ஆகஸ்ட் 22, 2011

ஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்





ஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வியக்கத்தக்க கலைகளை நம்முன் கொடையாக வழங்கி சென்று உள்ளார்கள் அதை இன்று பல மேலை நாடுகள் ஆய்வுகள் என்ற பெயரில் தமதாக்கி கொண்டு வருகிறது தமிழர்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என்றுதான் புரிய வில்லை . சரி செய்திக்கு வருவோம்.இந்த எண்ணெய் கொப்பளித்தல் நமது முன்னோர் தொண்டைபகுதி( கண்ட ) தூய்மையாக்கல் என்ற பெயரில் வழங்கி வந்த ஒரு முறையாகும் .

எண்ணெய் கொப்பளித்தால்

இந்த எண்ணெய் கொப்பளித்தளுக்கும் நோய் நீங்குதளுக்கும் என்ன ஒற்றுமை என வினவாலாம் பல்வேறு வகையில் மனிதனின் நோய்களை நீக்கு கிறது என்பதை மேலை நாடுகள் தமது ஆய்வுகளின் வழி காட்டுகிறது இதை நாம் முறையாக பழகி நாளும் செய்து வந்தால் பல்வேறு நோயில் இருந்து விடுபடலாம் என உறுதியாக கூறலாம்.

எண்ணெய் கொப்பளித்தால் செயல்முறை


தூய்மையான நல்லெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அளவு காலையில் வெறும் வயிற்றில் வாயில் ஊற்றி வாயின் எல்லா பகுதிகளுக்கும் செல்கிற மாதிரி குறைந்தது இருபது இருபத்தைந்து நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளித்து கொண்டே இருக்க வேண்டும்.இந்த எண்ணெய் வெண்மை நிறம் வருகிற வரையில் கொப்பளிக்க வேண்டும் மஞ்சளாக இருக்க கூடாது அதாவது நாம் கூறும் இந்த இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்கள் கொப்பளித்தால் நாம் கூறும் வெண்மை நிறத்தை நமது உமிழ்நீர் ஆக்கிவிடும் .

இந்த வெண்மை நிறம் வந்தததும் உமிழ்ந்து விட்டு வாயை நன்குதண்ணீர் கொண்டு தூய்மை செய்து கொண்டு பின்னர் பல் துலக்கலாம் இந்த செயல் செய்யும் பொது நமது தொண்டைக்குழியில் தங்கி இருக்கும் அழுக்கு களும் தேவையில்லாத நஞ்சு களும் வெளியேறுவதாக ஆய்வில் தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் கொப்பளிப்ப்பதால் உண்டாகும் சிறப்புகள் .

இந்த காலங்களில் எந்த உணவு கட்டுபடோ வேறு ஏதும் செய்து கொள்ளத் தேவையில்லை முறையான உணவு திட்டத்தை பழகினால் ஏன் நோய் வரப்போகிறது என நீங்கள் கேட்பது நமக்கு புரிகிறது இப்படி செய்வதால் எந்த பின் விளைவும் இல்லை என்பது இனிப்பான செய்தி சிலர் எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை (இப்படி பட்டவர்கள் காலையில் கழிவறைக்கு செல்கையில் செய்யலாமே நான் மாலையில் தான் மலம் கழிக்கிறேன் என்றால் நாம் பொறுப்பல்ல )என்பார்கள் இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதாவது வேறு யாருக்காகவோ செய்வது போல இருக்கிறார்கள் அவர்கள் அல்ல நமதுஇலக்கு நோயின்றி இருக்க வேண்டும் என எண்ணுகிறவர்கள் நமது இலக்கு. இந்த எண்ணெய் கொப்பளிப்ப்பதால் பல்வேறு நோய்கள் நீங்குவத மருத்துவ வல்லுனர்கள் கூறு கின்றனர் .புற்று நோய் கூட கட்டு படுகிறது என்கிறார்கள்

.எண்ணெய் கொப்பளித்தல் (Oil pulling ) செய்வாதால்

நல்ல உறக்கம் உண்டாகிறது
பற்கள் வெண்மை நிறமடைகிறது.
வாய் புண் நீங்குகிறது.
வாயு தொந்தரவு நீங்குகிறது.
தசை நோய்கள் விலகுகிறது
மார்பு நோய் நீங்கு கிறது.
நெஞ்சக தடுமன் (சளி )நீங்குகிறது
இரைப்பிருமல் நீங்குகிறது .
முதுகு வலி குறைகிறது .
இதய நோய்கள் நீங்குகிறது .
பல் நோய்கள் விலகுகிறது
காதுநோய்கள் விலகுகிறது
கண் நோய்கள் விலகுகிறது
குடல் தொடர்பான நோய்கள் விலகுகிறது
நீண்டகால இரத்த நோய்கள் விலகுகிறது.
மூச்சு குழல் நோய்கள் விலகுகிறது
நரம்பு நோய்கள் விலகுகிறது
தோல் நோய்கள் விலகுகிறது
கழுத்து பிடிப்பு நோய்கள் விலகுகிறது
மூல நோய்கள் விலகுகிறது
காச நோய்கள் விலகுகிறது
சிறுநீரகம் தொடர்பான சிக்கல் கள் நீங்குகிறது .
பக்கவாத நோய் விலகுகிறது.
வலிப்பு நோய்கள் விலகுகிறது
புற்று நோய் கட்டிகள் ,மாதவிடாய்
ஒழுங்கு இல்லாமை நோய்கள் விலகுகிறது.
இப்படி பலவேறு நோய்கள் விலகு கிறது இது அறிவியல் அடிப்படையிலானது தான் எனவே முறைப்படி இதை செய்து நோய் வெல்வோம் .

இந்திய அரசே தமிழக மீனவர்களை துன்புறுத்தும் சிங்களவன் மீது நடவடிக்கை எடு இல்லையென்றால் தமிழ மீனவர்களுக்கு, ( சிங்களவனுக்கு கொடுத்த கருவிகளை )தமிழக மீனவர்களுக்கும் கொடு .

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்


More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...