டிசம்பர் 12, 2011

மூலிகை மருந்துகள் எல்லா நோய்களையும் நீக்குமா ?



சோற்று கற்றாழை

மனித உடல் கோடான கோடி நூண்ணியசெல்களின் தொகுப்பு என்பதை நாமறிவோம் . இந்த கோடானுகோடி நுண்ணிய செல் அமைப்புகள் தன்னைத்தானே சிதைத்துக் கொண்டு பல செல்களாக மாற்றம்பெற்று மனிதத் தொழிற்சாலை தான் அச்சில் அதற்கான முழுமையான ஆற்றல்களை பெற்று அது நீடித்துவாழ்நாள் முழுவதும் நோய் இல்லாத வாழ்வு வாழ்வதற்கான கட்டமைப்பை உண்டாக்குகிறது
.
"மறுப்பது சாவை மருந்தென லாமே " என திருமூலர் பதிவு செய்கிறார் , அதாவது மனிதத்தை சாவில் இருந்து மீட்பதற்கான மருந்துகள்தமிழ மண்ணில் கொட்டி கிடப்பதாக இந்த உலகிற்கு அறிவிக்கிறார் , இப்படி பட்ட உயரிய அதே சமயம் அரிய மருத்துவமுறை உலக நாகரீகம் எல்லாம் தோற்றம் கொள்ளுவதற்கு முன்பாகவே சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இன்றும் சித்தமருத்துவத்தில் பயன் படுத்தும் மருந்துப் பொருட்களை பயன் படுட்த்தியமைக் காண குறிப்புகள் காண கிடைகிறது ,

இப்படி பட உயரிய மருத்துவ முறை இருந்தும் தமிழன் நோயில் வீழ்ந்து கிடக்கிறான் என என்னும் போதுதான் வேதனை கொள்ள நேரிடுகிறது தமிழை, அதன் சிறப்பை , அதில் பொதிந்துள்ள அறிவியலை இன்னும் தமிழன் அதன் முழுமையான கோணத்தில் உணரவே இல்லை . தமிழல் ஒன்று படாத ஒரு இனமாக இன்று கிடக்கிறான் .இப்படிப்பட்டவனை தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடவா முடியும் .அதுதான் இவ்வளவு சிறப்புகள் இருந்தும் தமிழர்கள் பயன் படுத்திக் கொள்ள வில்லை என்பதால் வேதனை பட வைக்கிறது.

ஆங்கில மருத்துவத்தை எடுத்துக் கொள்வோம் இந்த மருத்துவ முறை தமிழ மருத்துவத்தில் இருந்து கடன் பெற்று கிபி நான்காம் நூற்றாண்டில் தோற்றம் கொண்டவையாகும் இந்த மருத்துவம் இயற்கையாக அல்லாமல் இதளியங்களை (இரசாயணம் ) முதன்மையாக கொண்டு அவற்றையே மருந்தாக்கி இயற்கையோடு இணைந்த மனித உடலுக்கு நோய் நீங்க மருந்தாக அளிக்கப்படுகிறது.இது மனிதனை மனிதனாக அல்லாமல் பொறியாக ( இயந்திரமாக ) பார்த்தமையின் காரணமெனலாம் .

மேலை நாட்டு சூழல் ஆண் ,பெண் ,குழந்தைகள் என எல்லோரும் குடித்து கூத்தடிக்கும் சூழல் காரணம் ஆண்டு முழுவதும் பனிபொழிவும் கடுமையான மழையும் இருக்கிற சூழல் உடலை சூடேற்றி கொள்ள அவன் அதை நாட வேண்டியிருந்தத்து அதேபோல தனது மருத்துவத்தையும் இரசாயன மூலத்தை கொண்டான் தமிழ முந்தைய அறிவர்கள் பற்றிய முழுமையான புரிதலை பெறாமை அதனால் தான் அவன் ரெய்ன் ரெய்ன் கோ அவே என அவன் குழந்தைக்கு சொல்ல சொல்லி கொடுக்கிறான் தமிழ அறிவர்கள் இங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அதாவது ஆண்டு முழுவதும் கடுமையான வெப்பத்தினால் வாடுகிறோம் எனவே மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என தன்னுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தந்தனர்

உறவுகளே இங்குதான் நாம் உங்களை சிந்திக்க வேண்டுகிறேன் அதாவது இப்படிப்பட்ட அரிய கலைகள் நம்தமிழமண்ணில் விளைந்து கிடக்கிறது இதை தமிழன் பயன் படுத்திக் கொள்ள வில்லையே என்ற எண்ணம் நம்மை தமிழர்களை பழிக்க செய்கிறது. உலகே வியந்து பார்க்கும் அறிவியலும் மெய்மமும் நமக்கானது இதை விடுத்து வரட்டுத்தனத்தில் வீழ்கிறானே என சலிப்படைய வைக்கிறது.இயற்கையான வளர் சிதை மாற்றங்கள் metabolism மூலம் மனித உடல் தன்னைத்தனே புதுபித்துக் கொள்ளுகிறது செயற்கையான இதளியம் (இரசாயணம் )உடலில் வந்து சேருவதை எதிர்த்துப்போராடுகிறது . தொடர் வருகையால் அதையும் எதிர்த்துப் போராடுகிறது .

மூலிகை மருத்துவம் என்பது எளிமையான மென்மையான (mild ) அணுகுமுறை கொண்டது மனித உடலில் தேங்கியுள்ள முறையில்லாத கிழிவுப்பொருளை நீக்கி கோடிக்கணக்கான செல்களுக்கு புத்துயிரூட்டி குறிப்பிட்ட நோவில் இருந்து விடுவிக்கிறது அதுமட்டும் அல்லாமல் மற்ற நோயில் இருந்தும் விடுவிக்கிறது .பின்னர் வெளியேறுகிறது .

சித்தர்கள் மெய்மங்கள் (தத்துவங்கள் ) உடலியங்கியலை (physiology ) . நூட்பமாக ஆய்வு செய்து மருத்துவனுக்கு(phsician ) உள்ள கடமையை கடுமையாக பட்டியலிடுகிறது .அதாவது

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

நோயை முழுமையாக ஆய்வு செய்து நோய் வந்த வழியையும் ஆய்ந்துவந்த நோயை முறையான மருந்துகள் மூலம் நீக்கும் வழியை ஆய்வு செய்து, கொடுக்கும் மருந்து நோய்கண்டவனுக்கு எந்த பின் விளைவையும் உண்டாக்க கூடாது என குறளாசான் கூறுகிறார்
அடுத்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

என்கிறது வள்ளுவம் அதாவது மருத்துவ நூலை கற்றவன் நோய்கண்டவனின் அகவை,நோயின் அளவு நோய் வந்துள்ள கலாம் என நோயின் முழுமையான நோய்க்கான காரணங்களை ஆய்ந்து மருத்துவம் அளிக்க வேண்டும் என பதிவு செய்கிறது.

பன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழர்கள் அறிவியலில் மருத்துவத்தில் உயர்ந்தும் சிறந்தும் இருந்தனர் என்பதை

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பபால்நாற் கூற்றே மருந்து .

என நோய்கண்டவன் , நோய் தீர்க்கும் மருத்துவன் , செவிலி , மருந்து என தனித்தனி துறைகள் தமிழ மருத்துவத்தில் இருந்துள்ளமை இதன்வழி அறியலாகிறது ஆக தமிழ மருத்துவம் பன்னெடுங் காலத்திற்கு முன்பே சிறந்தும் உயர்ந்தும் இந்த உலகிற்கு வழிகாட்டியாக இருந்தமை தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா ஆக தமிழ மருத்துவம் எல்லா நோய்களையும் நீக்கும் மனிதனை நோயில் இருந்து விடுவிக்கும் என்பது நூறு விழுக்காடு உண்மைதானே

சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்

நாங்கள் மீண்டும் காட்டு வாழ்வுக்கு ஆயத்தமாகி விட்டோம் எப்போது மின்சாரம் வரும் வராது என தெரியாதது போலவே எமது இடுகையும் ....More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...