ஆகஸ்ட் 29, 2011

கோழிக்கறி (chicken ) விசமே




உறவுகளே வணக்கம் நலன் இல்லத்தில் உள்ளத்தில் நலந்தானே .
கடந்த ஆண்டு இதே நாளில் ஒரு ஞயிற்று கிழமையில் உங்களோடு அறிமுகமானேன் . அதுவரை ஏதோ ஒரு சிறிய ஊர்ப்புறத்தில் இருந்து சிறிய நகர்புறத்தில் எமது மருத்துவ நடுவத் தோடு எனது குறுகியஅளவில் பணி இருந்தது அதுவரை இந்த வலைபூ பற்றிய ஒரு விரிந்த தளத்தில் பார்வை இருந்தது இல்லை ஒரு நாளிதழில் வெளிவந்த கட்டுரை மட்டுமே வலைபூ பற்றிய பார்வையை தந்து இருந்தது .

நண்பர் சுகுமாரன் அவர்கள்தான் இந்த வலைபூ விற்கு எம்மை அறிமுகப்படுத்தி பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் எமது முதல் இடுகை திருநெல்வேலி மனோன்மணியம் பல்கழகத்தில் வாசித்து அளித்த ஆய்வு கட்டுரையாகும் . இந்த கட்டுரையை தொடர்ந்து ஆறு மணிநேரம் தட்டச்சு செய்து பதிவேற்றினார் .நண்பர் சுகுமார் . அவருக்கு எமது நன்றியை மீண்டும் பதிவு செய்கிறோம் .

எமக்கு கணினியோடு பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்பு இருந்தாலும் நாய் பெற்ற தங்கம் பழம் போல தூர நின்று அச்சத்தோடு பார்த்துவிட்டு (இதையெல்லாம் எப்ப நாம பயன் படுத்த்போரோமோ தெரிய வில்லையே என ஏங்கி இருந்தவன்.) இந்த இடுகையின் போது தான் கணினியின் மிக அருகில் வந்து அமர்ந்தேன் . இன்னும் கணினியின் முழுமையான செயல் பாடுகள் நான் அறியாத ஒன்று முதலில் எனக்கு பின்னுட்டம் இடவும் தெரிந்து இருக்க வில்லை மீனகத்திற்க்கும் எமது பின்னுட்டம் தங்க்லீசில் தான் இட்டுவந்தேன் பின்னர் சில வலைபூ நண்பர்கள் வழி பின்னுட்டம் இடதெரிந்து கொண்டேன் அந்த அளவில்தான் எனது இன்றைய நாள் வரை இருந்து வருகிறது .

நாம் முன்பே குறிப்பிட்டது மாதிரி எமக்கு பெயரும் புகழும் வரவேண்டும் என்பதற்காக நாம் எழுத தொடங்கவில்லை எமது மொழிபண்பாடு தமிழ கலைகள் போன்றவற்றை இன்றைய சமூகத்திற்கு அறிமுகப் படுத்த வேண்டி இருக்கிறது அதை இன்றய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவே, ஆனால் இது எந்த அளவுக்கு பயன்படுத்த படுகிறது என்பது எம்மால் விளங்கி கொள்ள இயலவில்லை
தமிழர்கள் தங்களின் சொந்த மொழிமீதும் தமது கலைகள் மீதும் மிகப் பெரும்பான்மை பற்று கொண்டு இருக்கவில்லை இது இராயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் மெத்தன போக்குதான் என்றாலும் மாந்த குலத்தின் நோய்களை முறையாக நீக்குகிறது இது அறிவியல் அடிப்படையிலானது என கூவி கூவி அழைத்தாலும் இந்த தமிழர்கள் வருவதாக காணோம் நம்மோடு வாழ்ந்த வள்ளலார் பெருமான் கடைவிரித்தேன் கொள்வாரில்லை ... என வாரி சுருட்டி கொண்டு விட்டதை போல செய்ய வேண்டியே இருக்கிறது . தமிழ் சமூகம் நோயில் வீழ்ந்து கிடைக்கிறது

தமிழர்கள் எப்படி நோயில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என வினவலாம் சிறிய விளக்கம் அதாவது உண்மையான மொழி பற்றாளர்களும் கொள்கை பிடிப்பாளர்களும் வறுமையில் வாட விடுவது தமிழர்கள் வழக்கமாக இருக்கிறது இது இன்று நேற்றல்ல வள்ளுவர் காலம் தொடங்கி நம்மோடு வாழ்ந்து மறைந்த தேவநேய பாவாணர் வரை இதே கதிதான் அதனாலும் மேலும் விண்ணை முட்டும் மற்ற மருத்துவ முறை கட்டிடங்கள் உயர்ந்து இருக்கும் போது தமிழர்கள் நோயாளியாகத்தானே இருப்பார்கள்? இருக்கிறார்கள்.
தமிழ சித்தமருத்துவர்கள் வாடி கிடக்கும் போது நோயில் இருந்து விடுபடுவது சத்தியம் இல்லாத ஒன்று இந்த பார்வையை நாம் கொடுக்க வில்லை என்றால் நானும் பிழை செய்கிறேன் என்று தான் பொருள் எனவேதான் பதிவு செய்தேன்
இந்த சமயத்தில் என்னை ஊக்கு வித்து பின்னுட்டம் இட்டு இன்ட்லி மற்றும் தமிழ்மணம் போன்ற வற்றில் விருப்ப வாக்குகள் அளித்தும் ஊக்குவித்த அனைவரையும் வணங்கி மகிழுகிறேன்.

தமிழன்புடன்
போளூர்தயாநிதி.

கோழிக்கறி (chicken ) விசமே




இன்றைய விரைவு உலகம் எது நல்லது எது கேட்டது என தேடிக்கொண்டு இருப்பதில்லை கிடைத்ததை உண்டு நோயை பெறுகின்றனர். முன்பு கோழிகளின் தேவை நாட்டுப்புறவளர்ப்பு கோழிகள் ஈடு செய்தன இன்று மிகையான தேவையை ஒட்டி அதிக அளவில் வளர்ப்பு கோழிகளை மாமிசத்திற்காக பயன் படுத்தப்படுகிறது இந்த கோழிகள் விரைவாகவும் மிகையான எடையுடனும் இருப்பதற்கு இரசாயணம் கலந்த தீவிணங்கள் போடப்பட்டு வளர்க்கபடுகிறது . இந்த தீவினங்களில் உள்ள கொழுப்பு சத்தில் டயாக்சின் என்ற இரசாயணம் காணப்படுகிறதாம். இது மனிதர்களிடம் புற்று நோயை உண்டாக்கும் தன்மை வாய்ந்தது எனவே இப்படி பட்டதீவினங்களை உண்ணும் கோழி மற்றும் பன்றி போன்ற வற்றை உண்பது அபாயம் நிறைந்தது என செய்திகள் வெளியாகி உள்ளது .
நாள் 10 .01 .2011 பக்கம் 7 ல் தமிழ் முரசு வேலூர் பாதிப்பு .

தேனும் விசமா?

இயற்கையான தேனின் மருத்துவ குணத்தை சொன்னால் நாம் பலநாட்கள் இந்த இடுகையை தொடர வேண்டி இருக்கும் .அவ்வளவு சிறப்பு வாய்ந்த உணவு தேன் அதுகூட இன்று நஞ்சாக மாறிவிட்டது . இயற்கையான தேனை நீண்ட நாள்கள் பாதுகாப்பாக இருக்க அதில் எரித்ரோமைசின் என்ற மருந்து பொருளை சேர்க்க படுகிறதாம் இது நச்சு தன்மை வய்ந்தத்து என கருத்தபடுகிறது என ஒரு இதழ் கூறுகிறது
அனிதா நாராயணன் என்ற அறிவியலாளர் முன் காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் நச்சு உள்ளது என கண்டு ஆய்வு செய்து பரபரப்பை உண்டாக்கிய அதே அறிவயலாளர் தான் இதையும் நமக்கு ஆய்வு செய்து பதிவு செய்து இருக்கிறார்.

ஐஸ் கிரீம் பதிப்புகள்

இந்த ஐஸ் கிரீம்களில் அடங்கியுள்ள சர்க்கரை பலநோய்களை வர வழைக்கும் காரணியாகிறது .மூகமையாக நீரிழிவு (சர்க்கரை நோய் ) உண்டாகிறது அதிக இரத்த அழுத்தத்திற்கு காரணமாகிறது அதிகமான சர்க்கரையை உடைய ஐஸகிரீம் அருந்தும் போது அதை செறிக்க உடனடியாக அதிக அளவு
இன்சுலின் சுரக்கிறது அதனால் உடலில் திடீரென்று குளுக்கோசு அளவு குறைகிறது இதன் வெளிப்பாடாக தலைவலி தோன்றுகிறது
(நீங்கள் படிக்க வேண்டிய மருத்துவ நூல் ஆக்கம் டாக்டர் பூ .பழனியப்பன் பக்கம் 14 )
மிகையாக அதே நேரம் விரைவாக உண்பது இந்த மீதூண் காலத்தில் இந்த வகை ஐஸ்கிரீம் மிகையாக எடுத்து கொள்வது என எனமது உணவு பழக்கத்தை முறைபடுத்தி நோயில் இருந்து விடுபடுவோம் .

சித்தமருத்துவம் காப்போம் நோய் வென்று நீடு வாழ்வோம்
.
அன்புஉறவுகளே இராஜீவ் காந்தி மரணத்தில் குற்றம் சாட்டப்பட்டு சாந்தன் ,முருகன் ,பேரறிவாளன் ஆகியோரின் மரணத்தை உறுதி செய்து செப்டம்பர் 9 என நாள் குறித்து உள்ளது .இதில் பல்வேறு அரசியல் உள்ளதாக கூறப்படுகிறது . உலக நாடுகள் எல்லாம் மரண தண்டனையை நீக்கி விட்ட போதிலும் இந்தியா விடப்பிடியாக மரண தண்டனையை கையாண்டு வருகிறது இது மனித குலத்திற்கே இழுக்கானது இதற்காக நமது எதிர்ப்பை மனிதாபிமானத்துடன் காட்டுவோம் .
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன.கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் ஒழுங்கை காரணம்காட்டி நாளையோ மறுநாளோகூட தண்டனை யை நிறைவேற்ற ஆளும்தரப்பு அவசரம் காட்டுகின்றது.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் ...அவர்களை தூக்குகயிறு நெரிப்பதற்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது.நாம் ஒருகணமும் தாமதிக்காமல் உடனடியாக செயற்படவேண்டும். இந்த தூக்கு தண்டனையை நிறுத்தும் சட்ட அதிகாரம் உள்ளவர்களிடமும், தூக்குதண்டனைக்கு எதிரான சர்வதேச நிறுவனங்களிடமும் இப்போதே நீதிகேட்டு மின்னஞ்சல்களையும், தகவல்களையும் அனுப்புவோம்.சாத்தியமான அனைத்து வழிகளையும் பயன்படுத்தி இந்த மூவரின் தூக்குதண்டனையை நிறுத்த இப்போதே முயல ஆரம்பிப்போம்.....
Send E-mail to Indian Government:
------------------------------
-------------

Her Excellency Smt. Pratibha Devisingh Patil
President of India
presidentofindia@rb.nic.in

Sri M.Hamid Ansari
Vice-President of India
vpindia@nic.in

His Excellency Mr. Manmohan Singh
Prime Minister of India
manmohansingh@sansad.nic.in

Mr. P.CHIDAMBARAM
Home Minister of India
hm@nic.in

Hon'ble Mr. Justice S.H. Kapadia
Supreme Court of India
supremecourt@nic.in

Smt.Sonia Gandhi
soniagandhi@sansad.nic.in
President, Indian National Congress

Shri L.K. Advani
Leader of Opposition in the Lok Sabha
advanilk@sansad.nic.in

Smt.Meira Kumar
speakerloksabha@sansad.nic.in
Hon’ble Lok Sabha Speaker

His Excellency Thiru Surjit Singh Barnala
Governor of Tamil Nadu
govsec@tn.nic.in

Dr. J. Jayalalitha
Chief Minister of the state of Tamil Nadu
cmcell@tn.gov.in

Hon. Justice Shri K.G. Balakrishnan
National Human Rights Commission of India
chairnhrc@nic.in

Send E-mail to Intl. Organisations against Death
-----------------------------------------------------------
Penalty:
---------

இந்தியஅரசே
மரண தண்டனை சட்டப்பிரிவை உடனே இரத்து செய்.
இப்பது உள்ள மரண தண்டனைகளை ஆயுள் தண்டனையாக மாற்று.


.

More than a Blog Aggregator

3 கருத்துகள்:

  1. நீண்ட பதிவு ..
    நிறைய தகவல்களை கொண்ட பதிவு,,,
    தங்களின் பதிவுலகப்பயணம் இன்னும் நெடு பயணம் செய்ய வேண்டி
    வாழ்த்துக்கிறேன் ..

    பதிலளிநீக்கு
  2. இறுதியில் கூறிய மரண தண்டனை பற்றிய பகிர்வுக்கு நன்றி /..

    எல்லோரும் கூடி வென்று காட்டுவோம்..

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...