ஜூன் 06, 2011

டையாலிஸ்(Dialysis ) தேவையா ? (நடிகர் ரசினி )




இன்று சராசரி களுக்கே பெரிய பெரிய நோய்கள் வரத்தொடங்கி விட்டது காரணம் இன்று முறை இல்லாத சில பழக்க வழக்கங்களினால் மயக்க பொருள்கள் (மது ,புகை ) போன்றவற்றினாலும் சில ஆங்கில முறை மருந்துகளினாலும் பலவித நோய்கள் தோற்றம் கொள்ளுகிறது . இவைகள் சிறுக சிறுக மனிதத்தையே அழித்துவருகிறது டையாலிஸ் தேவையா ? என்ற அளவிற்கு ஒரு திரைப்பட நடிகருக்கு அவரின் முறையில்லாத நடவடிக்கை காரணமாக வந்த நோய் இன்று தமிழக மக்களின் அவசியமான பேச்சாக மாறியுள்ளது யார் அந்த நடிகர் ?

.


மும்பையை பூர்விகமாக கொண்டு கர்நாடகத்தில் இருந்து கோடம்பாக்கம் (சென்னை ) வந்த வர்தான் இந்த ரசினி தொடர் புகைபழக்கத்தினால் மூச்சுத்திணறல் , நுரையீரல் தொற்று , அளவிற்கு மீறிய குடிபழக்கத்தினால் சிறுநீரக மாற்று அல்லது டையாளிசு ஆகியவை செய்யும்படி நேர்ந்திருக்கிறது .


நோய்காரணங்கள்

குறிப்பாக சிறுநீரகம் மனிதமூளை இதயம் போன்றவை அவ்வளவு எளிதில் கேடு அடைவதில்லை காரணம் இவைகள் மனிதனின் மூகமையான உடலுறுப்புகள் .என்பதால் . இந்த முறையில்லாத மது ,புகை அளவுக்கு அதிகமான வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் மனிதனின் சிறுநீரகத்தை சல்லடையாக ஆக்கிவிடுகிறது. மென்பானங்களும் விதி விளக்கில்லை என்பது இரு செய்தி .

இரும்பு அல்ல மனித சிறுநீரகம்

மனிதனை தவிர வேறு எந்த விலங்கு களுக்கும் இந்த அறுவை மருத்துவமோ மாற்று உறுப்புகள் பொருத்துவதோ நிகழுவதில்லை காரணம் அவைகள் இன்னும் இயற்கையை ஒட்டியே வாழுகிறது . ஆனால் மனிதன் தன்னோடு பட்டணங்களில் (நகர்புறம் ) சமைக்கப்பட்ட உணவுகளையும் செயற்கை உணவுகளையும் விலங்கு களுக்கு கொடுப்பதால் அவைகளும் நோயாளியாகிபோகிறது.

ஒரு மனிதனிடம் பத்து இலட்சம் சிறுநீர் வடிப்பிகள் இருக்கிறது இவைகள் மனிதனின் முறையில்லாத நடவடிக்கை களினால் நாளும் சில பழுதடைகிறது இவைகளின் பணியை எஞ்சியுள்ள சிறுநீரக வடிப்பிகள் செலாற்று கிறது .

சிறுநீரக செயலிழப்பும் டயாலிசிசும்

இப்படி தாக்குதலுக்கு ஆளாகும் சிறுநீர் வடிப்பிகள் (Nephrons ) ஒருகட்டத்தில் சிறுநீரகம் செயலிழந்து போகிறது தன்னுடைய இயலாமையால். இந்நிலையில் உடலியக்கம் தொடர ஆங்கில மருத்துவ முறையில் செயற்கை கருவிகள் கொண்டு சிறுநீரகத்தை தூய்மையாக்கு கிறார்கள் . என்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள். இந்த டையாளிசிசு செய்யும் நிலையில் உடல் கடுமையாக சூடு அடையும் எனவும் , இந்த டையாளிசிசு செய்து கொண்ட அன்று உணவு எடுக்க முடியாது எனவும் கக்கல் (வாந்தி )ஏற்டும் எனவும் கடுமையான போராட்டம் நிறைந்த நாட்கள் என்கிறார் கருவி மூலம் சிறுநீரகத்தை தூய்மை செய்தும் பலன் கிட்டாமல் மாற்று சிறுநீரகம் பொருத்திக் கொண்ட நண்பர் கணேசுமூர்த்தி.

சித்த மருத்துவத்தால் சிறுநீரகத்தை தூய்மையாக்கல்

சித்த மருத்துவம் மனிதனை மனிதனாக பார்க்கும் எனவும் அது மனிதனை பொறியாக பார்க்காது எனவும் முன்பே குறிப்பிட்டு இருந்தேன் . அதே போல அப்படிப்பட்ட சித்த மருத்துவம் சிறுநீரகத்தை தான் தொண்ணுறு விழுக்காடு கெட்டுபோன நிலையிலும் தன்னுடைய முறையான மருத்துவத்தினால் மூலிகைகளை கொண்டு முன்போலவே செயல்பட வைக்க இயலும் என்கிறது சித்த மருத்துவ சித்தாந்தம் .மனிதனின் அரத்தத்தில் கலந்து உள்ள உப்பு தன்மையை நீக்க பாகல், வாழைபூ, வல்லாரை,சுண்டை, பெருமளவில் உதவுகிறது . இந்த பொருட்களை எடுக்காமல் மீண்டும் மீண்டும் முறையில்லாமல் சிறுநீரகத்தை கெடுக்கும் மயக்க பொருள் வீரியம் மிகுந்த ஆங்கில மருந்துகள் கேடு அடைய செய்கியது.

நாள்பட்ட சிறுநீரக செயல்திறநிழப்புஆங்கில மருத்துவர் விளக்கம்

இது முற்றிலும் சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையாகும் . சிறுநீரகம் செயலிழந்த நிலை சிறிதளவே காணப்படும் . தொடக்கத்தில் எந்த அறிகுறியும் காட்டுவதில்லை . என்கிறனர் ஆங்கில மருத்துவ நிபுணர்கள் .
சிறுநீரகத்தில் (Urea ) என்ற கழிவு மிகையாக இருக்காது . ஆரோகியமான ஒருவருக்கு யூரியாவிண் அளவு 20 -40 மில்லி கிராம் 100 மில்லி இரத்தத்தில் . இது சிறுநீரகம் முற்றும் செயலிழந்த நிலையில் இவைகள் மிகையாக இருக்கும்.

சிறுநீர் வெகுவாக வெளியேறினாலும் வெறும் நீரேயன்றி எந்த கழிவுப்போருளும் இருக்காது .

இரத்த சோகை (Anemia ) உண்டாகும்.

இரத்தத்தில் சுன்ன சத்து (Calcium )குறைந்து இருப்பதால் எலும்புகள் பலவீனம் அடைந்து தானே முறியும்.

கடைசியில் நோய்கண்டவர் பேசவும் நடக்கவும் இயலாமல் வலு வின்றி ஆழ்ந்த மயக்க (Coma stage ) நிலை அடையக்கூடும்.

சில சமயம் கை கால் வலிப்பு உண்டாக்கலாம்.

நாவரண்டு மூச்சு கெட்ட வடைவீசும் .

பசி இன்மை, வயிறுபுரட்டல் , கக்கல் தோன்றும் .
தோலில் வறட்சி உண்டாகி தாங்க முடியாத அரிப்பு உண்டாகும்.

இந்த நிலையில் கூழ்மாறி (Dialysis ) எனப்படும் சிகிச்சை வயிற்று உள்ளுறை மூலம் இரத்தத்தில் நேரடியாகவும் செய்யப்படும்

அல்லது மாற்று சிறுநீரகம் பொருத்தப்படும் என்கிறார் ஆங்கில முறை சிறுநீரக இயல் மருத்துவர் செல்வராஜ்

சித்த மருத்துவம்

இரத்தத்தில் உள்ள மிகையான உப்பை குறைக்க சித்த மருத்துவத்தில் பல்வறு மூலிகைகளும் மருந்துப் பொருட்களும் கொடையாக கொட்டி கிடைக்கிறது. இவற்றை முறையாக பயன் படுத்தினால் சிறுநீரகம் கெட வாய்பில்லை .
அப்படி கேடு அடைந்த நிலையிலும் தேர்ந்த மருத்துவர் நோய்கண்டவருக்கு செயற்கையாக சமைக்க பட்ட உணவை நீக்கி முறையான சித்த மருந்துகளை பரிந்துரைப்பார். நோய்கண்டவருக்கு எனிமா எடுக்கப்படும் இரண்டு நாள் அல்லது மூன்று நாள் பட்டினி மருத்துவம் கொடுப்பார் பழச்சாறுகள் கொடுக்கப்படும் பின்னர் மண் குளியல் செய்வார் பின்னர் மூலிகைகள் கொண்டுணவு பட்டியலை தருவார் சிலவாரங்களில் சிறுநீரகம் தன் பணிசெய்யத் தொடங்கும் இந்நிலையில் எளிய மூலிகை மருந்துகளும் இயற்கை உணவுகளும் வழங்குவார் இதில் கவனிக்க வேண்டியது இனிப்பு, உப்பு மென்பானங்கள் , சமைக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்படும் இந்த நிலையில் நோய்கண்டவர் நோயில் இருந்து மீள்வார் மாற்று சிருநீரகமோ அல்லது கருவி வழி சுத்தகரிப்போ எள் முனையளவும் தேவையில்லை என்பது இம் மருத்துவத்தின் சிறப்புகள் எனலாம் .

இது எமது மேலோட்டமான இடுகையாகும்

சித்தமருத்துவத்தை நாடுவோம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator

மே 30, 2011

இடுப்புவலி காரணங்களும் தீர்வுகளும்.



இப்போது எல்லா அகவையிலும் இந்த இடுப்பு வலிக்கு ஆளாகின்றனர் . இது காரணமில்லாமல் இல்லை .நமது உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறைமை மாறி விட்டதன் காரணமன்றி வேறல்ல. இன்றைய உணவு முறை மேலைநாட்டு பண்பாட்டை அடியொற்றி வருவதாகும். இதனால் வரும் நோய்கள்தான் இந்த இடுப்புவலி முதல் ஈவாக (போனசாக ) வரும் சர்க்கரை நோய், மாரடைப்பு ,சாவு உட்பட எல்லா நோய்களும்.

உணவுமுறையே நோய்க்கு காரணம்

இன்றைய உணவுமுறை உண்ணுகிறவர்களுக்கு இரண்டு பங்கும் மருத்துவனுக்கு ஒருபங்கும் சேர்த்து உண்ணப்படுகிறது . முறையில்லாத உணவை உண்டுவிட்டு பின்னர் மருத்துவனிடம் சென்று அவர்களை வாழ வைக்கிறது அல்லவா ? கடந்த இருநூறு ,இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக நம்மவர்கள் கரும்பு சர்க்கரையை உண்ண பழகி விட்டார்கள் இந்த கரும்பு சர்க்கரை மனிதனின் எலும்புகளை கரைத்து சிறுநீர் முலம் வெளியேற்றும் என பல ஆய்வு முடிகள் தெரிவிக்கிறது .
இப்படி எலும்புகளை கரைத்து வெளியேற்றும் செயலை செய்து பின்னர் எலும்புகளை பலப்படுத்தும் எந்த பணியையும் நாம் செய்வதில்லை . சித்த மருத்துவம் பருண்மையாக தான் ஆய்வை மக்கள் முன் வைக்கிறது . வெள்ளை நச்சு (விஷம் ) என கரும்பு சர்க்கரை , உப்பு, மட்டை தீட்டப்பட்ட அரிசி போன்ற வற்றை குறிப்பிடுகிறது . இன்றைய நிலையில் இந்த மூன்றும் இல்லாமல் எந்த உணவும் இல்லை என்றாகிவிட்டது ஆக நோய்க்கு பஞ்சம் வருமா.?





எண்ணெய் குளியல் .

உடலையும் எலும்பு களையும் கண்ணே போல் காக்கும் வழிமுறைகளான எண்ணெய் குளியல் வேண்டாத செயலாகிவிட்டது . இதனால் எலும்புகள் பலமிழந்து கல கலத்து விடுக்கிறது . எலும்புகளை பலப்படுத்தும் உணவு முறைகளான கோசு, காராட்டு, முள்ளங்கி , காலிபிளவர் எடுப்பதில்லை அப்படி எடுத்தாலும் அவைகளை நன்கு வேகவைக்கப்பட்டு அவற்றில் உள்ள சத்துகளை நீக்கிவிட்டு உண்ணும் முறையை நம்மவர்கள் கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார்கள் . எலும்ம்பு பலப்படுமா? பலவீனமடையுமா? வெல்லம் உண்பதும் நம் நாட்டு தவச (தானிய உணவு ) உண்பதும் கேவலமாக என்னப்படுகியது . இந்த தவச (தானிய ) வகைகள் கம்பு, கேழ்வரகு , சோளம் போன்றவை எலும்புகளை பலப்படுத்த கூடியவைகள் . இவைகளை எடுக்கிறேன் என கூறுகிறவர்களும் முறையில்லாத வழியில் எடுக்கிறனர் அளவிற்கதிகமாக சர்க்கரை சேர்த்தால் அதன் பலன் முழுமையாக கிட்டுமா?

இடுப்புவலி தீர்வுகள்

ஆங்கில வைத்திய சிகாமணிகள் எலும்பு தேய்ந்து விட்டது அல்லது அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கர்ந்திருகிரீர்கள் , அல்லது வேகமாக வாகனம் (எல்லாவித வாகனங்கள் ) ஓட்டுகிறீர் கள் என இப்படி காரணங்களை அடுக்கி தங்களது அதி நுட்பமான கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் . இதை கேட்கும் படித்தவர்களும் பாமரார்களும் ஆ என வாயை பிளந்து கேட்பது நமக்கு நன்கு கேட்கிறது . என்ன செய்வது ? மனிதன் மரித்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மம்மியில் (பழங்கால இடுகைகள் ) எந்த சேதமும் இன்றி எலும்புகள் இருக்கிறது . அனால் இப்போது எலும்பு தேய்வு ஏன் ? நாம் சிந்தித்தோம் இல்லை . அதுவும் இல்லாமல் நீண்டநாட்கள் பயன்படுத்தியது கெடத்தானேசெய்யும் என்கிறார்கள் பயன் படுத்தியது கெடலாம் தவறில்லை இன்று பத்து பதினைந்து அகவை (வயது )குழந்தைகள் கூட இந்த இடுப்பு வலியினால் அவதிப்படுகிரார்களே அதற்க்கு என்ன சொல்லபோகிறீர்கள் என எவரும் கேட்பதில்லை ? குறிப்பாக எல்லா நோய்களுக்கும் இன்றைய முறையில்லாத உணவுகளே காரணமாகிறது ஆக முறையான உணவு முறைகளை எடுப்போம் . எலும்புகளை பலப்படுத்துவோம் .

எப்போது உட்கார்ந்தாலும் நேரே கூனல் விழாமல் உட்காருவோம்.
எண்ணெய் தேய்த்து குளிப்போம்
வாழைக்காய் ,கொத்தவரை ,வாழைபழம் போன்றவற்றை நீக்குவோம் .
எலும்புகளை பலடுத்தும
உணவுகளான கம்பு , எள்ளு, கேரட்டு , கோசு , முள்ளங்கி ,காலிபிளவர் போன்றவற்றையும்
வெல்லம் சேர்ந்த உணவு களையும் எடுப்போம்.
இடுப்பு வலி வந்த நிலையில் நாளும் வெந்தயம் நீரில் நினையவைது நீருடன் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின்னர்நீரை அருந்துவோம்
நோய் உள்ள நிலையில் பொடுதலை என்ற மூலிகை உணவாக எடுக்கவேண்டும் நல்ல பலனை தரும்.. மேற்கண்ட மூலிகையை வதக்கி கட்டலாம்.ஒத்தடம் கொடுக்கலாம்.
நோய் நீடித்த நிலையில் முறையான சித்த மருத்துவத்தை நடுவோம் நோய் முற்றாக குணமாகும் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.

பின்னர் விரிவாக இது குறித்து ஆய்வு செய்வோம் .

இந்த இடுகை நம்மை இந்த வலை பூவிற்கு அறிமுகபடுத்திய நண்பர் சுகுமார் கேட்டு கொண்டமைக்காக பதிவு செய்யப்படுகிறது .

அடுத்த எமது இடுகை டயாலிஸ்தேவையாMore than a Blog Aggregator

மே 23, 2011

நோயில் இருந்து விரைந்து குணமடைவது படித்தவர்களா.? பாமரர்களா?




இன்று நோய்கள் குறித்தான புரிதலை உண்டக்குவதைவிட நோயில் இருந்து தம்மை முழுமையாக விடுவித்து கொள்ள தூண்டுவது தேவையாக இருக்கிறது.இது நோய்கள் குறித்தான பிழையான /தவறான
முரண்பட்ட கற்பிதங்களைநீக்குவன்றி வேறல்ல . நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொண்டிருந்தால்தான் நோய்கள் நீங்கும் வழிமுறைகள் புரியும். நோய்வரும் காரணங்கள்.மனிதனுக்கு மனிதன் உண்மையில் மாறுபடும். ஒருவரின் உணவு மற்றவருக்கு நஞ்சாக / நோய்வர காரணமாகிறது.

நாடி மாறுபடும் மனித உடல்வகையும்

வளி ( வாதம்) அழல் (பித்தம் ) ஐ (கபம் )தொந்தம் என மனிதன் உடல்வகை ஒன்பது என முன் இடுகையில் கண்டோம். நாடி . நடைகளுக்கேற்ற வகையில் உடல் அமைப்பும் குளிர்ந்தும் ,வெப்பமடைந்தும் வேறுபட்டு கானலாகிறது . இது இயற்கையின் படைப்பு . உடல் வகைக்கு ஏற்ற உணவு எடுக்கவேண்டும் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . இது சித்த மருத்துவத்திற்கே உரிய தனித்த கோட்பாடு . அதாவது நமது பாரம்பரிய பண்பாட்டின்படி நமது உணவு கொள்கையை கடைபிடிக்க வேண்டும் பாரம்பரியத்தை
கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லுவதால் நாம் கவட்டியை (உள்ளாடை )நீக்கி நீர்சீலை அணிய வேண்டும் என வற்புறுத்த வில்லை அப்படி ஒருமாற்றம் வரின் தனிச்ச்சிறப்பே .

படிக்காதவர் என நோய் அறியுமா?

நோயாளி ஆவதற்கு நல்லவாய்ப்பு படித்தவர்களுக்கே விரைந்து கிடைக்கிறது . கண்டதையும் படிப்பதைபோலவே கண்டதையும் தின்று நோயில் விழுகின்றவர்கள் நன்கு படித்தவர்களே . பள்ளி படிப்பை படித்துவிட்டாலே பட்டனவழைக்கை தான் சிறந்தது என கண்மூடித்தனமாக நம்பி அலைகிறனர். பட்டணத்தில் பணம் கிடைக்கலாம் அனால் பண்பாடு? நம் பண்பாட்டிலான வாழ்கை?
பணம் குவியும் இடத்தில் பண்பாடு சீரழியும் என்பது உண்மையானது தானே? பண்பாடு என்பது வாழ்க்கைவழிமுறையில் இருந்து தோற்றம் கொள்ளு கிறதல்லவா? வாழ்கை முறையும் உணவு முறையும் பண்பாட்டை அடியொற்றியது தானே ?

நோய் யாரைதாக்குகிறது ஏன்?

ஊர் புறங்களில் இன்னும் முறையான இயற்கைசார்ந்த அறம்பிழறாத வாழ்க்கை கடைபிடிக்கபடுகிறது அல்லவா? இவர்கள் நோயில் இருந்தே விடுபடுகிறனர். பட்டன வாழ்க்கைமுறை
சுற்று சூழல் கேட்டில் இருந்து உணவுமுறை மாற்றம் இரசாயணம் கலந்த உணவுமுறை வாழ்க்கைமுறை மாற்றம்போன்றவை நோவை தழுவ வைக்கிறது . ஆக பட்டண (நகர ) வாழ்க்கைமுறை நோயாளி யாவதும் நோய்க்கு விரைந்து இரையாவதும் ஆன காரியங்களை தூண்டுகிறது .மனிதம் கெடுவது இன்றைய நாகரீக பட்டண வாழ்க்கைமுறை என்பதிலிருந்துதான் என விளங்குகிறது அல்லவா?

படித்தவர்களும்..... பாமரர்களும் .....




ஊர் புறங்களில் மனிதம் கெடுவதற்கான சூழல் குறைவு என்பது கண்கூடு .
அதுபோலவே நோய்கள் வருவதற்கான வாய்புகளும் குறைவே .எழுபது ,என்பது அகவை கடந்தவர்கள்கூடஎந்த மருந்து மாத்திரை இன்றி வாழ்வதனை காணும்போது மகிழத்தனே முடிகிறது . இவர்கள் ஒருமுறைகூட என்னுடம்பில் ஊசி குத்திகொண்டதே இல்லை என கூறுகின்றனர் . இதற்க்கு கரணம் இயற்கையுடன் இணைந்த வழ்க்கைமுறையன்றி வேறல்ல.

அனால் பட்டணத்து வாழ்க்கைமுறை எல்லாம் அங்கனம் இருக்கவில்லை. இரசாயணம் கலந்த உணவுகள், இரசாயணம் கலந்த பால், இரசாயணம் கலந்த, சுற்று சூழல் கேடுகள் நிறைந்தவாழ்கை முறை வளி மண்டலத்தையும் அல்லவே கெடுத்து விட்டோம் . இந்த வரிசையில் பட்டணத்து வாழ்க்கைமுறையை அடுக்கலாம்.படித்தவர்கள் எது உயர்வான நாகரீகம் எது உயர்ந்த வாழ்க்கைமுறை என எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவைகள்தான் மனிதத்தை நோயாளியாக்குகிறது . நண்பர் வீடுகளுக்கு அல்லது தெரிந்தவர் வீடுகளுக்கு சென்றால் நாம் தேநீர் அருந்துவதில்லை குளம்பி(காபி )அருந்துவதில்லை என்றால் நம்மை வேற்று கோள் (கிரக) வாசியை பார்ப்பது பல பார்கிறார்கள் என்பது வேறு செய்தி .

படிக்காதவர்களே விரைந்து குணமடைகிறார்கள்...

நம்மை பொறுத்தவரை நுனிப்புல் மேய்ந்து விட்டு நச்சு கருத்துகளை அள்ளி வீசி கொண்டிருப் பதில்லை எம்மையும் வருத்தி கொண்டுதான் இந்த குமுகத்திர்காக எதாவது செய்யவேண்டும் என கருதுகிறோம்
ஆகையால் தம் பட்டறிவால் முற்றுனர்ந்த தேர்ந்த சித்தமருத்துவர்களின் ஆக்கங்களை உள்வாங்கிதான் இயன்றவரையில் தருகிறோம். நம்மிடம் வரும் படிக்காதவர்கள் பெரும்பாலும் ஆங்கில முறை மருத்துவத்தை நாடி சென்று நோய் நீங்க இயலாமல் உள்ளநிளையில்தான் சித்தமருத்துவத்தை நாடி வருகின்றனர் .அவர்களின் உளவியலை நன்கு அறிந்து அவர்களிடம் கற்பிக்கப்படும் பொது அவர்கள் அப்படியே உள்வாங்கி கொண்டு சொன்னவற்றை அப்படியே கடைபிடிக்கிறார்கள் எனவே நோயில் இருந்து விரைந்து விடுபடுகின்றனர் . அவர்களுக்கென்று தனியான கருத்துகள் எல்லாம் ஒன்று இருக்கவில்லை கண்டதையெல்லாம் படித்துவிட்டு அவர்கள் ஒரு கருத்துகளை வைத்திருக்கவில்லை எனவே சொன்ன கருத்துகளை கடைபிடிக்கின்றனர் . அனால் படித்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு கருத்துகள் வழிநடத்துகிறது எனவே அவர்களின் கண்ணோட்டமெல்லாம் மேலை நட்டு மருத்துவத்தை அப்படியே கடைபிடிக்க எண்ணுகிறார்களே யன்றி சித்த மருத்துவத்தை நாடிவருவதை இழிவாக கருத்து கிறார்கள் .அவர்களின் கண்ணோட்டமெல்லாம் நுனிநாக்கு ஆங்கிலமும் முடை நாற்றமெடுக்கும் மேலை நகரீகமும்தான் .
ஆக அவர்கள் படித்தவர்கள் சித்தமருத்துவத்தை நடிவருவது மில்லை வந்தாலும் நோயில் இருந்து விடுபடுவதுமில்லை . சித்தமருத்துவம் என்பதில்லை மேலை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் நவீன பொறிகளை கண்டுவியந்து அவற்றில் முடங்கி கிடக்கிறார்கள் .

சித்த மருத்துவம் என்பது பழங் காலங்களில் அரச முத்துவமகவே இருந்து இருக்கிறது அந்த பாழாய் போன அரசர்கள்தான் பல்வேறு பெண்களை அந்த புறங்களில் வைத்து கொண்டு அவர்களின் பாலியல் தேவையை நிறைவேற்ற மருத்துவர்களை அவர்களுக்கவே தனியாக வைத்து கொண்டனர் .அவற்றுடன் நிலக்கிழரிய கருத்தியலை கொண்ட்ருந்த அவர்கள் சித்த மருத்துவத்தை அரண் மனையில் மட்டுமே வைத்து இருந்தனர் . மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மருத்துவர்களிடம் i தம்மை அற்பணித்து மருத்துவ உதவிகளை பெற்றுவந்தனர்.
இன்று உள்ள நிலையில் எல்லா இடங்களிலும் படித்தவர்களை காட்டிலும் படிக்காதவர்களே பழமையை காக்கின்றனர் போற்றுகின்றனர் வணகுகின்றனர் . நோயில் இருந்து விரைந்துவிடுபடுகின்றனார். படித்தவர்கள் பொருத் தருள் (நாம் உண்மையை கூற எங்கும் ,என்றும் தயங்குவதில்லை என்பதால் கூறிவிட்டோம் ) வார்காளாக.

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் ...

கனடாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

மே முதலாம் நாள் கடனவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தமிழ் உறுப்பினர்
தேர்வு செய்யப்பட்டு உள்ளார் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் யாழ் மவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் புதிய ஜன நாயக கட்சியின் வேட்பாளராக (scharborough Rovge River) ஷ்கர்புரோ ரூச்றிவர் தொகுதில் வெற்றி பெற்றிருக்கிறார் அவரை வாழ்த்தி மகிழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...