டிசம்பர் 21, 2010

பாம்பு , தேள் , பூரான், மனிதன் ,நாய் கடி விடம் நீங்க



மனிதன், பாம்பு, தேள், பூரான்,
நாய் கடி விடம் நீங்க


பெரும்பாலும் மனிதர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ விசா வாங்காமலே மரணத்தை வாங்கித்தரும் பாம்பு ,நாய் , போன்ற நச்சு விடங்களைநீக்குவது பற்றி நாம் கதைப்போம் .
பொரும்பாலும் இந்த நச்சு விடங்களினால் உயிருக்கே கேட்டை தந்து விடுவது உண்டு , பல எலி போன்ற விடங்கள் நாள்பட்ட நிலையில் அதன் குணத்தைக் காட்டும் . எலிக்கடியினால் பின்னாளில்
மூச்சிறைப்பு என்ற நோய் தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது . எனவே எந்த விடமனாலும் . அவைற்றை முறைப்படி நீக்கி கொள்ள வேண்டும் .

நாய்க்கடி

நாய் கடித்த உடனே ஊமைத்தைவேர் 10 கிராம் எடுத்து வூமத்தன் விதை 10 கிராம் சேர்த்து பசுவின் பால்விட்டு அரைத்து நாள்தோறும் மூன்று நாள் கொடுக்கவும் .(அ )சிறியாநங்கை இலை 5 அ 10 எடுத்து உடனே மென்று தின்னவும் விடம் நீங்கும் . இரண்டு மூன்று நாட்களுக்கு கண்டதை எல்லாம் தின்னாமல் வெறுமனே கஞ்சி மட்டுமே உண்டுவர விடம் நீங்கும் .

சீத மண்டலி
சீத மண்டலி கடித்தால் உடல் குளிரும் வியர்வை உண்டாகும் . உடலில் நடுக்கம் உண்டாகும்
குப்பை மேனி மூலிகை கொண்டுவந்து அரைத்து எலுமிச்சை விட்டரைத்து கடித்த இடத்தில் பூச வேண்டும் . சிறியாநங்கை மூலிகை பொடி கால் தேக்கரண்டி தேன் / தண்ணீர் கலந்து மூன்று நாள் காலை , மாலை உண்டுவர விடம் முறியும் .

வண்டுகடி

ஆடு தீண்டா பலை வேர் நூறு கிராம் , பொடித்து ஐந்து கிராம் அளவு நாளும் இரண்டுவேளை எட்டுநாள் உண்ண விடம் நீங்கும்.

செய்யான் விடம்

தேங்காய் துருவி சாறு எடுத்து நூறு மிலி அருந்த விடம் நீங்கும் .
எட்டி கொட்டை எடுத்து பால்விட்டரைத்து பாலில் அருந்த விடம் முறியும்.

பூரான்

இது கடித்தால் தோலில் தினவு எடுக்கும் . பூரான்போல் தடிப்பு உண்டாகும் .
குப்பை மேனி சாறு பத்து மிலி கொடுத்து சுட்ட உப்பு சுட்டபுளி உடன் உணவு எடுக்க விடம் நீங்கும் .
சிரியாநங்கை மூலிகையின் சாறு அருந்தலாம் . அரைத்து ஐந்து கிராம் எடுக்கலாம் .விடம் முறியும் .

விரியன் பாம்பு கடித்தால்

இதில் பல வகை உண்டு கருவிரியபாம்பு கடித்தால் சிவப்பு நிறமாக பொன்னிறமாக நீர் வடியும் . கடுப்பு உண்டாகும் . இதற்க்கு பழைய வரகு அரிசி இருநூருகிரம் கொண்டுவந்து பிரய்மரப்பட்டை இருநூருகிரம் ததித்தனியே இடித்து வெள்ளாட்டுப்பால் கலந்து மூன்று நாள் உப்பு புலி தள்ளி உண்ண விடம் நீங்கும் .

நல்ல பாம்பு கடித்தால்

நேர்வாளம் பருப்பை சுண்ணம் செய்து வெற்றிலை பாக்கு போல் மென்று விழுங்க கக்கல் (வாந்தி)கழிச்சல் உண்டாகி விடம் வெளியேறும் .
தும்பை சாறு 25 மிலி எடுத்து மிளகு பத்து கிராம் அரைத்து கொடுக்க விடம் நீங்கும்
வெள்ளருகு கொண்டுவந்து மென்று தின்ன விடம் முறியும் .

தேள் கடித்தால்

தேள் கொட்டிய வுடன் தேங்காய் துருவி பால் எடுத்து இருநூறு மிலி அருந்த விடம் முறியும் .
நிலாவரை தூள் ஐந்து கிராம் குப்பை மேனி சாற்றில் மூன்று வேலை அருந்த விடம் முறியும் .

எலிக்கடிகள்


அமுக்ரா தூள் அரைத்தேக்கரண்டி இரண்டு வேலை நாற்பத்தெட்டு நாள் எடுக்க விடம் முறியும் .
அவுரி மூலிகை பத்துகிரம் வெந்நீரில் கலக்கி ஒருவேளை மூன்று நாள் அருந்த விடம் முறியும் .

மனிதன் கடித்தால் (அருள் கூர்ந்து சிரிக்க வேண்டாம் மனிதர்கள் மனிதனையே கடிக்கிறார்கள் )

சிருகுரிஞ்சன் ஒருகிராம் இரண்டு வேலை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
சிவனார் வேம்பு ஒருகிராம் ஒருவேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
சிரியா நங்கை அரைதேக்கரண்டி வீதம் இரண்டு வேளை மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும் .
பொன்னாவிரை கால் தேக்கரண்டி உணவுக்கு பின் ஒருவேளை வேதம் மூன்று நாள் எடுக்க விடம் நீங்கும்
இப்படி முறைப்படி மருந்துகளை எடுத்துகொண்டு எதிர் காலத்தில் தோன்றும் நோய்களை வென்று வாழ்வோம் .
சித்தமருத்துவம் காப்போம் நோய் வெல்வோம்
.More than a Blog Aggregator

20 கருத்துகள்:

  1. அற்புதமான பதிவு தொடரட்டும் தங்களின் தரமான பணி..

    பதிலளிநீக்கு
  2. அருமையா பதிவு !!!!
    :)))))))))

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துகளுக்கும் பாராட்டுகள் . பொதுவாக பழந்தமிழ கலைகள் இன்றைய இளைய தலை முறையிடம் கொண்டு சேர்த்து விட வேண்டும் என்பது எம் ஆவல் இளைய தலைமுறை இன்று புதிய வேகத்தோடு அற்புதமான ஆக்கப்பணிகளில் நேரத்தை செலவிடுவதனை காணும் போது பாராட்டத் தோன்றுகிறது .

    பதிலளிநீக்கு
  4. நன்றி.... அருமையான விடயங்கள்.. வாழ்த்துக்கள்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

    பதிலளிநீக்கு
  5. ரொம்ப நன்றி அய்யா.

    உங்களின் மருத்துவ குணத்தை படிக்கும் போது,பாட்டி வைத்தியம்தான் ஞாபகத்திற்கு வருது உங்களுக்கு தெரிந்த ரகசியங்களை நாங்களும் தெரிந்து கொள்ளனும் என்று ஆசைப் படுகிறிர்களே,அங்கேதாய்யா நிக்குறியே.

    அதுக்காக நான் உட்க்காந்து இருக்கேன் என்று சொல்லி விடாதியே,நீங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்ததை சொன்னேன்.

    இத்தனைக் கடிகளுக்கும் மருத்துவக் குணத்தை சொன்ன நீங்கள்,முக்கியமானவற்றை ஒன்றை சொல்ல மறந்துட்டியலே.

    மனுஷன் கடித்தால் அதுக்கு என்ன மருந்து ?

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் . வருகைக்குநன்றி ம .தி .சுதா
    கருத்துககுக்கு பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் . வருகைக்குநன்றி
    ஐந்தறிவு அதற்கும் கீழான
    விடமுள்ள எலி , பாம்பு , நாய் ,
    தேள் , போன்ற உடலில் பல்லில்
    மட்டுமே விடமுள்ள இவைகளின் விடங்களை
    நீக்க மருந்து சொன்ன நாம்...
    ஆறு அறிவு கொண்ட வுடல் முழுவதுமே விடம் கொண்ட மனிதனின்
    விடத்தை நீக்க நாம் மருந்து சொல்லாமல் விட்டுவிடுவோமா?
    மனிதன் கடித்த விடத்திற்க்கும் சொல்லியுள்ளோம் அருள்கூர்ந்து
    தேடுங்கள் .
    கருத்துககுக்கு பாராட்டுகள் .

    பதிலளிநீக்கு
  8. மிகவும் உபயோகமான தகவல்கள் அளித்ததற்கு அன்பு நன்றி!!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் . வருகைக்கு நன்றி கருத்துகளுக்கு பாராட்டுகள் . புதிய வருகை மனோ சாமிநாதன் மாமியை வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
  10. ரொம்ப நன்றி அய்யா.

    உங்களின் மருத்துவ குணத்தை படிக்கும் போது,பாட்டி வைத்தியம்தான் ஞாபகத்திற்கு வருது உங்களுக்கு தெரிந்த ரகசியங்களை நாங்களும் தெரிந்து கொள்ளனும் என்று ஆசைப் படுகிறிர்களே,அங்கேதாய்யா நிக்குறியே.

    அதுக்காக நான் உட்க்காந்து இருக்கேன் என்று சொல்லி விடாதியே,நீங்கள் எல்லோர் மனதிலும் இடம் பிடித்ததை சொன்னேன்.

    பதிலளிநீக்கு
  11. அருமை மிகவும் பயனுள்ளது

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  12. மிகவும் மிகவும் தேவையான பதிவு.ஊரில் இருப்பவர்கள் பார்த்தால்..அல்லது பார்த்து யாரவாது சொன்னா்ல்கூட நல்லது !

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா7:14 PM, மார்ச் 21, 2011

    neenka nalla vilakkam thanthirukkirkal innam viriva kodunka

    பதிலளிநீக்கு
  14. Friends,
    அனாதை குழந்தைகளுக்கு என் Blog ல் வரும் வருமானத்தை தர முடிவெடுத்துல்லேன்.என் Blog link கீழ் தரபட்டுள்லது அதில் உள்ள விளம்பரங்கலை click செய்தால் GOOGLE எனக்கு ஒரு click ற்கு ரூபாய் 5 தரும் தொண்டுள்ளம் கொண்டோர் தயவு செய்து பகிரவும். நன்றீ

    www.rahmanproperties1.blogspot.in

    பதிலளிநீக்கு
  15. உபயோகமான பதிவுகள் நன்றி

    பதிலளிநீக்கு
  16. உபயோகமான பதிவுகள் நன்றி

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...