நவம்பர் 21, 2011

சில சித்த மருத்துவ கோட்பாடுகள் வரிசை 2




        மனிதஉடல்    ஏற்றுக்    கொள்ளாத         உணவினால்லும் அரை  வேக்கடுள்ள  உண்வுகளினாலும் மாவுப் பொருள்களினாலும்  அளவுக்கு  மீறிய எண்ணெய்  வேக்கடுகளினாலும் , செரிக்காத  நிலையியல்      மீண்டும்  மீண்டும்  உண்பதாலும்  மந்தம்
 

உண்டாகிறது என்பது  சித்தர்களின்  கோட்பாடு . மந்தம்  என்பது  செரிமானக்குறைவு
மட்டும்  அல்ல  நோய்வளர்ந்த  நிலை   எனலாம் இதைத்தான்  மந்தம்  இலாதுசுரமும்  வராது என்பார்கள்  சித்தர்கள் .  மந்தம்  தோன்றினால்  அதோடு  பலநோய்கள்   தோற்றம்  கொள்ளுகிறது .இவற்றில்  இருந்து  வாய்வு  உண்டாகிறது . ஒன்றில்  இருந்து  மற்றொன்றுமாக நோய்  தோன்றுகிறது .
             உயிர்கள்  பல்வேறு  வகையில் தோன்றுவதுபோல  நோய்களும்  பல்வேறு வகையில்     தோன்றுகிறது . மந்தம் , வாய்வு  இரண்டின்  சேர்க்கையால்  கடுமையான
 சுரம்  தோன்றுகிறது . மந்தம் , வாய்வு , சுரம்  இந்த மூன்றின்  காரணமாக  திரிதோடம்
தோன்றுகிறது .  அதனாலதான்    மருத்துவர்கள்  கடுமையான  உணவுக்  கட்டுப்  பாட்டை
சொல்வார்கள் . சுரம் கண்டபின்  அதன்பின்  வாய்வும் மந்தமும்  பாதித்துவிடுகிறது  .நோய்  கண்டவர்  சுரத்தை  மட்டும்  காண்கிறார் . சிறிது காய்ச்சல்  குறைந்ததும் நல்ல
பசி  உண்டாகி உணவு அதிகம்  உண்ணும்  வேட்கை  உண்டாகிறது .
   மனிதன் அருந்தும்  நீர்  சுவாசிக்கும்  காற்று சுற்றுப்புற  சூழல் தட்பவெப்ப  நிலை  போன்றவறில்  இருந்து  ஐ  என்ற கபம்  தோன்றுகிறது . உணவில்  இருந்தும்  மன  இயல்பு  களில்  இருந்தும்  பித்தம்  தோன்றுகிறது . இங்கனம்  பித்தத்தில்  கபம்  சேர்ந்தால்   இந்த   இரண்டின்  சேர்க்கைதான்  வாய்வு .  இந்த அழல்   குற்றம் ,ஐ குற்றம் , வளி  இன்  குற்றம்   எல்லாம்  சேர்ந்து  உடலில்  சூட்டினை உண்டாக்குகிறது .  இதை மனிதனால்   நேரடியாக  உணர்ந்து  கொள்ள  முடியம் .
        உள்புறம்  தோன்றும்  சுரம் , வெளிப்புறத்தில் கன்னத்தில்  கட்டியாக  கூட  வெடிக்கிறது
. வெளிப்புறத்தில்  தோன்றும்  சூடு மற்றும்   கட்டிகளை  அறிந்து  கொள்ளுகிறான் . உள் புறத்தில்  தோன்றும்  பல்வேறு நோய்களை  அறிந்து கொள்வதில்லை . இவைகளை தான்  சித்தமருத்துவர்கள்  அறிந்து  உணவுக்கட்டுப்  பாட்டை  போதிகிறனர் .  வலி (ளி) இன்   மிகுதியால்  உடலில்  கழிவுகள்  தடை  தோன்றுகிறது . அழலின்  அதிகரிப்பால் ,
 உடல் சூடு     அடைகிறது . ஐ  அதிகரிப்பால்  உடல்பருக்கிறது .  உள்ளுறுப்பு  களில்
அதிகவளர்சி  தோன்றுகிறது. வளி.ஐ , இரண்டும்  சேரும் போது  மாரடைப்பை  உண்டாக்குகிறது . இதைத்தான்  சித்தர்கள்
             ரோகம்  காப்பதில்  நுழைந் தேறி  வாயுதான்
              வாகுற்ற  நெஞ்சில்  வலித்தே  மயக்கிடும்
                போகுற்ற  பித்தத்தை  போகாமல்  றம்பித்து
               பகுற்று  பேசையில்  பதையாமல்கொள்ளுமே .
என்றனர் ஆக  நோய்களை  முறைப்படி  கண்டறிந்து  முறையான  சித்த  மருத்துவம்  மேற்கொண்டு  நோய்  நீங்கி  நீடு  வாழ்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...