ஆகஸ்ட் 01, 2011

மண்சோறும் குழந்தைப் பேறும் (இளம் பெண் களின் கருப்பைக் கோளாறுகள் )




இப்போதெல்லாம் குழந்தைவரம் வேண்டி பெண்கள் கடுந்தவம் செய்யவேண்டி இருக்கிறது .
இவை எல்லாம் முறையல்லாத உணவு பழக்கத்தினால் அன்றி வேறல்ல. முறையில்லாத நடவடிக்கையும் கூட .பெண்களுக்கு உண்டாகும் பெரும்பான்மை கருப்பை சார்ந்த குற்றங்கள் எளிதில் தீர்க்க கூடியன . ஆனால் ஆண்களின் சிக்கல் சற்று கடுமையாக இருக்கிறது . ஒருவீட்டில் குழந்தைப்பேறு இல்லை என்றால் அதற்க்கு மூகாமையான காரணம் பெண்ஆகிவிடுகிறாள். இந்த முறையற்ற குமுகம் ஆணாதிக்க குமுகம் பெண்ணை பிள்ளை பேறும் பொறியாக (இயந்திரமாக )பார்க்கிறது . குழந்தை பேரு இல்லை என்றால் இன்னொரு திருமணம் ஆணுக்கு ஆனால் ஆண் குழந்தை பெற தகுதி இல்லாதவன் என்ற நிலையில் பெண்கள் வேறு திருமணத்தை நாடுவதில்லை.

கருப்பை சார்ந்த குறைபாடுகள் .

வெப்ப நாடுகளில் பெண்கள் பாலியல் சார்ந்த பல்வேறு நோய்களுடனே காலத்தை கடத்த வேண்டியுள்ளது . முறையான உணவுத்திட்டம் பற்றிய கோரிக்கைகளை முறையில்லாத மருத்துவ முறை களிடம் வைக்கபடுகிறது . பாவம் மக்கள் ஆங்கிலேய அடிமை ஆட்சிமுறை நம்மை மெக்கலன் சொன்னமாதிரியே அவனுக்கு அடிமையாகவே ஆக்கி விட்டது . இந்த பெண்மைக்
குறைபாடுகளை முறையாக ஆய்ந்த நாம் அறிவு சார்ந்த முன்னவர்களான சித்தர்கள் பருண்மையாக ஆய்வு செய்து மக்களுக்கு கொடையாக வழங்கி இருக்கிறார்கள் .
1 .பெண்களுக்கு கருக்குழி விளக்கமற்று பாசு படிந்து இருந்தாலும்.
2 .கருக்குழி வளி மிகுந்து இருந்தாலும் .
3 .கருக்குழாயில் சதை வளர்ந்து இருந்தாலும்.
4 .கருக்குழையில் பூச்சிகள் இருந்தாலும்.
5 .கருக்குழாயில் இரத்தம் கட்டி இருந்தாலும்.
6 .கருக்குழாயில் தசை திரண்டு மதத்திருந்தலும்
கருக்குழாய் உள்ளே விந்தணுக்கள் செல்லாது . என பருண்மையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள் . இவை களுக்கு முறையே தனியே ஒவ் ஒன்றக்கும். தனியான குறி குணங்களும் தனியான மருத்துவமும் கூறப்பட்டு உள்ளது .முறையான மருத்துவர் எந்த நோய் பற்றி இருக்கிறது என கண்டறிந்து நோயில் இருந்து விடுவிப்பார் .

மண்சோறு

இந்த சிக்கலுக்கு மண் சோறு எங்ஙனம் தீர்வாக இருக்க முடியும் ? இதுவும் அறிவியல் பார்வை கொண்டது தான் அதாவது முறையாக எரியோம்பல் (ஆசனப்பயிற்சி ) செய்ய கூறினால் எனக்கு வேலை இருக்கிறது செய்ய இயலாது என வாய் கூசாமல் கூறும் தாய் குளங்கள் இப்படி கண்மூடித்தனமான செய்கை களை கூறினால் ஏற்பார்கள் என்பதால் இப்படி செய்யப்பட்டதாகும்.
இந்த மண்சோறு அடிப்படையில்
மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் இந்த ஆசனம் செய்வதால் பெண்களின் கருப்பை குற்றங்கள் பெரும்பான்மை தீரும் . எனவே இன்றைய இளம் பெண்கள் இந்த மகாமுத்தர ஆசனத்தை நாளும் பழகி வந்தால் கருப்பை குறைபாடுகள் தீரும் . அவற்றோடு ஜானு காசியாசனம் என்ற ஆசனங்களை முறைப்படி செய்து வரலாம் . இவற்றோடு கருப்பையை வெப்பம் அடைய செய்யும் காரம் ,புளி, தள்ளி எள் நெய் குளியல் செய்து கருப்பை பலமடையும் குமரி சேர்ந்த மருந்து களை எடுத்துவர நல்ல பலனை எதிர்பார்க்கலாம் குழந்தைபேறு எளிதில் கிட்டும் அதேவேளை காபின், கோக் போன்றவை சேர்ந்த மயக்கப் பொருட்களை நீக்க வேண்டியது தேவையாகும்.

நோய் வெல்வோம் சித்த மருத்துவம் காப்போம் .

முன்னர் குறிப்பிட்ட மாதிரி நாம் நோயில்லாத குழந்தைபேறு பற்றி இந்த இடுகை செய்ய எண்ணினோம் . மண் சோறு பற்றிய செய்தி நாளிதழ் களில் இருந்தது நம் கண்ணில் பட்டுவிட இந்த இடுகை பதிவிட வேண்டிய தாயிற்று .


வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .

சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .More than a Blog Aggregator

8 கருத்துகள்:

  1. //இந்த மண்சோறு அடிப்படையில்
    மகா முத்ரா என்ற ஆசனம் ஆகும் //

    இது விளங்கவில்லையே..

    மண்சோறு உண்பது எவ்வகையில் ஆசனத்திற்கொப்பாகும்..? புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான தகவல் . மருத்துவ அறிக்கையுடன் தந்து இருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. மண்சோறு உண்பது எவ்வகையில் ஆசனத்திற்கொப்பாகும்..? புரியவில்லை. please explain and also explain mahamudra

    பதிலளிநீக்கு
  4. வினா தொடுத்தமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் .அடிப்படியில் நான்தான் விவரமாக எழுதி இருக்கவேண்டும் ஐயம் தெளிய வைப்பதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும் என கருதுகிறவன் . இருந்தாலும் விரவு கருதி விவரமாக சொல்லவில்லை பிழைக்கு பொறுத்தருள்க .
    சித்தமருத்துவம் அடிப்படையில் அறிவியல் கொண்டது என தொடர்ந்து பதிவு செய்துவருகிறேன் .அந்தவகையில் சித்தர்கள் மாந்தர்களின் உடற்கூரை நன்குஆய்வு செய்து மருந்துகளையும் மருத்துவ் முறைகளையும் கொடையாக வழங்கினர்கள். இந்த மகா முத்ரா ஆசன பயிற்சி வஜ்ராசன நிலையில் அமர்ந்து பின்னர் ஸ்லாமியர்கள் தொழுகை நடத்துகிறார்களே அதுமாதிரி செய்கிற ஆசன பயிற்சிதான் மகா முத்தரா என்ற ஆசனம் செய்கிற முறையாகும் . மண்சோறு சடங்கில் இதே நிலையில் பெண்கள் கீழே மண்தரையில் / உணவை வைத்து விட்டு கையில் எடுத்து உணவு உண்ணாமல் வஜ்ஜிரசன்னா நிலையில் அப்படியே குனிந்து வாயினால் உண்பதாகும் . இதுதான் குறிப்பிட இந்த மகா முத்ரா ஆசனத்தை முறைப்படி பழக வேண்டும் என்கிறோம் . பெண்களுக்கு பெரும்பாலும் கருப்பை முறுக்கி கொள்ளுதல் போன்ற கருப்பையின் உள்பகுதியில் நுட்பமாக உண்டாகும் குற்றங்களை இந்த ஆசனம் நீக்குகிறது என்பது உண்மை .

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டத்தில் நல்ல விளக்கம் !

    பதிலளிநீக்கு
  6. தஙகளை இன்றைய வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்பை
    எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகக் கருதுகிறேன்
    தங்கள் பதிவுலகப் பணி மென்மேலும் சிறக்க
    வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  7. தேவையான பதிவு. பெண்களுக்குத் தேவையான ஆசனம் எது என்பதை அறியப்படுத்தியுள்ளீர்கள். பெண்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...