நவம்பர் 01, 2011

மழைக்கால நோய்கள்




மழைகாலம் என்றாலே சிலநோய்களுக்கு கொண்டாட்டம் தான் அந்த வகையில் கண் நோயையைப் பற்றி குறிப்பிடலாம் குறிப்பாக இந்தகாலத்தில் கொஞ்சம் மழையும் சேர்ந்து கொண்டால இந்த நோய் பரவத் தொடங்கும் .கண்நோய் அழகாக ஒட்டிக் கொள்ளும் இதற்க்கு முன்னமே நாம் எச்சரிக்கையுடன் இருந்துவிட்டால் இது நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் இதற்க்கு பெரிதாக ஒன்றும் செய்யத்தேவையில்லை .

தூய்மையான விளக்கெண்ணை இரண்டு சொட்டு கண்ணில் விட்டுக் கொண்டு இறவில் தூங்கப் போகலாம் .
தூய்மையான தண்ணீரில் கண்களைக் கழுவலாம் .
நாட்டு மருந்து கடைகளில் விற்கப் படும் இளநீர்க் குழம்பு என்ற மருந்தை நாளும் பயன் படுத்தலாம் (இது இளநீரும் தேத்தான் கோட்டை என்ற மருந்துப் பொருளும் சேர்ந்த்தது )

மூச்சிறைப்பு (ஆஸ்த்துமா )

இந்த நோய் எல்லாகாலத்திலும் சிரமத்தை தரும் என்றாலும் மாரிக்காலம்,பனிக்காலம் என்றாலும் கூடுதல் வேதனை தரும் இந்நோய் குறித்து பின்னர் விரிவாக எழுதப்படும் இந்த நோய் கண்டவர்கள் குளிர்ச்சியைத் தரும் உணவுகளை நீக்கவேண்டும் .தக்காளி . சில குளிர்ச்சியை உண்டாக்கும் உணவுகளை கண்டிப்பாக நீக்கவேண்டும் இவர்கள் நாட்டு கத்தரி ,சுண்டைக்காய் , அவரைகாய்,முருங்கை காய் போன்ற நாட்டுவகை காய்களை எடுக்கலாம்
தூதுவலை , கண்டங் கத்தரி , நெல்லிக்காய் சேர்ந்த மருந்துகள் இவர்களுக்கு நல்ல விடிவைத் தரும் .
இனிப்பும் ,புளிப்பும், உப்பும் கபத்தை வளர்க்கும் ஆகையால் இந்த உணவுகளை நீக்கவேண்டும் .

குளிர்கால காய்ச்சல்

இப்போது காய்ச்சல் எல்லோரையும் ஒய்வு எடுக்கவைக்கும் கொஞ்சம் அச்சப்பட்டால் ஆளையே படுக்கவைத்துவிடும் காய்ச்சல் வந்த உடனே உணவு திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் அல்லது உணவு மறுத்தல் செய்யலாம் .இந்நேரங்களில் காய்ச்சி ஆறவைத்து வடிகட்டிய நீரையே பயன்படுத்த வேண்டும் உணவுப் பிரியர்கள் எனின் காரம் இல்லாமல் மிளகு பொட்டு காய்ச்சிய அரிசி கஞ்சி எடுக்கலாம் அப்படி இரண்டு நாளைக்கு எடுக்க காய்ச்சல் போயே போச்சு
இந்த காய்ச்சலுக்கு பின் எளிமையான உணவுத் திட்டம் தேவை காரத்தையும் புளியையும் குறைக்க வேண்டும் .

அடுத்த பதிவில் புதிய செய்திகளுடன் சிந்திப்போம்

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...