டிசம்பர் 16, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் 6



    உறவுகளே  வணக்கம் .

    குறிப்பாக  உண்மையில்  எனது குமுகம்  மிகவும்  சிறப்பான  ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும் என்பதே எமது  எண்ணமாக  இருக்கிறது  மற்ற  வலைப்பூக்களைப் போல அல்லாமல்  மீண்டும் மீண்டும்  நாம்  கேள்வி கேளுங்கள்  கேள்வி கேட்கும் பக்குவத்தை  வரவழைத்துக் கொள்ளுங்கள்  என பதிவு செய்கிறோம் . ஒருமாணவன்  என வைத்துக் கொள்ளுவோம் .அவனுக்கு  நாளும்  உணவு கொடுங்கள்  நான் பணம் கொடுத்துவிடுகிறோம்  என சொல்லி குறிப்பிட்ட பணம் கொடுத்து இட்டு சென்றபிறகு  அந்த மாணவனின்  உணவு  தேவை பற்றி  தெரியாத நிலையில் முதலில் நான்கு  இட்டலி  கொடுத்தல் அதில் மூன்றை எடுத்துக் கொண்டு  மீதம் ஒன்றை வைத்து விட்டால்  உணவு கொடுப்பவர் என்ன செய்வர்  மூன்று இட்டலிகள் போதும் என நினைத்து  அவருக்கு  மேலும் உணவு வழங்குவது பற்றி  சிந்திக்க மாட்டார்கள் . அனால்  நான்கையும்   தின்றுவிட்டால்  மேலும் உணவு கொடுக்க தீவிரமாக சிந்திப்பார்கள் . அதுபோல தான்   உண்மையில் என சமூகத்திக்கு   எதாவது செய்ய வேண்டும் என வாழ்கை பற்றியும் உண்மையான மற்றம் வேண்டும் என   சிந்திக்கிறோம்  கேள்வி கேளுங்கள்  என கோருகிறோம்  எங்கிருந்தும் பதில் இல்லை என்பதால்  நமது பதிவில்  ஏனோதானோ  என  முறையான குறிப்புகளை  எடுத்துக்  கொள்ளாமலே பதிவு செய்கிறோம்   சரி  கொஞ்சம்  கேள்வி கேட்க பழகுங்களேன்  காசு எல்லாம் ஒன்றுமில்லை . சரியா  இனி.....

        இந்த பதிவில் திருமூலர்  குழந்தைப்பேறு பாற்றி என்ன பதிவு  செய்கிறார் என பார்ப்போம்....
பாய்கின்ற  வாயு  குறுக்கில்  குறளனனாம்
பாய்கின்ற  வாயு வலையின்  முடமாகும்
பாய்கின்ற  வாயு நடுப்படில்  கூனாகும்
பாய்கின்ற  வாயு மாதாவுக்கு இலை  பார்க்கிலே.

   ஆண்  பெண் இருவரும்  கூடும் போதுமூச்சுக் காற்று  அளவிற்கு குறைந்தால்  பிறக்கும் குழந்தை குறுகிய  வடிவமாக இருக்கும். அதேபோல மூச்சுக் காற்றானது  இளைத்தவன் மூச்சுக்  காற்றுபோல வெளிப்பட்டால் பிறக்கும் குழந்தை முடமாக இருக்கும். அதேபோல மூச்சானது மேற்க்கூரியதைபோல இல்லாமல் நடுவு நிலையாக இறந்தால் பிறக்கும் குழந்தை கூனுள்ளதாக இருக்கும் . இது ஆணுக்கே  அன்றி பெண்ணிற்கு அல்ல   என்கிறார்.

இன்னொரு இடத்தில் ...

மாதா  வுதரம் மலமிகில் மந்தனாம்
மாதா  வுதரம் சலமிகுள் ஊமையாம்
மாதா  வுதரத்தில்  இரண்டொக்கில்  கண்ணில்லை
மாதா  வுதரத்தில்  வந்த குழவிக்கே .

  தாயும் தந்தையும் கூடும் பொது தாயாரின் வயிற்றில் மலம் மிகில்  துப்புரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால் பிறக்கும் குழந்தை  மந்தமாக பிறக்கும்  இதே போல சலமான சிறுநீர் துப்பரவாக கழியாமல் வயிற்றில் தங்கி இருந்தால்  பிறக்கும் குழந்தை ஊமையாக இருக்கும்  இரண்டு  வகையான கழிவுகளும்  சம அளவில்   இருந்தால் பிறக்கும் குழந்தை குருடாக்  இருக்கும் இது தாயின்  வயிற்றில்  தோன்றும் செய்கைக்கே என அறிக.......

ஆண்  பெண்  அலி இரட்டைப் பேறு

குழவியும்  ஆணாம் வலத்தது  ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது  ஆகில்
குழவியும் இரண்டாம்  அபான னெதுகில்
குழவியும் அலியாம்  கொண்ட காலோக்கில் .

 கணவன்  மனைவி இருவரும்  கூடுங்காலத்தில் வலது மூக்கின் வழியாக  உயிர்ப்பு  வந்து கொண்டு இருந்தால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும் .இதேபோல உயிர்ப்பு இடது புறமாக இருந்தால்  பெண் குழந்தையாக இருக்கும் .இவ்வுயிர் பிற்கு அபானன் எதிர்ப்பட்டு வந்தால் குழந்தைகள் ... அதாவது இரட்டைக்  குழந்தைகளாய்  இருக்கும் . இரு  மூக்கின் வழியாக இருந்தால்  குழந்தை அலியாக  இருக்கும் என்கிறார் .

அப்படியானால்  நன்றாக அறிவாளியாக அழகாக ... குழந்தை  பிறக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் என  கேட்க தெண்ற  வேண்டும்   தொன்று கிறதா   சரி நானே சொல்கிறேன் ....

கொண்ட  நால்வாயு இருவர்க்கும் ஒண்டிடில்
கொண்ட குழவியும்  கோமள  மாய்விடும் .
கொண்ட இவ்வாயு குறிப்பறிந்து இவ்வகை
கொண்டதும்  இல்லை கோலம்  உன்னதே .

 மருவிப் புணரும் காதலர்  இருவருக்கும் வருகின்ற உயிர்ப்பு ஒரே அளவகியதாய் இருக்க வேண்டும்  அங்கனம்   ஒரே  அளவு  கொண்டதாக இருந்தால்  பிறக்கும் குழந்தை  அழகும்  சிறப்புமாக பிறக்கும் என்கிறார்  .அவ்வாறு  இல்லாமல்  மூச்சுக்  குழன்று போனால்  பெண்ணின் வயிற்றில்  கரு  தங்கது  என கூறுகிறார். .

சரி மேலும் விவரம் அடுத்த பதிவில்  சிந்திப்போம் .....

சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .


More than a Blog Aggregator

டிசம்பர் 10, 2012

திருமணத்திற்கு ஆயத்தமாவோம் 5



    இந்த பதிவில் சில புள்ளிவிவரங்கள்  கொடுக்கிறேன்  என சொல்லிருந்தேன் . பார்க்காலாம் . இன்றைய தமிழ்  சமூக  வாழ்வியல் முறை  மிகவும்  மாறித்தான்  போய்  இருக்கிறது . எதிர்கால  நோயில்லாத  வாழ்க்கை பற்றி  சிந்திப்பதாக  தெரியவில்லை  முறையில்லாத உணவுமுறை  முறையில்லாத  வாழ்க்கைமுறை  ஆகியவற்றால்  மனித இனம்  நோயாளி ஆகிக் கொண்டு இருக்கிறது   என  எழுதினால்  எப்போதும்  நீங்கள்  எதிர்மறை  சிந்தனையுடன்  எழுது கிறீர்கள்  எனவே சலிப்படைய  வைக்கிறது  என்று  கூறுகிறார்கள்  உண்மைதான்  உண்மையை  சொன்னால் சலிப்படையவே   செய்யும் .

      இன்றைய  முறைதவறிய  வாழ்க்கைமுறை  இயற்கையில் இருந்து  முரண்பட்டு நிற்கிறது . வாரட்டுத்தனமான  வாழ்க்கைகளுக்கு  ஆசைப்பட்டு  இயற்கையை  வேருப்பதனால்  உண்டானது . செயற்கை வண்ணம் பூசப்பட்ட ... இயற்கையில் இருந்து  தவறிப்போய்   வெகுதொலைவுக்கு  வந்துவிட்டோம்  ஆகையால் தான்  மீண்டும்  நாம் இயற்கையில் இருந்து தொடங்க  வேண்டும் என்கிறோம்  இரசாயன கலப்பில்லாத  ஒரு இனிய  உலகை படைக்க  வேண்டும்  இப்போது பாருங்கள்  படித்தவர்கள்  பதவியில்  உள்ளவர்கள்  பணக்காரர்கள் இப்படி எல்லோருமே  உடலைப் பற்றியோ  முறைதவறிய  உணவு முறைபற்றியோ  கொஞ்சமும்  சிந்திப்பதில்லை  அதற்குதான்  நாம் அப்படி  எழுதுகிறோம்  கொஞ்சமாகிலும்  மாற்றம் . உண்டகட்டுமே என்றுதான் .

      திருமணம்  ஒரு புனிதமான  வாழ்க்கைப் பயணம் இதில் பயணப் படும் இரு உள்ளங்கள்  வாழக்கை என்ற கப்பலை எப்படி பயன்படுத்துவது  என்பது  தெரிந்து கொள்ளாமலே பயணிக்கத்  தொடங்கி  பயணத்திலேயே  பிரிந்து போகின்றனர் . காரணம்  வாழ்க்கை குறித்தான  முறையில்லாத  புரிதல் .முதலில்  எங்கு  எப்படி பயணம் செய்யப் போகிறோம்  எந்த  வாகனத்தைப் பயன்படுத்தப் போகிறோம்  என்பது பற்றியான  ஒரு திட்டமிடலை  வகுத்துக் கொள்ள வேண்டும் . இது  உறுதியான  இல்லறத்திற்கு  ஒரு தொடக்கமாக இருக்கும்  முறையான திட்டமிட்ட  தொடக்கம்  பாதி  வெற்றி என்பார்கள்  முறையான திருமணமோ  காதல் திருமணமோ  எதிர்கால வாழ்க்கை குறித்து  நிறைய பேசுங்கள்  என்கிறோம் .பேசி பின்னர்  இலவாழ்விற்கான  தாம்பத்திய  உறவுகள் குறித்தான  திட்டமிடலை  முறையாக  செய்க . எப்போது குழந்தைபேறு  எங்கு  என முழுமையாக எல்லாவற்றையும்  திட்டமிடுங்கள் .பின்னர்  இல்வாழ்க்கையை தொடங்குங்கள் .

       பாலுறவு  குறித்து  முறையாக  தெரிந்து  கொள்வது மிகவும் சிறந்தததே  காரணம்  இதில்தான் பலர் தவறி விடுகிறார்கள்  வாழ்க்கையையும் இழந்து விடுகிறார்கள் . குடும்பமும் சிதைகிறது. இல்லறமேர்க்கு புதியதில்  இல்லற இன்பம்  குறித்து தவறான புரிதலால்  சிக்கல் தோன்றுவதால் இங்கு  சரியான  புரிதல்  பெற  ஆற்றுப் படுத்துனரை  கலந்து  ஆலோசிப்பது  மிகவும் சிறப்பானதாக இருக்கும் முதலில் உணர்வு  அடிப்படையில்  கணவன் மனைவியாக  வாழத் தொடங்க வேண்டும்  பாலுறவில்  முதலில் முன் விளையாட்டுகள்  சிறப்பான இடத்தை  வகிக்கிறது  பழங்காலங்களில்  திருமண  விழா  நீண்ட  நாட்களை  கொண்டதாக  இருக்கும்  இரண்டு  வீடுகளுக்கு இடையேயான பாண்பாட்டு ரீதியான  வாழ்க்கை முறை உணவு முறை  நடத்தை முறை  இப்படி  மாற்றி மாற்றி  இரு வீடுகளுக்கும்  புது மண  தம்பதிகள் சென்று  தெரிந்து கொள்வதனால்  இரண்டு வீட்டு  பழக்க நடைமுறைகளையும் அறிந்து கொண்டனர்   அந்த   காலத்தில்  மணமுறிவுகள்  தோற்றம் கொள்ளவில்லை . இன்று அப்படி இல்லை  எனவேதான் பல சிக்கல்  இதை முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும் எனபதற் காகத்தான்  பதிவு செய்கிறோம் .

        குழந்தைபேறு வேண்டிய  நாள்களில் எப்படி இருக்க வேண்டும்  என்பதை  திருமந்திரம்  பதிவு செய்வதை பார்ப்போம் .
பய்ந்தது    முன்னைந்தொடிற் பார் ஆயுளு  நூறாம்
பாய்ந்தது  பின்னைந்தோடிற்  பார் வயது ஐம்பதாம்
பாய்ந்திடும்  வாயு பகுத்தறிந்து  இவ் வகை
பாய்ந்திடும்  யோகிக்கு பாய்ச்சலு  மாமே .

      அதாவது கணவனும் நமைவியும் தம்பதிய  உறவு கொள்ளும் பொது அன்றைய  மூச்சுக் காற்று  ஐம்பூதங்களிலும்  பாய்ந்து ஓடினால்  பிறக்கு குழந்தை  அகவை நூறு . அதனால் தான் குழந்திப் பெறுக் காண  திட்டமிடலில்  உள்ளம்  மிகவும் சலனம் அடையாமலும்  மிகையான பாலுறவு   வேட்கையினால்  இருக்கையில்  அது பிறக்கும் குழந்தையின்  ஆயுளையும்  அவனின்  எதிர்காலத்தையும்  அது பதிப்பு அடைய செய்கிறது . இந்த சூழலில் உள்ளமும் உடலும் பதட்டம்   அடையாமலும்  பொறுமையாகவும்  திட்டமிட வேண்டும் என்கிறது மருத்துவக்குறிப்புகள் .
 

     
More than a Blog Aggregator

டிசம்பர் 03, 2012

திருமணத்திக்கு ஆயத்தமாவோம் 4




      வணக்கம் உறவுகளே . உங்களின் அளப்பரிய பின்னூட்டங்கள்  என்னை  உண்மையில் வியக்க வைக்கிறது  எப்படி  தமிழர்கள்  அறிவிற்கு  அறிவியலிற்கு முக்கியத்துவம்  கொடுக்கிறார்கள்  உடலை எப்படி பேணி வளர்க்கிறார்கள் என  பார்க்கும் பொது மிகவும் மகிழ்வாகவும்  பாராட்டும் படியாகவும்  நோய் நீங்கி  எந்த மருத்துவ நடுவத்தையும் தேடாமல்  எளிமையான  மூலிகைகளைக் கொண்டு  நோய் நீங்கி  நீடு  வாழ்ந்து  வருவது குறித்தும் நோய் கொள்ளுவது குறித்து எல்லை  இல்லா  அம்கிழ்வைத்தருகிறது பாராட்டுகள்  இங்கு எல்லோரும் நல்லவர்களே  உண்மையில்  மது அருந்து  கிறவர்களும் புகை பிடிப்பவர்களும்  ஏன்  செய்கிறார்கள்  குறிப்பிட்ட அந்த தொழிலை மேற்க்கொல்லுகிறவர்கள் .... கொல்லு ... பிழைப்பு  நடத்த வேண்டாவா  நமது விஜய்  மல்லையா போன்றவர்களும்  itc  போன்ற  நிறுவனங்கள்   வளர வேண்டாவா  எப்படி சிந்திகிறார்கள்  பாருங்கள்   தமிழர்கள் எப்போதும் பரந்த உளப்பாங்கு  உள்ளவன்  எவனாவது பசி  என்று வந்துவிட்டால்  ஓடி சென்று  தான் பட்டினியாக இருந்தாலும் அவனுக்குப் போட்டு  இவன் பசித்து இருப்பான் . பாருங்க  இவன்  தமிழன் வரலாற்றில்  இரண்டு ஆயிரம் ஆண்டுகளாக  தமிழ நாட்டை  ஆண்டதாக  வரலாறே  இல்லை எவ்வளவு  பரந்த மனப்பான்மை கொண்டவன் தமிழன்  ஈழத்தில்  கொத்து கொத்தாக   கொன்றார்கள்  அமைதி  காத்தோம் ... காவிரி , முல்லைபெரியாறு , கிருஷ்ணா  தண்ணீர் தரவில்லையா  நாங்கள் வெக்கமும் பட மாட்டோம் வேதனையும் பட மாட்டோம்  எங்கள்  தலைவர்கள் எல்லோரும்   தமிழர்களுக்கு பெரும் தீங்கு  செய்தார்களா  யார் சொன்னது அவனை உடனே காட்டிக் கொடு  இப்படி எல்லா  வேலைகளையும்  நாங்களே  தமிழர்களே  தமிழர்களை  அழிப்பெம் ...

         சரி செய்திக்கு வருவோம்  முற்போக்கான  இரண்டு குடும்பம்  இந்த குடும்பங்களில்  இருந்து திருமணம்  இனிதாய்  முடிகிறது . எல்லாமே எளிமையாக  பின்னர்  மணம்  முடிந்து பிள்ளை வீட்டாருக்கு மிகப் பெரிய குறை  காரணம்  பெண் வீட்டில்  மணமகனுக்கு மணக்கொடை (வரதட்ச்சனை ) கொடுக்க வில்லையாம்   போகட்டும்  இந்த பெண் மிகவும் அறிவாளி  அனால்  கொஞ்சம்  யாரு பேச்சையும்  கேட்பதில்லை  உணவு முறை  பெண்ணின் வீட்டில்  உள்ளது மாதிரித்தான்   சமைப்பர்கலாம் இங்கு மாமனார் , மாமியார் , மைத்துனர்  கணவர்  இப்படி  எவர் உணவுப் பழக்கத்தை பற்றியும் கவலை கொள்ளுவதில்லை   உண்மையில் மிகவும் மகிழ்வாக இருந்த கூட்டுக் குடும்பம்  பிரிவை எதிர்  நோக்கி காத்தது  இருக்கிறது. இது முற்போக்கனவர்கள்  என கூறிக் கொள்ளுகிற குடும்பம்  இங்கே இப்படி என்றல்  சராசரி  குடும்பம் எப்படி இருக்கும் பாருங்கள் ....

     எதற்கு பதிவு செய்கிறேன் என்றல்  ஒரு குடும்பம் என்பது    கோவில் போன்றது  இனிமைதரக் கூடியது  மகிழ்வை ஊட்டக் கூடியது   எப்போது வீட்டிற்கு போவோம்  ஆனந்தத்தைக் களிப்போம் என  இல்லாமல்  வெறுப் பேற்றிக்  கொள்ளவா வீட்டிற்கு போவது ? இல்வாழ்வு  கணவனும் மனைவியும் மட்டும் அல்லமால்  அந்த கூட்டுக் குடும்பமே  மகிழ்வை  சந்தித்து  இன்பம் துய்ப்பதாகும்  இப்படி எல்லாம் தமிழ் நாட்டில்  படம் கூட  எடுப்பதில்லை  என்கிறார்கள்  பாவம்  விடுங்கள்   அதற்குதான்  உங்களுக்கான  குடும்பத்திற்கான  ஏற்றதான  மணப்பெண்ணை  தேர்ந்து எடுங்கள்  எல்லா வகையிலும் உங்களுக்கு பேருந்தும் படியான   குடும்பத்தை  உண்டாக்க முயலுங்கள்  இன்று  படித்தது படிகாதது  எல்லாம் பெண்களுமே  எளிமையையும்  முறையான வாழ்வையும்  வாழ்வதில்லை   தெரியவும் இல்லை  இதனால்தான்  மருத்துவத்தை மட்டும் அல்லாது வாழ்வியலையும்  இங்கு பேசுகிறேன் .... போதுமா ?

      உங்களுக்கு ஏற்ற வாழ்வை தேடும் போதுதான்  நோயில்லாத குடும்பத்தை உண்டாக்க இயலும்  உணவுகள் இயற்க்கை   சார்ந்து  சிறுதானியங் களுக்கு முக்கியத்துவம் அளித்து  குடும்பத்து உணவு முறைகளை முறைப் படுத்துங்கள் . நாட்டுப் புற காய்களுக்கு  முக்கியத்துவம்  அளியுங்கள் . உணவில் கீரைகள்  முக்கிய பங்கு வகிக்கட்டும்  இயற்க்கை  சார்ந்த  வாழ்க்கை முறை  நீடிக்கட்டும் . தானியங்கள் , கொட்டைகள்  போன்றவற்றை மிகையாக பயன்படுத்துங்கள் . வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்யுங்கள்  உங்களின் உணவில்  எள் , நிலக்கடலை  பேன்றவை  மிகையாக  இருக்கட்டும் .
வாழ்வு  இனிதாகும்  அடுத்த பதிவில்  சற்று விரிவான புள்ளி விவரங்களுடன் ....

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்


பிழைகள்  மிகுதிக்கு  பொறுத்து அருள்க ...

      
More than a Blog Aggregator

நவம்பர் 26, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் வரிசை 3

     இது தொடராக வரப்போகிறதா இல்லையா என புரிய வில்லை எனக்கு எங்களின் உறவுகளுக்கு சொல்வதற்கு நெறைய இருக்கறது காலச்சூழல்தான் . இல்லைஇன்றைய நிலையில் திருமண வாழ்வை முறையாக அணுகி வாழ்ந்து கட்டுகிறவர்கள் மிகசிலரே . வாழ்கை என்பது கணவனும் மனைவியும் குடும்பமும் சேர்ந்து வாழ்வது எத்தகைய இன்பம் நிறைந்தது .? இதை இந்த மூடத்தனம் நிறைந்த உலகம் புரிந்து கொள்ளவில்லை . கூட்டுக் குடும்ப வாழ்கை முறை நமக்கே யுரிது இன்று ஐரோப்பிய நாடுகளில் இது காணமல் போய் விட்டது சில நாள் களுக்கு முன் ஒரு நீதியரசர் (நீதிபதி இப்படி சொன்னதன புரியும் !) ஒருவர் எரிவளி நிறுவனம் ஒரே குடும்பத்தில் பல இனைப்புகள் உள்ளது எனவே தனியாக அடுப்புகள் இல்லை எனவே ஒன்றுக்கு மேற்ப்பட்ட எரிவளி இணைப்பை துண்டிக்கிறோம் என அறிவித்தமைக்கு கடுமையாக சாடி இன்றைய நிலையில் குடும்பங்கள் சிதறிக்கொண்டு இருக்கிறது இந்த்த சூழலில் ஒற்றுமையாக ஒரு குடும்பம் இருக்கிறது என்றல் பாராட்டாமல் இனைப்பை துண்டிப்பதா என கேட்டு மீண்டும் எரிவளி இனைப்பு கொடுக்க ஆணை பிறப்பித்தது உண்மையில் பாராட்டும் படி இருந்தது .

        இப்படிதத்தானே ஊக்குவிக்க வேண்டும் . உண்மையில் இன்றைய இளசுகள் எதையும் பொறுமையுடன் அணுகுவதில்லை நாம் சொல்லுவது இருபாலரையும்தான். எதிலும் விரைவு விரைவு ... எனவே வாழ்வும் விரைந்து கசந்து விடுகிறது பின்னர் மணமுறிவை நாடி போய் சீரழிகின்றனர் . இதற்கான காரணங்களை கண்டறிந்து சிக்கல்களை தீர்த்துக் கொள்ளுவதில்லை தீர்வு இருக்கிறது என புரிந்து கொள்ளுவதும் இல்லை . குடும்பம் வாழ்க்கை என்பது ஒரு கலையாக எண்ணப் பட வேண்டும் அதைவிடுத்து வரட்டுத் தனமாக வெறும் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு விட்டில் பூச்சிகளாகி மடிந்து போகின்றனர் ஏன் இப்படி நிகழுகிறது என்பதை சிந்திக்க மறுக்கின்றனர் . இந்த்த வரட்டுத் தனம்தான் மனிதனை சீரழிக்கிறது . இல்வாழ்வை எடுத்துக் கொள்ளுவோம் தாம்பத்திய உறவை வள்ளுவர் மலரினும் மெல்லிது காதல் ... என்கிறார் இன்று கண்மூடித்தனமான பாலுறவுக் காட்ச்சிகளை பார்த்து விட்டு அதை அப்படியே நடைமுறைப் படுத்தத் தொடங்கி விடுகிறார்கள் இதனால் நிலை குலைந்து போன ஆணோ அல்லது பெண்ணோ பாலுறைவே வெறுக்கிறார் அல்லது இல் வாழ்கைகை முறித்துக் கொள்ளவிழைகிறார் . இதுதான் நடைமுறையா என தெரிந்து கொள்ளுவதில்லை இன்று இவர்களின் வழிகாட்டி மட்டரகமான செய்தி ஊடகங்களும் தொலைகாட்சிகளும் தான். காதலை அறிந்து கொள்ள இலக்கியங்களை கற்க வேண்டும் அகநானூறையும் , குருந்தொகையையும் அணு அணுவாக கற்க வேண்டும் குறிப்பாக வள்ளுவத்தை இன்பத்துப் பாலில் கூறியுள்ள எல்லோ பாடல் களையும் இருவரும் சேர்ந்தே வாசிக்க வேண்டும் . அப்போதுதான் காதல் புரியவரும்.

        இல்வாழ்க்கைப் பற்றி ஒரு புரிதல் கிடக்கும் இன்று முதல் இரவிலேயே எல்லாவற்றையும் நுகர்ந்து விட வேண்டும் என எண்ணுகிறார்கள் பழங்காலத்தில் திருமண விழாவே பதினைந்து நாள் களுக்கு மேல் நடக்கும் காரணம் இருவரையும் முறையாக புரிந்து கொள்ள வேண்டும் எனற உயரிய நோக்கம்தான் அன்றி வேறல்ல. சில நண்பர்கள் தங்களது ஆண்மையை நிலை நாட்ட பொது மகளீரை நாடுவதுண்டு இது பணத்திற்கான நடத்தப் படும் ஒரு அழிவு விளையாட்டு அப்படி அவள் நடக்க வில்லை என்றால் அவளுக்கு வருவாய் கிடைக்காது வீட்டில் உள்ளவள் விலை மகளீர் அல்லவே வேண்டும் பொது முறையாக பாலுறவு துய்த்துக் கொள்ளலாமே என் இதை புரிந்து கொள்ளுவதில்லை இது குறித்தான விரிந்த விமர்சனங்கள் வரவேற்க்கப் படுகிறது விமர்சனங்கள் இல்லை எனின் கருத்துகள் இல்லை என இந்த தொடர் நிறைவு அடையும் .

 சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .







           தமிழீழ  போராட்டத்தில்  ஈகா  சாவடைந்த  போராளிகளுக்கு
எமது  இதயம்  கனிந்த  கண்ணீர் அஞ்சலி .




 
More than a Blog Aggregator

நவம்பர் 19, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம் -2

ஒரு பொறியாளர் பெங்களூருவில் வசிக்கிறார் நாங்கள் பெரும்பான்மை இப்படித்தான் இருக்கிறோம் அல்லது இருக்கிறார்கள் இதில் இருந்து விடுபட நீங்கள்தான் வழிசொல்ல வேண்டும் . அதை விடுத்து எங்களை சாடுவது சரியில்லை என்கிறார் . உண்மைதான் இந்த சமூகம் மாற்றம் பெற வேண்டும் என என்னும் போது நாம் உடனே பலனை எதிர் பார்க்கிறேன் பலன் இல்லை என்றால் நமது விமர்சனம் தொடருகிறது. முறையில்லாத உணவுப் பழக்கம் முறையில்லாத வாழ்க்கைமுறை இவைகள் மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லுகிறது . என சான்றுகளுடன் கோரினால் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அங்கு எமது விமர்சனம் தொடருகிறது..... இன்றைய முறையில்லாத உணவுமுறை முறையில்லாத வாழ்க்கைமுறை எல்லாமே கேட்டை செய்யக் கூடியது மயக்கப் பொருட்கள் (குடி,புகை ) இரண்டுமே உடலை அழிக்கக் கூடிய நச்சுகள் தீபாவளிக்கு நாட்டில் மிகவும் பின் தங்கிய மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டம் எட்டு கோடிக்கு மது விற்பனை எனக்கு இவர்களைப் பார்த்து மகிழவா தோணும் ? அதனால் தான் திட்டித் தீர்க்கிறேன் போதுமா நண்பரே . இந்த மயக்கப் பொருட்களினால் விந்தணுக்கள் பாதிக்கப் படுகிறது அடுத்த கட்ட தலைமுறை நோயாளியகித் தானே போகும் . நேரந்தவறிய முறையில்லாத உணவுகள் நோயைத்தனே உண்டாக்கும் ? நீங்கள் நோயாளியாக இருந்தால் மரபு வழியான உங்களின் விந்தணுக்களில் இருந்து உயிர் பெரும் குழந்தைகள் நோயாளியாகிப் போவார்கள் தானே ? நீங்கள் முறையில்லாது விழுங்கப் படும் மேலை நாட்டு மட்டரக உணவு உங்களை நோயாளியகத்தானே செய்யும் எனவே முறையில்லாத தவறான பழக்கங்களை விட்டொழிக்க வேண்டுகிறேன் உணவு முறையில் இயற்கை சார்ந்த உணவு தேவை ஒருவேளை சமைக்கப் படாத உணவாக இருத்தல் மிகவும் நல்லது கரணம் இந்த சமைக்கப் படாத உணவு குருதியை முழு தூய்மையாக்கும் . எனக்கு தேவை எதிர்கால தலைமுறையினர் நோயில்லாத இயற்கை சார்ந்து வாழ வேண்டும் என்பதே எனவே முதலில் உங்களில் இருந்து தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன் இன்று இயற்கை சார்ந்த உணவுப் பழக்கம் புத்துயிர் பெற்று வருகிறது இதே சிறப்புடன் முன்னெடுக்கும் பொது உண்மையில் அடுத்த சில தலை முறைகளில் பழந்தமிழரின் வாழ்க்கை முறையை கட்டமைத்து விடலாம் இயற்கையை மீட்டெடுத்து விடலாம் . பெண்ணோ அல்லது ஆணோ அழகாக இருக்கிறார்களா என பார்க்க வேண்டாம் உங்களுக்கு ஏற்ற வர்காளாக உங்களின் பழக்க வழக்கங்களுக்கு வாழ்க்கை முறைக்கு ஏற்ற வர்களாக இருக்றார்களா என்பதை கவனியுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை நோயில்லாமல் இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் . உங்களின் வாழ்க்கைத்துணை எதிர்காலம் குறித்த எந்த திட்டமிடலை வைத்து இருக்கிறார் என அறிந்து கொள்க . குழந்தைப் பேறு தொடர்பாக என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் கொஞ்சம் நாள் கழித்து அல்லது உடனே என்பதை முடிவு செய்க . உங்களின் அகவை குறைந்தது இருபத்தைந்திற்கு மேற்பட்டதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் . உங்களின் பேறு கல மருத்துவ முறை ஆங்கில அல்லது மாற்று மருத்துவமுறை பற்றிய தெளிவான முடிவு செய்க . உங்களின் மருத்துவரை முதலில் முடிவு செய்க . எல்லாவற்றிற்கும் இருவரும் முதலில் ஆற்றுப் படுத்துனர் (கவுன்சிலிங் ) பார்த்து முடிவுகள் செய்க . எதிர்காலம் குறித்து முழுமையான திட்டமிடல்கள் செய்க . அடுத்த இடுகையில் விரிவாக பேசுவோம் .... சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் More than a Blog Aggregator

நவம்பர் 12, 2012

திருமணத்திற்கு ஆயத்தம் ஆவோம்

இன்றைய இளசுகள் எதிர்கால வாழ்வை பற்றி எள்ளளவும் சிந்திப்பதில்லை முறையில்லாத உணவு பழக்கத்தாலும் முறையில்லாத வாழ்க்கை முறையாலும் தங்களுடைய வாழ்கையை வினக்குரியாக்கிக் கொள்ளுகிறனர் . இதைப் பற்றி சிந்திப்பதாகவும் தெரியவில்லை . இதை பொறுமையாக சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் சற்று கடினமாக பேசவேண்டி இருக்கிறது நாங்கள் எல்லோருமே அப்படித்தான் இருக்கிறோம் நீங்கள்தான் சரி செய்ய வேண்டும் என்கிறனர் . நாம் சரி செய்ய ஆயத்தமாக இருக்கிறோம் அனால் உணவு வாழ்கை முறை எல்லாவற்றையும் நீங்கள் மாற்றிக் கொள்ளவேண்டுமே இப்படி உணவு முறை இயற்க்கை சார்ந்த உணவுமுறை வரம் இருநாள் எண்ணை தேய்த்து குளித்துக் கொள்ளுதல் மூகமையாக வயிற்றை தூய்மையாக்கி கொள்ள வேண்டியது தேவையானது . முந்தய பதிவு களில் சொல்லிய படி வேறு எதாகிலும் நோய் இருந்தால் அதை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும் குருதி(இரத்தம் ) அளவு சரியாக இருக்கிறதா உடலில் வலி இருக்கின்றனவா என சிறிய குறைபாடுகள் இருந்தாலும் அவற்றை முறையாக நீக்கிக் கொள்க . பெண் , அல்லது ஆண் எவராக இருந்தாலும் வளமையான அதாவது பணம் , பொருள் போன்றவற்றை பார்க்காமல் முதலில் இருவருக்கும் பிடித்தமானவர்கள் இருக்கிறீர்களா சிக்கல் நேரும் பொது எப்படி அதை அணுகுவது என முடிவு செய்து பின்னர் வாழ்கையை தெரிவு செய்வது மிகவும் சரியானது . பாலுறவைப் பொறுத்தவரை இளமையில் எல்லாமே சரியாகத்தான் தோன்றும் பின்னர் எது முன்பு இனித்ததோ அதுவே கசப்பானதாக மாறும் எனவே எல்லா சிக்கல் களுக்கும் முறையான தீர்வு இருக்கிறது பிரிவு என்பது எங்களிடையே வராது வந்தால் முறையாக பேசி தீர்த்துக் கொள்வோம் என முடிவு செய்து கொள்ள வேண்டும் நம் முதலில் பாலுறவு கட்சிகளை பார்க்க வேண்டாம் என கூறியதி பொருள் இதுதான் அதாவது உரையில்லாத அந்த பாலுறவு கட்சிகளை பார்த்து விட்டு இயல்பான பாலுறவு எளிதில் சலிப்பைத்தரும் இதனால் வாழ்கையே வினாக்குரியவதும் உண்டு அடுத்த பதிவில் விரிவாக பார்ப்போம் சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
More than a Blog Aggregator

நவம்பர் 05, 2012

புதிய வாழ்க்கை முறை நோயில்லாத குழந்தைப்பேறு ....



 நமது வலைபூவிற்கு  வந்திருந்த  கேள்வி நோயில்லாத  குழந்தைபேறு  உண்டாக்க  சொல்லுங்கள்  என  இதுகுறித்து நாம் முன்னமே பேசி இருக்கிறோம் . அருள் கூர்ந்து விரிவாக வாசியுங்கள்  அப்படி  வாசித்து இருந்தால்  அவற்றில் இருந்து வினா தொடுக்கலாம்  .சரி நானும்  பதில் எழுத ஆயத்தமகிவிட்டேன் . இன்று கணிசமாக  நமது மரபு ரீதியான  மருத்துவ முறைக்கு  இளைய  சமூகம்  வருவது  நமக்கு  உண்மையில் மகிழ்வைத்  தருகிறது .

திருமணத்திற்கு  ஆயத்தமாவோம் ...

 இன்றைய  விரைவு  உலகத்தில்  பணம் மட்டுமே  குறிக்கோளாக  கொள்ளப்பட்டு  இளைய தலை முறையினரை    பணம் காய்க்கும் மரமாக  பெற்றோர்கள்  பார்க்கிறார்கள் . அப்படியே அவர்களை  பழக்குகிறார்கள்  பணம் சமபதித்து  சிறிய அகவையிலேயே  நோயில் விழ்ந்து  துடிக்கிறனர்  இவர்களைப் பார்த்தல் வேதனைப் பட   நேருகிறது. பொருளீட்டுவது  முறையான  வாழ்விற்க்குதத் தானேயன்றி  வேறல்ல  இதை  எண்ணம் கொள்ளவும்
      இல்வாழ்க்கை  என்பது  வாழப்போகும் காலங்களில்  ஈடுபாட்டுடன்  வழ முயலுவதாகவும்  இன்பத்தையும் துன்பத்தையும்   முழு ஈடுபாட்டுடன்  எதிர் கொள்வதாகவும் இருக்க வேண்டும் .  வரட்டுத்தனமான   அழகோ ... பணமோ  உண்மையில்  நிம்மதியை  கொடுத்துவிடாது  என்பதை  உள்ளத்தில் கொள்ளவேண்டும்    திருமணம்  ஏற்ப்பாடு  செய்யப்பட பின்னர்  பாலுறவு  தொடர்பான  கட்சிகளை கண்டிப்பாக   பார்க்க கூடாது  காரணம்   இது  அளவிற்கு மிகையான  பாலுறவு என்னத்தையோ  அல்லது அதற்க்கு நேர்மாறான   உலவியலையோ தரும்  அருள் கூர்ந்து  விட்டுவிடுங்கள்.
   திருமணத்திற்கு  முன்னதாக  இரண்டு  அல்லது மூன்று மதங்களுக்கு முன்னமே  இதற்க்கு ஆயத்தம் ஆகிவிட வேண்டும்   பாலுறவு காலத்தில்  கண்டிப்பாக வெறித்தனம் கூடாது  வள்ளுவம்  இதை  பாலுறவைஎன்ன சொல்லுகியது என்பதை  படியுங்கள்  குறைந்தது காதலர்கள் ( கணவன் மனைவி )
இருவரும் வள்ளுவரின்  இன்பத்து பால்  பாடல்களை  எல்லாவற்றையும்  இருவரும் முழு ஈடுபாட்டுடன்  படிக்க வேண்டும்   அப்போது தன என்ன சிக்கல் கல் எல்லாம் இல்வாழ்க்கையில் வரும் எப்படி தீர்ப்போம்  என தெரிந்து கொள்ளவியலும்
 மலரினும் மெல்லிது காமம்  என்பர் வள்ளுவர்  அதுபோல  பாலுறவை கைக்கொள்ள வேண்டும்  கண்மூடித்தனமாக  கையாளக் கூடாது   எல்லா வற்றையும்  முதலில்  நிறைய கணவனும் மனைவியும்  பேசவேண்டும்   அப்போதுதான் இருவரின்  உளநிலையை  அறிந்து கொள்ளவியலும்  பதற்றம் வேண்டாம் இன்று  எண்பது  விழுக்கடு  இளைய  தலைமுறைக்கு  எப்படி பாலுறவு வைத்து கொள்ளுவது என  தெரிய வில்லைஎன்கிறது ஒரு புள்ளிவிவரம் .

பாலுறவில்  உச்ச  நிலை என்பது என்ன ?

வீட்டு விலக்கு  நாளில் பாலுறவு கொள்ளலாமா ?
உச்சகட்டம் இருவருக்குமா ? எப்படி அடைவது ?
தங்களின்  பாலுறுப்புகளை  எப்படி  வைத்துக் கொள்ளுவது ?
கருக் கால  பாத்து காப்பு என்பது என்ன ?
கருக்கலத்தில்  பாலுறவு வைத்துக் கொள்ளலாமா?
பெண்மையை இந்த  காலத்தில் எப்படி கையாளவேண்டும் ?
கருக்கால  நோய்கள் என்ன தேர்வு என்ன ?
அறிவான குழந்தை  கிடைக்க என்ன செய்ய வேண்டும் ?
நோயில்லாத குழந்தை  பேறு  கிடைக்க  என்ன செய்ய வேண்டும் ?

இப்படி வினாக்களை தெரிவு  செய்து  வினாக்களைத் தொடுத்து  விடை  விடைதேடினால்  வாழ்வு இனிதாகும் தானே  என்ன தேடுவோமா ?


சித்த மருத்துவம் காப்போம்  நோய் வெல்வோம் .
 
More than a Blog Aggregator

அக்டோபர் 29, 2012

கர்ப்ப மூலிகை வரிசை கரிசாலை ....



    கர்ப்ப  மூலிகைகளைப்பற்றி எழுத்தத்  தொடங்கினேன்  பின்னர் சில வினாக்கள்  அவற்றான்  தொடர்ந்து  எழுத முடியாமல் போனது .இந்த இடுகைக்கு கர்ப்ப மூலிகை  கரிசாலை  ஆற்றி பார்க்கலாம்  இந்த மூலிகை  உண்மையில்  உடலை பொன்னாக்கும் உயர்ந்த மூலிகையாகும்  இதன் பலனை  கண்டவர்களே  அறிந்து கொள்ள இயலும்  இந்த கரிசாலை  மூலிகையை  பலவகையில் அழைக்கின்றனர் . கரிசனாங்கண்ணி ,கரிப்பான் , கரிசாலை ,கைகேசி ,பிருங்கராஜம்  என பல பெயர்களில் அழைக்கின்றனர் .

      இதன்  இலை , வேர் , மற்றும்  எல்லா  பகுதிகலும்  மருந்தாக  பயன்படுகிறது . இது நம்மிடையே வாழ்ந்து மறைந்த  வள்ளார்  இதன் பயனை மிகும் சிறப்பாக  பதிவு செய்வர்  நாம் ஒரு கைப்பிடி அளவு  வெறும் வயிற்றில் பச்சையாக  மென்று தின்ன வேண்டும்  என்பர்  இதனின் சிறப்ப்புகள்  அளவிட இயலாதவைகள் .

இது  கசப்பு  சுவையுடையது .

பித்தநீர்  பெருக்குதல் 

உடலை  தேற்றி  பெருக்குதல்
உடலை உரமாக்குதல்
வாந்தியுண்டக்குதல்
நீர்மலம் போக்குதல்
இரத்தத்தைப்  பெருக்குதல்
ஈரலைத் தேற்றுதல்
வீக்கத்தைக்  கரைத்தல்
குட்டம்
காமாலை
பாண்டு
பல்நோய்கள்
சுரம்

போன்ற  நோய்களை  நீக்குவதேடு  இது கல்ப  வகை மூலிகை  ஆதலால்  முறைப்படி உண்டுவர   உடல்  பொன்னிறமாகி உறுதியுடன்  விளங்க  வைக்கும்  . நோய்களை விரட்டும்  தலை மயிர் கருக்கும் கண்கள்  இரவிலும்  ஒளிரும்    இவ்வளவு  சிறப்பு வாய்ந்த  மூலிகையாகும்

குரற்கம்மர்    காமாலை  குட்டமோடு  சோபை
யுரர்பாண்டு  பன்னோ யொழிய  நிரர்சொன்ன
மேய்ந்த கரையோத்த மீளியன்னு  நர்புலத்து
கையாந்த  கரையொத்த  கால்
 என்கிறது மருத்துவ பாடல்   முறைப்படி    உண்ண  விழைவோர் காலையில்  வெறும் வயிற்றில்   ஒரு கைப்பிடி அளவு  மூலிகையை  உண்டுவர  எதிர்பார்த்த  சிறந்த  பலனைத்தரும்

சித்த மருத்துவம்  காப்போம் நோய் வெல்வோம் 

  

More than a Blog Aggregator

அக்டோபர் 22, 2012

மஞ்சளின் மகிமை வரிசை 2


                                                      


  மஞ்சள் பற்றி விரிவாக எழுத தொடங்கினேன்   இருந்தாலும்  நேரமின்மை காரணமாக   விரிவாக எழுத இயலவில்லை  தமிழர்களின்  பண்பாடு என்பது உண்மையில் விரிந்த அறிவியலை உள்ளடக்கியதாகும்.பழந்தமிழர்கள்  அறிவியல் அடிப்படையிலேயே  எல்லாவற்றையும் பகுத்தும் தொகுத்தும்  இந்த உலகினுக்கு  கொடையாக வழங்கினார்கள் . மஞ்சள்  மருத்துவக்   குணம்  நிறைந்தது  உடலில்  தோன்றும்  தோல்  சம்பந்தமான  பிணிகளை  நீக்குவதில்  சிறந்த  இடத்தில் நிற்கிறது . பெண்களின்  பூப்பு  காலத்தில்  அவர்களின்  உடலில் பலவேறு  மாற்றங்கள்  நிகழுகிறது  பெண்களின் உடலமைப்பு  வெளிப்புறமாக  இருப்பதனால்  அவர்களுக்கு  பலவேறு நோய்  தொற்றுகள்  வர வாய்ப்பு  உள்ளமையை  அறிந்த பழந்தமிழர்கள்  அவ்வாறு  எந்த தீங்கும்  வரகூடாது  என  எண்ணியே  பண்பாட்டு முறையை  ஆழப் புகுத்தினார்கள் . எனவே இந்த நாளில்  பெண்களுக்கு  மஞ்சள்  நீராட்டுவிழா  எடுத்தார்கள் . இதனால்  தோல்  சம்பந்த  மான  பிணிகளும்  மற்றும் பல்வேறு  தொற்றுகளும்  வராது    தடுத்தனர் .

     இன்றைய  நிலையில்  இதளியம்(இரசாயணம் ) கலந்த மஞ்சள்  உடலுக்கு கேட்டையும்  பலவேறு  நோய்களையும்  உண்டாக்குகிறது  இவற்றில் இருந்து  தப்பிக்க விழைவோர்  கடைகளில்  விற்கப்படும்  மஞ்சள்  கொம்புகளை  வாங்கி    நீரில்  தூய்மையாக   கழுவி  பின்னர் நன்றாக  வெய்யலில்  காயவைத்து  பின்னர் அரைத்து  பயன் படுத்தலாம்  கரணம் மஞ்சளை  பாதுகாக்கும் பொது அவற்றை செயர்க்கை  வண்ண மூட்டிகளை  சேர்த்து  கலந்து    சந்தைக்கு அனுப்புகிறார்கள்  இந்த செயற்கை  நிறமூட்டிகள்   பலவேறு   நோய்களை  உண்டாக்குகிறது  இதை  பற்றி எல்லாம் எந்த கவலையும் கொள்ளாமல்   பணம் ஈட்டுவதைப்  பற்றியே  கவலை கொள்ளுகிறனர்   இது சுவர் இல்லாமல்  சித்திரம்  வரைவதற்கு ஒப்பாகும் .

       இன்றைய உலகில்  பணம் மட்டுமே குறிக்கோளாக  கொள்ளபடுகிறது  அதுமட்டும்    இன்றி  மட்டரகமான   நாளிதழ்கள் , ஊடகங்கள்  போன்றவற்றில்  வரும் கருத்துகளை  வேத வாக்காக  கருதி  நடைமுறைப் படுத்துகிறார்கள்  . இது  பிழையனானதகும் . வெளியிடுபவர்கள்  யார்   என்பதைப் பற்றி   எல்லாம்  கருத்தில் கொள்ளுவதில்லை .இந்த சிந்தனையும்  வருவதில்லை   அனால் மூடத்தனங்களை  சொன்னால்  அது காட்டுத்தீயாய்  பரவி உந்த குமுகத்தை  நாசப்படுத்துகிறது .

      முன்பெல்லாம்  பெண்கள்  மங்கள  நாண்  பயன்படுத்துவது பெரு வழக்காக  இருந்தது  இன்று  பெண்கள்  மங்கள  நாணுக்கு (தாலி )பதிலாக  பொன்  நகைகளை  அணிந்து  அழகுபடுத்திக்  கொள்வதிலும் அதில்  தாலியை  இனித்துக் கொள்ளுகிறனர்  . இதனால் வரும் கேடுகள்  எண்ணிலடங்கா  அனால்  அதைப் பற்றி எல்லாம் கவலை  கொள்ளுவதாக  தெரியவில்லை  கரணம் இன்று பெண்கள் மார்பக  புற்று நோய்க்கு  பெரும்பான்மையோர்  ஆளாகி  வருகிறார்கள் .

பழந்தமிழரின்  அறிவு மரபை  மதிப்போம்
சித்தர்தம் அறிவினை ஏற்ப்போம் .

சித்த மருத்துவம்  காப்போம் நோய்   வென்று  நீடு வாழ்வோம் .




More than a Blog Aggregator

அக்டோபர் 08, 2012

மஞ்சளின்( turmeric) மகிமை




     தமிழரின்  உணவுமுறைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை  என  அடிக்கடி கூறுவதுண்டு . காரணம்  எல்லா உணவுகளும் சிறப்பு வாய்ந்தவை மருத்துவக் குணம் நிறைந்தவை  இப்போதெல்லாம்  மூலிகை  அதுசார்ந்தவற்றைப் பற்றி  மிகையாக எழுதுகிறேன் . காரணம்  மூலிகைகளின் மருத்துவப் பயனை முழுவதுமாக அறிந்து கொண்டால்  தமிழர்கள்  சற்று சிந்திப்பர்களே என்ற  ஒரு ஆசையினால்தான்  .

     இந்த மருத்துவக் குணம் நிறைந்த மஞ்சளின்  தனித்  தன்மை  தோல்  சம்பந்தமான  பிணிகளை  நீக்குவது  தான் ஆனால்  இன்றைய  இரசாயனம்  கலக்கப் பட்ட  மஞ்சளோ  புற்று நோயைகூட  உண்டாக்கும்  என  ஆய்வுகள் சொல்லுகிறது . இந்த மஞ்சள் செடி வகுப்பை சேர்ந்தது .கசப்பும், காரமும்  இதன் சுவைகளாகும். வெப்பம் உண்டாக்குதல் இதன்  தனிக்குணம் ஆகும்.மஞ்சள்  உடலுக்கு வனப்பைத் தரும்  உடலில் பூசி குளிக்க  உடலில் வியர்வை நாற்றம் விலகும் . 




பெண்களுக்கு தனியான கவர்ச்சியைக் கொடுக்கும்.

பசியை  உண்டாகும்
கக்கல் (வாந்தி )
வாத ,பித்த , கப  பிணிகளை  நீக்கும்.
தலைவலி
நீரேற்றம்
நீரழிவு
வெள்ளை
பீனிசம்
வீக்கம்
வண்டுகடி  நீங்கும் .
இரணங்களை  குணமாக்கும் .
உடல் பொன் சாயலைப் பெரும் .
உடலில் மயிர் வளர்தலை கட்டுப் படுத்தும் .
தூளாக்கி  புண்களின் மீது  தூவ  விரைந்து ஆறும்.
 மஞ்சளை  அரைத்துக் கட்ட கட்டிகள் பழுத்து உடையும்.
இதை சுட்டு  புகையை நுகர்ந்தால்  நேரேற்றம்  நீங்கும்.
இதை வேம்புடன்  அரைத்து பூச  அம்மை  புண்கள் விரைந்து ஆறும்.
வயிற்றுப் பொருமல்
வயிற்று  வலி மாறல்  சுரம் நீங்கும் .
மஞ்சளை அரைத்து நீரிற்  கலக்கி அதை வெள்ளை துணியில்  நினைத்து காயவைத்து  பயன் படுத்தினால்  வாத நீர் சுருக்கு , ஒருவித தோல் நோய், தனிசுரம் ,விட சுரம்  மலபந்தம் நீங்கும் .

தலைவலிநீ ரேற்றஞ்  சளையாதமேகம்
உலைவுதறு பீனசித்தி  னூடே - வலிசுரப்பு
விஞ்சு  கடிவிடமும்  வீருவிர  ரணங்களும் போம்
மஞ்சட்  கிழங்கிற்கு  மால்.

        இதிலும் கூட  மர மஞ்சள்  என தனியான மஞ்சள்  உண்டு இது மர வகுப்பை சேர்ந்தது. மரத்தின் சக்கை மஞ்சள் நிறம் உடையது இவற்றான் இந்த பெயர் .இது கசப்பு சுவையுடையது .
வெப்பகற்றுதல்  பசியைதூண்டுதல் உடலை உரமாக்குதல் இவை இதன் செய்கைகள் .இதை அரைத்து தலையில் பற்று இட்டால்  வெப்பம் நீங்கும் . இரத்தம் கட்டிய வீக்கம்  தோல் சிதைவு  நீங்கும்.மூலநோய்,  முக்குணம் , கனசுரம், உட்சுரம்  நீக்கும் குணம் இதற்க்கு உண்டு .

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator

செப்டம்பர் 24, 2012

தமிழன் நோய் நீங்கி நீடுவாழ



     வள்ளுவன் என்ற  பெயரினால் ஆன  பதிவர்  இப்படி கூறுகிறார் . உலகிற்கே அறிவியலையும் நாகரீகத்தையும் வழங்கிய தமிழ  சமூகம்  இன்று நோயாளியகிக்  கொண்டு  இருப்பதைப்  பார்த்தால்  வயிறு  பற்றி எரிகிறது  அதற்கும் ஒரு மருந்து சொல்லுங்கள்  என கேட்டு இருந்தார் .

       உண்மைதான் நண்பரே  உங்களின் பெயரே  உங்களைக் காட்டிவிடுகிறது  சிறந்த தழிர்களின்  ஆசானின் பெயரைத் தாங்கி  இருக்கிறீர்கள் பாராட்டுகள். உண்மையில்  தமிழரின் நோய்க்கு  அடிப்படைக் காரணம்  தமிழனை  தமிழனே  மதிப்பதில்லை . தமிழ கலைகளை  போற்றி பாதுகாப்பதில்லை.  தமிழ  கலைகளை  செய்கிறவர்களை  ஆதரிப்பதில்லை  இதனால்  தமிழன்  நோயாளியாகிப்  போனான்  போய்கொண்டு  இருக்கிறான் .இது வள்ளுவர் காலத்திலேயே  தொடங்கி விட்டது தான்  என்றாலும்  இப்போது தமிழன்  நிலை  மரணத்தின் பிடியில்...  இப்போதாகிலும் விழித்தால் நலம் பெறலாம் . ஒன்றுமில்லை .... தமிழ  கலைகளையும்  தமிழையும்  தமிழ அறிஞ்சர்  களையும்  காப்பது போற்றுவது  பாதுகாப்பது .... தமிழன்  ஓரணியில் திரளுவது ... தமிழன் உலகெங்கும்  தாக்கப் பட்டால்  குரல் கொடுப்பது...  என சூடு  சொரணை பெற்றுவிட்டாலே  தமிழன்  உலகின் உச்சத்திக்கு சென்று விடுவான்  அந்நியன் காலை நக்கும் தமிழன்  சிந்திப்பான் என எண்ணுவோம் .

        உலகின் உயர்ந்த மருத்துவம்  புதையலாக  நம் மண்ணில் சிறப்புகளைக் கொட்டிக் கிடைக்கிறது . தமிழனோ   அறியாமையில் வீழ்ந்து கிடக்கறான்

                                   சிறந்த மருந்து  குங்கிலியம்  அறிவோம் .

      தமிழ  மருத்துவத்தில் மிகசிறந்த மா மருந்து குங்கிலியம் இது ஒருவகை மரத்தின் பிசின் இந்த மரத்துக்கு கருமருது என பெயர்  இந்தவகை மரங்கள்  நிறைய உண்டு  எனினும் வெள்ளை ,சிவப்பு என இரண்டு வகை மட்டுமே சிறப்புவாய்ந்த வையாக கருதப்படுகிறது பூனைக்கண்  குங்கிலியம்  என்ற ஒரு சாதியும் உண்டு.
இது ...
வேப்பமுண்டாக்குதல்
கொழயகற்றுதல்
 ஆகியவை குங்கிலியத்தின் சிறப்புகள் ஆகும்.
தந்திமேகம்
சீழ்விரணம்
எலும்பைப் பற்றிய விரணம்  ஆகியவற்றைப் போக்கும் குணம் இதற்க்கு உண்டு .
வெட்டையால் பிறந்த நாளப் புண்
கொப்பூழ் விரணம்
சீழ்மேகம்
உள்மூல விரணம்
ஆகியவற்றைப் போக்கும்
கருமை , செம்மை  எண்ணும் இருவித குங்கிலியத்தால் காது, உதடு நாசி முதலிய இடங்களில் உண்டாகும் நோய்கள் மேகப் புண்  கட்டிவாதவிருத்தி  சூலை , கிராணி , கானாவிடம் , கீல்பிடிப்பு  நீங்கும் .நகங்களைப் பற்றிய  இரணம்  நீங்கும்.


காததர நாசிநோய் கட்டிக்கடி  மேகப்புண்
வாதவித்தி ரஞ்ச்சூளை வந்குனகம் - ஒதியிலைத்
திக்கி லிருக்த்  திடமுள்ள  வேவுபயக்
குகளி ருக்கனமக்  குள்.      ( தேரையர்  குணபாடம்  )


குங்கிலியத்தை  முறைப்படி உண்டுவர  ஆண்மை பெருகும்  உடல்  குளிரும்..

சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம்.
 
More than a Blog Aggregator

செப்டம்பர் 17, 2012

பகுத்துண்ணப் பழகுவோம் வரிசை 2



      இன்றைய  சூழலில்  எல்லோருக்கும்  எதை உண்ணுவது  எப்படி உண்ணுவது  என்பது தெரிவதில்லை என்பதாக கடந்த பதவில்  எழுதியிருந்தேன் . உண்மைதான்  உண்ணத் தெரிந்தவனுக்கு  நோயில்லை  என்பார்கள் . இப்போது நோயும் இன்னதென்று  தெரிவதில்லை  எப்படி உண்பதேனவும் அறிவ தில்லை  ஆகையால் காலம் முழுவதும் நோயாளியாகவே  கிடந்துவிடுவது  சிலருக்கு பழகிவிட்டது .

        நாம் கூட எல்லா உணவுகளையும்  பட்டியலிட்டு  இதை எல்லாம் உண்ணலாம் எதெல்லாம்  உண்ணக் கூடாது என  அழகாக  பட்டியலிடலாம் என  எண்ணினேன்   இன்றைய  உணவுகளின்  பட்டியல்  விண்ணை முட்டும் அளவிற்கு  உயர்ந்து உள்ளமையால்  என்னால் பட்டியல் இடமுடியவில்லை. வாய்க்கு சுவையும்  வயிறு நிரம்பினால்  போதும் என்ற  உள வாற்றளுக்கு  இன்றைய மனித விலங்குகள்  தள்ளப்பட்டு விட்டன .ஆனால் விலங்குகள்  என மனிதனால் வருணிக்கப் படும்  எந்த விலங்கும் சுற்று சூழலை கெடுப்பதில்லை  நோய்வந்த பின்னர்  மனிதன் மாதிரி  தீனியை வலுக்கட்டாயமாக  திணிப்பதுமில்லை. உடலில் கேடு நிகழ்ந்து விட்டால்  உணவை  நிறுத்துவது  விலங்குகளின்  முதன்மையான பணியாக இருக்கிறது . ஆனால் மனிதன்  தீனிப்  பையை  வலுக்கட்டாயமாக  நிரப்பி நோயை  வலிந்து அழைக்கிறான்  நோய்  உள்ளநிலையில் உணவை தவிருங்கள்   என சொன்னால்  வேற்று  கிரக மனிதனை பார்ப்பது மாதிரி  நம்மை  பார்க்கிறார்கள் . பெருந்தீனி நோயை உண்டாக்கும் . இதைத்தான் வள்ளுவர்  கழி  பேரிரையான்  கண்  நோய் என்கிறார் .நாம்ம வர்கள்தான்  நல்லதை கேட்பதில்லையே ?

       இங்குள்ள  சில கொள்ளை (இந்த  கணினிவேறு  கொள்கை  என அடித்தால் கொள்ளை  என வருகிறது ) கொலை  செய்யும்  கூட்டத்தார்  என்ன புரியவில்லையா? அதுதாங்க அரசியல்  பிழைப்பளிகள்  எடுத்ததுக்கு எல்லாம்  காந்தி  ...காந்தி... என்பர்கள்  இதைத்தான் இந்த உலகத்திற்கு தமிழ்  தேசிய  தலைவர் சொல்லவேண்டும்  என  திலீபனை  காவு கொடுத்தார்  தலைவருக்கும் தெரியும்  தீலீபன் மரித்துப் போவார் என  இருந்தும்  அமைதி வழியிலும்  நாங்கள் முயன்று  பார்த்துவிட்டோம்    என்பதை  பதிவு செய்தார் . எந்த உண்மையை  உலக  கொலைகாரர்கள்  ஏற்றுக்கொன்றர்கள் . கொன்றுதான் அழித்து விட்டார்களே ? இதை ஏன் சொன்னேன்  என்றால்   ஏறத்தாழ  பதின்மூன்று  நாள்கள  உணவின்றி  நீரைக்கூட  அருந்தாமல்  திலீபன் உயிர்வாழ்ந்தார் . வெறும் நீரை மட்டுமே  அருந்தி   வாழ்நாள் முழுவதும்  கழிக்கயியலும்  தெரிந்து  கொள்ளத்தான்  சொன்னேன் .

        கடினமான  நோயுள்ள  நிலையில்  உணவை மறுப்பது  நோயில் இருந்து  தன்னை முழுவதுமாக  விடுவித்துக்  கொள்ள முடியும்  அல்லது  நோய் என்னது என கண்டறிந்து  குறிப்பிட்ட  அந்த நோய்க்கு பகையான  அதாவது  பொருந்தாத  உணவை மறுத்தல்  மனிதன் செய்கிற நல்ல  செயல் .இப்போது மனிதன்  தான்  நோயாளியாக  அல்லாவா இருக்கிறான் .பாவம் அவர்களுக்கத்தான்  இதை படித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு  இல்லவே இல்லை .


இனிப்பு ;மண் ,நீர் இணைத்து  தோன்றும்
புளிப்பு ;மண் ,தீ இணைத்து  தோன்றும்
உப்பு ;நீர் ,தீ இணைத்து  தோன்றும்
கசப்பு ;காற்று, விண் இணைத்து  தோன்றும்
கார்ப்பு ;தீ . காற்று இணைத்து  தோன்றும்
துவர்ப்பு ; மண் , காற்று இணைத்து  தோன்றும்

காரம், கசப்பு ,துவர்ப்பு  மிகையாக கொள்ள வளிக்(வாத )குற்றம்  மிகையாகும் .

உப்பு ,புளிப்பு, காரம் மிகையாக  கொள்ள பித்தம் மிகையாகும்

இனிப்பு ,புளிப்பு , உப்பு மிகையாக  கொள்ள ஐ (கபம் மிகுதியாகும் )

      சீதள வீரிய உணவுகள் வாயுவையும் கபம் போன்றதையும் மிகையாக்கும் .இது பித்தத்தை  குறைக்கும். கப  வகை  உணவுகள்  வாயுவைக்  குறைக்கும் சூடான  வீரிய உணவுகள்  பித்தத்தை  மிகையாக்கும் .   இந்த மிகப் பெரிய அறிவியலும் கண்டவர்கள்  நமது பழந்தமிழ  அறிவர்கள் (சித்தர்கள் ) அவர்களின் கால் வழிவந்த  சித்த மருத்துவத்தை  பொன்னேபோல்  காப்போம்  பின்பற்றுவோம் 

      
More than a Blog Aggregator

செப்டம்பர் 10, 2012

பகுத்துண்ணப் பழகுவோம்



         மனிதனைத் தவிர்த்து   நோய்வந்த  நிலையில்  விலங்குகள் பெரும்பாலும் உணவைத் தவிர்க்கவே செய்கிறது  அல்லது நோயை நீக்கிக் கொள்ள போராடுகிறது  நோயுடன் கண்டதை தின்று வாயை கட்டாமல் உண்டு  கொழுப்பதில்லை  விலங்கினங்கள்.  ஆனால் மனித படித்தவன்  முதல் பாமரன் வரையிலும்  உணவைத் தவிர்க்க சொன்னால்  நம்மை ஓருமாதிரி பார்க்கிறார்கள் . அறிவை ஏற்ப்பதில் சிலருக்கு  குழப்பம் மட்டுமல்ல அறியாமையும் கூடவே  சேர்ந்து விடுகிறது பாவம் விடுங்கள்    அவர்கள் அறியாமையில் உள்ளார்கள்   .

        உணவு  என்பது  மனித உடலுக்கும்  உயிர்வாழ்த்தலுக்கும்  இன்றியமையாத   உணவாக  இருக்க  வேண்டும்  ஆனால் இன்று  உண்ணப்படும்  உணவு  முறை  மனிதனை  நோயாளியக்ககுகிறதேயன்றி   மனிதனை  முறையான  வழிநடத்தவில்லை  . இது   எங்கிருந்து  பெறப்பட்டது  என்பது  உண்மையில்  நமக்கு  புரியவில்லை   பழந்தமிழரின்  உணவு  முறை  என்பது  உலகினுக்கே   வழிகாட்டியாகவும்  பழந்தமிழ  உணவுமுறை  ஒரு   கட்டமைப்புடன்  இருக்கும்  அதாவது  முதலில்  இனிப்பு   இருக்கும்  பின்னர்  பருப்புகலந்த  நெய்யும்  சேர்ந்து  இருக்கும்  அதற்க்கு  பின்னர்  சற்று  காரம்  சேர்ந்த  உணவுகளும்  பின்னர்  சாத்துநீர்  (ரசம் ) கலந்த  உணவு  அதற்க்கு  பின்னர்  மோர்  இருக்கும்   இவைகள்   எல்லாம்    முறையான  உணவு  முறையை  கண்டதாகவும்  செரிப்பதற்கு   எளிமையனதகவும்  நோயை வரவழைக்காத  வுணவு  முறையாகவும்  இருந்தது  . ஆனால் இன்று  முறையில்லாத  உணவுப்  பழக்கம்  முன்பு  முறையான  உணவுகள்  இருந்த   இடத்தில்  நோயை வரவழைக்கும்   முரியில்லாத  உணவுகள்  இவைகள்  மனிதனை   முற்றாக    நோயாளியக்குதன்றி  வேறொன்றும்   செய்யவில்லை   இந்த  பிழையான  உணவுமுறையை  சொன்னாலும்  சிலர்  அதற்க்கு  நீங்கள்  பொறுப்பேற்க முடியுமா    என   சவால் விடக்கூடும்      .

        உணவுமுறை  முறையான  உணவுத்திட்டம்  கொண்டு    இருக்கவேண்டும்  இந்த  உணவுத்திட்டமானது  நோயின்றி  வாழ்வதற்கு  இன்றியமையாத  வனாக  இருத்தல்  வேண்டும்  அப்படி  எல்லாம்  பார்த்துக்  கொண்டு  இருப்பதில்லை  இன்றைய   இளைய  சமூகம்   இதை  எல்லாம்   சொல்லவும்  விடுவதில்லை   சொல்லுவதுமில்லை   மனிதனை  நோயாளியாக்கும்   சப்பைக்கட்டு  கட்டும்  பேர்வழிகளின்  கழிச்சல்  கூரமக்கி  அதில்  சுகமாக  குளிர்  காய்கின்றனர்  . முதலின்  உணவினை  பகுத்து  உன்னப்   பழக    வேண்டும் .எந்த  உணவு  நல்லது  நோயைதராமல்  முழுமையாக   உடலைவளர்க்கும்   என்பதை  முறையனவர்களிடம்  கேட்டுப்  பழக  வேண்டும் 
சாதாரண   தடுமன்   (சளி  ) குளிர்  காய்ச்சல்  என  எடுத்துக்   கொள்வோம்  இந்த  நேரத்தில்  குளிர்ந்த  சீத   வீரியம்  கொண்ட  உணவுகளை  தவிர்க்க வேண்டும்   காய்ச்சல்  உள்ள  நிலையில் உணவைத்தவிர்த்து  எளிமையான  உணவாக    அரிசி  கஞ்சி   எடுப்பது  மிகவும்  முறையான  சரியான  உணவுத்திட்டமாக  இருக்கும்   இதைவிட்டுவிட்டு  உடல்  பாழடைந்த  நிலயில்  மீண்டும்   மீண்டும்  உடலை  கடினமாக  வேலை  வாங்க  கூடாது   இப்படி   செய்வதால்   உடல்  கேடு  அடையும்  என்பதில்   எந்த  ஐயமும்  கொள்ளத்  தேவையில்லை  .

       குளிர்கால  நோய்கள்  என  எடுத்துக்  கொள்வோம்   இந்த  நோய்களுக்கு  சீத  வீரிய  உணவுகள்  பகையானது   முதலில்  நட்புணவு  பகை  உணவு  எது  என  துல்லியமாக  கணிக்கத்  தெரிந்து  கொள்ளவேண்டும்   தெரியவில்லை  என்றால்   முறையனவர்களிடன்  கேட்டு  தெரிந்து  கொள்ளவேண்டும்  . குளிர்கால  நோய்  என   கொள்வோம்  இந்த  இலையில்  சீத  வீரியம்  கொண்ட  உணவுகளை  கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்  அப்படி இல்லையெனின்  நோய்   தீவிரம்  அடையும்  அதேபோல  மூட்டுவலிகள்  எனின் மூட்டுவலியை மிகயாக்கும் கிழங்கு வகைகள் பருப்புவகைகள்  முறையில்லாத  அமிலத்தன்மை கொண்ட உணவுகள் ஆகியவற்றை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்

       இன்றைய உணவுகள் அளவிற்கதிகமான  கொழுப்பு சத்து கொண்டவையாக உள்ளன ஆனால் சரிவிகித உணவாக இருக்க  வில்லை . உணவு என்பது வயிறு  நிறைவதற்கு  என எண்ணிவிடுகின்றனர்   அப்படி எல்லாம் இல்லை உடல் உறுப்புகள் அனைத்திற்க்கு தனித்தனியான  சுவைகள் கொண்ட  தனியான  சத்துகள் கொண்ட உணவாக  இருக்க வேண்டும்  அப்படி இல்லாமல் ஒரேமாதிரியான உணவுகள் மனிதனை நோயாளியாக்கும்

எனவே முறையான உணவுகளைத்  தெரிவு செய்து உன்னப் பழகி  உண்ணத்  தெரிந்தவனுக்கு  நோயில்லை எனற  பழந்தமிழரின் கோட்பாட்டை  கடைபிடிப்போம்

குறிப்பு :      நமது  முந்தைய  பதிவை  படித்துவிட்டு  கோவி . கண்ணன்  என்பவர்  நமது இடுகையிலும்  அவரின்  இடுகையிலும்  தனியான முட்டாள்களுக்காக  எழுத வேண்டி  உள்ளது  என  பாவம் தனது இடுகையில்  எழுதி  என்னை முதல் ஆக்கி தன்னை  மிகவும் அறிவளியாக்கி  இருந்தார்  உண்மையில்  நீங்கள்  அறிவாளியாக  இருந்தால்  உண்மையான தவற்றை  சுட்டி காட்டி இருப்பீர்கள்  யார்  முட்டாள் யார் தவறான  வழிகாட்டுகிறார்கள்  என்பதை இந்த  சமூகம் தன்  முடிவு செய்ய வேண்டும்  இது போன்ற  இழிவான  விமர்சனங்களை  தவிர்க்க  விரும்புகிறோம் .
உங்களின் முட்டாள்  என்ற  எனக்கான  பட்டத்திற்கு  நன்றி  கோவி . கண்ணன்  நீங்க உண்மையில்  அறிவாளிதான் .

சித்தமருத்துவ்ங்  காப்போம்  நோய் வெல்வோம்

        
More than a Blog Aggregator

செப்டம்பர் 03, 2012

சுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்



      இன்றைய  விரைவு  உலகத்தில் இளசுகள்  பாடு மிகவும்  போரட்டமானதே    காரணம்  அவன் கெட்டுப் போவதற்கு  எண்ணற்ற  வாய்ப்புகளை  வாரிவழங்கி  விடுகிறது  இன்றைய உலகம்  இவற்றை மீறி  ஒருவன்  நேர்மையாக  இருப்பது  சிக்கலானதாக  இருக்கிறது . காரணம்   இன்றைய சூழல்  என்பதை நாம் அறிவோம் . இப்படிப்பட்ட சூழலில்  தன்னையும்  பாதுகாத்துக் கொண்டு இந்த குமுகத்தை  பற்றி  சிந்திக்கிறார்கள்  எனறால்  அவர்களை வணங்கி  வரவேற்க வேண்டும்  ஆனால் அப்படி எல்லாம்  இந்த  போலியுலகம்  செய்வதில்லை  மாறாக  அவனை கேவலப்படுத்தவே  செய்கிறது .
      இன்றைய  முறைதவறிய  உலகம்  எல்லோருக்கும் எல்லாமும்  கிடைக்க செய்வதில்லை. போராட்டமான  உலகத்தில் இருந்து  தன்னுடைய   வாழ்நாளை  ஓட்ட  வேண்டி இருகிறது வேண்டிய  கல்வி , வேலைவாய்ப்பு  பொருளாதார சூழல்  இவற்றிற்கு  இடையே  இந்த  சமூகம்  கொட்டும்  போலித்தனத்திக்கும்,  திரைப்பட , தொலைகாட்சி , பாலுறவு கட்சி  போன்றவற்றின்  தாக்கத்தினால் தானாய்  அவற்றில்  கரைத்துக் கொள்ளுகிறான்  அல்லது  அவற்றில் இருந்து விலகி இருபவனை  கண்டு கொள்வதில்லை  அல்லது கேவலப்படுத்துகிறது என்பது உண்மையே . இல்லை என்பவர்கள் வரலாம் சான்று  கட்டுகிறேன் .
       இப்படிப்பட்ட  சூழலில்  பலவிதமான  உளவியல்  ரீதியான  போராட்டங்களுக்கு  ஆளாகிறான் இதன் தாக்கத்தினால்  உணவு பிடிக்காமை அல்லது முறைதவறிய உணவு  தூக்கமின்மை  அல்லது முறைமீறிய  இரவு பகல் என பாராது  தூங்குவது  என  உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு  தன்னுடைய  வாழ்நாளை  கடத்துகிறான் . இது போராட்டம் மிகுந்த  வாழ்வியலை  அடிப்படையாக  கொண்டு  இயங்கு கிறவர் களின்  நடைமுறையாக இருக்கிறது .
         இப்படி பட்ட  சூழலில் இளசுகள் பலவிதமான  போரட்டங்களுக்கு  ஆளாகிறார்கள்  அவர்களை  கண்டு கொள்வதுமில்லை  வழிகட்டுவதுமில்லை  இந்த சூழலில்  இயற்க்கை  அவனை பாலுறவிற்கு  தூண்டுகிறது  இந்த சூழலில்  பல  இளைஞ்சர்கள்  சுய  இன்பத்தில் ஈடுபடுவாதாக  கூறுகிறார்கள் . இதற்க்கு விடிவு ? சுய  இன்பம் தவறில்லை  நன்மையே  என தவறன  வழி  காட்டும் நல்லவர்களும்  உள்ளார்கள்  சுய இன்பத்தால்  உடலின் சக்தியெல்லாம்  வீணாகிவிட்டது  பலமிழந்து விட்டேன்  உடலே   பலமின்மையல்  அவதிப்படுயறேன் . கண்கள்  குழிவிழுந்து  பலவீனப் பட்டுவிட்டேன்  என கூறிவருகிறார்கள் .
        இளமை  நீர்மேல் எழுத்தாம் என்பார்கள்  இந்த அகவையில்  கல்வியும்  பொருள் தேடலும்  அதற்க்கு பின்னலான  கலவியும்  தேவை  இதை  நிறைவு  செய்து கொள்ளாமையால்  தவறான பாதைக்கு பயனமாகிரார்கள்  

 என்ன  செய்யலாம் ?
உங்களின் இலக்குகளை  தீர்மானியுங்கள் .
தவறான  வழிகாட்டலை  தீர்கமாக  நிராகரியுங்கள்
முறையன  எதிர்காலத்தை  திட்டமிடுங்கள்
சுய  இன்பம் தவறானது  என  கருத்தில் கொள்ளுங்கள்
இந்த  எண்ணம்  வரும்  போது  ஒக (யோகாசனம் )இருக்கை கடைபிடியுங்கள் .
இரவில்  தூக்கமின் மையால்  பல இளஞ்சர்கள்  சுய இன்பம் பழகுவதா தெரிவிக்கின்றானர்
தூக்க மின்மைக்கு காரணங்களை  கண்டறிந்து  விடை தேடுங்கள் .
 தூக்க மின்மைக்கு  கனவுகளும்  ஏக்கங்களும்  காரணகிறது  அவற்றை  நீக்கி  மூச்சு பயிற்சி  பழகி  நீண்ட  உறக்கத்திற்கு  வித்திடுக .
சிக்கல் கள் எனின்  சிக்கலின்  அளவு நீளத்தை  நீண்ட  பட்டியலிடுக . பின்னர்  தியானம்  செய்து  உறங்க செல்க .

சிக்கல்  எனின் அந்த  சிக்கலின் தன்மையை முழுமையான பட்டியல்  இடுக  அதற்கான தீர்வுகள்  உண்மையில் பின்னர் கிடைக்கும்  என முழு நிறைவோடு  உறங்க செல்க .
 வாழ்கை  உங்களுக்கானது  உங்களின் இந்த   பட்டறிவு  இந்த குமுகத்திற்க்கனது  உணர்ந்து வாழுங்கள் .
வாழ்க்கை  உங்களுக்கானதே






சித்த மருத்துவங்  காப்போம்  நோய் வெல்வோம் 




 
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 27, 2012

தமிழ வலைப்பதிவர் குழுமம்



இது ...
பன்முகத்தன்மை கொண்டவர்கள்
பறைசாற்றுகிற களம்.

இங்கு ...

விடிந்தால்  புதிய புதிய செய்திகள் .
மாறுபட்ட  சிந்தனைகள்
மகத்தான  கண்ணோட்டங்கள் .

மனிதனை

" மா " மனிதனாக ஆக்குகிற
கோட்பாடுகளை  விதைக்கும் அறச்சாலைகள்
புதியன படைக்கத்தூண்டும்
வேள்விச்சாலைகளும் உண்டு .

இங்கு ...

மூழ்கி  முத்தெடுத்து
சமூகத்திற்கே  அர்ப்பணிக்கிறவர்களும்உண்டு.
காட்டாற்று  வெள்ளமாய்  பாயும்
கருத்துப்  பட்டறைகளும்  உண்டு .

இங்கு ...

தன்னுணர்வில்  வீழ்ந்து 
கிடப்பவர்களும் உண்டு
மக்கள்  நலன்பேசும்
சமத்துவ
வாதிகளும்  உண்டு.

சிந்தையுள்  பட்டதை

சந்தைப்  பொருளாக்குகிறவர்களும்
கண்ணில்  பட்டதை
ஓவியமாக்கி  வண்ணச் சிறகு
விரித்து விண்ணில்
பறக்கிரவர்களும்  உண்டு .

சின்னத்திரையையும்

வண்ணத்திரையையும்
பக்கம் பக்கம்மாய்
ஆய்வு  செய்கிறவர்களும்  உண்டு .

செப்படி  வித்தைபோலே

கண்கட்டி  வித்தை  காட்டி
கவர்ந்திழுக்கும்  நல்லவர்களும்  உண்டு.
உள்ளங்  கவர்  கள்வர்போலே
கருத்துகளை  களவுசெய்து
பட்டைதீட்டி  பதிப்பிக்கும்
பண்பாளர்களும்  உண்டு .

ஆனாலும்  நாமனைவரும்

ஓர் சாதி ஆம்
தமிழ்  வலைப்பதிவர்சாதி .

பதிவுலகச்  சான்றோரே !

நமக்கென  ஒரு பெருங்
கூட்டம்  கூட்டினீர்  நன்றி .

இனி ...

ஊர்தோறும்  வேடந்தங்கலாய்
கிளை  பதிப்போம் அதில்
நாமனைவரும்  ஒன்றுகூடி
புதியன  படைப்போம் .

கருத்துக்  களின் கருவூலமாய்

தமிழர்தம் உயரிய  கலைகள்
பண்பாடு நாகரீகம்
தமிழர்  தத்துவம்
தமிழ  மருத்துவம் -ஆம்
சித்தர்களின்   சீரிய
சித்தமருத்துவம்
விளையாட்டு ...
கட்டிடக்கலைகள்
ஒக  இருக்கை...
இசை  நடனம்
போன்ற  வற்றோடு  நம்
புறநானூற்றையும்  புரட்டி
அகநானூற்றையும்  அகழ்ந்தெடுத்து
இந்த  சமூகத்தை
வழி  நடத்துவோம் .

பொழுது  போக்கு

அம்சங்கள்    தேவைதான்   அது
ஊருகாய்போல  இருந்தால்    நன்று
ஊறுகாய்  உணவும்   ஆகிவிடாது
ஆகிவிடக்கூடாது .
 .

அறிவு 
சான்றீர் 
அறத்தை  விதைப்போம்  
நல்லன  அறுவடை  செய்வோம்
களத்தில்  இருக்கும்  நாம்
கருத்தினில்  ஒன்றிணைந்து
புதியன புகுத்துவோம் 


அன்பும்
  அமைதியும் 
பெருக்கெடுக்க  
நன்மையையும்   நேர்மையும்
செழித்தோங்க 

அறிவெனும்  கருவி  ஏந்தி
வென்றெடுப்போம்  புத்துலகை .

நேற்று  நடந்த  பதிவர்களின்  சந்திப்பில் நடந்த  பாவரங்கில்  கலந்து கொண்டு  வாசித்த  பா .
விழா மிகவும் சிறப்பாக  நடந்தேறியது . விழாக்குழுவினருக்கு நமது  பாராட்டுகள் .

                     தமிழன்புடன் ...... போளூர்  தயாநிதி 

 .



 
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 21, 2012

மிளகின் மருத்துவக் குணங்கள்



     பொதுவாகவே  தமிழர்களின்  எளிமையான உணவுப் பொருளே  தீவீராமான  நோய்களை நீக்கக் கூடிய சிறந்த மருந்தாக வினை புரிகிறது என்பது நாம் அறியாத  செய்தியாக தெரிகிறது  காரணம் தமிழர்கள் பெரும்பாலும்  தமிழ மருந்துகளைத்  தேடி  அலைவதில்லை  ஆனால் நோயில் வீழ்ந்து கிடக்கறான் அதானல் தான்  குறிப்பிடுகிறேன் .
     மிளகின் மருத்துவ குணம்
வாயு
கபம்
இருமல்
செரியாமை
மிகுஏப்பம்  ஆகியன நீங்கும்
பசிமிகும் .
மூன்று  கிராம் மிளகை குடிநீராக்கி அருந்த
செரியாமை
காய்ச்சல்
வயிற்றுப் பொருமல்  ஆகியவை  தீரும்  மருந்து வீறு தணியும்.

அரைகிராம் மிளகுப் பொடியுடன் ஒருகிராம் வெல்லம் சேர்த்து உண்ண

பீனிசம்
தலைப்  பரம் குறையும்.
தலைவலி  தீரும்.

மிளகு நான்கு  கிராம் பெருங்காயம்  ஒருகிராம் கழற்சிப் பருப்பு பத்துகிராம் பொடித்து தேனில் அரைத்து  மருந்தாக்கி அகவைக்கு ஏற்ப  காலை, மாலை கொடுக்க

காய்ச்சல்
குளிர்காய்ச்சல்
யானைக்கால்  காய்ச்சல் தீரும்.

பொதுவாக இதன் குணம்

காரல் உண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றும்
முறை வெப்பம் அகற்றுதல்
தடிப்பு உண்டாக்குதல்
வெப்பம் உண்டக்குகுதல்
வீக்கங்களைக் கரைத்தல் 
வாத  மடக்குதல்
வாத நோய்களையும்
சீழ்  மூலத்தையும்  குணமாக்கும்

அளவை ஊராக் காரம் அடைந்திருக்கும்  வாத

விளைவைஎல் ல்லாம் அறுக்கும்  மெய்யே - மிளகின் காய்
கண்டவர்க்கும்  இன்பமாம் காரிகையே ! சீழ் மூலங்
கொண்டவர்க்கு  நன்  மருந்தாங்  கூறு      (குணபாடம்)

என்னதான்  இருந்தாலும் மிகளின் தனிசுச்வை  அதன் குணங்கள்  எல்லாமே சிறந்தவைகள் ஆனால் இது  குருதியை  குடிக்க கூடிய தன்மை கொண்டது விந்துப்  பொருளை  வற்றச்  செய்யக் கூடியது  அளவுடன் உண்ண எந்த  பின்விளைவும்  இல்லை என அறிக .


முந்தய  பதிவு களில்  இடம்பெற்ற  சுக்கு, திப்பிலி , இந்த பதிவில்  இடம் பெற்ற  மிளகு இந்த மூன்று மருந்துப் பொருட்களும் மிகசிறந்த மருத்துவ பயன் நிறைந்தவைகள் . மருத்துவத்தில் இவைகளின் கூட்டுப் பெயர்  திரிகடு  இந்த மருந்துப் பொருள் இல்லாதவர் மருத்துவரே  இல்லை எனலாம்  இது காயகல்ப  மருந்துப்  பட்டியலில் உள்ள மா மருந்து .

முறைப்படி பயன் படுத்தி நோய் வெல்வோம் .


சித்த மருத்துவங்  காப்போம் நோய் வெல்வோம் .

.
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 13, 2012

திப்பிலியின் மருத்துவக் குணங்கள்



    பொதுவாக  தமிழ  மருந்துகள்   உணவுப்  பொருளாகவும் இருப்பது  தமிழர்களின்  உணவின் சிறப்பு எனலாம் . அந்த வகையில்  திப்பிலி  சிறந்த உணவுப் பொருள் மட்டுமின்றி மிகசிறந்த  மருந்தும்   ஆகும் .இதை  எப்படி மருந்தாகும் ? உணவாக  எப்படி பயன்படுத்துவது ? மருந்தாக  எப்படி பயன்படுத்துவது ?  சிந்திப்போம் ....

இது கொடிவகையை  சேர்ந்தது  மிளகைக்  காட்டிலும்  இந்தன் வீரியம்  மிகவும் மிகுதி .இது பச்சையாக இருக்கும்போது  இதன் சுவை இனிப்பு  அனால் உலர்ந்தபின் இதன் சுவை கார்ப்பு  என்னே  இயற்கையின் விளையாட்டு ?
இது வெப்பத்தையுண்டாக்கும்
அகட்டுவாய் அகற்றுதல் ஆகியவை திப்பிலின்  தனிக்குணங்கள் .
பச்சைத் திப்பிலி கபத்தையும்
சீதத்தையும்  உண்டாக்கும் .
அனால் பித்தத்தைப்  போக்கும் .

உலர்ந்த  திப்பிளியினால் ...
இருமல்
குன்மம்
இரைப்பு
சயப்பிணி
ஈளை
பாண்டு
சந்நிவாதம்
அரோசகம்
பெருமல்
தலைவலி
மூர்ச்சை
தடுமன் (சளி )
பீலிகம்
மலப்பெருக்கு
பெருவயிறு
முத்தோடம்
குளிர்சுரம்
மேககட்டி
ஆசன நோய்
தொண்டை நோய்
அவரனபித்தம்
மூக்கு -காது -கண் நோய்
நோய்கள் விலகும்
நீர்த்த விந்து இருகும் .

ஆசனநோய் தொண்டைநோய் ஆவரண  பித்தமுதல்
நாசிவழி காதிவைநோய்  நாட்புழு  நோய் - வீசிடு
யன்காலன்ச  நஞ்ச்சிதையும் அம்பாய் அழிவிந்தும்
போன்கலன்ச  நன்கைகொட் போல். (தேரையர்  குணபாடம்)
திப்பிலி ஐந்து பங்கு தேத்தான் விதை மூன்று  பங்கு இரண்டையும்      நன்கு    அரைத்து   கழுநீரில் 

எட்டு   கிராம்   அளவு   மூன்று நாள்   காலையில்   கொடுக்க   பிரமேகம்   பெரும்பாடு    நீங்கும்  .
இவ்வளவு   சிறப்புகள்  வாய்ந்த   சித்த மருத்துவத்தை   ஏன்   நாம்    பின்பற்ற   மறுக்கிறோம்   சிந்திப்போமா  ?
சித்த மருத்துவங்   காப்போம்   நோய்   வெல்வோம் 

        

     
More than a Blog Aggregator

ஆகஸ்ட் 06, 2012

சுக்கின் மருத்துவக் குணங்கள்


     

 பெரும்பாலும் தமிழர்களின் உணவு  எல்லாமே மருந்துகள்தான் என தமிழர்களுக்கே புரிவதில்லை 

இதை புரிய வைக்கவே தனியான இயக்கம் ஒன்றை  எடுக்க வேண்டியிருக்கிறது . அதனால்  நாங்களே  எடுத்துவிட்டோம் . அதாவது போளூர்  தமிழ்ச்  சங்கம்  ஒன்றை நிறுவி  தமிழர்களின்  அளப்பரிய சிறப்புகளை  தமிழர்களுக்கே  புரிய வைக்கத்தான் . தமிழில்  என்ன இருக்கிறது இட்டிலியும் சட்டினியும்தவிற என அறியாமையில் புலம்பித்தவித்துக் கிடக்கும் தமிழ்  மாடுகளுக்கு நல்ல மேய்ச்சலை பழக்குவததாக  இந்த  போளூர் தமிழச்  சங்கத்தின்  பணியாக   இருக்கும்.

     சித்த மருத்தவத்தில்  மிகசிறந்த மருந்துப் பொருட்களுள்  இந்த  சுக்கும் ஒன்று ....சுக்கு என்பது உலர்ந்த  இஞ்சி  என நாம் சொல்லத்தேவையில்லை....
இந்த சுக்கு......
வேப்பத்தையுண்டக்கும்
பசியயைதூண்டும்
அகட்டுவாய் அகற்றும்
விலாகுத்தல்
அசீரணம்
மார்பெரிச்சல்
புளியேப்பம்
நீர்ப்பினிசம்
நீரேற்றம்
மெகவா குண்மம்
சலதோடம்
வேப்பம்
ஆசன நோய்
சுவாசம்
காசம்
சீத கிரகணி
வாதநோய்
வயிற்று  உப்புசசம்
செவிக்குத்தல்
முகநோய்
சிரநோய்
சூலைவலி
கபசுரம்
சீத கழிச்சல்
செரியமைக்  கோளாறுகள்
பாண்டு
வயிற்றுக் குத்தல்
கபசீத  சுரம்
ஆகிய பிணிகளைப் போக்கும்  தன்மை  சுக்கிற்கு உண்டு .

சூலைமந்தம்  நெஞ்சரிப்பு  தொடமேப்  பாமழலை
மூலம்  இரைப்பிருமல்  மூக்குநீர் -வாலகப
தொடமதி  சரண் தொடர்வத குண்மம் நீர்த்
தோடம்ஆ மம்போக்கு  சுக்கு .
என்கிறது தமிழர்களின் மருத்துவப் புதையல்

சுக்கை களிசெய்து நெற்றியிலிட  தலைவலியும்  கழுத்தின்  மீதிட  தொண்டைவலியும் புருவத்தின் மீதிட அண்மைப் பார்வைதோடமும் தீரும் .
சுக்கை முலைப்பால் விட்டு  அரைத்து நெற்றியில் பற்றிட நெருப்பு அனல் படும்படி காட்டினால் தலைவலி நீங்கும் .

சுக்கை அரைத்து மூட்டுகளில் பூச  மூட்டு  வலி குறையும்
சுக்கை வாயில் பொட்டு மெல்ல  பல்வலி குறையும்
     என்ன உறவுகளே  தமிழர்கள்  தங்களின்  கலைகளைபின் பற்றுவதில்  உலகிலேயே  பின்தங்கி இருக்கிறார்கள் பார்த்தீர்  களா நோய்க்கு மருந்து இங்கு இருக்கும் போது விடியலைத்தேடி  எங்கோ அலைகிறான் தானே .



சித்த மருத்துவாங் காப்போம் நோய்  வெல்வோம்   
More than a Blog Aggregator

ஜூலை 31, 2012

மாங்க்கொட்டையின் மருத்துவக் குணங்கள்



     இந்த காலத்தில்  மாம்பழம்  கூடுதலாக கிடைக்கிறது  பழத்தை  உண்கிறோம்  கொட்டை வீனாக்கிவிடுகிறோம்  அவற்றில் உள்ள மருத்துவ  குணங்களை  அறிந்தோமில்லை. அதேபோல  சிலருக்கு நமது தமிழ  மருத்துவத்தின் மீது  பிடிப்பும் இருப்பதில்லை  அது உடலில் எப்படி வினையாற்றுகிறது   என்பதையும்  அறிந்து கொள்வதில்லை . அப்படிப்பட்டவர்கள்  சிந்திக்கவே இந்த ஆக்கம்.

         பழம் பெருமை வாய்ந்த  சித்தர்களும் சித்தமருத்துவமும்  மனிதனை முழு மனிதனாக பாவித்து  நோவில் இருந்து விடுவிக்க  எண்ணியதை  நாமறிவோம். ஆனாலும் இதன்  தனிச்சிறப்பை  அறிந்தோமில்லை  அதனால் வந்த கேடுகள்தான்  இன்றைய நோய் . இந்த பரந்த உலகத்தில் உள்ள எல்லா  பொருட்களையும்  மருந்தாக்கிப் பார்த்து  மனிதனை  நோயில் இருந்து விடுவிக்க  சிந்தித்தவர்கள்  தமிழ அறிவர்கலான  சித்தர்கள்.

பேசுமே  சீதப் பெருகுஞ்ச்சோ  ரிக்கடுப்பும்
வீசுமோ  மூலமாறு வேங்கொதிப்பு - மாசுடைய
பூன்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் கானில் வாது.

மாங்கொட்டை  உள்ளிருக்கும்  பருப்பினால்
சீதக்கழிச்சல்
இரத்திசாரம்
உதிரக் கடுப்பு
மூலசூடு
பெரும்பாடு
மல  கிருமி  போன்றவை போகும்.

இந்த மரத்தின் வேர் பட்டையினால்
சீத கழிச்சல்
வயிற்று  கடுப்பு
கக்கல் (வாந்தி )
போன்றவை போகும் .

சீதரத்  தப்போக்கை  சிக்கனவேதான்  பிடிக்கும்.
போதவயிற் றுக்கடுப்பைப் போக்குங்  காண் - ஓதுகின்ற
வாந்தியையும்  தீர்க்கும் வெளி மாமரத்தின் வீர்ப்பட்டை
பூந்துகின் மாதே! புகழ் .

மாவிலைக் கொழுந்து உலர்ந்திதினால் சர்க்கரை நோப்வை போக்கும்.இலையை தேன் விட்டு  வதக்கி குடிநீராக்கி கொடுக்க தொண்டைக் காட்டு குரல் கம்மல்முதளியவை போகும்.

மவிலையை தீயில் இட ஆதிளிர்ந்து வரும் பெரும் புகை தொண்டைக்கம்மலை  நீக்குவதோடு  விக்கலையும் நிறுத்தும் .

இலையை சுட்டு சாம்பலாக்கி  வெண்ணையில்  குழைத்து  தீப்பட்ட புண்ணின் மீது போட சுகமாகும்
மாம்பூவை  குடிநீராக்கி சீதக் கழிச்சல் , கழிச்சல் ,போன்றவற்றிற்கு  கொடுக்க  குணம் கிடைக்கும் .
மாங்காயின்  தோல்  வீட்டுவிலக்கு  சிக்கலை  குணமாக்குகிறது .

எளிமையான மூலப் பொருட்களை  மூலதனமாகக்  கொண்டு  சிறந்த மருத்துவக்  குணத்தை  தரும்  சித்த மருத்துவத்தை  பயன்  படுத்தி நோய் வென்று  நீடுவழ்வோம்.
More than a Blog Aggregator

ஜூலை 16, 2012

முப்பது + இல் பாலுறவு குறைகிறதா ?



      பாலுறவு  உயிரிகளின்  மூகாமையான  தேவை  என்பதை  நாமறிவோம்  இது  மிகவும் இளமையிலேயே  குன்றிப் போவதாக  இன்றைய  புள்ளிவிவரங்களும் நம்மருத்துவ நடுவத்திற்கு வருகிறவர்களும்  கூறுகிறார்கள் . இது உண்மையா? ஏன் இங்கனம்  நிகழுகிறது ? இதை தடுக்க முடியுமா? தவிர்க்க  இயலுமா?

      அன்பு உறவுகளே . வணக்கம் இப்படியான  வினாக்கள்  கேட்ட படி  இருக்கின்றனர் . காரணங்களை  அலசுவோம்  நீங்களும் உடன் இருப்பது தேவையல்லவா ? இன்றைய  விரைந்தோடும்  நிகழ்வில்  பல்வேறு நோய்கள்  பெருகி  மனிதத்தை நோயாளியாக்குகிறது முறையில்லாத  உணவு முறையில்லாத  வாழ்க்கைப் போராட்டங்கள் .வாழ்வியல் முறைகள் . நோய்தரும்  இரசாயனங்கள் உலக  இன்பங்களை  எல்லாவற்றையும் உடனே நுகர்ந்து விடவேண்டும்  என்ற வேட்கை  ஏக்கம் , அளவு  கடந்த  சினம் ,அளவு  வெறுப்பு  போன்ற காரணகளினால் இன்றைய  பாலுறவு  குன்றிப் போக  வாய்ப்பு இருக்கிறது .

       மனிதன் என்றாலே  உடனே சிலர்  குடி , புகைத்தல் , முறையில்லாத உணவுப் பழக்கம்  என  எந்த  திட்டமிடலும்  இன்றி  உடலைக்  கெடுத்துக்  கொள்ளுகிறனர் .பாலுறவு  வேட்கை  கொண்டு  ஊக்கி  மருந்துகளை (ஆங்கிலமுறை )  மிகையாக எடுத்துக் கொண்டு பின்னர்  பாலுறவு  எண்ணமே இல்லை . பாலுறவு கொள்ள இயலுவதில்லை  என கூறுகிறனர் . இங்கு  ஒருவினா எழலாம்  சித்த மருத்துவத்தில்  ஊக்கி மருந்துகள்  வழங்கப் படுவதில்லையா? என கேக்கலாம் ஆனால் இதை வாசிக்கும்எவரும் கேட்பதில்லை  அது வேறு செய்தி  இப்படி  கருணாநிதி  மாதிரி  நாமே  கேட்டுக் கொண்டு  நாமே பதில் சொல்லுவோம் .
    
          சித்த மருத்துவத்தில்  வழங்கப் படும்  ஊக்கி மருந்துகள்  பாலுணர்வை / விந்தணுக்களை  மிகையாக  உண்டாக்கும் படியான  மருந்துகள் .இயல்பான உடலுக்கு ஊட்டத்தையும்  சக்தியையும்  தரவல்லன . ஆங்கில ஊக்கி  மருந்துகள்  அப்படியல்லவே? உடலுக்கு கேட்டையல்லவா  உண்டாக்கும்? கடவுள் பற்றாளர்கள்  பாலுறவை  சிற்றின்பம்  என்பார்கள் . பாலுறவு  குறுகிய  நேரத்தில்   முடிவதுதான் அதன் சிறப்பு  நேரம் மிகுகிறது எனின்  உடலுக்கு  கேட்டை  உண்டாக்கும் என  சொல்லித்தெரிய  வேண்டியதில்லை  இன்றைய  உலக  வெப்பமயம்  உடலையும் உள்ளத்தையும்   பலவேறு நிலைகளில்  கேடடைய  செய்கிறது இந்த  நிலையில்  பாலுறவினை  அதன் நேரத்தை  கூட்டி  அதனால்  உண்டாகும் உடல் சூட்டினை  தனித்துக் கொள்ள  எந்த  வழிவகையும்  செய்து கொள்வதில்லை .

         மனித உடல்  விந்துவை  உற்பத்தி  செய்யும்  இயந்திரம்  அல்லவே .இதில்  உடலுக்கு ஊட்டம் அளிக்கும்  உணவை எடுக்காமல்  உடலுக்கு கேட்டை உண்டாக்கும் உணவுகளை  எடுக்கும் போது சில உணவுகள்  சில நோய்கள்  பாலுறவை  குறைக்க  செய்கிறது  என்பதை புரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக  சக்கரை  நோய் பாலுறவை  நீக்க செய்யும் . இந்த குறைகளை  நீக்கிக் கொண்டு மனிதன்  நோயை  விட்டுவித்துக் கொள்ளலாம் .

      இன்றைய சூழ்நிலையில்  தொண்ணூறு  அகவையில்  பாலுறவை வைத்துக் கொண்டு மகப்போற்றை  உண்டாக்கும் சக்தி  படைத்தவராகவும்  ஒருவர் இருக்கிறார் .முப்பது  அகவையில்  சர்க்கரை / இரத்த அழுத்தம்  / சிறுநீரக  கோளாறுகள்  என பல்வேறு  நோய்களை  வரவழைத்துக்  கொள்ளுகின்றனர் . இந்த நிலையில் பாலுறவு குன்றத்தானே   செய்யும்.

        முறையான  உணவுப் பழக்கம்  வாரம்  இருநாள் எண்ணெய்க்  குளியல் முறையான உடற் பயிற்சி  போன்றவற்றை  செய்தால்  தொண்ணூறு  அகவையிலும்  பாலுறவில்  வெற்றி  பெறலாம்  என்பதே  நமது  நம்பிக்கையான  வார்த்தை.

சித்தமருத்துவங்  காப்போம்  நோய்வேல்வோம் .
More than a Blog Aggregator

ஜூலை 09, 2012

சீதா பழத்தின் நன்மைகளும் குணங்களும்



    காலங்கள் தோறும் நமது  மண்ணில்  பல்வேறு  மருத்துவக்  குணம் நிறைந்த பழ  வகைகளும் மூலிகைகளும்  விளைந்து கிடக்கிறது விலை உயர்ந்த  பழங்கள்தான்  மதிப்பு மிக்கவை  சத்தானவை  என்ற  சொத்தைய வாதங்கள்  கழிவு நீர்  குடிநீறாகி  விடுதல்போல  மக்களிடம் கலந்துவிடுகிறது . உண்மையை ஏற்பது / அல்லது  கடைபிடிப்பது  மிகவும்  இயலாத காரியமாக  தமிழ  ,மண்ணில்  இருக்கிறது காலம்  காலமாக  நாம்  உண்மையையும்  நேர்மை யையும்  புறக்கணித்தே  வருகிறோம்  சித்தர்களின் காலங்களில்  எந்த பலனையும் எதிர் பார்க்காமலே மக்களுக்காவே  சேவையாற்றி  வந்து இருக்கிறார்கள்  ஆனாலும் முழுமையாக  அவற்றை  நாம் மக்கள்  பயன்படுத்திக் கொண்டு இருந்தால்  இன்று தமிழம்  எல்லா  நிலையிலும்  முன்னேறிய  முதன்மை  நிலமாக  இருந்து இருக்கும்  இவ்வளவு  சிறப்புகள் இருந்தும்  தமிழர்கள் இவற்றினை  பயன் படுத்திக் கொள்ளாமை என் என்பது புரிய வில்லை  அருள் கூர்ந்து தெரிந்தவர்கள்  சொல்லுங்களேன்  ?
    
         ஏன் எனின்  சித்த  மருத்துவம் மக்களின் மகத்தான  மருத்துவமாகவில்லை இந்த  மருத்துவத்தின் சிறப்புகளை  மக்கள் ஏன் புரிந்து  கொள்ள மறுக்கிறார்கள் ?

சீத பழத்தின்  சிறப்புகளைப்  பார்ப்போம்


சீதாப்பழம்

நரம்பு
மூளை
இதயம்  போன்றவற்றை வலுப்பெற செய்கிறது .
தசை நார்களுக்கு  வலுவூட்டுகிறது .
உள்ளத்திற்கு உவகையூட்டுகிறது
உடலுக்கு  குயர்ச்சியைத்  தருகிறது .
விதைகள் தலைப் பேனை கொல்லுகிறது
இதன்  இலைச்சாறு வலிப்பு  மயக்கம் போன்றவற்றை  நீக்குகிறது .
இதன் காய்  சீதக்  கழிச்ச்சலை  நீக்குகிறது .
பழம் புதிய  இரத்தத்தை  உண்டாக்குகிறது.
உடலுக்கு ஆரோக்கியத்தை  தருகிறது.
ஆயுளை நீட்டிக்கிறது .
நினைவாற்றலை  பெருக்குகிறது.
புரதமும்  கொழுப்பும்  இதில்  நிறைய  உள்ளது .
உடலின் வளர்ச்சிக்கு தேவையானவைகள்  இதில்  அதிகமாக  உள்ளது.
சுரநோயில் (காய்ச்சல் )இதன் பழத்தின்  கூழ்  குணப் படுத்துகிறது.
நாம்  இதை  பயன் படுத்திக் கொள்ளலாமே .


சித்த மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம்  
More than a Blog Aggregator

ஜூலை 02, 2012

காய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்



     தமிழ  மருத்துவத்தில் காய கல்பம்  என்ற சொல்லாடல் அடிக்கடி கேட்டு இருக்க கூடும் சரி  காயகல்பம்  என்பதென்ன ? காயம்  என்பது உடல்  கல்பம் என்பது அழியாமல் பாதுகாத்தல்  என்பதாகும்.
எதற்கும்  வினா எழவேண்டும்  எழவில்லை எனின் தான்  ஐயமே . நாம் குறிப்பிடும் இம்  மா  மருந்து  காய  கல்ப  வகையை  சேர்ந்தது உடலை அழியாமல்  பாதுகாக்கக்  கூடியன .

தூய  தமிழ  மருத்துவத்தின் உயரிய  சிறப்பே  இவைகள் நோயில் இருந்து விடுவிப்பதோடு நோயின்றி வாழ  வழிவகை செய்கிறது.  சித்தமருத்துவத்தில் மருந்தே உணவு உணவே மருந்து  என்பது உங்களுக்கு தெரியும் .

காய கல்ப  தன்றிக்கையின் மருத்துவக் குணங்கள்


குடலுக்கு சக்தியை  கொடுக்கும்
காய்ச்சல்  நீக்கும்
பித்த தலைவலி  நீக்கும்
இரத்த மூலம்
சீதக்  கழிச்சல்
மலசிக்கல்
வாய் நீர் ஒழுகல்
கண்பார்வை  தெளிவடையும்
புண்  ஆறும்
கோடைகால  அக்கியை குணமாக்கும்
உடலினை  உரமாக்கும்
சிலந்தி விடம்  நீக்கும்
ஆண்குரிப்புன்
சீழ்மேகம்
வாதபித்தம்
இரத்த பித்தம்
தலை மயிரை வளர்க்கும்
காசம்
சுவாசம்
நினைவு  மறத்தல்
வயிற்றுப் போக்கு
வீக்கம்
பல்வலி
ஆகியவற்றை  நீக்கும் .

சிலந்தி  விடம் காமியப்  புண்  கீழான  மேகங்
கலந்து  வாரும்  வாதபித்தங்  காலோ- ட்லந்துடலில்
ஊன்றிக்காய்  வெப்ப முதிரபித்  துங் கருங்
தான்றிக்காய்  கையிலெடுத்தால்.

ஆனிப்பொன் மேனிக் கமழும்  ஒளியுமிழும்

கோணிக் கொண் வாதபிதங்  கொள்கைபோம் - தானிக்காய்
கொண்டவர்க்கு  மேகம்  அறும் கூற  அளந்தனியும்
கண்டவர்க்கு  வாதம் போம்  கான் .

      இவ்வளவு  மருத்துவக்  குணங்கள்  நிறைந்த  கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்  சேர்ந்த  மா  மருந்துகள்  தான்  சித்த மருத்துவத்தில்  நூறு  நோய்களுக்கு மேல்  நீக்கும்  மிகசிறந்த  மருந்து மட்டும் அல்லாமல்  காய  கல்பம்க  செயல் படும்  திரிபலா . இந்த முக் கூட்டு  மருந்து  திரிபலா  மூன்று ஒன்றாய்  கூடும் போது  பலன் பாலமடங்கு  கூடும்  இதைப்  பற்றி  நான் தனியாக  எழுத  வேண்டுமா ? என்ன .


போளூர் தயாநிதி 
91-94429 53140.

 சித்த மருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் .
More than a Blog Aggregator

ஜூன் 25, 2012

காயகல்ப நெல்லிக்காயின் ( INDIYAN GOOSEBERRY ) மருத்துவ குணங்கள்

       
si

      பழமைவாய்ந்த  தமிழர்களின்  மெய்யறிவு  வியக்க வைக்கும்  தன்மை கொண்டது  அறிவியலை  அடிப்படையாக  கொண்டது . இந்த  பேரண்டமே  பின்பற்றக் கூடியது . உலக  நலனை ஒட்டியது .
அதே மாதிரித்தான் இந்த  நெல்லிக்காயும் . எந்த  தீங்குமில்லாத  நல்லதை மட்டுமே  அதன்  தன்மைகளாக கொண்டது .  பெற்றதாயை  விட  நம்மை பேணிக்காத்து  நோயின்றி  வாழவைக்கிறது.நெல்லிக்காய் வந்த  நோவை நீக்கும் . நோய் வராமல்  காக்கும் முறைப்படி உண்டுவர  உடலை  கல்ப மாக்கும் போதாது ? இன்றைய மாந்த குலத்தின் நோய்களை  நீக்கி விடுவிக்கும் .

     எமது முந்தய  பதிவில்  அலங்கரித்த கடுக்காயின் தனிக்குணம் சூடு  என்றால் , நெல்லியின் மருத்துவக் குணம்  சீதம் . அதனால் தான் இதை  இரவில் உண்ணக்கூடாது. கடுக்காயும் நெல்லியும் கல்பம் என குறிப்பிடுவதின் நோக்கம் இது அகவையை (வயதை ) நிலை நிறுத்தும்  தன்மை  கொண்டதாகும். எனவேதான்  இது கல்ப மா  மருந்தாகிறது.

கல்ப  நெல்லியின் மருத்துவக் குணம்  எண்ணிலடங்கதவை  சில  பார்ப்போமா ?


தலைவலி
இரத்தக் கொதிப்பில்  உண்டாகும் தலைவலி
கண்களின் நோயை நீக்கும்.
கிறுகிறுப்பு
மூக்கு  நோய்கள் (தடுமன் &சளி )
மண்டைசளி
கக்குவான்
பல்  வலிகள்
மலசிக்கல்
செரியாமை
பித்தம்
கக்கல் (வாந்தி )
குமட்டல்
நீரிழிவு
சிறுநீர் எரிச்சல்
சிறுநீர்  தடை
விந்து  கெட்டிப் படும்
இரத்தம் வெளியேறுதலை தடுக்கும்
பலம் உண்டாக்க .
மது தீமை நீங்க .
கட்டழகு பெற
சீதக் கழிச்சல்
இரத்தக் கழிச்சல்
பசி இன்மை
இதய நோய்
தோல் நோய்கள்
புண்கள்
வேட்டை நோய் ...
ஆண்குறிப் புண்
காமாலை
பீனிசம்
வாய் நீர்சுரப்பு
தலை சுற்றல்
உடம்பு எரிவு

                 நெல்லிக் காய்க்குப்  பித்தம் நீங்கும்அதன் புலிப்பால்
                 கொல்லுமேவாதம்  அதிர்  சேர்த்துவரல்   - கொல்லுமையம்
                  ஓடும் இதைச்  சித்தத்தில்  உண்ண அனலுடனே
                  சூடு பிற மேகமும்போங்  கூறு        (  தேரையர்  குணபாடம் )

      இப்படி  பல நோய்களை நீக்கி  நம்மை நோவில் இருந்து காக்கிறது அதுமட்டும் இன்றி நோயில் இருந்து விடுவிக்கிறது. எப்போதும்  புத்துணர்ச்சியை  உண்டாக்கி  நோவற்ற  நிலையை  உண்டாக்கி தருகிறது .இவ்வளவு  சிறப்பு வாய்ந்த  மருத்துவத்தை  நாம்  ஏன் பயன்படுத்த  தயங்கு கிறோம் .சிந்திப்போம்  .


சித்தமருத்துவங்  காப்போம்  நோய்  வெல்வோம் 

     





More than a Blog Aggregator

ஜூன் 18, 2012

காயகல்ப கடுக்காய் மற்றும் கடுக்காயின் மருத்துவ குணங்கள்

 

        இன்று சித்த மருத்துவம் உலகின் உன்னதமான  சிறந்த மருத்துவ முறையாக இருப்பதற்கு  காரணம் அதன் மருத்துவ குணங்கள்  நிறைந்த  எளிமையான  உணவுப்  பொருளே மருந்தாக  இருப்பதுதான் மற்ற மருத்துவ முறைகள் இங்கனம்  இருக்கவில்லை . எந்த பின்விளைவையும் தராத இந்த மருத்துவ மூலப் பொருட்கள்  எளிமையாக  கிடைப்பதுடன்  நோவை விரைந்து  நீக்குகிறது  உடலை  உரமாக்குகிறது  இந்த  சொல்லுக்கு இலக்கண மானது   கடுக்காயும் ஒன்று காரணம் எண்ணிலடங்கா  அதன்  மருத்துவ  குணங்களும் அதன் தன்மையும்தான் . இந்த  கடுக்காய் காய கல்ப  வகையை  சேர்ந்தது  என்பது நாம் அறியாத  ஒன்றல்ல .

கடுக்காய்  என்ன என்ன  நோய்களை நீக்கும் ? சற்று  சிந்திப்போமா?
நீரிழிவு
இதயநோய்
இரத்த  பித்தம்
இடிபட்ட புண் 
காசம்
அபசுமரம்
உதாவர்த்த வாதம்
வாதம்
உதட்டு நோய்
கிரகினி
ஊருச்தம்பம்
கண்நோய்கள்
காமாலை
குண்மம்
குட்டம்
கைகால் எரிச்சல்
கோழை உர்த்தல்
சலக்கட்டு
சித்த பிரமை
தலைநோய்கள்
சுவாசம்
சோபை
மூச்சு வாங்கல்
நாவறட்சி
பல்நோய்கள்
தொண்டைக்கம்மல்
பெருவயிறு
பாண்டு . இரத்தமின்மை
மார்பு நோய்
நீரிழிவு
மலபந்தம் 

வயிற்றுப்  பொருமல்
வயிற்றுவலி
வாதரத்தம்
வாய் நீர்ச்சுரத்தல்
வாந்தி
விக்கல்
காயம் படல்
விதைவாதம்
வெண்குட்டம்
விடசுரம்
நீண்டநாள் சுரம்
சூலை நோய்
விந்து தடைபடல்
 செரியாமை
உழலை
நினைவு மறதி
இருமல்
இளைப்பு
உள்ளங்கால் எரிவு
உட்சூடு
மண்டைப் புற்று
மண்டைக் கிரந்தி
 என  பல நோய்களை  நீக்குகிறது .  தாயானவள்  அறுசுவை  ஊட்டி சேயைத் தேற்றுவாள் .கடுக்காய் உடற் பிணிகளை  நீக்கி உடலைத் தேற்றும் . பிணிகள் நீங்கினால் தான்  உடல்உட்கொள்ளும் உணவி னை பயன் பாட்டுக்கு கொண்டுவந்து  உடலைத் தேற்றும் .எனவேதாம்  கடுக்காய் தாயினும்  சிறந்தது  என சித்த  மருத்துவம் கூறுகிறது.

இதன்  மருத்துவ  குணங்கள்  மருத்துவரின் துணையுன்  முறைய கொள்ளும் போதுதான்  நல்ல பலனைத்  தந்து  நோயை விடுவிக்கும் .

கடுக்கயுந்  தாயுந்  கருதிலோன்றான்  தானும்
கடுக்கேத்  தாய்கங் காண்நீ - கடுக்காய் நோய்
ஒட்டி உடற்றேட்டும்  உற்ற  அன்னை யேசுவைகள்
ஊட்டிஉடற்  றேற்று  முவந்து .
 என  பதிவு  செய்கிறார்கள் நம்  அறிவு  சித்தர்கள் .


சித்த மருத்துவத்தை பயன்  படுத்தி நோய் வெல்வோம்  சித்த மருத்துவத்தை காப்போம் . 
 
More than a Blog Aggregator

ஜூன் 11, 2012

பாலுறவு காட்சிகளும் சில ஆய்வுகளும்



       இன்று  எல்லா இடங்களிலும்  நீக்கமற  நிறைந்து கிடக்கறது இந்த  பாலுறவுக் காட்சிகள் . இன்றைய  அறிவியல் எல்லோரது கைகளிலும்   தொழில் நுட்பத்தினால் கைப்பேசிகளில்  தொடங்கி பல்வேறு  தளங்களில்  இந்த அறிவியல் அற்ப்புதங்கள் நிகழுகிறது . வெறுமனே  இந்த பாலுறவுப் படங்களைப்  பார்ப்பதினால் என்ன நேர்ந்துவிடப் போகிறது? சிலருக்கு இந்த எண்ணம் எழலாம்  எழுவது இயல்புதான் . அனால் இதன் கொடுமைகள்  பல்வேறனது .
      மனிதத்தின் சக்திகளை  செலவு செய்வதில் கண்கள் பெரும் பங்கு  வகிக்கிறது என்பது நமக்கு தெரியாத  ஒன்றல்ல . இந்த கண்களின் மூலம்  பெறப்பட்டு  உடலில்  பல்வேறு மாற்றங்களை இந்த பாலுறவுக் காட்சிகள்  அரங்கேற்றுகிறது .அளவிற்கு  மிகையாக பார்க்கப் படும் இந்த  பாலுறவுக் காட்சிகள்  நேரடியான பாலுறவு கொள்வதைவிட  பெரும் தீங்கானது  என்ன பாலுறவு தீங்கானதா? ஆம்  முறைதவறிய பாலுறவு கொடுமையானதே தவறா னதே. .
      இதற்க்கு பல சான்றுகளை  அடுக்கலாம்  இருப்பினும் நாம் அதற்க்கு சான்று தேடி அலையவில்லை.இருப்பினும்  இந்த முறைதவறிய  பாலுறவு வேட்கை  அல்லது பாலுறவு  காட்சி உடலை சூடேற்று கிறது  உடலில் பல்வேறு இரசாயன மாற்றத்தை   நிகழுத்துகிறது  . முறைதவறிய இந்த பெருந்தீங்கு  நீடிக்கிறபோது உடலில் நோயாக பரிமாணம் அடைகிறது . உடலில் சக்தியிழப்பும் ... மிகையனா சூடேற்றமும்  உளவியல் ரீதியான  தடுமாற்றங்களும்  உண்டாக்குகிறது .
        கடந்த  பல  ஆண்டுகளுக்கு  முன்பாக  ஈழத்தில்  நமது கையாலாகாத  நடுவணரசு பாலுறவு  காட்சிகளை  கொண்ட  மேன்தகடுகளை இளஞ் சிறார்களும்  சிறுமிகளும்  இளைஞ்சர்களும்   உள்ள  இடங்களில் வீசி  எரிந்து விட்டு  வந்தது  அதனைக்கண்ட  உண்மையான இளசுகள்  தலைமைக்கு  தகவல் சொல்ல  கடைசி  மேன்தகடுவரை கொண்டுவந்து  அழிக்கப் பட்டது  அனைவரும் அறிந்ததே  காரணம் இந்த குமுகம்  எதற்கும்  பயன் படாமல்  நாடு மொழி  இனம்  என்ற  பற்று இல்லாமல்  இந்த  பாலுறவு  எண்ணத்துடன்  எல்லா நேரங்களிலும்  சுற்றி  திரிந்தால் தானே  கொள்ளையடிப்பவர்கள்  கொள்ளையடித்துக் கொண்டே  இருக்க  இயலும்?
     உண்மையில்  இந்த பாலுறவுக் காட்சிகள்  ஒழுக்கக்  கேடானது மட்டுமல்ல உடலுக்கும் கேடானதே  வேறு எந்த  பணியிலும்  நிலைக்க  செய்யாது.  பாலுறவு  என்பது ஒரு நாளில்  எல்லாவற்றையும் சேர்த்து   முப்பது  நிமிடங்களில்  முடிந்து போகிற செய்தி  ஆனால்  இதையே  வீணாக  நாள் முழுவதும்  இந்த எண்ணத்துடன்  இருப்பது  இந்த குமுகத்தை சீரழிப்பதாக அமையாதா? உழைப்பை செலுத்தி  முறையாக நமது வீணாக கடக்கும் நிலத்தைக் கொத்தினால் நல்ல விளைச்சல்  கிட்டும் தானே ? தனிமனித  வாழ்வில் நேரத்தை முறையாக செலவிட்டால்  இந்த பேரண்டமே மகிழ்ச்சியில்  இருக்கும் தானே மகத்தான  மனித  சக்தியை  உற்பத்தில் செலவிடுவோம்  உலகினில் உயர்ந்து நிற்ப்போம்.
சித்த மருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம் .
More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...