டிசம்பர் 06, 2010

குடல்வால் அழற்சி


மனிதனின் சிறுகுடலும் , பெருங்குடலும் இணைகிற இடத்தில் இருக்கும் சிறிய வால் போன்றபகுதி (APPENDIX) எனப்படுகிறது .

நோய்க்குறிகள்
வயிற்றின் நடுபக்கத்தில் வலிதோன்றும். முறையே கிழ்நோக்கி நோய் நகரும் . வயிற்றில் ஒருவித சிக்கல் நீடிக்கும் செரியாமை , மலசிக்கல் , தோன்றலாம் காய்ச்சல் 100 -120 டிகிரியில் தொடரும் வயிற்றில் வலது பக்கம் இருகும் விதை விரைப்படையும் . இருமல் , தும்மல் நோவை அதிகமாகும் .

உளவாற்றல்
பொதுவாக நோய்கண்டவர் நல்ல உளவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் அளவிற்கதிகமான கவலைகளை வைத்துக்கொண்டால் மனிதனை நோய் அழித்துவிடும் . உளம் இறுகினால்,நோய் தீவிரம் அடையும் .திடமான உளவற்றலை வளர்க்கும் போது உடலின் செல்கள் புத்துயிர் பெற்று உடல் சீரடையும் .

அழற்சி அடைதல்

குறிப்பாக உடலின் ஒரு உறுப்புக்கு கடினமான பணி கொடுக்கும் போது அது கேடடைகிறது . தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் குடலை கழுவி உடலைவளர் என்கிறது . தேரையர் என்ற சித்தர்
மனிதன் நோயின்றி வாழும் நெறியை போதிக்கிறார் . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தோற்றம் கொண்ட நம் மருத்துவ முறை அறிவியலை உள்ளடக்கி அறிவியலை போதிக்கிறது .

மலசிக்கல் நோய்க்கு காரணி


மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942 )
முன்பு உண்ட உணவு நன்கு செரித்த தன்மையை அறிந்து பின் முறைப்படி பசித்தபின் முறையான உணவை முறையான நேரத்தில் உண்ண வேண்டும் என போதிக்கிறது . இந்த முறையில் மாறுபாடு நேருகிறபோது நோய் தோற்றம் கொள்ளுகிறது . நன்கு செரித்து பசித்து சிக்கலின்றி மலம் வெளியேறினால் நோயில்லை . இதில் எங்கோ தடை ஏற்ப்படும் போது நோய் தோற்றம் கொள்ளுகிறது . முக்கி முக்கி கழிவை வெளியேற்ற முயற்சி நாளும் செய்யும் போது குடல் வால் அழற்சி உட்பட பல நோய்களுக்கு காரணமாகிறது .

தீர்வுகள்

௧. ஒய்வு தேவை
௨. பட்டினி பெருமருந்து என்பார்கள் இந்நோய்க்கு முதலில் பட்டினியே பெருமருந்தாகும் .
௩. குடல் பகுதிகளின் தூய்மையாக்கி கொள்ளவேண்டும் . இதற்க்கு எனிமா சிறந்தது .
௪. பின் வெறுமனே நீரைமட்டுமே உணவாக கொள்ள வேண்டும் .
௫. பின்னர் பழச்சாறுகளை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும் .
குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .
வெந்தயம் நினைய வைத்த நீரை அருந்தலாம் .
இக்காலத்தே மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
இவைகளை தேர்ந்த மருத்துவர் மேற்பார்வையில் செய்க
நோய் நீங்கி வெல்க .More than a Blog Aggregator

13 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்..புள்ளிகளுக்கு தமிழ் எண்ணுருக்களை பயன்படுத்தியது அழகு...

    பதிலளிநீக்கு
  2. தொடர் வருகைக்கு நன்றிகள் பரட்டுகக்கள் கருத்துகள் தொடர்ந்து சொல்லுங்கள்
    விளக்கம் வேண்டுமெனின் தெரிவிக்கலாம் .

    பதிலளிநீக்கு
  3. Thanx for stopping by..

    Really informative space you have...very useful article..Thanx for sharing..!
    Tasty Appetite

    பதிலளிநீக்கு
  4. மிகவும் பயனுள்ள தகவல்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள் . பொதுவாக உண்மையில் மக்கள் நலனிற்காக மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்கு பதிவு செய்ய படுகிறது .
    குறைகளும் , பயன்பட்டுத்துவதில் சிரமங்கள் இருப்பின் தெரிவிக்கலாம் .
    தமிழன்புடன் ....

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவுகள் நிறைய உள்ளன..

    தங்களின் இந்த உயர்ந்த இப்பணி மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. what theriyar said.. give the ref also..I expecting more from you

    பதிலளிநீக்கு
  8. நிறைவான பிரயோசனாமான பதிவுகள்.தொடர்வோம் !

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு பாராட்டுகள் . சித்தமருத்துவம் இன்றைய மக்களிடம் குறிப்பாக இளைய தலை முறைக்கு
    கொண்டு சேர்ப்பதே எமது முகாமையான பணி எனவே தொடர்ந்து வருகைதருவது மட்டுமல்லாமல் .மற்றவர்களுக்கும் அறிமுகப் படுத்துவீர்கள் என்பதே எமது அவா.

    பதிலளிநீக்கு
  10. anbulla iyya,

    I am Hepatitis-B patient.viral laod-2000.
    please suggest me medicine in sidda.
    please.
    my e-mail ID is mari22@rediffmail.com

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள குறிப்புகள், நன்றி, பாராட்டுக்கள்!

    //குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .//
    கேரட் என்பதை 'செம்முள்ளி' என தமிழில் அழைக்கலாம் என்பதை
    அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  12. நன்றி நண்பர்களே வருகைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...