ஜனவரி 29, 2011

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ? வாழமுடியுமா ? முடியும் என்பதே ...

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ?
வாழமுடியுமா ? முடியும் என்பதே ...


பழந்தமிழர்களின் அறிவு வியப்படைய வைக்கக்கூடியது என்பது நாம் அறிந்தது . பழந்தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்? வினாக்குறி எழுகிறதல்லவா விடைதேடுவோம் .
தோரயமாக பழந்தமிழர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வியலும் எனது எமது சிறிய அறிவிற்கு படுகிறது .

காரணங்களை தேடுவோம்

பழங்கலங்களில் எல்லாம் பொதுவாக இருந்தது . தனியுடைமை காலமாக அப்போது இருக்கவில்லை .இயற்கையாக விளைந்த உணவுகளை முறையாக உண்டு வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் உலகில் முதலில் தோன்றிய இனம் என்ற வகையில் இருந்திருக்கலாம் . சித்தர்களின் காலம் என்பது நிலக்கிழாரிய காலகட்டம் .அதற்கும் முன்பாகவே சிந்துவ்ளி காலங்களிலேயே தமிழர்களின் அறிவு மரபு விரிந்து இருந்தது என்பது நாம் அறிவோம் . இந்த காலங்களில் தோன்றிய மருத்துவம் சித்தர்களின் கூறிய மதிநுட்பம் கடுமையான அர்பணிப்பு போன்ற கரங்களினால் நம் சித்தமருத்துவம் செழுமை அடைந்தது .

அறவியலும் அறிவியலும்

உலகினுக்கே அறிவியலை வழங்கியவர்கள் நம் பழந்தமிழர் என்பது நம் அறிந்ததுதான் . சித்தர்களின் அளப்பரிய உழைப்பினால் தம்மையே அற் பணித்துக்கொண்டு மக்களுக்காக கடுமையாக உழைத்தார்கள் . இந்த காலங்களில் தான் மனிதனின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை கல்பமருந்து களினால் செழுமையாக்கி மனிதத்தை மூப்பில் இருந்து காத்தனர் . அப்படிப்பட்ட கல்ப மருந்துகள் நூற்றி எட்டு என வகுத்தனர் . இந்த மருந்துகள் மனிதனை நோய் இன்றி வாழ வைத்தது நீண்ட நாட்களுக்கு நோய் இன்றி வாழ்ந்தனர் . இந்த காலங்களில் மனிதன் இராசயனங்களை கண்டிருக்கவில்லை அனால் சித்தர்கள் கடுமையான இராசயனங்கலையே முறையாக தூய்மை படுத்துதலின் காரணமாக மருந்துகள் ஆக்கி மனிதத்தை வழவைத்தனர் .

300 ஆண்டுகள் வாழ்வது முடியுமா?

மனிதன் 300 ஆண்டுகள் வாழமுடியுமா என வியப்படையலாம் மருத்துவர் வீரபாகு என்பர்
ஒருகணக்கு ஒன்றை கட்டுகிறார் பார்போம்.பிறந்த முயல் மூன்று மாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோட தொடங்குகிறது , அதன் அகவை இருபது
மாதம் . பிறந்த ஆடு ஆறுமாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோடுகிறது அதன் அகவை பத்து ஆண்டுகள் . ஒரு பசு கன்று ஈன்று ஒருஆண்டில் பூப்பு எய்தி கன்று ஈனுகிறது அதன் அகவை இருபது ஆண்டுகள் . இந்த மாதிரி பிறந்து பதினைந்து ஆண்டுகளில் பூப்பு எய்தும் மனித இனம் இருபது மடங்கு வாழமுடியும் தானே பழங்கால மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க இயலும்தனே ?
எல்லாம் சரி
மனிதன் 300 ஆண்டு வழவியலுமா?

வாழமுடியும் எங்ஙனம் எனில் இயற்கையாக மனிதன் வாழ தொடங்க வேண்டும் . கண்டதை எல்லாம் கண்ட நேரங்களில் தின்பதை நிறுத்தி
இயற்கையோடு இணைந்த வழக்கைமுறையை கடைபிடிக்க வேண்டும் . அது என்ன முறை அடுத்து காண்போம் .
இது குறித்த விமர்சனங்களை siddhadhaya@gmail .com மின் அஞ்சல் செய்க .

அடுத்த எமது இடுகை காதல் என்பது ... காதல் என்பதை இன்றய இளைஞ்சர்கள் எப்படி புரிந்து
கொடிருக்கிரார்கள் . இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த இடுகை ...
நோய் வெல்வோம் நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator

ஜனவரி 24, 2011

சிறுநீரக கற்கள்


சிறுநீரக கற்கள்

சித்தமருத்துவர்கள் அரச உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகத்தை குறிப்பிடுவார்கள் . இதன்பணி அவ்வளவு மகத்தானது. இது அவ்வளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டால் அவ்வளவு எளிதில் சீராவதில்லை .தலையில் தடவிக்கொள்ளும் மயிர் சாயம் முதல், கடின வீரியம் கொண்ட இரசாயன மருந்துகள், சாராயம் இவைகள் எல்லாமே சிறுநீரகத்தை கேடுஅடைய செய்யக் கூடியன .

சிறுநீரகம் மிகவும் மேன்மையானது . இது அவரை விதை வடிவில் மனிதனின் இடுப்புக்கு கீழ்பகுதியில் பத்து செமி நீளம் , ஆறு செமிஅகலம் , இரண்டரை செமி கனத்தில் இருக்கும். இதனுள் பத்து இலட்சம் சிறுநீர்வடிப்பிகள் உண்டு. இவற்றின் வேலைஉடலில் உள்ள இரத்தத்தை
துய்மை யாக்குவதுதான் . அதாவது வடிகட்டும் பணி , அரத்தத்தில் உள்ள தேவை இல்லாத நீரையும் தேவையில்லாத உப்புகளையும் பிரித்தெடுப்பதுதான். ஒருவரின் சிறுநீரின் அளவு அவரின் உணவு மற்றும் அருந்தும் நீர் ஆகியவற்றின் அளவின்படி மாறுபடும் .

சிறுநீரக கற்களின் வகைகள்

நாம் உண்ணும் உணவு பருகும் நீர் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுநீரக கற்கள் உண்டாகியது .சுன்னசத்து (கல்சியம் )ஆக்சலேட்டுகள் , பாசுபேட் , யூரிக் அமிலம் ,சிசுடைன் ,
போன்ற வகை சிறுநீரக கற்கள் தோன்றுகிறது . இவைகள் சிறுநீரகத்தில் , சிறுநீர் குழாயில்,சிறுநீர் பையில் , சிறுநீர்த்தாரையில் என நோய்க்கு தக்கபடி உண்டாக்கலாம் .

இந்நோய்க்கான அறிகுறிகள்

@ விலாப்பக்கத்தில் விட்டுவிட்டு வலி
@ சிறுநீர் கழிப்பதில் சிரமம்
@ சிறுநீர் குறைந்து வெளியேறல்
@ கக்கல் (வாந்தி ) உண்டதால்
@ தொடை இணைப்பு , தொடை யில் , அடிவயிறு , ஆண்குறி , பெண்குறி போன்ற இடங்களில் வலி உண்டாகலாம் . சிறுநீர் குழாயில் கள் இருந்தால் இங்கு வலி தோன்றலாம் .

நோய் காரணங்கள்
@ நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் ,
@ மயக்கப் பொருட்கள் (மது ) அருந்துதல் பழக்கங்களினால் .
@ முறையில்லாத சம சீரில்லாத உணவு .,
@ போதிய நீர் அருந்தாமை பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்கள் அருந்துதல் .

தீர்வுகள்

நோய்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும் . முறையில்லாத உணவுகளை நீக்குக .
சிறுநீரகத்திற்கு எரிச்சல் ஊட்டும் உணவுகள் நீக்குக . புளிப்புத்தன்மை , அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக. மது , ஊறுகாய் , வெள்ளரி , தக்காளி , பசலை , கோசு, காலிபிளவர் ,போன்றவை நீக்குக . இறைச்சி, பன்னாட்டு நிறுவன மென்பானங்கள் நீக்குக.

கல்சியம் , மக்னீசியம், பசுபெட் ,கார்பநேட்டுகள், சத்துகள் கொண்ட உணவுகள் மிகையாக எடுப்பது போன்ற காரணங்களினால் உண்டான கற்கள் எனின் அந்த உணவுகளை நீக்குக .
யூரிக் அமிலத்தால் உண்டான கற்கள் என்றால் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக .
தண்ணீர் மூன்று முதல் நான்கு லிட்டர் அளவிற்கு நாளும் அருந்துக . தண்ணீரின் தன்மையை சோதித்து அறிந்து கொண்டு செயல்படுக சிலவகை கற்கள் தண்ணீரில் கலந்துள்ள மினரல் களினாலும் கற்கள் தோன்றலாம் என கண்டறியப்பட்டு உள்ளது .
துளசி யுடன் தேன் கலந்து உண்க இது சிறுநீரகத்திற்கு சக்தியளிக்கும் .
இளநீர் , பதநீர், மோர் , பார்லி நீர் , வெந்தயம் நினைய வைத்த நீர் அருந்துக.
பூண்டு , கருணை தேவை எனின் முள்ளங்கி நீக்குக .
சைனசு உணவுகள் நீக்குக
காபி , தேயிலை , நீக்குக .
சாக்லேட் , ஐசுகிரீம் நீக்குக. .
காரணங்களுக்கு ஏற்றபடி தக்காளி, கொய்யா, பேரிச்சை , முந்தரி , வாதுமை, பட்டாணி , நீக்குக .

ஆசனபயிற்சி கள்

சிறுநீரக கற்கள் சிக்கலுக்கு புஜங்காசனம் ,தனுராசனம் ,முக்தாசனம் , அலாசனம் ,உத்திதான் பாதசனம் செய்க .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம் More than a Blog Aggregator

ஜனவரி 18, 2011

சிறு நீராக செயலிழப்புகள்




சிறு நீராக செயலிழப்புகள்
இன்றைய அவசர வாழ்க்கை முறை மனிதனை பாடு படுத்துகிறது . முறையில்லாத
உணவு முறை நோயாளி யாக்குகிறது எதை எப்படி திண்பது எவருக்குமே
தெரிவதில்லை . எங்கேதேடுவது வாழ்வை ? விடைதெரியாமல் வீணடிக்கிறோம் .
இருக்குமிடத்தை காணுவதற்கு சிரமப்படுகிறோம் . அனால் தேடிநோமில்லை
.
பழமைமறா பண்பாட்டைத் தேடுவோம்

எங்கும் ஓடி ஒழிந்துவிடவில்லை மனித வாழ்வு மண்ணில் புதையலாக
கிடக்கிறது தொடுவோம வாருங்கள் .
இந்திய புள்ளிவிவரம்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1 .5 இலட்சம் பேர் மிக மோசமான சிறுநீரக
கோளாறினால் பதிக்கப்
படுகின்றனர் . இவர்களில் மூவாயிரத்தைநூறு போர் மட்டுமே மாற்று சிறுநீரகம்
பெற முடிகிறது .
மாற்று சிறுநீரகம் கிடைக்காதவர்கள் டயாலிசீஸ் செய்ய வேண்டியது கட்டாயம் .
வாரத்திற்கு மூன்று முறை செய்யவேண்டி வரும் இதற்க்கு ஆகும் மருத்துவ செலவு
மிகுதி இந்த அதிகப்படியான மருத்துவ செலவினால் பத்தாயிரம் பேர் மட்டுமே
டயாலிசீஸ் செய்து கொள்ளுகின்றனர் . பெரும்பாலோர் நோவுடன் மடிகின்றனர்
என்கிறது 23 திசம்பர் 2010 புதிய தலைமுறை இதழ்

முறையில்லாத உணவும் சரியில்லாத வாழ்க்கைமுறையும்

இன்றைய வழக்கை முறை விரைவை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது . இதில் தன் வழ்வைபற்றி துளியளவும் நினைப்பதில்லை . விரைந்தோடும் நோக்கில் கிடைத்தை உண்டு செரிக்கவேண்டும் என நினைக்கின்றனர் . நம் மனித உடல் என்பது இரும்பினால் செய்யப்பட்டதில்லை .
மாறாக சதையும் எழும்பும் ரத்தமும் கொண்டதாகும் . எனவே இரசாயணம் கலந்த உணவு பழக்கங்கள் மனிதனை பாழாக்க கூடியன எனவே நம் உணவு இயற்கையானதா இரசாயணம் கலக்கப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும் . நாம் இயற்கையானது என எண்ணிக்கொண்டிருக்கும்
உணவுகள் எல்லாம் இன்றைய விரைவு உலகம் நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறது . வாழைபழம் ஒன்றை எடுத்துக் கொள்வோம் பச்சை வாழைபழம் போலவே இருக்கும் அனால் இப்போது மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது இதை பழுக்கவைக்க இரசாயணம் கலக்கப் படுகிறது அப்படி பழுக்கவைக்கபடுவதால் விரைந்தும் நல்ல வண்ணத்திலும் கிடைக்கிறதாம். இவற்றால் சிறுநீரகம்
விரைந்து செயலிழக்கும் என்கிறது ஆய்வுகள் . இன்றய துரித உணவுகள் சிறுநீரகத்தை மட்டுமல்ல புற்று நோயையும் உண்டாக்கும் என்பது எத்தனைபேருக்கு தெரியும் ?
சிறிய சிறிய நோய்களுக்கு எல்லாம் வீரியமிக்க மருந்துகளை உண்பதால் சிறுநீரகம் கெடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . முறையான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்
.
கலப்படங்கள்

இன்று மனித நேயமும் உண்மையும் மரித்துப்போன தனியுடமை அமைப்பு முறையாகிவிட்டது . எனவே இங்கு கிடைத்தவரை எல்லாம் நமதே என்ற எண்ணம் கொண்டுவிட்டனர் . எனவே இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்று வந்துவிட்டது . உண்மை , நேர்மை என்பதெல்லாம் கேலிக்குரியவனாக ஆகிவிட்டது . முறையான உணவு பழக்கமும் இயற்க்கைசர்ந்த உணவுமுறைகளும் மனிதனை நோவில் இருந்து விடுவிக்கும் .கலப்பட பொருட்களை இனங்கண்டு அவற்றை எல்லோரும் எதிர்க்க கற்போம் . ஒரு தீமை நடக்கிறது என்றால் அவற்றை அறிவுத்துறையினர் இனங்கண்டு சொன்னால் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும் . இல்லை என்றால் காட்டுமிராண்டி கூட்டமாக எல்லோரும் மடிந்து போவது தவிர்க்க இயலாது . சிந்திப்போம் விழிப்போம் . நோய் வரின் தூய தமிழ சித்த மருத்துவத்தை கடைபிடிப்போம் நோய் வெல்வோம் .
வாழ்க தமிழர் கலைகள்More than a Blog Aggregator

ஜனவரி 12, 2011





அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் வணக்கங்கள் .

இந்நாளில் தமிழர்களின் வாழ்வியலுக்காக எமது
௧. நோய் இல்லாமல் வாழ சித்தமருத்துவம் .
௨. விடியலை உடைப்போம்
படித்து மகிழ்வோம்
போளூர் தயாநிதிMore than a Blog Aggregator

இன்றைய பெண்களின் பாலுணர்வு குறைபாடுகள்


இன்றைய பெண்களின் பாலுணர்வு குறைபாடுகள்

இன்றைய இளம் பெண்களிடம் மட்டுமல்லாது பலரிடத்தும் பாலுணர்வு கோளாறுகள் தோன்றி வழக்கை வேதனையாகிறது . இவற்றிற்கான காரணங்கள் பெரும்பாலும் முறையில்லாத வழ்க்கைமுறைதான் எனலாம். இவற்றினை முழுமையாக களைந்து கொள்ளவிட்டால் . இந்த சமுகம் நோயாளியாகும் என்பதில் பிழையில்லை .
இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லோரிடத்தும் பாலியல் தொடர்பான , பிழயான கருத்துகளையே கொண்டு சேர்த்து இருக்கிறது . முறையா கல்வி என்பது அப்பட்டமாக விளக்குவதல்ல . காரணம் பாலியல் கல்வி என்பது பற்றி இன்னும் முழுமை செய்யப்படாமை பிழையனதல்லவா ?
பாலியல் கல்வி நம்மை பொறுத்தவரை வேறுவிதமாக சிந்திக்கிறோம். வளர் இளம் பருவத்தில் (டீன் ஏஜ் )
மென்மையாக பெற்றோரும் அல்லாத ஆசிரியரும் அல்லாத . கல்விக்கே தொடர்பில்லாத ஒரு அமைப்பாக தனித்தனியே , ஆண் , பெண் குழந்தைகளுக்கு தனித்தனியே முறையான வாழ்க்கைகல்வி வழங்க வேண்டும் என்கிறோம் . இவற்றை பின்னர் ஆய்வோம் .
பாலியல் அதாவது பாலுணர்வு குறைபாடுகள் ஆண்களை போலவே பெண்களையும் தாக்கி உணர்வு சிக்கலை உண்டாக்கி குழப்பத்தை ஏற்படுத்துகிறது . என்கிறது ஒரு புள்ளிவிவரம் .
பெண்களிடம் காணப்படும் பாலுணர்வு குறைபாடுகள்

தாம்பத்திய உறவில் மகிழ்ச்சி உண்டாகாமை
தாம்பத்திய உறவின் மீதான கசப்பு
தாம்பத்திய உறவின் மீது ஆர்வம் இன்மை .
இவைகள் பலரிடத்தும் காணப்படுவதால் இல்வாழ்வில் பெரிதும் வெறுப்படைகின்றனர் .
இதனால் பலரின் வாழ்வு கேள்விகுறி ஆகிறது என்பது உண்மை . இன்று கணவன் மனைவி களுக்கிடையே நடைபெறும் சிக்கல்கள் இது பற்றியதே . அதாவது ஆண் உணர்வு குன்றி இருந்தாலும், அல்லது பெண்கள் உணர்வு குன்றி இருந்தாலும் அங்கு சந்தேகம் என்ற பேய் ஆட்டிபடைக்க தொடங்கு கிறது வேருயாருடனோ தொடர்பு உள்ளது என தவறான காரணத்தை கற்பித்துக்கொண்டு
வாழ்க்கையினை கெடுத்துக் கொள்ளுகிறார்கள் இவற்றை நீக்க வேண்டியது நல்ல மருத்துவர்களின் கடமையல்லவா ?
காரணங்கள்

சர்க்கரை நோய்
மிகையான உடற்பருமன் .
குழந்தையில் உண்டான கசப்பான நினைவுகள் .
உளவியல் குறைபாடுகள் .
கருப்பை நீக்கத்தின் போது .
புகை , மது , பழக்கங்கள் .
கருத்தடை மாத்திரைகள் அல்லது அது தொடர்பான காரணங்களினால் ..
பிற தீராத நோய்களினால் .
ஏக்கம், வெறுப்பு, பதற்றம் , போன்ற காரணங்கள் .
திருமணவாழ்க்கை பற்றிய புரிதலின்மை .
இப்படி காரணங்கள் தொடருகிறது முறையான காரணங்களை கண்டறிந்து நோய் நீங்கி நீடுவழ இந்த பதிவு .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம்More than a Blog Aggregator

ஜனவரி 06, 2011

ஆண்மைக் குறைவிற்கான கரணங்கள்




ஆண்மைக் குறைவிற்கான கரணங்கள்

இலைமறை காயாக இருந்த பாலியல் தொடர்பான செய்திகள் பெருகிவரும் தொழில் நுட்ப வளர்ச்சியினால் எல்லா மக்களையும் விரைந்து சென்றடைகிறது . பலஇடங்களில் இவற்றால் குழப்பங்களே உண்டாகிறது எனலாம் . இந்த பாலியல் குறைபாடுகளுக்கு கரணங்கள் அறியப்படாமையால் பல குடும்பங்களில் சண்டைகள் , மோதல்கள் , பிரிவுகள் , கொலைசெய்யும் (கணவன் அல்லது மனைவியையே )அளவிற்கு வெறித்தனங்கள் உண்டாகிறது .

பழங்கால முறைகள்

எமது மருத்துவ நடுவத்திற்கு வரும் பலரும் கேட்கப்படும் வினாவில் பெரும்பாலும் பாலியல் தொடர்பாக கேட்கப்படும் கேள்விகளே மிகையாக உள்ளது . காரணம் இந்த சமூக அமைப்பு முறையான பாலியல் கல்வியை கொடுக்கமைதான் எனலாம் . பழங்காலங்களில் பாலியல் தொடர்பாக பெரும் இன்பத்தை சிற்றின்பம் என்றனர் . அப்போது இல்லறம் நல்லறமாக இனித்தது . இப்போது ?
பழங்காலங்களிலும் பிணக்குகள் இருந்தன அனால் அவை குறளாசான் வள்ளுவர் கூறியதுபோல்
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

சண்டைக்கு பின் பெற்ற இன்பம் இனித்தது நன்கு சுவைத்தது இதற்க்கெல்லாம் அவர்களின் உணவு முறையும் வாழ்க்கை நடைமுறைகளும் துணைநின்றது . அப்போது கணக்கு வழக்கில்லாமல் குழந்தை பெற்றுக்கொண்டனர் அப்போது அவர்கள் உடல் நலனுடன் நூறாண்டு வாழ்ந்தனர் .


நஞ்சே இன்றைய உணவு

முன்பெல்லாம் மாடு புல் தின்று பால்கரந்தது இன்று சுவரொட்டியையும் இரசாயணம் கலந்த தீவனங்களையும் தின்று பால்கறக்கிறது அவைகள் மட்டும் அல்லாமல் பால்சுரப்பிகளைத்தூண்டும் ஊசிபோட்டு பால் கறக்கின்றனர் அவைகளினால் நோய்தானே? பழங்காலங்களில் கைகுத்தல் அரிசியும் , கம்மங்கஞ்சியும் , கேழ்வரகு களியும் உடலை தின்னென்று வைத்திருந்தனர் இப்போது ? இயற்கையாய் விளைந்த கீரைகளும் காய்களும் பழங்களும் மனிதனை நோயின்றி பாதுகாத்தன அவர்கள் நூறாண்டுகள் நோய்இல்லாமல் வாழந்தனர் .

மட்டைதீட்டிய சத்தே இல்லாத அரிசி , இரசாயன கலப்பு மிகுந்த உணவுகள் இவைகள் மனிதனின் உடலை கூறுபோடவைக்கிறது. இப்படிப்பட்ட உணவுகளை உண்ணும் போது முப்பதை தொடும்போதே மூப்பைத்தொடுகிறனர் .இன்றைய முறையல்லாத உணவுகளும் இரத்த நாளங்களையும் நரம்பு மண்டலங்களையும் செயலிழக்கசெய்த்து கிழடுதட்டிபோகின்றனர்
குறுகிய காலத்திலேயே சர்க்கரைநோய் , இரத்த அழுத்தம் , சிறுநீரக கோளாறுகள் என நோய்களின் படடியல் தொடருகிறது

இரத்த அழுத்தமும் சிறுநீரக நோய்களும்

இந்த நோய்கள் இப்போது எல்லோராலும் எளிமையாக பேசவைக்கிறது இதனால் அரச உறுப்புகளான கண் , இதயம் , சிறுநீரகம் போன்ற உறுப்புகள் கெட்டு மனிதனை பாடாய்படுத்துகிறது . இந்த கனங்களினால் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உட்பட்ட மனித இனம் நோயாளி யாகிறது .

உயர் இரத்த அழுத்தத்தினால் பலரும் பாதிக்கப்பட்டு எந்தவித மருத்துவமும் செய்து கொள்ளாதவர்களிடத்தே பாலியல் குறைபாடுகள் தோன்றுகிறது .

இந்த நோய்கள் இரசாயன மருந்து எடுத்துக்கொண்டாலும் பாதிக்கிறது என்கின்றனர் . பட்ட மேல் படிப்பு படித்த ஆங்கில முறை மருத்துவர்கள் .

உளவியல் ரீதியான குறைபாடுகள் இருப்பின் இதன்தக்கம் அதிகம் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது . நரம்பு மண்டலம் தளர்ச்சி அடைந்து இருந்தாலும் இன் நோயின் தாக்கம் அதிகமிருப்பதாக கணக்கிடுகின்றனர் .

இறுக்கமான ஆடைகளையும் , இரவில் அதிகமாக கண்விழிக்கிரவர்கள் , முறையான உணவு பழக்கம் இல்லாதவர்கள் குழந்தையில் பல்வேறு நோய்கள் பதிக்கப் பட்டவர்கள் இப்படி ஆண்களை பாலியில் தொடர்பான தாக்குதலுக்கு ஆளாகின்றனர்

தீர்வுகள் சில

இந்த உலகம் நமக்கத்தான் உதிக்கிறது என்ற எண்ணம் வேண்டும் ஏனெனில் மனிதனின் உளவியல் தான் இந்த பாலில் குறைபாடுகளுக்கு பொரித்தும் காரணமாக இருக்கிறது .

முறையான அகவைல்திருமணம் செய்து கொள்க .
முறையான உணவுத்திட்டம் வகுத்து கொள்க .
நோய்களை உண்டாக்கும் கவலைகளை விட்டொழியுங்கள் .
எல்லைபாலியல் வேட்கை கொள்ளாதீர்கள் .
பாலுறவு கட்சிகளை அறவே தவிருங்கள் .
பாலுறவு கட்சி படங்கள் பலநிலைகளில் , பலநாட்கள் எடுக்கப்பட்டதாகும் . அவைகளில் உண்மை இல்லை .
நீண்ட நேரம் பாலியல் இன்பம்வைத்து கொள்வது என்பது மரணத்தை வலிந்து அழைக்கவே செய்யும் .
தேவை இல்லாத இரசாயன கலப்பு களையும் இரசாயணம் கலந்த உணவு களையும் எடுக்க வேண்டாம் அவைகள் உயிர்பற்றலை கொடுக்கும் .

எந்த நோய்க்கும் நீங்கலாக மருந்து எடுக்க வேண்டாம் அதற்கானவர்களிடம் செல்க .

இன்பம் நீடிக்க வேண்டுமா
இன்பம் நீடித்ததல் என்பது நீண்ட நாட்கள் வாழ்ந்து பாலியல் இன்பம் துய்பதை சொல்கிறோம் .வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்

உணவில் சரிவிகித உணவு தேவை , சரிவிகித உணவு என்பது நார்சத்து 30 விழுக்காடு கொழுப்பு சத்து 30 விழுக்காடு சர்க்கரை சத்து 40 விழுக்காடு முறையே தானியங்கள் 40 கொழுப்பு உணவுகள் 30 விழுக்காடு காய்கறிகள் 30 விழுக்காடு என முறையான தரமான உணவுகளை இரசன கலப்பில்லாமல் உண்க .

சித்த மருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம்

பாலியல் தொடர்பான பல கோணங்களில் உங்கள் முன் வந்து கொண்டே இருக்கும் .More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...