அக்டோபர் 28, 2010

மயிர் உதிர்தல் ஏன் ?


மயிர் உதிர்தல் காரணங்களும் தீர்வுகளும் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்
தலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனே உதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .
தலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .
எப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .
பொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்
அதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்
நோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .
பழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .
நோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .
இயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .
வாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்து விட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .
இப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா ? யாருக்கு வெளிச்சமோ
தலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்
சீயக்காய் - ஒருபங்கு
மணிப்புங்கன் - கால்பங்கு
கடலைபருப்பு - ஒருபங்கு
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம்
செம்பரத்தை - தேவையான அளவு
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு
சடமான்சில் - ஐம்பது கிராம்
என தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் .
தலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி
தலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்
கண்களையும் காக்கிறது
தலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .
வாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .
இரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .
உப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .
உப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .
வாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .
பொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை
பயன்படுத்தி நீக்கிக் கொள்க .

இலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்
முசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடுவழ்வோம் .
More than a Blog Aggregator

அக்டோபர் 23, 2010

போதையை ஒழி புகையை அழி





  • போதையை ஒழி
  • புகையை அழி


இன்று மயக்கம் தரும் போதை பழக்கம் அரசின் துணையோடு எல்லோருக்கும் பழக்கமான ஒன்றாக ஆகிவிட்டது .இதனால் அடுத்த கட்ட தாலைமுறை முற்றிலும் நோயாளியான சமுதமாக மாறிப்போக வாய்ப்புண்டு
எனவே இன்றே இலைய சமூகத்தினை அவற்றில் இருந்து மீட்டெடுக்க வண்டிய நிலையில் உள்ளோம் . போதை பழக்கத்தினால் எவருக்கேனும் நலம் உண்டோ ?

ஒட்டு மொத்த சமூகத்திற்கே அது கெடுதலை செய்கிறது . அப்படி பட்ட செயலை நாம் ஏன் தொடரசெய்ய வேண்டும் . யாருக்கு இதனால் பலன் . குடிப்பவருக்கா ?
அல்லது இந்த சமுகத்திற்கா ? யாருக்குமில்லை தொடுவானேன் ?


மயக்கப் பொருட்களினால் (குடி ,புகை ) வரும் கேடுகள்
.
௧.தொண்டை புண் வருகிறது .

௨. நுரையீரல் இறுக்கம் ஏற்ப்படுகிறது .

௩.காசநோய் தோன்றுகிறது .

௪. குருதி நாள இருக்கநோய் தோன்றுகிறது .

௫. குருதி (இரத்த ) சோகை தோன்றுகிறது .

௬.கல்லீரல் சிதைவு ஏற்ப்படுகிறது .

௭. காமாலை தோன்றுகிறது .

௮. நரம்பு தளர்ச்சி தோன்றுகிறது .

௯. கை ,கால் நடுக்கம் ஏற்ப்படுகிறது .

௧0 .உடல் சோர்வு தோன்று கிறது .

௧௧ .எதிலும் பற்றின்மை ஏற்ப்படுகிறது .

௧௨. பசி இன்மை தோன்றுகிறது .


௧௩ .நாவில் சுவை இன்மை தோன்றுகிறது .


௧௪ .கண்பார்வை குறைபாடு தோன்று கிறது .

௧௫. குத்திருமல் தோன்றுகிறது .


௧௬.உணவு வழிஅழற்சி தோன்றுகிறது .

௧௭ .தலை மயிர் உதிர்தல் , நகம் சிதைவு உண்டாகிறது .

௧௮ .கை ,கால் களில் குருதி ஓட்டத் தடை ஏற்ப்பட்டு கருமைநிறம் தோன்றல் ,உணர்வின்றி போதல் போன்றவை ஏற்ப்படுகிறது .

௧௯. ஆண்மை குறைபாடு தோன்றுகிறது , பெண்களுக்கு பெண்மை குறைபாடு தோன்றுகிறது .

௨0 .நினைவாற்றல் படிப்படியே குறைகிறது .


இப்படி பலநோய்கள் நாம் வீட்டு கதவை தட்டி அழைகிறது அது மட்டுமல்லாமல் நாம் பணமும் செலவாகிறது . பலரிடம் நன்மதிப்பும் கெடுகிறது
தொடர்ந்து பத்து ஆண்டுகள் மது அருந்துவதால் நுரையீரல் புற்று, கல்லீரல் புற்று , குருதிபுற்று , என நோய்கள் தொடர்ந்ந்து வந்து அலைகழிக்கிறது .அதனால் குடிப்பவர்கள் , புகை பிடிப்பவர்கள் அதை விட்டு ஒழித்து விடலாமே
நீங்க என்ன நினைக்கின்றீர்கள் ? எனக்கு எழுதுங்களேன் ..

அடுத்து : ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறதுMore than a Blog Aggregator

அக்டோபர் 20, 2010

மூலிகைகளின் அறிவியல்

மூலிகைகள் என்றதும் தமிழகமும் , சித்தர்களும் தான் நினைவுக்கு வருவார்கள் .தமிழ மருத்துவத்தின் மூலவர்கள் சித்தர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .
இவர்கள் மண்ணையும் மொழியையும் பொன்னே போல் காத்தனர் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடிஓடுகிறது . நோயை நீக்கும் அளவற்ற மூலிகைகளும் மருந்துகளும் தமிழ் மண்ணில் விரிந்திருக்கிறது . இந்த நுட்பங்களை பருண்மையாக ஆய்வு செய்த சித்தர்கள் இம் மூலிகைகளை இனம் கண்டு மக்களுக்கு கொடையாக சித்தர்கள் வழங்கினர் . தமிழரின் மெய் அறிவியலை கண்ட மேலை நாட்டினர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்குள்ள அறிவியலையும் ,தத்துவங்களையும் கற்க
வந்தனர் .இங்குள்ள அறிவு செல்வங்களை கற்று சென்றது வரலாறு சுட்டிக் காட்டுகிறது அனால் பாவம் தமிழகத்து தமிழர்கள் தொலைகாட்சி பெட்டியை விட்டு நகரமருக்கின்ற்றனர் . நோயாளி யாக மடிய தவம் கிடக்கின்றனர் .
மூலிகைகளின் பயனை பெறுகின்றவர்கள் மிகவும் குறைந்த விழுக்காட்டினரே .
மீதம் உள்ளோர் திரையரங்குகளில் தங்களின் தலைவனை தேடியழிகிண்றனர்.
தமிழகத்தில் உள்ள மூலிகைகள் உலக சிறப்பானவை கரணம் இந்த மண்ணும் , இயற்க்கை சூழலும் தான் . உலக அளவில் நடத்தபப் பட்ட ஆய்வில்
தரமான மூலிகைகளின் விளைச்சலுக்கு ஏற்ற இடம் தமிழகம் என கண்டறியப்பட்டுள்ளது .இதனால் தான் உலக அளவில் தமிழக மூலிகைகள் சிறப்பான இடத்தை பெறுகின்றன .
ஒவ்வொரு மூலிகைக்கும் தனியான மருத்துவ குணம் உள்ளதை சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டனர் . குறிப்பாக வடக்கிருந்து வரும் வேர்களுக்கு தனியான குணம் உள்ளதாக கண்டறிந்தனர் . சித்தர் களின் காலங்களில் நுண்ணிய கருவிகள் இல்லை என்பது நாம் அறிந்ததே இப்படி தங்களின் மெய்யறிவினால் மக்களுக்கு கொடையாக வழங்கியதுதான் நாம் சித்த மருத்துவம் .
இந்த மூலிகை களை பதப்படுத்தும் காலம், பதப்படுத்த வேண்டிய முறை போன்ற வற்றை தெளிவாக்கியுள்ளனர் . இவைகள் நாம் பின்பற்ற வேண்டியே தவிர வேறல்ல .
மனித உடலை வளி , அழல் , ஐ என பகுத்த சித்தர்கள் உடல் வகைக்கு ஏற்ற மூலிகை களையும் இனம் கண்டனர் . ஒரேநோய்க்கு உடல் வகைக்கு ஏற்ற வகையில் மருந்துகள் மாறுபடும் என்பது சித்த மருத்துவ கோட்பாடு . சித்த மருத்துவம் சிறுவித உற்பத்திமுறையை போதிக்கிறது . அதாவது பரந்துபட்ட மக்களின் நலன்களை கொண்ட மருத்துவம் என்ற கண்ணோட்டத்தை பெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பபடுகிறது . அப்போத்துதான் மருத்துவமும் செழுமையடையும் மக்களும் வரைவில் நோயில் இருந்து விடுபடுவார்கள் என்ற கண்ணோட்டத்தில் சித்தர்கள் இப்படி பகுத்தனர் .
நோயை நீக்கிக் கொள்ள வேண்டுமெனின் அதக்காக முறையான மருத்துவரை நடவேண்டுமே யன்றி வியாபாரியை நாடி நாம் சென்றுவிடக்கூடது அப்போதுதான் சித்தமருத்துவம் செழிக்கும் .
மூலிகைகள் முறைப்படி பறித்து , நிழலில் உலர்த்தி மரஉலக்கையால் இடித்து துணியில் வடிகட்டி பயன்படுத்த வேண்டும் . இந்த மூலிகைகள் மூன்றில் இருந்து ஆறுமாதங்கள் வரை முழுமையான பலனை தரும் .
இந்த அறிவியலை கண்டு நோய் வென்று நீடுவழ்வோம் . .........


அடுத்து பெண்களின் அந்த மூன்று நாள்சிக்கல் களும் தீர்வுகளும் ....More than a Blog Aggregator

அக்டோபர் 05, 2010

எரியோம்பல் (ஆசனபயிற்சி) செய்வோம் .




எரியோம்பல்
(ஆசனபயிற்சி) செய்வோம் இன்றைய பரப்பான உலகத்தில் எரியோம்ம்பல் செய்யவது முதல் எதற்கும் நேரமின்மை என்றே எல்லோராலும் சொல்லப்படுகிறது . இப்படி நாம் பறந்து கொண்டிருந்தால் மனிதன் நோயாளியாகி மடிவான் . இதற்கு என்னவழி நாம் பழங்கால அறிவர்கள் கற்றுத்தந்த பாடம்தான் எரியோம்பல் செய்வது .





எரியோம்பல் (ஆசனபயிற்சி ) செய்வதால் :
@ . அகவை கூடுகிறது
.
@ நினைவாற்றல் பெருகுகுகிறது
.
@ உளம் செம்மை யடைகிறது
.
@ ஆண்மை பெருகுகிறது , பெண்களுக்கு பெண்மை மெருகேறுகிறது
.
@ நோயற்ற வாழ்வை தருகிறது .

@ உடலை அழகாக ஆக்குகிறது
.
@ பிணிகளை நீக்குகிறது .

@ சோர்வையும் சோம்பலையும் ஒழிக்கிறது
.
@ உள்ளத்திற்கு அமைதியை தருகிறது
.
@ நீடித்த இளமையை தருகிறது .

@ தேவை இல்லாத சதையை குறைக்கிறது
.
@ இதயம் ,நுரையீரல் ,சிறுநீரகம் தூய்மையடைகிறது .

@ உடலுக்கு சக்தியை தருகிறது
.
@ அறிவு கூடுகிறது .

@ குருதி ஓட்டத்தை சீராக்குகிறது
.
@ உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது .

@ சினத்தை குறைக்கிறது . அமைதிப்படுத்துகிறது
.
@ சலனம் இல்லாத உளத்தை தருகிறது
.
@ சிந்திக்கும் ஆற்றல் பெருகுகிறது .

@ வெற்றிக்கு இட்டுக்கொள்கிறது
.
@ நோய் எதிர்பற்றலை ஊக்குவிக்கிறது
.
@ நரம்புகளை உறுதியாக்குகிறது
.
இவைகள் குறிப்பிட்ட பலன்கள் . முறையாக நாளும் எரியோம்பலை செய்ய மனிதன் அடையப்போகும் பலன்கள் எண்ணிலடங்கா.எனவே முறையாக எரியோம்பல் செய்வோம். எரியோம்பல் செய்வதற்கென முறைகள் உண்டு .அப்படிசெய்தல்தான் . முழுமையான பலனையும் பின் விளைவுகளையும் தவிர்க்கமுடியும் .
எரியோம்பல் முறையாக செய்யும் முறைகளை தொடர்ந்து பார்ப்போம்..........
அழகு வேண்டுமா? More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...