழை இளைக்குளியல் (Sun Bath through the banana  leaves  )

        இந்த குளியல் வாழை  இலை முழுமையாக  எடுத்துக் கொண்டு  பகல் நேரத்தில்  ஒரு மணிக்குள்ளாக உடல் முழுவது  சுற்றிக்கொண்டு  கட்டிவிடவேண்டும்  இதற்க்கு மற்றவர்களின் துணை இல்லாமல் செய்யக் கூடாது  இந்த குளியலின் பொது  சிகிச்சை பெறுகிரவரிடம் பேச்சு  கொடுத்துக் கொண்டே  இருக்க வேண்டும் .  இப்படி . உடல்முழுமையும்  இலையால் சுற்றி  மூடி  தண்ணீர்  சிலகுவளை அருந்திவிட்டு  உடல் பகுதி வெளியில் தெரியாமல்  அரை மணிநேரம் வரை வெய்யலில்  வைத்து இருந்து  கட்டை அவிழ்த்து  விட வேண்டும்.  இதனால்  உடலில் உள்ள அழுக்குகள்  நீங்கி  உடல்  தூமையடைகிறது .

     இதய  நோய் உள்ளவர்களும் , இதய பலவீனம் உள்ளவர்களும்  இந்த முறையினை பயன் படுத்தலாம்  இதனால்  குறிப்பிட்ட பகுதி  பலமடைகிறது.சிறுநீரகங்களுக்கு  வேலைப்பளு குறைந்து  அதன்  பணி கூடுதல் ஆகிறது. இப்படி  முறையான  குளியலை செய்து  பயன் பெறுவோம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்  வெல்வோம்.
More than a Blog Aggregator

ஜனவரி 31, 2012

௨.மண் குளியல் (Mud bath )



       இன்றைய  வாழ்க்கை முறை  மிகவும் மாறித்தான் போயிருக்கிறது. பழமை  மாறி புதுமை  அந்த  இடத்தை  பிடித்துவிட்டது கூடவே நோயும்.  பழமை நமது  உணவுமுறையும் வாழ்க்கைமுறையும் அறிவியல்  நோக்கில் இருந்தன  அதை நாம் மறந்து விட்டோம்  அதனால்  நோய்கள்  நம்மை பின்தொடர  விட்டுவிட்டோம் . முன்பு  குளிக்கும் முறைகூட  அறிவியல்  அடிப்படையில்  இருந்து நோயில்  இருந்து காத்தத்து  இன்று  குளியலே  நோயை  உண்டாக்குவதாக  இருக்கிறது . இன்றைய  வழலைக்கட்டி (சோப்பு )வெறுமனே காஸ்டிக்சோடா  போட்டு குளிப்பதால்  உடலில்  இருந்து  இயற்கையாக  சுரக்கும்  எண்ணத்  தன்மை  முழுவதும்  நீங்கி  எலும்புகள்  கலகலத்து போய் நோயில்  மரித்து போகிறனர் .

       இந்நிலை  கூடாதென  என  எண்ணிய  நமது  பழம் பெரும்  சித்த மருத்துவ அறிவர்கள் மனிதனை நோயில் இருந்து விடுவிக்க  பல நிலைகளை  கண்டறிந்து மக்களுக்கு கொடையாக  வழங்கினர் . அவற்றில்  ஒன்றுதான்  மண் குளியல் (Mud  bath ) இந்த  குளியல்  சிறந்த  குளியல் முறைகளில்  ஒன்றானது  என  நாம்  சிந்திக்க வேண்டிய  நிலையில் இருக்கிறோம் .

           புற்று மண்  , களிமண் , இவற்றை  எதை  தெரிவு  செய்து  குளிக்க முயண்டறாலும் தேவையான  மண்ணை  தூய்மையான  இடத்தில்  இரண்டு  அங்குலம்  அளவிற்கு   எடுத்துவிட்டு  தூய மண்ணை  எடுத்து தேவையான அளவு  நீர்விட்டு  குழைத்து  உடல் முழுவதும்  பூசி  இள வெயிலில்  அரை  அல்லது முக்கால் மணிநேரம்  இருந்து குளிர்ந்த நீரில் குளிப்பது  மிகவும்  சிறந்தது  இந்த குளியல் தோல்  சம்பந்த  நோயில்  சிறந்த பலனைத்தரும் .

        பெரும்பாலும்  குளிப்பவர்கள்  வெந்நீரில்   குளிக்கின்றனர்  இது தவறானது எண்ணெய்த் தேய்த்த நிலையில்  வெந்நீரில்  குளிக்கலாம்  ஆனால்  எண்ணெய் தேய்த்து  குளிக்கத நிலையில்  வெந்நீர்  குளியல்  நோயை  உண்டாக்கும்  என்பதறிக  எண்ணைக் குளியல்  செய்த  அன்று  வழலைக்  கட்டியை  பயன்  படுத்த  தேவையில்லை . சீயக்காய்  போட்டி குளிக்க வேண்டும்

மீண்டும்  அடுத்த இடுகையில்  சிந்திப்போம் .
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .










More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...