ஏப்ரல் 09, 2012

பன்றிக் காய்ச்சல்(swing flu) பூச்சாண்டி ... ....




          இன்றைய  மக்களின்  அறியாமையை  பயன்படுத்தி  சில்லறை  சேர்க்கும்  சிலர்  , சில  நிறுவங்கள் எப்படி வேண்டுமானாலும்  அச்சுறுத்தி  சில்லறை  சேர்க்கின்றனர் இதில் மக்கள்படும்
பாடு  சொல்லி  மாளாது மருத்துவ  மனைகளும்  எல்லாமே  இந்தவரிசையில்  வைக்க வேண்டியதுத்தான்  மக்கள்தான்  அறிவை  பயன்படுத்துவதில்லை  அறிவைத்தேடி  செல்வதில்லை   என்றாகிய பின்னர்  பன்றிக் காய்ச்சல்  என்ன  தரமான  தமிழர்களின்  வாழ்க்கைமுறையை , உணவுமுறையை  குறை சொன்னால் கூட  அதை அப்படியே  நம்பிவிடுவான்

  இன்றைய  நிலையில்  பன்றிக்  காய்ச்சல்  அறிகுறியான கடுமை
யான  காய்ச்சல் , உடல்வலி, மூக்கில்  இருந்தும் கண்ணில்  இருந்தும்  நீர்வடிதல் , போன்ற  அறிகுறிகளை  கொண்டு  இந்த நோய் வருகிறது என மக்களை  அச்சுறுத்துகிறது   அனால்  இந்த பன்றி  காய்ச்சலுக்கு  சித்தமருத்துவம்  என்ன தீர்வை சொல்லுகிறது கொஞ்சம்  சிந்திப்போமா?
       காய்ச்சல்  என்பது  மனிதனுக்கு  உண்மையில்  வரவேண்டிய  ஒன்று  அது  வராவிட்டால்தான்  நாம்  அச்சப்பட வேண்டும் . சுர் + அம் = சுரம் .சுர்  என்றால்  சுடுதல் , அம்  உடையது    சுரம் சுடுதலை  உடையது   .


                    சுரநிலம்   போலச்  சுடுநோய்ச்     சுரமென் 

                      றுரைப்பர்    செரிக்லத் துண்டா    மனநலம் 

                    நரம்பின்   வழியே   நண்ணி   நுடம்பில்  

                      பெருகும்   வெப்பம்   பிழைசெய்  நோய்  .

     உயிர் அனல் தன்னிலை விட்டு மாறிப் புற உடலில் பரவுமாயின் அது சுரம். 
காய்ச்சல் வெம்மை  என்று  பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. சுரத்தை தன்வழிச்  சுரம் 52  வகை யாகவும். புறவழிச்  சுரம் 12  வகையானது எனவும்  மொத்தம்  64  வகை  சுரம் உண்டு  என சித்தமருத்துவம்  பட்டியல் இடுகிறது . இதில்  பன்றிக்  காய்ச்சல்  என்று  அழைக்கப்  படும்  சுரத்தை  நஞ்சு (விச) சுரம்  என சித்த மருத்துவம் பகுக்கிறது.

     இது வாதாதீ  முக்குற்றங்கள்  தம்தம் அளவில் மிகுந்தேனும்  குறைந்தேனும்  இருந்தாலும்  காலச்சூழளினாலும்  இந்த நஞ்சு  சுரத்தை  உண்டாக்குகிறது  இந்த சுரங்களை மாறல் சுரம்  முறைசுரம்  குளிர் சுரம் , சீத  சுரம், விட்டுவிட்டுவரும்   சுரம் என பலவகையில்   அழைக்கிறனர் .

      குறிப்பாக நோய் கண்ட  நிலையில்  தீணியை குறைக்க வேண்டும் . கழிபேரிரையான் கண்  நோய்  என்பார்  வள்ளூவர்  தலைசிறந்த மருத்துவரும் அல்லவா வள்ளுவர் ? அதனால்  நுட்பமாக  கணிக்கிறார் . இந்த  சுர நோயில் 
தீணியை  குறைக்க வேண்டும் என கூறி இருந்தேன் .  உண்ணா நிலை  கடைபிடிக்க வேண்டும்  அப்போது உடல்  தன்னிலையடைந்து நோய் வெல்ல இயலும் . சித்தமருத்துவம்  அறிவை  அறிவியலை  போதிக்க  கூடியது  எனவே 

                               பட்டினி பெருமருந்து 
                              சிறு உணவு  பெருமருந்து 
                             உற்ற  சுரத்திற்கும்  உறுதியம் வாயுவிற்கும் 
                       அற்றே  வருமட்டும் அன்னத்தை  காட்டதே  


      என்ற பழமொழிகள் வழி  நம்  அறிவுக் கண்ணை  திறக்க முயல்கிறது  . நாம் தான்  கண்ணையும்  தெறக்க மாட்டோம்  அறிவையும் பெறமாட்டோம் என வீணே   அழிந்து  கொண்டு  இருக்கிறோம் . சுரம் தீரும் வரை  கடின உணவுகளை  நீக்க வேண்டும்  எளிமையான  எளிதில் செரிக்கும் உணவுகளை  அரிசி  நொய் கஞ்சிகளை  உணவாக கொள்ள வேண்டும்  அப்படி கடைபிடிக்கப்  பட்டால் பன்றி   காய்ச்சல்  என்ன  வேறு  எந்த  பெயரிட்டு  இந்த நச்சு  சுரங்களை  அழைத்தாலும்  அந்த சுர நோய்கள்  நம்மைவிட்டு  அகலும்  .

 இந்த பன்றி  காய்ச்சலுக்கு உரிய சித்தமருத்துவ மருந்துகள் :

நெல்லி ,தான்றி, வேப்பீர்க்கு , சீந்தில் தண்டு , மல்லி , முத்தகசு , ஆகியவற்றை  7 .5  கிராம் அளவிற்க்கு தட்டிப் போட்டு  எடுத்து தேவையான  நீர்விட்டு  காய்ச்சி     குடிக்க லாம் .


ஆடாதோடை , நில வேம்பு, பேய்புடல் ,சீந்தில்தண்டு ,பேய் பீர்க்கு  வேர்ப்பட்டை  ,வெட்பாலை  அரிசி  வகைக்கு 7 .5  கிராம் அளவிற்க்குநன்கு  தூளாக்கி   நீரில்  இட்டு  காய்ச்சி  அருந்தலாம்  நொய் விலகும் 

பன்றி  காய்ச்சல்  மட்டுமல்ல  எந்தவிதமான  காய்ச்சலாக இருந்தாலும்  அதை  நீக்கும் வழியை  கண்ணுச்சாமியம் என்ற  பெருநூல் 

                        பாரே சிறுதேக்கு  பற்பாட  கற்தேவ 
                       தாரே  நன்னா  ரீச்சீந்தில்  கோட்டம் - பேராய 
                      சுக்குப்  புடல்  பேயும் சுத்த  சுனைக்கன்  செறியும் 
                           பக்குவ  முத்தக் காசும்  பண்பு .

     என கூறுகிறது  சிறுதேக்கு , பற்பாடகம் ,தேவதாரு , நன்னாரி ,சீந்தில் ,கோட்டம்  சுக்கு பேய்புடல்  கோரைகிழங்கு ,அனைத்தையும் வகைக்கு 7 .5  கிராம் அளவிற்க்கு தட்டிப் போட்டு  எடுத்து  இரண்டு லிட்டர்   நீர்விட்டு  காய்ச்சி நாலில் ஒன்றாய்  குறுக்கி  வடிகட்டி     குடிக்க லாம் . நோய விலகும்  உலக அளவில்  உயர வேண்டிய தமிழன் கூனிக் குறுகி நிற்க வேண்டாம்  தமிழன்  விழிப்பனா?தன் கலைகளை  மீட்ப்பானா?   காப்பானா?


  சித்தமருத்துவம்  காப்போம்  நொய் வெல்வோம் .



   
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...