செப்டம்பர் 16, 2010

.நோவை ஓட்டுவோம்.

சித்தர்கள்   - நம் முன்னவர்கள் 
காட்டிய வழிதன்னில்  
சென்றிடவே  -தீதில்லை .....
ஈட்டிய  பெருஞ்செல்வம்  
அழித்திட   தேவையில்லை 
காட்டிய வழிதன்னில் 
கடுமையில்லை --அனால் 
கட்டுப்   பாடுண்டு .
வைகறை  துயில் எழுந்து ...
ஈற்று  உணவை (கழிவுகள் )
நீக்கிக்  கொண்டு 
தூய  நீர்பருகி 
எரியோம்பல் (ஆசனபயிற்சி )
செய்திடவே  உடல் 
அனைத்தும்  உறுதிபெறும் .
வளியை(காற்றை) நெறிப்படுத்தி
உள்  வாங்கி கொண்டல்தான் ...
உளவாட்றல்  உயர்வடையும் 
உள்ளத்தை  செழுமையாக்கி ...
ஓரம்ச  சிந்தையாலே(தியானம் )
நாளைத்தான்    செலவிட்டால் ...
அந்  ந்ளெல்லாம்  இனியநாள்.
கம்போ  , கேழ்வரகோ ,சோளமோ
கைகுத்தல்  அரிசியோ ...
பக்குவமாய்  உணவாக்கி 
கீரை ,காய்கள் , தூய்மை 
செய்த  பருப்புகள்  பழம்சேர்த்து 
இளியம்(இரசாயணம் )
நீக்கி  -மண்ணில்  
ஏனம்(பாத்திரம்) செய்தது 
மகிழ்வோடு  உண்டிடவே ...
நோய்  இன்றி  வாழ்ந்திடலாம் .
இடை  உணவாய் 
பழசாறும்  பாகுநீரும் (பானகமும் ) 
பருகிடலாம்        .
வாரத்திற்க் இருநாள்தான் வெந்நீரில் 
எள்  நெய்குளியல் ...
ஆண்டிற்க்   கிருநாள்தான் ....
கழிச்சல் செய்துகொள்க 
திங்களிர்க்  கிருநாள்தான் ...
இல்லற   உறவு ...
நூறாண்டு   வாழ்ந்திடவே ...
நல்லநெறி  இதுவாமே.




More than a Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...