மே 30, 2011

இடுப்புவலி காரணங்களும் தீர்வுகளும்.



இப்போது எல்லா அகவையிலும் இந்த இடுப்பு வலிக்கு ஆளாகின்றனர் . இது காரணமில்லாமல் இல்லை .நமது உணவு முறை மற்றும் வாழ்க்கைமுறைமை மாறி விட்டதன் காரணமன்றி வேறல்ல. இன்றைய உணவு முறை மேலைநாட்டு பண்பாட்டை அடியொற்றி வருவதாகும். இதனால் வரும் நோய்கள்தான் இந்த இடுப்புவலி முதல் ஈவாக (போனசாக ) வரும் சர்க்கரை நோய், மாரடைப்பு ,சாவு உட்பட எல்லா நோய்களும்.

உணவுமுறையே நோய்க்கு காரணம்

இன்றைய உணவுமுறை உண்ணுகிறவர்களுக்கு இரண்டு பங்கும் மருத்துவனுக்கு ஒருபங்கும் சேர்த்து உண்ணப்படுகிறது . முறையில்லாத உணவை உண்டுவிட்டு பின்னர் மருத்துவனிடம் சென்று அவர்களை வாழ வைக்கிறது அல்லவா ? கடந்த இருநூறு ,இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக நம்மவர்கள் கரும்பு சர்க்கரையை உண்ண பழகி விட்டார்கள் இந்த கரும்பு சர்க்கரை மனிதனின் எலும்புகளை கரைத்து சிறுநீர் முலம் வெளியேற்றும் என பல ஆய்வு முடிகள் தெரிவிக்கிறது .
இப்படி எலும்புகளை கரைத்து வெளியேற்றும் செயலை செய்து பின்னர் எலும்புகளை பலப்படுத்தும் எந்த பணியையும் நாம் செய்வதில்லை . சித்த மருத்துவம் பருண்மையாக தான் ஆய்வை மக்கள் முன் வைக்கிறது . வெள்ளை நச்சு (விஷம் ) என கரும்பு சர்க்கரை , உப்பு, மட்டை தீட்டப்பட்ட அரிசி போன்ற வற்றை குறிப்பிடுகிறது . இன்றைய நிலையில் இந்த மூன்றும் இல்லாமல் எந்த உணவும் இல்லை என்றாகிவிட்டது ஆக நோய்க்கு பஞ்சம் வருமா.?





எண்ணெய் குளியல் .

உடலையும் எலும்பு களையும் கண்ணே போல் காக்கும் வழிமுறைகளான எண்ணெய் குளியல் வேண்டாத செயலாகிவிட்டது . இதனால் எலும்புகள் பலமிழந்து கல கலத்து விடுக்கிறது . எலும்புகளை பலப்படுத்தும் உணவு முறைகளான கோசு, காராட்டு, முள்ளங்கி , காலிபிளவர் எடுப்பதில்லை அப்படி எடுத்தாலும் அவைகளை நன்கு வேகவைக்கப்பட்டு அவற்றில் உள்ள சத்துகளை நீக்கிவிட்டு உண்ணும் முறையை நம்மவர்கள் கண்டுபிடித்து வெற்றி பெறுகிறார்கள் . எலும்ம்பு பலப்படுமா? பலவீனமடையுமா? வெல்லம் உண்பதும் நம் நாட்டு தவச (தானிய உணவு ) உண்பதும் கேவலமாக என்னப்படுகியது . இந்த தவச (தானிய ) வகைகள் கம்பு, கேழ்வரகு , சோளம் போன்றவை எலும்புகளை பலப்படுத்த கூடியவைகள் . இவைகளை எடுக்கிறேன் என கூறுகிறவர்களும் முறையில்லாத வழியில் எடுக்கிறனர் அளவிற்கதிகமாக சர்க்கரை சேர்த்தால் அதன் பலன் முழுமையாக கிட்டுமா?

இடுப்புவலி தீர்வுகள்

ஆங்கில வைத்திய சிகாமணிகள் எலும்பு தேய்ந்து விட்டது அல்லது அலுவலகத்தில் நீண்டநேரம் உட்கர்ந்திருகிரீர்கள் , அல்லது வேகமாக வாகனம் (எல்லாவித வாகனங்கள் ) ஓட்டுகிறீர் கள் என இப்படி காரணங்களை அடுக்கி தங்களது அதி நுட்பமான கண்டுபிடிப்புகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் . இதை கேட்கும் படித்தவர்களும் பாமரார்களும் ஆ என வாயை பிளந்து கேட்பது நமக்கு நன்கு கேட்கிறது . என்ன செய்வது ? மனிதன் மரித்து பல ஆண்டுகள் கடந்த பின்னரும் மம்மியில் (பழங்கால இடுகைகள் ) எந்த சேதமும் இன்றி எலும்புகள் இருக்கிறது . அனால் இப்போது எலும்பு தேய்வு ஏன் ? நாம் சிந்தித்தோம் இல்லை . அதுவும் இல்லாமல் நீண்டநாட்கள் பயன்படுத்தியது கெடத்தானேசெய்யும் என்கிறார்கள் பயன் படுத்தியது கெடலாம் தவறில்லை இன்று பத்து பதினைந்து அகவை (வயது )குழந்தைகள் கூட இந்த இடுப்பு வலியினால் அவதிப்படுகிரார்களே அதற்க்கு என்ன சொல்லபோகிறீர்கள் என எவரும் கேட்பதில்லை ? குறிப்பாக எல்லா நோய்களுக்கும் இன்றைய முறையில்லாத உணவுகளே காரணமாகிறது ஆக முறையான உணவு முறைகளை எடுப்போம் . எலும்புகளை பலப்படுத்துவோம் .

எப்போது உட்கார்ந்தாலும் நேரே கூனல் விழாமல் உட்காருவோம்.
எண்ணெய் தேய்த்து குளிப்போம்
வாழைக்காய் ,கொத்தவரை ,வாழைபழம் போன்றவற்றை நீக்குவோம் .
எலும்புகளை பலடுத்தும
உணவுகளான கம்பு , எள்ளு, கேரட்டு , கோசு , முள்ளங்கி ,காலிபிளவர் போன்றவற்றையும்
வெல்லம் சேர்ந்த உணவு களையும் எடுப்போம்.
இடுப்பு வலி வந்த நிலையில் நாளும் வெந்தயம் நீரில் நினையவைது நீருடன் வெந்தயத்தை மென்று சாப்பிட்டு பின்னர்நீரை அருந்துவோம்
நோய் உள்ள நிலையில் பொடுதலை என்ற மூலிகை உணவாக எடுக்கவேண்டும் நல்ல பலனை தரும்.. மேற்கண்ட மூலிகையை வதக்கி கட்டலாம்.ஒத்தடம் கொடுக்கலாம்.
நோய் நீடித்த நிலையில் முறையான சித்த மருத்துவத்தை நடுவோம் நோய் முற்றாக குணமாகும் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்.

பின்னர் விரிவாக இது குறித்து ஆய்வு செய்வோம் .

இந்த இடுகை நம்மை இந்த வலை பூவிற்கு அறிமுகபடுத்திய நண்பர் சுகுமார் கேட்டு கொண்டமைக்காக பதிவு செய்யப்படுகிறது .

அடுத்த எமது இடுகை டயாலிஸ்தேவையாMore than a Blog Aggregator

மே 23, 2011

நோயில் இருந்து விரைந்து குணமடைவது படித்தவர்களா.? பாமரர்களா?




இன்று நோய்கள் குறித்தான புரிதலை உண்டக்குவதைவிட நோயில் இருந்து தம்மை முழுமையாக விடுவித்து கொள்ள தூண்டுவது தேவையாக இருக்கிறது.இது நோய்கள் குறித்தான பிழையான /தவறான
முரண்பட்ட கற்பிதங்களைநீக்குவன்றி வேறல்ல . நோய்க்கான காரணங்களை முழுமையாக அறிந்து கொண்டிருந்தால்தான் நோய்கள் நீங்கும் வழிமுறைகள் புரியும். நோய்வரும் காரணங்கள்.மனிதனுக்கு மனிதன் உண்மையில் மாறுபடும். ஒருவரின் உணவு மற்றவருக்கு நஞ்சாக / நோய்வர காரணமாகிறது.

நாடி மாறுபடும் மனித உடல்வகையும்

வளி ( வாதம்) அழல் (பித்தம் ) ஐ (கபம் )தொந்தம் என மனிதன் உடல்வகை ஒன்பது என முன் இடுகையில் கண்டோம். நாடி . நடைகளுக்கேற்ற வகையில் உடல் அமைப்பும் குளிர்ந்தும் ,வெப்பமடைந்தும் வேறுபட்டு கானலாகிறது . இது இயற்கையின் படைப்பு . உடல் வகைக்கு ஏற்ற உணவு எடுக்கவேண்டும் என முன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தேன் . இது சித்த மருத்துவத்திற்கே உரிய தனித்த கோட்பாடு . அதாவது நமது பாரம்பரிய பண்பாட்டின்படி நமது உணவு கொள்கையை கடைபிடிக்க வேண்டும் பாரம்பரியத்தை
கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லுவதால் நாம் கவட்டியை (உள்ளாடை )நீக்கி நீர்சீலை அணிய வேண்டும் என வற்புறுத்த வில்லை அப்படி ஒருமாற்றம் வரின் தனிச்ச்சிறப்பே .

படிக்காதவர் என நோய் அறியுமா?

நோயாளி ஆவதற்கு நல்லவாய்ப்பு படித்தவர்களுக்கே விரைந்து கிடைக்கிறது . கண்டதையும் படிப்பதைபோலவே கண்டதையும் தின்று நோயில் விழுகின்றவர்கள் நன்கு படித்தவர்களே . பள்ளி படிப்பை படித்துவிட்டாலே பட்டனவழைக்கை தான் சிறந்தது என கண்மூடித்தனமாக நம்பி அலைகிறனர். பட்டணத்தில் பணம் கிடைக்கலாம் அனால் பண்பாடு? நம் பண்பாட்டிலான வாழ்கை?
பணம் குவியும் இடத்தில் பண்பாடு சீரழியும் என்பது உண்மையானது தானே? பண்பாடு என்பது வாழ்க்கைவழிமுறையில் இருந்து தோற்றம் கொள்ளு கிறதல்லவா? வாழ்கை முறையும் உணவு முறையும் பண்பாட்டை அடியொற்றியது தானே ?

நோய் யாரைதாக்குகிறது ஏன்?

ஊர் புறங்களில் இன்னும் முறையான இயற்கைசார்ந்த அறம்பிழறாத வாழ்க்கை கடைபிடிக்கபடுகிறது அல்லவா? இவர்கள் நோயில் இருந்தே விடுபடுகிறனர். பட்டன வாழ்க்கைமுறை
சுற்று சூழல் கேட்டில் இருந்து உணவுமுறை மாற்றம் இரசாயணம் கலந்த உணவுமுறை வாழ்க்கைமுறை மாற்றம்போன்றவை நோவை தழுவ வைக்கிறது . ஆக பட்டண (நகர ) வாழ்க்கைமுறை நோயாளி யாவதும் நோய்க்கு விரைந்து இரையாவதும் ஆன காரியங்களை தூண்டுகிறது .மனிதம் கெடுவது இன்றைய நாகரீக பட்டண வாழ்க்கைமுறை என்பதிலிருந்துதான் என விளங்குகிறது அல்லவா?

படித்தவர்களும்..... பாமரர்களும் .....




ஊர் புறங்களில் மனிதம் கெடுவதற்கான சூழல் குறைவு என்பது கண்கூடு .
அதுபோலவே நோய்கள் வருவதற்கான வாய்புகளும் குறைவே .எழுபது ,என்பது அகவை கடந்தவர்கள்கூடஎந்த மருந்து மாத்திரை இன்றி வாழ்வதனை காணும்போது மகிழத்தனே முடிகிறது . இவர்கள் ஒருமுறைகூட என்னுடம்பில் ஊசி குத்திகொண்டதே இல்லை என கூறுகின்றனர் . இதற்க்கு கரணம் இயற்கையுடன் இணைந்த வழ்க்கைமுறையன்றி வேறல்ல.

அனால் பட்டணத்து வாழ்க்கைமுறை எல்லாம் அங்கனம் இருக்கவில்லை. இரசாயணம் கலந்த உணவுகள், இரசாயணம் கலந்த பால், இரசாயணம் கலந்த, சுற்று சூழல் கேடுகள் நிறைந்தவாழ்கை முறை வளி மண்டலத்தையும் அல்லவே கெடுத்து விட்டோம் . இந்த வரிசையில் பட்டணத்து வாழ்க்கைமுறையை அடுக்கலாம்.படித்தவர்கள் எது உயர்வான நாகரீகம் எது உயர்ந்த வாழ்க்கைமுறை என எண்ணிக்கொண்டு இருக்கிறார்களோ அவைகள்தான் மனிதத்தை நோயாளியாக்குகிறது . நண்பர் வீடுகளுக்கு அல்லது தெரிந்தவர் வீடுகளுக்கு சென்றால் நாம் தேநீர் அருந்துவதில்லை குளம்பி(காபி )அருந்துவதில்லை என்றால் நம்மை வேற்று கோள் (கிரக) வாசியை பார்ப்பது பல பார்கிறார்கள் என்பது வேறு செய்தி .

படிக்காதவர்களே விரைந்து குணமடைகிறார்கள்...

நம்மை பொறுத்தவரை நுனிப்புல் மேய்ந்து விட்டு நச்சு கருத்துகளை அள்ளி வீசி கொண்டிருப் பதில்லை எம்மையும் வருத்தி கொண்டுதான் இந்த குமுகத்திர்காக எதாவது செய்யவேண்டும் என கருதுகிறோம்
ஆகையால் தம் பட்டறிவால் முற்றுனர்ந்த தேர்ந்த சித்தமருத்துவர்களின் ஆக்கங்களை உள்வாங்கிதான் இயன்றவரையில் தருகிறோம். நம்மிடம் வரும் படிக்காதவர்கள் பெரும்பாலும் ஆங்கில முறை மருத்துவத்தை நாடி சென்று நோய் நீங்க இயலாமல் உள்ளநிளையில்தான் சித்தமருத்துவத்தை நாடி வருகின்றனர் .அவர்களின் உளவியலை நன்கு அறிந்து அவர்களிடம் கற்பிக்கப்படும் பொது அவர்கள் அப்படியே உள்வாங்கி கொண்டு சொன்னவற்றை அப்படியே கடைபிடிக்கிறார்கள் எனவே நோயில் இருந்து விரைந்து விடுபடுகின்றனர் . அவர்களுக்கென்று தனியான கருத்துகள் எல்லாம் ஒன்று இருக்கவில்லை கண்டதையெல்லாம் படித்துவிட்டு அவர்கள் ஒரு கருத்துகளை வைத்திருக்கவில்லை எனவே சொன்ன கருத்துகளை கடைபிடிக்கின்றனர் . அனால் படித்தவர்கள் அவர்களுக்கென்று ஒரு கருத்துகள் வழிநடத்துகிறது எனவே அவர்களின் கண்ணோட்டமெல்லாம் மேலை நட்டு மருத்துவத்தை அப்படியே கடைபிடிக்க எண்ணுகிறார்களே யன்றி சித்த மருத்துவத்தை நாடிவருவதை இழிவாக கருத்து கிறார்கள் .அவர்களின் கண்ணோட்டமெல்லாம் நுனிநாக்கு ஆங்கிலமும் முடை நாற்றமெடுக்கும் மேலை நகரீகமும்தான் .
ஆக அவர்கள் படித்தவர்கள் சித்தமருத்துவத்தை நடிவருவது மில்லை வந்தாலும் நோயில் இருந்து விடுபடுவதுமில்லை . சித்தமருத்துவம் என்பதில்லை மேலை ஆங்கில மருத்துவமாக இருந்தாலும் நவீன பொறிகளை கண்டுவியந்து அவற்றில் முடங்கி கிடக்கிறார்கள் .

சித்த மருத்துவம் என்பது பழங் காலங்களில் அரச முத்துவமகவே இருந்து இருக்கிறது அந்த பாழாய் போன அரசர்கள்தான் பல்வேறு பெண்களை அந்த புறங்களில் வைத்து கொண்டு அவர்களின் பாலியல் தேவையை நிறைவேற்ற மருத்துவர்களை அவர்களுக்கவே தனியாக வைத்து கொண்டனர் .அவற்றுடன் நிலக்கிழரிய கருத்தியலை கொண்ட்ருந்த அவர்கள் சித்த மருத்துவத்தை அரண் மனையில் மட்டுமே வைத்து இருந்தனர் . மக்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த மருத்துவர்களிடம் i தம்மை அற்பணித்து மருத்துவ உதவிகளை பெற்றுவந்தனர்.
இன்று உள்ள நிலையில் எல்லா இடங்களிலும் படித்தவர்களை காட்டிலும் படிக்காதவர்களே பழமையை காக்கின்றனர் போற்றுகின்றனர் வணகுகின்றனர் . நோயில் இருந்து விரைந்துவிடுபடுகின்றனார். படித்தவர்கள் பொருத் தருள் (நாம் உண்மையை கூற எங்கும் ,என்றும் தயங்குவதில்லை என்பதால் கூறிவிட்டோம் ) வார்காளாக.

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் ...

கனடாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

மே முதலாம் நாள் கடனவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தமிழ் உறுப்பினர்
தேர்வு செய்யப்பட்டு உள்ளார் இவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதும் யாழ் மவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது இவர் புதிய ஜன நாயக கட்சியின் வேட்பாளராக (scharborough Rovge River) ஷ்கர்புரோ ரூச்றிவர் தொகுதில் வெற்றி பெற்றிருக்கிறார் அவரை வாழ்த்தி மகிழ்வோம் .More than a Blog Aggregator

மே 16, 2011

மருத்துவ ஆய்வுகளை சித்தமருத்துவகண்ணோட்டத்திலிருந்து தொடங்குக ....




இப்போது பல மருத்துவ ஆய்வுகளை கானலாகிறது இவைகள் எல்லாமே ஆங்கில முறைமருத்துவத்தின் கண்ணோட்டத்திலேயே செய்யபடுகிறது . இவைகள் தவறானவை பிழையானவை என்கிறேன். இவைகள் சித்த முத்துவ கண்ணோட்டத்திலிருந்து தொடங்க பெறவேண்டும் என்கிறேன் . மொழி ஆய்வுகளும் மெய்மங்களும் (தத்துவம் ),பண்பாடு , கலை இலக்கியங்கள் உள்ளிட்ட எல்லாமே தமிழிலிருந்து தொடங்க படவேண்டுமே யன்றி வெறுமனே தமிழுக்கு பின் தோன்றிய மொழிகளில் இருந்து ஆய்வுகளை தொடங்கினால் எந்த முடிவும் முழுமையாக கிடைக்காது . இந்த உலகம் இந்த தவறை தொடர்ந்து செய்து வருகிறது.

மொழியரிஞ்சர் கள்

இன்றைய தமிழ முன்னோடியான மொழியரிஞ்ச்ர்கள் எல்லாமெய்மங்களுக்கும் (தத்துவங்களுக்கும் ) நாக ரீகங்களுக்கும் , மொழிகளுக்கும் தமிழே முதன்மையானது என சான்று காட்டுகின்றனர் . தமிழிலிருது ஆய்வுகளை தொடங்க வேண்டும் என்பது போலவே மருத்துவம் குறித்த ஆய்வுகளையும் தமிழ மருத்துவமான சித்த மருத்துவத்தில் இருந்தே தொடங்க படவேண்டும்.

சித்த மருத்துவத்திலிருந்தே ஆய்வுகளை தொடங்குக...

இன்று பல ஆய்வுகள் செய்யபடுகின்றன . இவைகள் ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் செய்யபடுகிறது . அதாவது மனிதனின் உடலை பொறியாக (இயந்திரமாக ) பார்க்கும் கண்ணோட்டம் கொண்டது ஆங்கில மருத்துவம் . ஆனால் சித்த மருத்துவம் மனிதனின் முழுமையான உடலை ஒருநோய்க்கு ஆய்வுக்கு எடுத்து கொள்ளுகிறது . அதாவது மனிதனின் நோய் நிலையறிய எண்வகை தேர்வை சித்த மருத்துவம் கடைபிடிக்கிறது . அதேபோல சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது .

மனித மூன்று வகை உடல்கள் ...

சித்த மருத்துவம் மனிதனின் உடல் அமைப்பை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கிறது அதாவது
வளி (வாதம் ) , அழல் (பித்தம் ) , ஐ (கபம் ) மூன்று வகை உடல்களையும் பருண்மையாக ஆய்வு செய்து
விளக்கிறது இந்த மூன்று வகை உடல்கள் இவற்றிற்கு உரிய குணன் நலன்கள் இந்த உடல்களுக்கு உரிய உணவு பழக்க வழக்கங்கள் என பருண்மையாக பட்டியலிடுகிறது சித்தமருத்துவம் . இப்படி இருக்கையில் ஆங்கில மருத்துவமோ மனிதனை பொறியாக (இயந்திரமாக ) கணக்கிட்டு ஆய்வுகளை செய்கிறது .

அறிவியல் விதிக்கு பொருந்தாதது...

வளி (வாத ) வாகு உடல் என எடுத்து கொள்வோம் . இந்த வளி (வாத ) வாகு உடலுக்கு என பல நோய்களை பட்டியலிடுகிறது "" காணப்பா வாதம் மீறில் கால்கைதான் வலிக்கும் நோவும்..."" என உடல் வாகுக்கு ஏற்ற நோய்களை பட்டியலிடுகிறது வாத வாகு உடல் கொண்டோர் கிழங்கு வகைகள் எடுத்து கொண்டால் நோய்கள் மிகையாகும் என்பது சித்த மருத்துவ விதி இது உண்மையும் அறிவியல் அடிப்படையில் ஆனதும் கூட ஐ (கப ).வாகு உடல் கொண்டோர் உப்பையும் , இனிப்பையும், புளிப்பையும் குறைத்து உண்ண பரிந்துரைக்கிறது .காரணம் இவைகள் நோயினை மிகையாக்கும் என்பதால் . இப்படி இருக்க குறிப்பிட்ட மக்களை ஆய்வு செய்கிறேன் என ஆங்கில மருத்துவ கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்களின் ஆய்வு முடிவுகள் தவறு உண்டாக்க வாய்ய்பு உள்ளது என அறியலாகிறது .

தமிழிலிருந்து....

ஒரு மருந்தை ஆய்வு செய்ய மனிதனின் உடல் வாகை அறிந்து ஆய்வு செய்தால் உண்மைகள் புரியும் சித்த மருத்துவ கண்ணோட்டத்தில் தொடங்க பட வேண்டிய மருத்துவ ஆய்வு முடிவுகள்



நாடி நடை

பொருந்துமோ ருந்திக் கீழே
புகன்றேதுஞ் சுழியைப் பற்றி
எழுந்ததோர் நாடி தானும்
எழுபத்தி ராயி ரந்தான்
தெரிந்ததோ ரிவற்றில் பத்துத்
தசநாடி இவற்றில் மூன்றும்
பரிந்தத்தோர் வாத பித்தம்
படர்ஐயும் அறிந்து பாரே !

மனித உடல் 72 இலட்சம் நாடிகளை கொண்டது . அதை குறுக்கி 72 ஆயிரம் நாடிகளாக பகுத்தனர் அதையும் துய தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் எண்ணிக்கை மிகுதி என்பதால் இவற்றை கணக்கிட இயலாது என பத்து (தச) நாடிகளை கொண்டனர் இதுவும் கணக்கிட இயலாது என்பதால் எளிமையாக கணக்கிட மூன்று நாடிகளை எடுத்துக்கொண்டனர்.

மூன்று நாடிகளும் ஒன்பது வகை மனித உடலும்

இப்படிமனித உடலை மூன்று நாடிகளாக பகுத்து மனித உடலின் நோய்களை கணக்கிட வளி(வாதம்
) அழல் (பித்தம் ) ஐ (கபம் ) என குறுக்கி வகைபடுத்தினர் .இவற்றினூடே நுட்பமாக தொந்தம் என்பதையும் கணக்கிட்டனர் .வாதத்தில் வாதம் ,வாத்தத்தில் பித்தம், வாதத்தில் கபம் , என மனித உடலை ஒன்பது வகையாக கணக்கிட்டனர் .
இந்த உடல் வகை மனிதர்கள் ஒருநோய்க்கு ஒரேவித மருந்து ஏற்று கொள்ளது என பருண்மையாக ஆய்வு செய்து கண்டறிந்தனர் சித்தகள் .அதேபோல எல்லோருக்கும் எல்லாவகை உணவுகளும் பொருந்தாதது என்பது சித்த மருத்துவ கோட்பாடு .
வளி (வாத ) உடல் குளிர்ந்து காணப்படும்.. அழல் (பித்த )உடல் சூடாகி காணப்படும் .ஐ (கப ) உடல் செழுமையுடன் வியர்த்து காணப்படும் என மனித உடல் வகையை பகுக்கிறது . இவற்றினுடன் தொந்த வகை உடல் இந்த உடல் வகைகள் முறையே ஒரேவகையான மருந்து களையும் ஒரேவகை உணவுகளையும் ஏற்றுக்கொள்ளுவதில்லை என துல்லியமாக பட்டியலிடுகிறது சித்த மாத்துவம் .
ஆக முறையான உணவுகளை எடுத்து கொண்டால் நோயிலிருந்து விடுபட முடியும் என்பது சித்தமருத்துவ கோட்பாடு .
அனால் ஆங்கில முறை மருத்துவ ஆய்வுகளில் மனிதர்கள் என்கிற வகையில் பலரை ஆய்வுக்கு (சித்த மருத்துவ கண்ணோட்ட முறைப்படி ஆய்வுக்கு ) உட்படுத்துவதில்லை . இது அறிவியலுக்கு முரணாகவே இருக்கும் என்பது எமது கோட்பாடு .

உணவுகளும் சுவையும் ....

இனிப்பு சுவையை எடுத்து கொள்வோம். இந்த இனிப்பே உடலின் ஏழு தாதுக் களையும் வளர்க்க்கும் மனித உயிரை வளர்க்க கூடியது உறுதிபடுத்தக் கூடியது. வளி (வாதம்) ,அழல் (பித்தம் ), இவற்றை
போக்கி உடல் எரிச்சல் , மயக்கம் போக்கி நாவரட்சியை தணிக்க கூடியது .

இனிப்பு சுவை எண்ணெய் பசை உடையது .செரிப்பதக்கு கடினமானது. இந்த சுவை கொண்ட உணவுகளை ஐ (கப ) வகை உடலினர் எடுத்து கொண்டால் நோயை மிகையாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . இப்படி ஒவ் ஒரு உணவும் ஒருமாதிரியான குணத்தை கொண்டிருப்பதால் ,
ஒரே மாதிரியான உணவு முறை மனிதனுக்கு நோயை உண்டாக்கும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு .

சித்த மருத்துவ கண்ணோட்டத்தின் படி ...

மூன்று வகை நாடிகளின் படி மனிதனை தனித்தனி குழுக்களாக பிரித்து அவர்களின் உடல் வகைக்கு ஏற்றவகையில் பிரித்து ஒருமருந்தையோ அல்லது உணவையோ , கொடுத்து ஆய்வு செய்ய வேண்டும் .நாடிகளின் படி மனித உள்ளமும் வேறுபட்டு இருக்கும் என்பது சித்த மருத்துவம் கூறும் கோட்பாடு . ஆக மனித உடலை சித்த மருத்துவ கோட்பாட்டின் படி உடல் வகைக்கு ஏற்ற படி பிரித்து ஆய்வுகள் தொடங்கினால் மனித இனம் அடைய போகும் பலன் எண்ணிலடங்காத வகையில் இருக்கும் என்பது எனது எண்ணம் .அறிவுலகமே இனி சித்த மருத்துவ கோட்பாட்டின்படி உடல் வகைக்கு ஏற்ற வகையில் பிரித்து ஆய்வுகளை மேற்கொண்டால் நல்லதுதானே ?

பழமையை காப்போம் புதியன வெல்வோம் !More than a Blog Aggregator

மே 10, 2011

தமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது?





இப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என
எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்களை காணலாம்.
அப்படி என்ன தமிழகத்து ஆண்கள் ஆண்மையற்று போய்விட்டனர்? திருமணமே வேண்டாம்
என்கிறார்களா? பிறப்பு விகிதம் குறைந்துபோய் இருக்கிறதா ? அல்லது வேறு ஏதாவது
குறைபாடா? நாம் சிந்திக்க தொடங்கினோம்.


இன்றைய நிலையில் இப்படி பட்ட விளம்பரங்களை விட முறையான
மருத்துவத்தை முன்னெடுத்து மக்களை நல்வழிபடுத்தவேண்டிய சூழலில்
பெரும்பான்மை மாத்துவார்கள் இல்லை என்பதாக கொள்ளலாமா ? தெரியவில்லை
நீங்கள்தான் சிந்திக்கவேண்டும். உங்களிடம் விட்டுவிடுகிறேன்.

இன்றைய சூழலில் ஆண்மை குறைவிற்கு எந்த கேடும் நிகழவில்லை ஆனால் இதை
தவறாக புரிந்து கொள்ள பட்டு இருக்கிறது அல்லது தவறாகபுரியவைக்கப்பட்டு உள்ளது
தவறான கருத்தாக்கத்தை புகுத்தப்பட்டு உள்ளது .பழங்கலங்களில் பாலியல்
குறைபாடுகள் இப்படி பேசப்படவில்லை காரணம் அண்டைய சூழல் அப்படி அனால்
எல்லாவற்றிற்கும் தெளிவான விளக்கங்கள் கிடைத்து வந்தன .

உடலை கண்ணேபோல் காத்து வந்தனர் கூட்டு குடும்ப வாழ்க்கைமுறை
மனிதத்தை முறையாக பராமரித்து வந்தது. இன்றைய தனியுடமை அமைப்பு மனிதனை
பேயாட்டம் ஆடவைக்கிறது .காரணம் மனிதன் இன்று பொறியாகி (இயந்திரம் ) போனான் உடல் நிலை
சரியில்லை என்றாலும் ,அல்லது உடலியல் குறைபாடு என்றாலும் மனிதன் பொறி ( இயந்திரம்)
போல உடலை வெட்டி எடுக்கும் மாற்று (பொறி )இயந்திரத்தை பொருத்தி மனிதத்தை
ஊர்ந்து செல்ல வைக்கும் செப்படி வித்தைகள் செப்பனே நடக்கிறது ஆனால் மக்களோ
அறியாமையில் உழல்கிறனர்.

இன்றைய ஆண்மைக்குறைபாடு என்பது பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது .
சித்தமருத்துவம் மனிதனின் வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்து காட்டுகிறது
எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும், பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை
பாலுறவு கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. மூத்த பெண்களுடன் பாலுறவு கூடாது
பகலில் பாலுறவு கூடாது . என்னை தேய்த்து குளித்த அன்று பாலுறவு கூடாது என
பல்வேறு வாழ்க்கைமுறை மெய்மங்களை பாமரத்தனமாக பட்டியலிட்டு காட்டுகிறது

இன்றைய அவசர உலகம் எல்லா இன்பங்களையும் உடனே பெற்றுவிட வேண்டும் என
தூண்டுகிறது . பாலுறவை சிற்றின்பம் என்றனர் முன்னோர் . அதை பேரின்பமாக
கருதி விரைந்து எல்லா இன்பங்களை பெற்றுவிட துடித்து இளமையிலேய முடங்கி
போகின்றனர் . இவர்களுக்கு நாம் பொறுமையாகவும் அமைதியாகவும் சொல்லுவது
புரியாமலே போகிறது . பாலுறவு இன்பத்தினை நீடிக்க வேண்டி பல்வேறு ஆங்கிலமுறை
மருத்துவத்தை நாடுகிறனர் இது மாட்டிற்கு ஊசி போட்டு பால் கறப்பதற்கு
ஒப்பானது மாட்டிற்கு தீனிபோட்டு பால்கறக்கும் பழக்கம் போய் இன்று ஊசி
போட்டு பால்கரப்பது வழக்கமாகிப்போனது இது எப்படி சரியாகி வரும் என்பது
புரியவில்லை . இது மாட்டையும் மனிதனையும் அல்லவா நோயாளியாக்கும்?

வேதனை தரக்கூடிய செய்தி என்னவென்றால் இன்று பாலியல் இன்பத்தை, பாலியல்
தொடர்பான படங்களை பார்த்து அதில் வரும் காட்சிகளைபோன்று தானும் அப்படி
பாலுறவு கொள்ள வண்டும் என என்னுகிறனர். பாலுறவு காட்சிகள் படமாக்குவது ஒரு
நாளில் எடுப்பது அல்ல பலநாளில் எடுக்கப்பட்டதாகும் அதை பார்த்து தானும் நீண்ட
நேரம் பாலுறவு கொள்ள நினைப்பது நுகர்வு பண்பாடு இது மனிதத்தை
நோயாளியாக்கும். பாலுறவு காலத்தில் உடல் அளவில் பல மாற்றங்கள் நிகழுகிறது மனித
உடல் வெப்பமடைகிறது இந்த வெப்பத்தை தணித்து கொள்ள எந்த நடவடிக்கையும்
எடுப்பதில்லை . இவற்றால் பல்வேறு பாலுறவு கோளாறுகள் நிகழுகிறது. அதேவேளை மனித
உடல் விந்துவை உற்பத்தி செய்யும் பொறி (இயந்திரமல்ல ) நல்ல தரமான உணவுகள்
காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளவேண்டும்.கீரைகள் எடுக்கவேண்டும்

மனிதனின் இரத்தத்தில் சர்கரையின் அளவு கூடினால் பாலுறவு இன்பம்
குறையும் .அது தான் சர்க்கரை நோய்கண்டவர்கள் பாலுறவு சிக்கல் களுக்கு
ஆளாகின்றனர் .மிகையான அச்சம் , சினம் போன்ற நிலைகளிலும் பாலியல் கோளாறுகள்
உண்டாகிறது. உடலில் பவேறு நோயுள்ள நிலையில் பாலுறவு கோளாறுகள் உண்டாகிறது .
எனவே பாலுறவு கோளாறுகளுக்கு அது என்ன காரணத்தினத்தல் உண்டாயிற்று என
கண்டறிந்து முறையாக தீர்க்க வேண்டும் . பெரும்பாலும் சிக்கலே இருப்பதில்லை .
சிறிய சிறிய சிக்கல் கலை பெரிதாக்கி கொள்ளுவதுமுண்டு .தரமான தவச(தானிய ) முளைகட்டிய
உணவுகளை எடுத்து கொள்ளுவதாலும் . தரமான பழங்கள் , முறையான உணவுகள் எடுத்து
கொள்ளுதல் , எண்ணெய் தேய்த்து குளித்தல் பதினைந்து நாளுக்கு ஒருமுறை பாலுறவு
கொள்ளுதல் இப்படி முறையான பழக்கங்களை கடைபிடித்தால் பாலுறவு சிக்கல்கள் தோன்ற
வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

*சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .*More than a Blog Aggregator

மே 02, 2011

நரம்பு தளர்ச்சியா (இஸ்டீரீயா) பேய் பிசாசா?




இப்போது ஊர் புறங்கள் முதல் பட்டணம் வரை நோய்கள் கண்டுவிட்டால் முறையான மருத்துவம் செய்து கொள்ளும் முன் மூடபழக்கவழக்கங்களை நாடும் பழக்கம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. பழமை என்பது அறிவர்கள் (சித்தர்கள் ) கண்டதுஅறிவர்களின் இந்த காலம் சித்தமருத்துவத்தின் பொன்னுலகம் எனலாம். மனித இனத்தின் மருத்துவ மறுமலர்ச்சி யின் காலமான இந்த காலத்தில்தான் அறிவியல் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து நின்றன. இவர்கள்தான் அறிவியல் அடிப்படையில் நோய்களை இனங்கண்டனர்.

வளர் இளம் பருவம்.

மனித இனத்தின் முகாமையான காலம் என்றால் துள்ளித்திரியும் விடலைபருவம்தான் எனலாம். அந்த காலம் உன்னதமான வசந்த காலம் . இந்த காலத்தில் தான் முறையான சரிவிகித உணவு தேவை குறிப்பாக பெண்குழந்தைகள் எனில் கூடுதல் கவனிப்பும் கூடுதல் உணவுகளும் தேவை . அப்படி இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் நோயுடன் கூடிய போராட்டம் தான் எனலாம்.




சரிவிகித உணவுகள்

இதற்கான சரிவிகித உணவுகள் என தனியான எனது இடுகை காண்க ... இந்த விடலைபருவத்தில் பதின் பருவத்திலும் முறையான வழிகாட்டலும் நேரிய வாழ்கை முறையும் முறையான ஊட்டமுடன் கூடிய உணவுகளும் தேவை.தரமான தவச (தாணிய உணவுகள் ) கீரைகள், பழங்கள் , கொழுப்பு நிறைந்த கொட்டைகள் போன்றவற்றை முறையாக வழங்க வேண்டும் . இதனுடன் எரிச்சல், பதற்றம் , போராட்டம் போன்ற உளவியல் போராட்டம் பெண் குழந்தைகளிடம் காணப்பட்டால் இந்த உளவியல் போராட்டங்களும் நோய்களை உண்டாக்குகிறது என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும். பல்வேறு நோய்களை போலவே நரம்பு தளர்ச்சி நோயும் உண்டாகி விடலை பருவபெண் குழந்தைகளை நோவில் ஆழ்த்து கிறது.




நரம்பு தளர்ச்சியா ? பேயா ?

முறையான உணவுகளும் முறையான வாழ்க்கை முறையும் கொண்டிராத பதின்பருவத்தினார் குறிப்பாக பெண்குழந்தைகள் நரம்புதளாச்சி நோயாளி யாகின்றனர் . இந்த நோயை இனங்கான முடியாத மேதாவிகள்? பெண்குழந்தை களின் எதிர்காலத்தை கேள்விகுறியாகிறனர் . அறியாமையில் உள்ள பெற்றோர்கள் இதை பேய் , பிசாசு ,காட்டேரி, முனி, கன்னி , என தங்கள் அறிவிற்கும் ? அறியாமைக்கும் ஏற்றபடி பெயரை இட்டு அழைகிறனர்.

அறியாமையில் உழல்பவர்களே ...

இப்படி பேய் பிசாசுகளும் இருப்பது உண்மை என்றால் பல்வேறு வகையில் கொலைக்கு உள்ளாகிறவர்கள் எவரும் பேயாக மாறி கொன்றவரை பயமுறுத்தி அல்லது அவரை கொன்றதாக வரலாறு இல்லை . குறிப்பாக எடுத்து கொள்ளுவோம் . ஈழத்தில் பல இலட்சம் பேரை படுகொலை செய்தான் சிங்களவன். எந்த சிங்களனையும் பேயாக மாறி பழிவாங்க வில்லை அல்லது கொன்று அழிக்கவில்லை. இதிலிருந்து தெரிவது யாதெனில் பேய் என்பது மூடத்தமானது முட்டாள் தனமானது எண்பது தெளிவாகலாம்.

அறியாமையில் உழல்கிறவர்கள்...

நரம்பு தளர்ச்சிக்கான காரணங்களை நீக்கி நோயை வென்றெடுக்க ஆங்கில முறை மருத்துவத்தில் மருந்துகள் இல்லை அதனால் நோய்க்கான காரணங்களை அவர்கள் வேறுவிதமாக திசை திருப்பி விடுகின்றனர் . இந்நோய்கள் கண்டவர்களை பாவப்பட்டவர்களாக பாவிக்கின்றனர் . ஆனால் தமிழ மருத்துவத்தில் இன் நோய்க்கான காரணங்களும் மருந்துகளும் உண்டு . சித்த மருத்துவம் நோய்களுக்கு மருந்து அளிப்பதில்லை என்பது தெரிந்ததே ஆனால் நோய்க்கான காரணங்களை கண்டறிந்து நோயை வென்று எடுக்கிறது .
பெண்மையின் மிக மூகாமையான உடல் உறுப்புகளில் வியக்க தக்க உறுப்பான கருப்பையின் உட்சுவர்களில் உண்டாகும் குறைபாடு எனலாம் . கருப்பையின் உட்சுவர்களை காக்கிற அரத்த நரம்புகளில் உண்டாகும் பழுதே இந்த நோய்க்கான காரணமாகும். இதனால் கருப்பையின் நரம்புகள் செயலற்று போவதால் வளர் இளம் பெண்களுக்கு மயக்கம் வருவதும் ,தன்னையறியாமல் பேசுதல் ,சிரித்தல் , ஆடுதல், குதித்தல், பம்பை உடுக்கைகளுக்கு ஆடுதல் போன்ற செயல் களை செய்ய தூண்டுகிறது . இந்த சமயத்தில் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்கள் ஆகிறார்கள் . இப்படிப்பட்ட வளர் இளம் பருவத்தினர் ( விடலை பருவத்தினர் ) கனவுலகிலேயே வாழுகிறனர் . கருப்பை சார்ந்த நரம்பு தளர்ச்சி நோயே இப்படி செய்விக்கிறது . முறையான தமிழ மருத்துவத்தில் எண்ணற்ற மருந்துகள் உண்டு .

தீர்வுகள்...

இன் நோய்க்கு எண்ணற்ற மருந்து உண்டு என்றாலும் இந்த நோய்க்கு உளவியல் காரணங்களை நீக்கி முறையான உணவுதிட்டங்களை கடைபிடிக்க வேண்டும். உடலையும் உள்ளத்தையும் நேர் வழியில் செலுத்த வேண்டும் . சரிவிகித உணவுகளும் தரமான தவச (தானிய ) உணவுகளும் கீரைகளும் பழங்களும் , கொழுப்பு நிறைந்த கொட்டைகளும் உணவில் சேர்க்க வேண்டும் .
நோய் முற்றிய நிலையில் எட்டிமர பட்டை கொண்டு வந்து பத்து கிராம் எடுத்து தட்டி போட்டு இருநூறு மிலி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து குடிநீராக்கி குடிக்க நல்ல பலனை அடையலாம்
.
சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் திடமான குமுகத்தை படைப்போம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...