செப்டம்பர் 28, 2010

சித்தர்கள் ஒரு பார்வை

சித்தர்கள்   ஒரு  பார்வை
         காலத்தின்  சூழளிக்கு  ஏற்ப   அறிஞர்கள் தோற்றம்  கொள்ளுவது இயல்பே  அதுபோல தமிழகத்தில்  சித்தர்களின்  தோற்றம்  நம்மை  உயர்ந்த  நிலைக்கு  இட்டுச்சென்றது  எனலாம் .சித்தர்களின்  காலங்களில் அவர்களுக்கு  அரசோ  மக்களோ  எந்த  உதவியும் செய்ய  வில்லைஎனலாம் . சித்தர்களே  கடுமையான  அர்ப்பணிப்போடு  மருத்துவத்தையும் மொழியையும் , பொன்னேபோல்  காத்தனர் . உலகம் முழுவதும்  சித்தர்கள் தோன்றினாலும் , தமிழகத்து  சித்தர்கள்  தான்  நம் சித்த  மருத்துவத்தை  கண்டனர் .
     பல்லாயிர  கணக்கில்  சித்தர்கள்  இருந்தாலும்  பதினெட்டு  சித்தர் களையே  முதன்மை சித்தர்களாக இனம்கண்டு , முதன்மை  படுத்தினர் .
பதினெட்டு  சித்தர்கள் .
1 . திருமூலர்               2 .போகர்           3 .அகத்தியர்            4 .காலாங்கனி  
5 .அழுகண்ணார்         6 .கொங்கணர்  7 .கருவூரர்               8 .புலிப்பாணி
9 .சட்டைநாதர்            10 .மச்சமுனி    11 .கமலமுனி         12 .நந்தி
13 இடைக்காடர்          14 .புலத்தியர்     15.பாம்பாட்டி           16 .கோரக்கர்
17 புண்ணாக்கீசர்         18 .இராமதேவர்  
  என்பவர்கள்    தான்  அவர்கள் .சித்தர்கள்  எல்லோருமே  தனக்கென  வாழாமல்  மக்களுக்காகவே  வாழ்ந்து  வந்தனர்
.
       பொன்வள்ளி  செய்கின்றவன்  பெரியோன்  அல்ல ,
       புகழான  அட்ட  சித்தி  பெரியோன்  அல்ல
       முன்னின்ற  வைத்தியனும்  பெரியோன்  அல்ல
       மூச்சடக்கி     எழும்பினவன்  பெரியோன்  அல்ல
       சின்னமுள்ள  குழி இருப்பான்  பெரியோன்  அல்ல
       திறமுடனே கேவனமிட்டோன்  பெரியோன்  அல்ல
       தன் நிலையை  அறிந்தவனே  பெரியோனாவான்
        தனையறியான்  வகைகெட்ட  சண்டி  மாடே .
            என்கிறார்கள் சிதர்கள் . தேர்ந்த வாதி  கணப்போதில்  பொன்  வெள்ளி  செய்வான்  வாத  வித்தைகள்    தெரிந்தால் பெரியோன்  ஆகிவிடமாட்டான் .தேர்ந்த  வைத்தியராகஇருந்தால்  பெரியவன்  ஆகிவிடுவதில்லை .மூச்சடக்கி  ஆகாயத்தில்  எழும்பி  நிற்கும்  அடயோகியும்  பெரியவனாகி  விடமாட்டன் .சமாதியில் இறங்கிப்  பத்தாண்டுகள்  இருபது  ஆண்டுகள்  கழித்து  வந்தாலும் . விண்ணில்   நடந்தாலும்  பெரியவன்  ஆகிவிடுவதில்லை . தன் யார்  என்பதை  அறிந்தவனே , உணர்ந்தவனே பெரியவன்  ஆகிறான்  என்பது  சித்தர்கள்  கோட்பாடு     .
              நல்லொழுக்கத்தை  பாடும்போது...
       கோபம்  பொறமை கொடுஞ்சொல்  வன் கோள் இவை
      பாபத்துக்  கேதுவடி - குதம்பாய்
      பாபத்துக்  கேதுவடி
.
       கள்ளங்கள்  கபடங்கள்  கொலைகள்  கபடங்கள்
      பள்ளத்தில்   தள்ளுமடி  குதம்பாய்
     பள்ளத்தில்  தள்ளுமடி.

     பொருளாசை  உள்ள்விப்  புவியிளுல்லோற்கு
   இருளாம்  நரகமடி - குதம்பாய்
இருளாம்  நரகமடி .   எனபாடுகின்றனர்                           

அறிவு  பெரும்  வழியை  ஒரு சித்தர்  விளையாட்டாக  சொல்ல  அவரை  விளையாட்டு   சித்தர் என்று  அழைத்தனர் .


செத்தோர்க்  கழுவதுவும்  விளையாட்டே  சுடலை
சேரும்வரை  யழுவதும் விளையாட்டே
மெத்த அறிவை  பேசுவதும்  விளையாட்டே  -குளித்து
வீடு  வந்து  மறப்பதும்  விளையாட்டே
நம்பினோருக்கு  ஆசை  சொல்லல்  விளையாட்டே -பின்பு
நட்டாற்றில்  கைவிடுதல்  விளையாட்டே
கும்பிகிறை தேடுதல்  விளையாட்டே - கடன்


சாதிகளை   பற்றி

ஆண்சாதி  பெண்சாதி  யாரும்  இருசாதி
வீண்சாதி மற்றவெல்லாம் - குதம்பாய்
வீண்சாதி  மற்றவெல்லாம் .
பார்பனர்கள்  மேல் என்றும் பறையர்கள்  கிழஎன்றும்
தீர்ப்பாக  சொல்வதென்ன - குதம்பாய்
தீர்ப்பாக  சொல்வதென்ன .
நீதி  மனேன்றே நெறியா இருப்போனே
சாதிமானா  வனடி -குதம்பாய்
சதிமானா   வனடி.
சதியோன்றில்லை  சமயமொன்றில்லை  யென்
றோதி  உணர்ந்தறிவாய்  -குதம்பாய்
றோதி  உணர்ந்தறிவாய் .
செங்கோல் செலுத்திய  செல்வமமும்  ஓர்  கலாம்           
தங்கா  தழியுமடி -குதம்பாய்
தங்கா  தழியுமடி .
                     எந்த  சமுகம்  மக்களை  ஏற்றதழ்வோடு  பார்க்க  வைக்கிறதோ  அந்த  சமுகத்தை  சாடுகின்றனர் . இவர்கள் சமுக  மாற்றத்திற்கான  பணியை  திறம்பட  செய்து  முடித்தனர் .
  எளிமையான  சொல்லாடல்கள் , எளிமையான  சந்தங்கள் , மக்களிடத்தே  வாழ்ந்து   படைக்கப்பட்ட  மாபெரும்  மறுமலர்ச்சி  பாடல்கள்  இவைகள் .
                  சித்தர்கள்  பற்றி  வரும் கட்டுக்  கதைகளையும் அறிவியலுக்கு  அப்பார்பட்ட
செய்தி  களையும்  நீக்கிவிட்டு  பார்த்தால் தனியான  சித்தர்  களின் மருத்துவரீதியான  பங்களிப்பு  என்பது  நம்மை  வியக்கவைக்கிறது . போகர்  என்ற சித்தர் அவரின்  மருத்துவப்பணி இரசாயன  மருந்துகள்  செய்   முறைகளையும் இன்றைய  உலகினர்  செய்த  ஆய்வுகளை  விட  அதிகமாக  செய்துள்ளார் .                        
         போகர்  7000  என்ற பெருநூல்  அந்த  மருத்துவ  நூலை  செய்ய  அவரால்  எங்ஙனம் முடிந்தது .  அந்  நூலில்  கண்டுள்ள  மருத்துவ  முறைகள் இந்த  உலகில்  உள்ள  அனைவரையும்  நோயில்  இருந்து  வென்று  விடுவிக்குமே .
    வேதியல் துறையில்  உலகம் முழுவதும்  செய்த  ஆய்வுகளைவிட  தனிப்பட்ட  போகரின்  ஆய்வு  மேன்மையானது. மனித  உடலையும் , இயற்க்கை  மூலங்களையும்   வேர் , தண்டு , பட்டை,  மூலிகை , பூ , கனி , காய் , ஆகியவற்றை நுணுகி நுணுகி  ஆய்ந்து  மூலிகை  களில்  உள்ள மருத்துவக்  குணங்களை  எந்த  நுண்ணிய  ஆய்வுக்கருவி  களும்   இல்லாமல்  எப்படி  கணிக்க முடிந்தது ?   ஆய்வுக்குரியதுதனே ?  உயரிய  மருத்துவத்தை  மீட்டெடுப்போம் . நோய் வென்று  நீடு  வாழ்வோம் .





                                                More than a Blog Aggregator

செப்டம்பர் 27, 2010

இன்றே செய்வோம்

இன்றே  செய்வோம்
வாழ்வை வளம் செய்வோம்  
நோய்க்கு  விடைகொடுப்போம் 
இலக்கை அடைந்திடுவோம் 
இன்பமே வாழ்ந்திடுவோம் . 

நோய்க்கு   காரணமாம்...
முறையற்ற  உணவுகளும் ..
தூய்மை  இலா உயிர்வளியும் .
மசான குடிநீரும் ..

பரபரப்பும்  ஆத்திரமும் ...
நோய்களை  கூட்டு  திங்கே

நீரை  உண் ...
உணவைக்குடி   நம்மவர்
கண்ட  கோட்பாடு


வெண்மை  நிற  நஞ்சாமே...
உப்பும்  சர்க்கரையும் ..
மட்டை  தீட்டிய  அரிசியும் .


சின்னத்திரை  சீரழிவும் ..
பெரியதிரை  பேரழிவும்
முட்டாளாய்  ஆக்குதிங்கே...

மயக்கம் தரும் ...
குடியும்  புகையும் ...
நமக்கெதற்கு ?

இன்றே  தொடங்கிடுவோம் ..
ஏற்றம்  தரும் 
நாம்  மருத்துவத்தை ..
சித்தமருத்துவத்தை ...
வீட்டில்  புகுத்திடுவோம் ..
 

More than a Blog Aggregator

செப்டம்பர் 25, 2010

கொசுவிரட்டி ஒரு எச்சரிக்கை

                         இப்போது  எல்லாம்  கொசுவை  விரட்டுவதற்கு  என்றே  பலநிறுவனங்கள்  பலவகையில்   கொசுவர்த்திகளை  உற்பத்தி  செய்கிறது . இவைகள்  உடல்நலனிற்கு  கேடானது  என்பது  பலருக்கு  தெரிவதில்லை  இதனால்  பலநோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது . கொசுவர்த்திகளிலும் , மேட் களிலும் பலவகையில்  விற்ப்பனைக்கு வருகிறது . இவற்றில் எல்லாம் இரசாயனங்கள்  கலக்கப்பட்டே உற்பத்தி  செய்யப்படுகிறது .இந்த  இரசாயனங்களின்  அடர்த்தி  இக்காற்றை  நாம் சுவாசிக்கும்  போது    பலவிதமான  மூச்சு  சம்மந்தமான  நோய்கள்  தோற்றம்  கொள்ளுகிறது
      
   ந்த  சுழலில்  நாம்  அறையில்  வைக்கப்படும்  கொசுவர்த்திகள்  மூச்சு குழலை .  பாதிக்கிறது. மூச்சுக்காற்றின்  வழியாக  நச்சு  உள்சென்று  நுரையீரல் , இதயம்  போன்ற  இடங்களில்  பாதிப்புகளை உண்டாக்குகிறது . தேவைன்றி  உள் செல்லும்  இந்த நச்சு காற்று   நீர்க்கோவை , சளி , காய்சல் போன்றவை  ஏறப்படுகிறது .சிலருக்கு  மூக்குநாள அழற்சி  தோன்றுகிறது . இதனால்  சிலருக்கு  ஒவ்வாமை  ஏற்பட்டு விடுகிறது. அத்துடன் பல பாதிப்புகளை உடல் ஏற்கிறது
   
     கொசுவை விரட்டுவதற்காக தொடர்ந்து ஒருவர் கொசுவர்த்தி சுருள், மேட்  ஆகியவற்றை பயன்படுத்தி வந்தால் நுரையீரலில் ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டு நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும் அதன் கொள்ளளவு உரிய காற்றை எடுத்து  கொள்ள இயலாமல் போய் விட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. கொசுவர்த்திகளினால் வரும் காற்றை பிறந்த குழந்தைகள் சுவாசித்தால் வலிப்பு நோய் ஏற்படுவதாக லக்னோ பல்கலை கழக ஆய்வு எச்சரிக்கறது. மும்பையில் நடத்தப்பட்ட ஆய்வில் கொசு விரட்டிகளை ஓட்ட பயன்படுத்தப்படும் ரசாயனம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கொசு விரட்டியில்லுள்ள ட்யேக்சின் புற்றுநோயை உண்டாக்ககூடியது. அலேத்ரின் மனிதர்களின் உடல் எடையை மெல்லமெல்ல குறைக்கும் தன்மை உடையது என்கிறார்கள்.

    வற்றிலிருந்து தப்பிப்பது இயற்கையான ரசாயன கல்லப்பில்லாத மூலிகைகளை கொண்டு செய்யப்பட்டதான கொசுவர்திகளை பயன்படுத்துவதும் கொசுவலைகளை பயன்படுத்துவதும்   தீர்வாக அமையும்.          More than a Blog Aggregator

செப்டம்பர் 23, 2010

உளவியலும் நோயும்

உளவியலும் ...
காரணமாம் .... நோய்களை ..
கூவி  அழைத்திடவே .


எரிச்சல்  தொடர்ந்திடவே ...
எரிந்தது  விடும்
அடிவயிறும் ...
வாயில்  நீரூறும்
இரைபையும்  குடல்கலுமே
புண்ணே  தோற்றம்
கொள்ளும் .

கண்கள்  சிவந்திடவே ...
பரபரப்பு  கொண்டால்தான் ...
இதயம்  பழுதடையும்
எகிறிவிடும்  குருதியழுத்தம்
இதயம்  கேடுவாணேன்...
சினத்தை  விட்டூழிப்போம் .

அச்சம்  தொடர்ந்திடத்தான்...
மூத்திர  காய்களும்
பழுதடையும் ...
அச்சம்  அழித்திட்டால்...
வாழ்வும்  நமதாகும் .

பிணிக்கு  காரணமாம் ...
உளவியலே  என்பதனை ...
கண்டவர்  சித்தர்கள்தான் .

திருமுலரும்...
வள்ளுவரும்  சொல்லாத ...
உளவியலா ?
அறிவியல்  புதுமைகளை
அடுக்கி  காட்டியதை
ஏன்மறந்தீர் ?
பெருமை  பேசவில்லை ...
உரிமை  கொள்ளாமல்
விலங்காய் வாழ்வதுவும்  ஏன் ?
தமிழனே  இப்படித்தான்
விழுந்தது  கிடப்பானோ ?
அடிமை போதுமடா?
விழித்து எழுவதெப்போ ?

எம்மின  மக்களெல்லாம்
அழுவது  கேட்கலையோ ?
சாவது  ஒருநாள்தான்
வரலாற்றில்  நின்றுவிட
வழிஏதும்  கிடைக்கலையோ ?

கண்களை  அழித்துக்கொண்டு ...
கைத்தடியினை  தேடுவதேன் ?
மண்டியிட்டு  வாழ்வதைவிட ...
சாவது  நலனன்றோ ?
சுவற்றை  அழித்துவிட்டு
ஓவியம்  தீட்டலமோ ?

நாம் ...
முன்னவர்  கண்டதை
விட்டுவிட்டு
புரட்டுகின்றீர்....
மருட்டுகின்ற
மருத்துவத்தை ...

தமிழர்  செழித்திடதன் ..
உலகும்  செழித்து நிற்கும் .
உலகோர்  நோய்
நீங்கிடத்தான்
ஏற்றம்பெற  மருத்துவத்தை ...
மாற்றம் இன்றி  ஏற்றுக்கொள் ..
உணர்வு  கொண்டிங்கே
தமிழம்  எங்கும்
வாழட்டும்
நோய்வென்று
நீடுவழ்வோம் .....More than a Blog Aggregator

செப்டம்பர் 20, 2010

வாழையின் மருத்துவ குணங்கள்

நம்மில்  பலராலும்  விரும்பி  உண்ணப்படும்  வாழையின்  பொருட்கள் எல்லாமே  மருத்துவ  குணம்  நிறைந்து  உள்ளது  என்பதை  நாம் அறிவோமா ?  வாழை பொருட்களான  பிஞ்சு , காய் , தண்டு ,இலை  , பட்டை, என  அனைத்து  பொருள்களுமே  மருத்துவ  குணம் நிறைந்தவை .  வாழையின்  அனைத்து  பொருட்  களிலும்  நோய்  நீக்கும்  தன்மை  உள்ளன .
வாழைப்பழம்   
     பொதுவாக  எந்தப்  பழங்களையும்  உணவுக்கு  முன்தான்  உண்ணவேண்டும் 
அப்படி எடுத்துக்  கொண்டால்தான்  அதில் உள்ள  முழுமையான  சத்துகள்  நமக்கு  கிடைக்கும் ..  மேலும்  வாழைப்பழம்  உடல்  சூட்டை தணிக்கும் .  மலசிக்கலை தீர்க்கும் .
குருதியை  உண்டாக்கும்  ஆற்றலும்  உண்டு . இது உடலை  வளர்க்கும்  தன்மையும்  உண்டு . இதில்    " எ " சத்து  நிறைந்து  உள்ளதை  நாம்  அறிவோம் .   இதனால்  பல், கண் ,
போன்ற  உறுப்புகளுக்கு  சக்தியை  தரும் . நேந்திரம்  பழம்  நல்ல  பசியுண்டக்கி  என்பதால்  பசி  குறைந்தவர்கள்  நாளும்  மேற்கண்ட்ட  பழத்தை   உண்டுவர  நல்ல பலனை  காணலாம் . வாழை  பழத்தை   பொறுத்தவரை  கோழையை  உண்டாக்கும்
என்பதால்  கோழை  நிறைந்தவர்கள்  உண்பதை  குறைக்கலாம் .
   
வாழை  பழத்தில்  அடங்கிய  சத்துகள் .
ஈரம்  61 .4 % ,  புரதம்  1 .3 % கொழுப்பு  0 .2 % தாது   0 .7 % சர்க்கரை  பொருட்கள்  36 .4 %
சுண்ணாம்பு 0 . 01 % என  கண்டறியப்பட்டுள்ளது .    
வாழைப்பூ   
    பழத்தை  போலவே  பூவிலும்     மருத்துவ குணங்கள்  நிறைந்துள்ளது .  வெப்பம்
நீங்கும் , காசம், கைகள் எரிச்சல்  மூலநோய் , நீரிழிவு , வயிட்ற்று  கடுப்பு ,  வெட்டைநோய் ,  போன்றவைகள்  நீங்கும் , ஆண்மை பெருகும்  .சீதக்  கழிச்சல்  காலங்களில்  பிட்டை  போல்  அவித்து  சாரை கறிவேப்பிலை  சேர்த்து  எருமை  தயிரில்
கொடுக்க  நல்ல பலனை  காணலாம் .
      பெண்களுக்கு  வாழைப்பூ மிகவும்  நல்லது  பெரும்பாடு காலங்களில்  அதிகமாக  பயன் படுத்த    நல்ல பலனை காணலாம் .

வாழைப்பிஞ்சு 
         துவர்ப்பு  சுவை  உடைய  வாழை  பிஞ்சு  வயிற்று  புண்ணை  நீக்கும் .குருதி கடுப்பு
உள்ள மூல நோய்   நீரிழிவு   போன்றவை    குணமாகும் .
 வாழைக்காய் .
      நீரிழிவு  உள்ளவர்கள்  அதிகம்  சேர்க்கலாம் . நோய் கட்டுப்படும்  வாயு  தொந்தரவு 
உள்ளவர்கள்  குறைத்து  உண்ணலாம் . பூப்பெய்திய  பெண்கள்  வாழை  காய் தோல்  நீக்கி  உண்ண  குருதி பெருக்கு கட்டுப்படும் .
 
வாழைஇலை 

               வாழைஇலையில்  உண்பதை  அனைவரும்  விரும்புவர்   இதனால்  மென்மை உணர்வுகள்  மிகும்  உடல் சூட்டை  தனிக்கும்  . கோப குணம் கொண்டவர்கள்  தொடர்ந்து   இலையில்  உண்ண  கோபம் குறையும் . தீசுட்ட  புண்ணில்  இலையை   வதக்கி  கட்டலாம்  வாழை  இலையில்  படுக்கவைக்கலம் .


வாழைத்தண்டு
       உடலில்  உள்ள கொழுப்பை  குறைக்க  நினைப்பவர்கள்  வாழைத்தண்டை  ஒன்று  விட்டு ஒருநாள்  உண்ண  நல்லபலனை  காணலாம் . நீரடைப்பு , நீர்  எரிச்சல்  சிறுநீரககள்
போன்றவை  நீங்கும் .     ஆக  எளிதில்  கிடைக்கும்  வாழையை  பயன்படுத்தி  நோய்  வெல்வோம் . சித்தமருத்துவம்  காப்போம் .More than a Blog Aggregator

செப்டம்பர் 16, 2010

இயற்கையை வணங்குவோம் .

 இயற்கை  வளத்தை 
  போற்றிடுவோம் .
  உலகில்  இன்பம் 
  கண்டிடுவோம் . 
  காற்றில்  கலக்கும் 
  மாசினை  தான்
  கலந்தது  விடாமல் 
 காத்திடுவோம் . 
 விரும்பிய  மரங்கள் 
 வளர்த்திடுவோம் 
 வேண்டிய  மழையினை 
 பெற்றிடுவோம் 
 அணுவின்  அழிவை 
 தடுத்திடவே  
 இயற்கை  வளத்தை
 காத்திடுவோம் ....
 இன்பம்  நிறைந்த  
 வழ்விதுவே 
 இயற்கை  சார்ந்து 
 வாழ்வதுதான் .
 உயிரை  போற்றி 
 வளர்ப்பது  போல் 
 இயற்கை  வளங்களை 
 வளர்த்திடுவோம் .




   More than a Blog Aggregator

.நோவை ஓட்டுவோம்.

சித்தர்கள்   - நம் முன்னவர்கள் 
காட்டிய வழிதன்னில்  
சென்றிடவே  -தீதில்லை .....
ஈட்டிய  பெருஞ்செல்வம்  
அழித்திட   தேவையில்லை 
காட்டிய வழிதன்னில் 
கடுமையில்லை --அனால் 
கட்டுப்   பாடுண்டு .
வைகறை  துயில் எழுந்து ...
ஈற்று  உணவை (கழிவுகள் )
நீக்கிக்  கொண்டு 
தூய  நீர்பருகி 
எரியோம்பல் (ஆசனபயிற்சி )
செய்திடவே  உடல் 
அனைத்தும்  உறுதிபெறும் .
வளியை(காற்றை) நெறிப்படுத்தி
உள்  வாங்கி கொண்டல்தான் ...
உளவாட்றல்  உயர்வடையும் 
உள்ளத்தை  செழுமையாக்கி ...
ஓரம்ச  சிந்தையாலே(தியானம் )
நாளைத்தான்    செலவிட்டால் ...
அந்  ந்ளெல்லாம்  இனியநாள்.
கம்போ  , கேழ்வரகோ ,சோளமோ
கைகுத்தல்  அரிசியோ ...
பக்குவமாய்  உணவாக்கி 
கீரை ,காய்கள் , தூய்மை 
செய்த  பருப்புகள்  பழம்சேர்த்து 
இளியம்(இரசாயணம் )
நீக்கி  -மண்ணில்  
ஏனம்(பாத்திரம்) செய்தது 
மகிழ்வோடு  உண்டிடவே ...
நோய்  இன்றி  வாழ்ந்திடலாம் .
இடை  உணவாய் 
பழசாறும்  பாகுநீரும் (பானகமும் ) 
பருகிடலாம்        .
வாரத்திற்க் இருநாள்தான் வெந்நீரில் 
எள்  நெய்குளியல் ...
ஆண்டிற்க்   கிருநாள்தான் ....
கழிச்சல் செய்துகொள்க 
திங்களிர்க்  கிருநாள்தான் ...
இல்லற   உறவு ...
நூறாண்டு   வாழ்ந்திடவே ...
நல்லநெறி  இதுவாமே.




More than a Blog Aggregator

செப்டம்பர் 13, 2010

கீரைகள் மருத்துவம் .

@ புளிசக்  கீரை , முளைக்கீரை , இரண்டையும்  சேர்த்து  சாப்பிட்டால்  நன்கு  பசி  உண்டாகும். .
@ மணத்தக்காளி  கீரை , பருப்புக்  கீரை  இரண்டையும்  சேர்த்து  உண்ண வயிற்றுபுண்
குணமாகும் .
@ முளைகீரை , வெந்தயக்கீரை , மனத்தக்களிகீரை , சேர்த்து  சிறு பருப்புடன்  உண்ண  நோய்  எதிர்பற்றல்  உண்டாகி   நோய் விலகும் .
@ கறிவேப்பிலை, புதினா , கொத்தமல்லி  சேர்த்து கீரைத்தண்டையும்  சேர்த்து சமைத்து  உண்ண  மூட்டு  வலிகள்  வாதநோய்கள்  நீங்கும்  நோய்  எதிர்பு  ஆற்றல் கூடும் .
@ முளை  கீரையுடன் ,வல்லாரை  கீரை  சேர்த்து   பருப்புடன்  உண்ண  நினைவாற்றல்  கூடும் .
@ நச்சு கொட்டை கீரையை  பருப்பு சேர்த்து   உண்ண  வாயிற்று  புண்  ஆறும் .
@ மூஞ்சியில்  உள்ள   பரு  பாலுண்ணி  மறைய   அம்மன்  பச்சரிசி செடியை  ஒடித்தால்
வரும்  பலை தடவ   நல்லகுணம்  கிடைக்கும் .
@ துத்திக் கீரையை  மஞ்சள்  சேர்த்து  விளக்கெண்ணையில்  வதக்கி  கட்டினால்  மூல  நோயில்  உண்டாகும்  வலிகள் நீங்கும் .
@ நல்ல  வேலை  கீரையுடன் (கைப்பிடி ) மூன்று  மிளகு மஞ்சள்  சேர்த்து  காலையில் உண்ண vayidru   பூசிகள்  ,புழு , நாக்குப்புசிகள்   நீங்கும் .
@ காணாம்  வாழையை   கைப்பிடி  அளவு  அரைத்து  சாப்பிட  உடல்  சூடு  குறையும் .
@ காணாம்  வாழையை   அரைத்து  சாப்பிட்டால் சிறுநீர் எரிசல்  தீரும் .
@ காணாம்  வாழையுடன் துத்தியை  அரைத்து  சாப்பிட  மலசிக்கல்  தீரும் .
@ குப்பை கீரையை  தொடர்ந்து  சாப்பிட  உடல்  எடை குறையும் .
@ முடக்கத்தான்  கீரையுடன்  சிறிது  சதக்குப்பை  சேர்த்து  கசயமக்கி  சாப்பிட சிறுநீர்  தாரளமாக  பிரியும் .
@ லெட்டுஸ்   கீரையை  தொடர்ந்து சாப்பிட   குருதி  துய்மை  அடையும் .
@ கொடி பசலை  கீரையையும்   கொத்தமல்லி விதை, சீரகம்  இவற்றை கசயமக்கி   சாப்பிட   மலசிக்கல்  குணமாகும் .
@ காசினி   கீரையுடன் சீரகம் ,மஞ்சள்  சேர்த்து  கசயமக்கி   சாப்பிட  கல்லீரல்  வீக்கம்  குணமாகும் .
@ தூது  வலை  கீரையை  சூரணித்து  நாளும்  உண்டுவர  காது  தொடர்பான பிணிகள் , தடுமன்  நீங்கும்.                 More than a Blog Aggregator

செப்டம்பர் 12, 2010

காதில்  சீழ்வடிதல் .

நல்லவேளை  இளைசற்றினை  ஒருதுளி  கதில்விட்டுவர   குணமாகும் .

அறிவு  கூர்மை  அடைய .
          வல்லரை  இலையை  உலர்த்தி  பொடியாக்கி  நெய்யில்  கலந்து  அருந்தலாம் .
கொரைக்கிழங்கை  தூளாக்கி  தேனில்  அருந்திவர  அறிவுகூர்மை  அடையும் .  உடல்  அழகு  கூடும் . பசி  உண்டாகும் .
விதை வீக்கம்  குணமாக .
           மாவிலங்கம்  பட்டை 150 கிராம்  முகிரட்டை  வேர்  75 கிராம்  சிதைத்து  இரண்டு  லிட்டர்  தண்ணீரில்  காய்சி அரை  லிட்டராக்கி  சிறிது  சர்க்கரை  சேர்த்து  நாளும்  மூன்று
வேலை  அருந்திவர   குணமாகும் .
கண்  பார்வை தெளிவடைய .
ஒரு பிடி பொன்னாங்கண்ணி  இலையை  ஒருபிடி  தெனமும்  மென்று  தின்னலாம் .கேரட்  பச்சையாக மென்று தின்று  பால் அருந்தலாம் . தினமும் சிறுகீரை , முருங்கைகீரை , உணவில்  சேர்த்து  உண்ணலாம் . திரிபலா  சேர்ந்த  எண்ணையை
தலைக்கு  தேய்த்து  குளிக்கலாம்  கண்பார்வை  தெளிவடையும் .
தலை வலி  நீங்க.
கிழநெல்லி  சாரு ,உத்தாமணி  இளைசாரு ,குப்பைமேனி இலை சாரு  சமஅளவு  எடுத்து
அதேஅளவு  எள்  எண்ணெய் சேர்த்தது  காய்ச்சி  மூக்கில்  இரண்டுதுளி விட்டுவர  பீனிசம் (சைனசு ),ஓயாத  தலைவலி  நீங்கும் .More than a Blog Aggregator

செப்டம்பர் 09, 2010

.சித்தர்கள் கண்டட நோய்களின் பட்டியல் .

வாதம்(வளிநோய்)               84 .
பித்தம்  (அழல்நோய் )          48
கபம்  (ஐ நோய் )                     96
தனுர்வாயு                             300
சயம்                                            7
சூலை                                      200
பாண்டு                                      10    
கண்நோய்                               96
சிலந்தி                                     60
குண்மம்                                  08
சன்னி                                       76
கழலை                                     95
சுரம்                                          85
மகோதரம்                                07
தலைவீக்கம்                            05
உடல்வீக்கம்                             16
பிளவை                                     10
படுவன்                                     11
குமிழி                                         07
பீலிகம்                                       08
வசியம்                                     05
கரப்பான்                                   90
கெண்டை                                 10
நீர்நோய்                                    05   
விசநோய்                                  16
காதுநோய்                                 10        
விக்கல்                                       10
அரோசகம்                                  05
மூக்குநோய்                              10
கடிதோடம்                               500
காயம்குத்து  வெட்டு             700
கிரந்தி                                          48
பொறிவிடம்                            800
நீர்க்கோவை                            200
துடிநோய்                                  100
பிள்ளைநோய்                          100
காமாலை                                  012
ஆகமொத்தம்                          4448

நோய்வென்று  நீடு  வாழ்வோம் .More than a Blog Aggregator

செப்டம்பர் 08, 2010

More than a Blog Aggregator

செப்டம்பர் 07, 2010

More than a Blog Aggregator

செப்டம்பர் 04, 2010

இதோ நம் வாழ்க்கை


அன்னையாய்.....
தோழியாய்- எம்
உயிர்வளியை தந்தவளே ...
இயற்கையாய் விரிந்து ...
உயிர்களை காப்பாற்றி ...
உணவையும் வழங்கி ...
எம் உயிரையும் நீட்டி ...
சூழலை காப்பாற்றி
இந்த நிலப்பந்தில்
வாழ வைப்பவளே ..

உன் வளர்ச்சிக்கு
நாங்கள் ஏதும் செய்யவில்லை ...
எங்களை வளர்த்திடவே
நீ வாழுகிறாய் ...
நாங்களோ உன்னை
அழித்திடவே செய்கின்றோம் ..


அத்தனையும் ...

உணர்வின்றி போகின்றோம் ...
உன்னில் பற்றின்றி
அழிக்கின்றோம் .

ஒசோனும் ஓட்டையாகி
வெம்மையை தான்
துப்புதிங்கே...
பணிப்படலம் கரைந்துபோய்
கடல் மட்டம் உயர்ந்து
நிலமெல்லாம் நீராகும்
நாம்தான் வாழ்வதெங்கே ?
இன்னும் நாங்கள்
உணர்ந்திடவே இல்லை ...

காடெல்லாம் அழிந்ததலே...
மழை வளமும்
குறைவாச்சு
மண்வளமும் பாழாச்சு..
அப்போதும் உணரவில்லை ...
என் கண்ணீரும் காயவில்லை ...

கண்ணீரின் பாய்சலாலே ...
கடல் நீரும் உப்பாச்சு ...

நிலத்தடி நீரின் ...
குறைவால்தான் ..கடல்நீர்
நிலத்தில் வந்து...
சிங்களன் போல்
குடிபெயர்ந்து
வாழ்வெல்லாம் பாழாச்சு ..

இதயமெல்லாம் வெடிக்குதிங்கே...
உணர்வோடு வாழ்ந்திடுவோம்
நன்மை எல்லாம் அடைந்திடுவோம் ...
உணர்வோடு வாழ்ந்திடவே
நம்கையில் நாளைவரும் .
நோய் களெல்லாம் அழிந்துபோகும் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...