செப்டம்பர் 26, 2011

எளிமையான குழந்தைப்பேறும் நோயில்லா வாழ்க்கைமுறையும் ...




எமது முந்தைய இடுகையில் திருமணத்திற்கு முன் ஒரு ஆற்றுபடுத்துதல் அதாவது வழிகாட்டல் என குறிப்பிட்டு இருந்தேன் . இன்றய சூழல் குழந்தைப் பெறில் இருந்தே நோய்களை உண்டாக்கி மனிதனை முற்றாக நோயாளியாக்கு கிறது இந்த சூழலை மாற்றி முற்றாக ஒரு புதிய உலகை தோற்றங் கொள்ளசெய்ய இயலுமா? என நாமே வினா கேட்டு நமே விடைதேடினோம் அதற்க்கான விடைதான் இந்த இடுகை . உண்மையில் அப்படி ஒரு உலகத்தை கானவியலுமா? முடியும் ....அதற்க்கு நீங்கள் சிரமப் படாமல் இருக்க வேண்டுமானால் சிரமப் பட்டே யாகவேண்டும்

இன்று குழந்தைப்பேறு என எடுத்துகொண்டாலே பெண்கள் அச்சப்படும் அளவிற்கு வந்துவிட்டது அதாவது குழந்தைப்பேறு எளிமையாக நடைபெறுமா? அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படுமா? இந்த அறுவை சிகிச்சை நமது முறையில்லாத நட வடிக்கையினால்தான் வருகிறது என நமக்கு புரிவதில்லை . சித்த மருத்துவம் திருமணத்திற்கு முன்பிருந்தே முறையாக குழந்தைப் பேற்றிற்கு தன்னை ஆயத்தப் படுத்திக்கொள்ளவேண்டும் என்கிறது இருந்தாலும் நாம் அதை எப்போதும் பொருட் படுத்துவதில்லை . தாய்மை பேறு என்பது உண்மையில் ஒரு புனிதமான இடம் அது இன்று வேதனையோடு எதிர் கொள்ளகூடிய ஒன்றகாகிவிட்டது .

வீட்டு விலக்கு முடிந்து முதல் பத்து நாட்கள் மற்றும் கடைசி பத்து நாட்கள் பாதுகாப்பான் நாட்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது அதாவது இந்த நாட்களில் பெரும்பாலும் குழந்த்ப்பேறு உண்டாவதில்லை அதாவது இடைப்பட்ட பத்து நாட்கள் தாய்மை பேற்றிக்கு உகந்த நாள்கள் என மருத்துவ உலகம் குறிப்பிடுவத நாம் அனைவரும் அறிந்ததுதான் இந்த காலத்தில் பாலுறவை முறைப்படி வைத்து கொள்ள தாய் கருவுருவாள் என குறிப்பிடு கிறார்கள் .

இப்படி தாய்மை அடைந்து விட்டால் குழந்தைபேறு உண்டாகும் வரை எல்லா மாதங்களும் முறைப்படி சிச்த்த மருத்துவம் குறிப்பிடும் மருந்துகளையும் வழிகாட்டல் களையும் கடைபிடித்தால் குழந்தைப்பேறு எளிதாகும் பிறந்த குழந்தை பின்னாளில் நோய் இல்லாமல் நீடு வாழ முடியும்
சிலருக்கு தாய்மைக் காலத்தில் குழந்தையை தாங்கி பிடித்து வாளர்க்க கருப்பையில் வேண்டிய சக்தி இன்மையால் கரு கலைந்து விடுகிறது இதற்க்கு சித்த மருத்துவத்தில் கருவளர்க்கும் எண்ணெய் ஒன்று இருக்கிறது இதை முறைப்படி கருக்கலத்தில் அருந்திவார இப்படி உண்டாவதில்லை இதை பதிவு செய்யக்காரணம் இப்படி ஒரு தீர்வு இங்கு சித்த மருத்துவத்தில் இருக்கிறது என்பதே தெரியாமல் இருக்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் பத்தாவது மதம் வரை மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்துகளை முறைப்படி எடுத்துவர தாய்க்கும் சேய்க்கும் எந்த பதிப்பும் இல்லமால் எளிமையான குழந்தைப்பேறு கிடைக்கும் .
அடுத்த இடுகையில் மீண்டும் சிந்திப்போம்
சித்த மருத்துவம் காப்போம் நோய் வேண்டு நீடு வாழ்வோம்More than a Blog Aggregator

செப்டம்பர் 19, 2011

திருமணத்திற்கு முன் ஒரு ( Counselling ) வழிகாட்டல் மருத்துவ ரீதியாக.




இப்போது திருமண வாழ்வு கதைகளில் சொல்லுவது போலவும் அறிவர்கள் சொன்னது போலவும் சொர்கத்திலும், வர்கத்திலும் நிச்சயிக்கபடுவதாக தெரியவில்லை. எதோ கடமைக்காக நடத்தி பின்னர் சில நாளில் மணமுறிவை நடுகிறனர் சில மாதங்களில் மணவாழ்வு பிண வாழ்வாக மாறிபோவதுண்டு, இதற்கெல்லாம் காரணம் என்ன சிந்தித்தோமா? இல்லை பணத்தை தேடுவதில் முழுமையான? சிந்தனை செலுத்துவதால் மணமுறிவை பற்றி சிந்திக்க எல்லோருக்கும் நேரமில்லையா ?

இது கண்களை கூவி விற்றுவிட்டு சித்திரத்தை வாங்குகிற அறிவாளிகள் ? நிறைந்த காலமாக இருக்கிறது .மரித்துபோகும்நிலை பற்றியும் நோயாளிகளையும் சிந்திக்க வைக்க ஒரு சின்ன வழிகாட்டல். செய்ய எண்ணினோம் அதன் தொடர்சியாக...... இது நிச்சயம் உங்களுக்கல்ல அனால் நோயாளிகளுக்குதான்?ஆவர்தான் படிக்கவும் மாட்டார் கடைபிடிக்கவும் மாட்டரே ? என நீங்கள் கூறுவது என் காதுகளில் சத்தமாக கேட்கிறது .நீங்கள் படித்து சொல்லீடுவீங்க இல்லையா?

இப்போது முறையில்லாத வளர்பினால் இளமையிலேயே முதுமையை விழுங்கி வாழவேண்டிய நேரத்தில் மரண ஓலத்தை கேட்க முடிகிறது உண்மையை சொல்லுகிறவர்கள் இங்கு பித்து பிடித்தவராக தோற்றமளிக்கிறார் என்ன செய்வது இதுவும் காலத்தின் கட்டயாம் .

நீங்கள் திருமணத்திற்கு நிற்க்கிரீரா? உண்மையிலேயே இதை கடைபிடித்தல் உறுதியாக பலன் கிடைக்கும் ஆனால் நீங்கள் நான் சொல்லுவதை நூறு விழுக்காடு கடைபிடிக்க வேண்டும் ஏழு மலைதாண்டசொல்லவில்லை வாழ்வில் சில மாற்றங்களை செய்து கொள்ளுங்கள் வாழ்கை உங்களுக்கே உங்களுக்கு மட்டுமே இனி ... நீங்கள் படியுங்கள் இனியும் கதை வளர்க்க விரும்பவில்லை .....

அன்பு உறவுகளே இப்போது நமது வாழ்க்கை முறை மாறித்தான் போனது இருந்தாலும் நாம் புதியதாக வாழ்ந்துதான் ஆகவேண்டும் என எண்ணுகிறோம் எப்படி என்பதுதான் புரியவில்லை ....
மாறுபட்ட வாழ்க்கைமுறை ... மாறுபட்ட உணவுமுறை சுற்று சூழல் இப்படி நம்மை நோய் துரத்தி கொண்டே இருக்கறது இவற்றை எல்லாம் விட்டு விலகி நோயற்று வாழுவது சிலருக்கு மட்டுமே முடிகிறது எல்லோராலும் இயலுவதில்லை முறையாக எண்ணெய் தேய்த்து குளிக்கும் கெட்ட பழக்கமெல்லாம் ? இப்போது இல்லை நீங்க எந்த காலத்தில இருக்கிறீங்க? இப்படியான வினாக்கள் நம்மை தாக்க தொடங்கும் . என்ன செய்வது இருந்தாலும் சொல்ல வேண்டியிருக்கிறது வாரம் இரண்டு நாள் எண்ணெய் தேய்த்து குளிக்க பழக வேண்டும் பின்னர்
உடலில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ வற்றை முறையான தேர்ந்த சித்த மருத்துவரிடம் கூறுக ஆணோ அல்லது பெண்ணோ உங்களின் குறைபாட்டை உறுதியாக நீக்குவார் . பாலியல் ரீதியான குறைபாடுகள் எனின் முறையாக விளக்கம் பெறலாம் பின்னர் மற்றவரின் வாழ்கையை கெடுப்பானேன்?

திருமணம்செய்து கொள்ளவிரும்பும் ஆண் அல்லது பெண் தங்களது குருதி என்ன வகை என்பதை அறிந்து கொள்க . குருதி ஒரே பிரிவை இருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள் (அதாவது Rh + அல்லது Rh _ எதாக இருந்தாலும் ஒரேபிரிவாக இருக்கும்படி பார்த்துகொள்க அதாவது ஆணுக்கு Rh + எனின் பெண்ணுக்கும் இதே பிரிவு இருத்தல் சிறப்பு .) மணப்பெண் அல்லது மணமகன் உண்மையில் அவரைப்பற்றி முழுமையாக தமக்கு ஏற்றவர்தானா ? இங்கே பணத்தை குறிக்கோளாக கொண்டவர் அருள் கூர்ந்து படிக்க வேண்டாம் என அறிவுறுத்த படுகிறீர் பணம் பக்கத்திலே வந்து படுத்து கொள்ளாது அது இன்ப வாழ்க்கையையும் தராது . ஒத்த கருத்தொற்றுமை கொண்டவர்தனா என்பதை பல முறை பேசுங்கள் எல்லாவற்றிலும் நிறைவு கண்டபின்னர் எந்த முடிவையும் எடுங்கள் . இப்போதைய பெண்களுக்கு கருப்பை சார்ந்த குறைபாடுகள் மிகப்பலரிடம் இருக்கிறது அதை முறையாக நீக்கி கொள்க பின்னல் வரும் பிணக்கு களுக்கு இந்த கருப்பையின் குறைபடுகளினாலே பல்வேறு பெண்களின் சினங்களுக்கும், பல்வேறு சிக்கல்களுக்கும் காரணமாக இருக்கிறது நான் சான்று காட்ட ஆயத்தமாக இருக்கிறேன் . இந்த கருப்பை குறைபாடுகளை ,வீட்டு விலக்கின்மை மிகையான வீட்டு விலக்கு, ஒழுங்கற்ற வீட்டு விலக்கு இப்படி இந்த குறைபாடுகளை கருப்பையை பலமடைய வைக்கும் பல மருந்துகள் சித்த மருத்துவத்தில் உண்டு . இதை முறையாக செய்து கொள்க ஆண்கள் எனின் மயக்கப் பொருட்கள் (மது , புகை )பழக்கத்திற்கு ஆளானவர் எனின் இதோடு கைவிடுக . காரணம் பல்வேறு பாலியல் குறை பாடுகளுக்கு இது காரணம் ஆகிறது பின்னர் ஆண்மையை பெருக்கும் மருந்துகளை முறைப்படி எடுத்து கொள்க அதும் சித்தமருத்துவத்தில் நிறைய உண்டு . இதை முறைப்படி எடுத்து கொள்க இதற்கும் முன்னதாக இருவரும் கழிச்சலை (பேதி )மருந்து எடுத்து வயிற்றை தூய்மை ஆக்கிகொள்க நலமுடன் இருக்கிறவர்கள் கூட இவற்றை செய்து கொள்வது தவறல்ல . இப்படி திருமணத்திற்கு இரண்டு மதங்களுக்கு முன்பே தங்களை ஆயத்த படுத்தி கொள்ள வேண்டும் இதற்குள் குழந்தை பேறு பற்றிய முறையான திட்டமிடல் இருக்க வேண்டும் என்னதான் இருந்தாலும் மணாமான இரண்டு ஆண்டுகளுக்குள் குழந்தைப் பேற்றை உண்டாக்கி கொள்வது சிறந்தது.
குழந்தைப் பேற்றின்போது பெண்ணின் அகவை 23 க்கும் 30 க்கும் இடைப்பட்டதாக இருத்தல் சிறப்பு நல்ல சிறப்பான நோயற்ற குழந்தைப் பேறு உறுதியாக வாய்க்கும்.சிக்கலாற்ற எளிமையான குழந்தைப்பேறு பற்றி அடுத்த பகுதியில் எழுதப்படும் .

கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களின் எண்ணம் சலனமற்று எந்த உள போராட்டமும் இல்லமால் இருக்க வேண்டும் இந்தகாலத்தில் உண்டாகும் போராட்டங்கள் குழந்தையை பாதிக்க செய்யும் .மேலும் இந்த கருக்கலத்தில் பெண்கள் எந்த நோயும் வராமல் காத்து கொள்ளவும் சிக்கலற்ற குழந்தை பேரிற்கும் நோயல்லாத குழந்தைக்கும் விளக்கம் பெறவேண்டி நீங்கள் தேடினால் அதற்க்கு அடுத்த எமது இடுகை வரை காத்திருக்க வேண்டியிருக்கும் .....

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம் .

குறிப்பு: மருத்துவம் தொடர்பாக விளக்கம் பெற எமது மின் அஞ்சலுக்கு எழுதாலாம் தமிழ்அல்லது ஆங்கிலத்தில் இருக்கலாம் தங்லீசில் எழுதினால் எம்மிடம் இருந்து பதிவல் வராது .More than a Blog Aggregator

செப்டம்பர் 12, 2011

சித்த மருத்துவமும் வளரட்டுமே ?




கடந்த இடுகையில் ஒரு விமர்சனம்


பெயரில்லா சரவணா கூறியது...

என்ன சார் ! புரியாத பேரெல்லாம் சொல்றிங்க ? சுலபமாக கிடைக்க கூடிய உணவுகளை சொல்ல கூடாதா ? இதையெல்லாம் எங்க போய் தேடறது ? தப்பி தவறி பக்கத்துல இருக்குற சித்த மருத்துவர்கிட்ட போனாலும் , காசை கரந்துடுவன்களே ?
வணக்கம் உறவுகளே எமது கடந்த இடுகையில் யாரோ சரவணன் என்ற நபர் விட்டுசென்ற வினாவுடன் கூடிய விமர்சனம்தான் இது இதை இங்கு பதிவு செய்ய காரணம் அவரை நாம் உளபூர்வமாக வரவேற்கிறேன் வணங்குகிறேன் . ஏனெனில் எமக்கு பாராட்டுகளைவிட விமர்சனங்களே பிடித்தமானவை கேள்வி கேட்கும் நிலைக்கு எல்லோரும் வரவேண்டும் என எண்ணுகிறேன். ஒருவகையில் பாராட்டுகளை வெறுக்கிறேன் ஏனெனில் அது மயக்கத்தை தரும் என்பதால்.

சேதிக்கு வருவோம் நம்மை வினா கேட்ட அந்த நபர் சித்த்மருத்துவர்கள் எல்லோருமே காசை கறக்கும் நபராக பார்க்கிறார் . இது முற்றிலும் பிழையான ஒன்று உண்மையில் சேவை நோக்குடன் மருத்துவத்தை செய்யும் வணங்க தாக்க பலர் இருக்கத்தான் செய்கின்றனர் . இருந்தாலும் சிலர் வணிக நோக்கத்தோடு இருக்கலாம் அவர்களின் நோக்கம் பணம் மட்டுமே என்பதாகவும் இருக்கலாம் அவர்களையும் நாம் நடவடிக்கையினால் முறைப்படுத்தயியலும் தானே . இருக்கட்டும் .

நாம் இந்த பதிவு செய்வதின் நோக்கம் ஒருமருத்துவம் பழமைவாய்ந்த நமது அழிவின் விளிம்பில் இருக்கும் மருத்துவம் செய்கிறவர்கள் எத்தனை பேர் கோடிகளில் புரள்கிறார்கள்? மிகவும் சொற்பமே மீதமுள்ளோர் வறுமையில் வாழுகின்றனர் .நாம் முன்னரே குறிப்பிட்ட மாதிரி இது தனி மனிதரை வாழ வைக்கிறது என பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழினத்தின் உயர்ந்த கலை இதை காப்பது என்பதும் இந்த சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்களை ஆதரிக்கிறது என்பதும் ஒன்றே . ஆக இந்த உயர்ந்த கலை இந்த மண்ணின் போற்ற வேண்டிய கலை இது எல்லோருக்கும் போய் சேரவேண்டுமானால் சித்த மருத்துவ தொழில் செய்கிறவர்கள் வளமுடன் வாழ வைக்க வேண்டும் இல்லை எனின் இந்த கலை அழியும் அதேவேளை மக்கள் நோயில் விழுந்து கிடப்பார்கள் .

அதுமட்டும் இல்லாமல் இந்த நிலப்பந்து முழுமைக்கும் நோயற்ற ஒரு நிலையை உண்டாக்க முடியும் தூய வாழ்க்கை நோயற்ற வாழ்க்கை எவ்வளவு இன்பம் பாருங்கள் ? ஆனால் இந்த பாழாய் போன த்மிழ் சமூகம் இந்த உயர்ந்த கலைகளைபாது காக்கிறதா ? என்றால் இல்லை என கூறுவேன் ஏன் இந்த இழிவான நிலை? தமிழகத்து தலைவர்கள் அப்படி பட்டவர்களாக இருக்கிறார்கள் .

எம்மைபற்றி ......

உண்மையில் தமிழர்களின் உயர்ந்த மொழியும் பண்பாடும் , இசையும் மற்ற கலைகளும் அவற்றோடு சித்தமருத்துவமும் முறைப்படி பாதுகாக்க வேண்டும் என எண்ணுகிறோம் நாம் வளமோடும் இல்லை வசதியோடும் இல்லை . ஆனாலும் நமது கலைகளை காக்க வேண்டும் என்பது நமது விருப்பம் விருப்பமாக இருக்கறது இதை இந்த மருத்துவத்தை முறையாக பயன் படுத்தி கொள்ளும் போதுதான் இந்த சமூகம் அடுத்தகட்ட சமூகத்திற்கு இந்த உர்யர்ந்த கலையை இட்டு செல்ல முடியும் .நம்மைபோலவே எல்லோரையும் எதிர் பார்க்க முடியாது அவர்களுக்கு குடும்பம் உண்டு குழந்தை குட்டிகளுண்டு நமக்கு அதெல்லாம் இன்னும் அமைய வில்லை என்பதால் நாம் சேவை செய்கிறோம் அவ்வளவே ?
சித்தமருத்துவம் மனிதத்தை நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் இந்த உலகம் முழுமைக்கும் நோயில் இருந்து விடுவிக்கும் மருத்துவம் எனவே காப்போம் பின் பற்றுவோம்More than a Blog Aggregator

செப்டம்பர் 05, 2011

ஆண்குறி பெரிதாக ( Penis size increase herbal medicine )




இப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பது போலவும் விளம்பரம் செய்கிறார்கள் இவர்களின் இந்த சில செய்திகளாலேயே உண்மையான மருத்துவர்கள் காணமல் போகின்றனர் .

இப்படி நாம் கூறுவது சிலருக்கு பிடிப்பதில்லை நமக்கு உண்மையான மருத்துவம் தமிழ மருத்துவம் உலகம் போற்றவேண்டிய மருத்துவம் முறையாக மக்களிடம் போய்ச் சேரவேண்டும் என்பதே . பாலுறவு தொடர்பான சிக்கல் பெரும்பாலும் இந்த விளம்பர பேர்வழிகள் கூறுவதுபோல எவருக்கும் இருப்பதில்லை அல்லது சிலர் தவறாக புரிந்து கொண்டு இப்பதனால் பாலுறவில் சிக்கல் உண்டாகிறது .

இந்த ஆண்குறி சிக்கல் களும் இப்படித்தான் பாலுறவில் ஆண்களின் குறிசிறியதாக இருப்பதற்கும் பாலுறவிற்கும் ஏதாவது இணைப்பு இருப்பதாக நமக்கு படவில்லை .பெண்களின் பிறப்பு உறுப்பில் இரண்டு அங்குல நீளத்தில் தான் உணர்வுகளை தூண்டுகிற நரம்பு மண்டலம் இருப்பதாக கூறுகின்றனர் . அப்படி இருக்க ஆண்குறி நீண்டு இருப்பதற்கும் பெரியதாக இருப்பதற்கும் எந்த வித இணைப்பு இருப்பதாக தெரிய வில்லை பாலுறவு என எடுத்து கொண்டால் உண்மையில் உளதிடமே சிறந்தத்தாக இருக்க முடியும் காரணம் இன்று பெரும்பாலும் உளவியல் சார்ந்த குறைபாடுகளே மிகுந்து காணப்படுகிறது . இவற்றிற்குதிருமணத்திற்கு முன்பே முறையான ஆற்றுப் படுத்துதல் (வழிகட்டுதால் ) தேவை என்பது நமது கருத்து விரைந்து இது தொடர்பாக எழுதப்படும்.

இப்போதைய இளசுகள் (பதின் பருவத்தினர் ) இந்த ஆண்குறி சிக்கலையே முன்வைக்கிறனர் . அன்பர்களே ஆண்குறி சிறியதாக இருந்தால் பாலுறவில் குறைபாடு ஏதும் உண்டாகாது. இதை முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் நல்லதே. இதுவும் கூட முந்தய பதிவில் கூறியபடி உடல் மற்றும் பரம்பரைத்தன்மை தன் காரணமாகிறது . இதைகூட பதின் பருவத்திற்கு முன்னதாக ஏதாவது குறை இருப்பின் அவற்றை சீர் செய்து கொள்ளவேண்டும் .

தீர்வுகள்

பாலியல் குறைபாடுகள் ஆண்குறியில் இருந்து தொடங்குவதில்லை அது உணவு திட்டம் முறையில்லாத பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் இருந்து தொடங்கு கிறது முறையான உணவு திட்டங்கள் இரத்தம் எந்த அளவிற்கு ஆண்குறியில் பாய்கிறதோ அந்த அளவிற்கு ஆண்குறியில் விரைப்புத் தன்மை இருக்கும் ஆக உடலில் ஆற்றலுக்கும் பாலுறவிற்கும் இருக்கும் நேரடி உறவை எவரும் சிந்திப்பதாக தெரியவில்லை . சில காரணங்களினால் தளர்ச்சி அடைய கூடும் சிலருக்கு ஆண்குறி மிகவும் சிறுத்து இருக்கும் இவற்றை முறையான சித்த மருத்துவத்தில் குணமாக்க இயலும் என மருத்துவ குறிப்புகள் உண்டு என்றாலும் உங்கள் பக்கத்தில் உள்ள நேர்மையான சித்த மருத்துவரை அணுகினால் இவற்றிக்கு முறையான தீர்வு அளிப்பார் அவரிடம் நேர்மை இருக்க வேண்டும் என்பது நமது அவா அதேவேளை தளர்ச்சி அடைந்து இருந்தாலும் சிறுத்து இருப்பதற்கும் மருத்துவ குறிப்பு ஒன்றை நாம் தர வேண்டியது ( இங்கு எவரையும் ஏமாற்றாமல் ) கடமையாகிறது எட்டி(இது நச்சு தன்மை கொண்டது ஹோமியோபதியில் நக்ஸ் என்ற மருந்து செய்கிறார்கள் ) கொட்டை,வசம்பு இவற்றை முறைப்படி தூய்மையாக்கி பாலில் அரைத்து இரவில் பூசிவர ஆண்குறி பருத்து விம்மி புடைக்கும் என ஒரு மருத்துவ குறிப்பு உண்டு இதையும் மருத்துவரின் பார்வையில் செய்வது நல்லது .அதேபோல ஆண்குறி உறுதியாகவும் பருககவும் வராகிக் கிழங்கு பால்முதுக்கன் கிழங்கு , பூனைக்காலி வித்து இவற்றை முறைப்படி தூய்மையாக்கி தூளாக்கி பாலில் எடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தினால் குணப்படுத்த இயலும் தெளிவடைவோம்

சித்த மருத்துவம் காப்போம் நோய் வெல்வோம். .

மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல்வரை வணங்குகிறோம் அமைச்சர்கள் மட்டத்திலும் தீர்மானம் இயற்ற வேண்டுகிறோம்.More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...