ஜனவரி 29, 2011

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ? வாழமுடியுமா ? முடியும் என்பதே ...

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ?
வாழமுடியுமா ? முடியும் என்பதே ...


பழந்தமிழர்களின் அறிவு வியப்படைய வைக்கக்கூடியது என்பது நாம் அறிந்தது . பழந்தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்? வினாக்குறி எழுகிறதல்லவா விடைதேடுவோம் .
தோரயமாக பழந்தமிழர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வியலும் எனது எமது சிறிய அறிவிற்கு படுகிறது .

காரணங்களை தேடுவோம்

பழங்கலங்களில் எல்லாம் பொதுவாக இருந்தது . தனியுடைமை காலமாக அப்போது இருக்கவில்லை .இயற்கையாக விளைந்த உணவுகளை முறையாக உண்டு வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் உலகில் முதலில் தோன்றிய இனம் என்ற வகையில் இருந்திருக்கலாம் . சித்தர்களின் காலம் என்பது நிலக்கிழாரிய காலகட்டம் .அதற்கும் முன்பாகவே சிந்துவ்ளி காலங்களிலேயே தமிழர்களின் அறிவு மரபு விரிந்து இருந்தது என்பது நாம் அறிவோம் . இந்த காலங்களில் தோன்றிய மருத்துவம் சித்தர்களின் கூறிய மதிநுட்பம் கடுமையான அர்பணிப்பு போன்ற கரங்களினால் நம் சித்தமருத்துவம் செழுமை அடைந்தது .

அறவியலும் அறிவியலும்

உலகினுக்கே அறிவியலை வழங்கியவர்கள் நம் பழந்தமிழர் என்பது நம் அறிந்ததுதான் . சித்தர்களின் அளப்பரிய உழைப்பினால் தம்மையே அற் பணித்துக்கொண்டு மக்களுக்காக கடுமையாக உழைத்தார்கள் . இந்த காலங்களில் தான் மனிதனின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை கல்பமருந்து களினால் செழுமையாக்கி மனிதத்தை மூப்பில் இருந்து காத்தனர் . அப்படிப்பட்ட கல்ப மருந்துகள் நூற்றி எட்டு என வகுத்தனர் . இந்த மருந்துகள் மனிதனை நோய் இன்றி வாழ வைத்தது நீண்ட நாட்களுக்கு நோய் இன்றி வாழ்ந்தனர் . இந்த காலங்களில் மனிதன் இராசயனங்களை கண்டிருக்கவில்லை அனால் சித்தர்கள் கடுமையான இராசயனங்கலையே முறையாக தூய்மை படுத்துதலின் காரணமாக மருந்துகள் ஆக்கி மனிதத்தை வழவைத்தனர் .

300 ஆண்டுகள் வாழ்வது முடியுமா?

மனிதன் 300 ஆண்டுகள் வாழமுடியுமா என வியப்படையலாம் மருத்துவர் வீரபாகு என்பர்
ஒருகணக்கு ஒன்றை கட்டுகிறார் பார்போம்.பிறந்த முயல் மூன்று மாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோட தொடங்குகிறது , அதன் அகவை இருபது
மாதம் . பிறந்த ஆடு ஆறுமாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோடுகிறது அதன் அகவை பத்து ஆண்டுகள் . ஒரு பசு கன்று ஈன்று ஒருஆண்டில் பூப்பு எய்தி கன்று ஈனுகிறது அதன் அகவை இருபது ஆண்டுகள் . இந்த மாதிரி பிறந்து பதினைந்து ஆண்டுகளில் பூப்பு எய்தும் மனித இனம் இருபது மடங்கு வாழமுடியும் தானே பழங்கால மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க இயலும்தனே ?
எல்லாம் சரி
மனிதன் 300 ஆண்டு வழவியலுமா?

வாழமுடியும் எங்ஙனம் எனில் இயற்கையாக மனிதன் வாழ தொடங்க வேண்டும் . கண்டதை எல்லாம் கண்ட நேரங்களில் தின்பதை நிறுத்தி
இயற்கையோடு இணைந்த வழக்கைமுறையை கடைபிடிக்க வேண்டும் . அது என்ன முறை அடுத்து காண்போம் .
இது குறித்த விமர்சனங்களை siddhadhaya@gmail .com மின் அஞ்சல் செய்க .

அடுத்த எமது இடுகை காதல் என்பது ... காதல் என்பதை இன்றய இளைஞ்சர்கள் எப்படி புரிந்து
கொடிருக்கிரார்கள் . இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த இடுகை ...
நோய் வெல்வோம் நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator

ஜனவரி 24, 2011

சிறுநீரக கற்கள்


சிறுநீரக கற்கள்

சித்தமருத்துவர்கள் அரச உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகத்தை குறிப்பிடுவார்கள் . இதன்பணி அவ்வளவு மகத்தானது. இது அவ்வளவு எளிதில் கெடுவதில்லை . கெட்டால் அவ்வளவு எளிதில் சீராவதில்லை .தலையில் தடவிக்கொள்ளும் மயிர் சாயம் முதல், கடின வீரியம் கொண்ட இரசாயன மருந்துகள், சாராயம் இவைகள் எல்லாமே சிறுநீரகத்தை கேடுஅடைய செய்யக் கூடியன .

சிறுநீரகம் மிகவும் மேன்மையானது . இது அவரை விதை வடிவில் மனிதனின் இடுப்புக்கு கீழ்பகுதியில் பத்து செமி நீளம் , ஆறு செமிஅகலம் , இரண்டரை செமி கனத்தில் இருக்கும். இதனுள் பத்து இலட்சம் சிறுநீர்வடிப்பிகள் உண்டு. இவற்றின் வேலைஉடலில் உள்ள இரத்தத்தை
துய்மை யாக்குவதுதான் . அதாவது வடிகட்டும் பணி , அரத்தத்தில் உள்ள தேவை இல்லாத நீரையும் தேவையில்லாத உப்புகளையும் பிரித்தெடுப்பதுதான். ஒருவரின் சிறுநீரின் அளவு அவரின் உணவு மற்றும் அருந்தும் நீர் ஆகியவற்றின் அளவின்படி மாறுபடும் .

சிறுநீரக கற்களின் வகைகள்

நாம் உண்ணும் உணவு பருகும் நீர் வாழ்க்கைமுறை ஆகியவற்றின் அடிப்படையில் சிறுநீரக கற்கள் உண்டாகியது .சுன்னசத்து (கல்சியம் )ஆக்சலேட்டுகள் , பாசுபேட் , யூரிக் அமிலம் ,சிசுடைன் ,
போன்ற வகை சிறுநீரக கற்கள் தோன்றுகிறது . இவைகள் சிறுநீரகத்தில் , சிறுநீர் குழாயில்,சிறுநீர் பையில் , சிறுநீர்த்தாரையில் என நோய்க்கு தக்கபடி உண்டாக்கலாம் .

இந்நோய்க்கான அறிகுறிகள்

@ விலாப்பக்கத்தில் விட்டுவிட்டு வலி
@ சிறுநீர் கழிப்பதில் சிரமம்
@ சிறுநீர் குறைந்து வெளியேறல்
@ கக்கல் (வாந்தி ) உண்டதால்
@ தொடை இணைப்பு , தொடை யில் , அடிவயிறு , ஆண்குறி , பெண்குறி போன்ற இடங்களில் வலி உண்டாகலாம் . சிறுநீர் குழாயில் கள் இருந்தால் இங்கு வலி தோன்றலாம் .

நோய் காரணங்கள்
@ நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் ,
@ மயக்கப் பொருட்கள் (மது ) அருந்துதல் பழக்கங்களினால் .
@ முறையில்லாத சம சீரில்லாத உணவு .,
@ போதிய நீர் அருந்தாமை பன்னாட்டு நிறுவனங்களின் மென்பானங்கள் அருந்துதல் .

தீர்வுகள்

நோய்களுக்கான காரணங்கள் கண்டறியப்படவேண்டும் . முறையில்லாத உணவுகளை நீக்குக .
சிறுநீரகத்திற்கு எரிச்சல் ஊட்டும் உணவுகள் நீக்குக . புளிப்புத்தன்மை , அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக. மது , ஊறுகாய் , வெள்ளரி , தக்காளி , பசலை , கோசு, காலிபிளவர் ,போன்றவை நீக்குக . இறைச்சி, பன்னாட்டு நிறுவன மென்பானங்கள் நீக்குக.

கல்சியம் , மக்னீசியம், பசுபெட் ,கார்பநேட்டுகள், சத்துகள் கொண்ட உணவுகள் மிகையாக எடுப்பது போன்ற காரணங்களினால் உண்டான கற்கள் எனின் அந்த உணவுகளை நீக்குக .
யூரிக் அமிலத்தால் உண்டான கற்கள் என்றால் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் நீக்குக .
தண்ணீர் மூன்று முதல் நான்கு லிட்டர் அளவிற்கு நாளும் அருந்துக . தண்ணீரின் தன்மையை சோதித்து அறிந்து கொண்டு செயல்படுக சிலவகை கற்கள் தண்ணீரில் கலந்துள்ள மினரல் களினாலும் கற்கள் தோன்றலாம் என கண்டறியப்பட்டு உள்ளது .
துளசி யுடன் தேன் கலந்து உண்க இது சிறுநீரகத்திற்கு சக்தியளிக்கும் .
இளநீர் , பதநீர், மோர் , பார்லி நீர் , வெந்தயம் நினைய வைத்த நீர் அருந்துக.
பூண்டு , கருணை தேவை எனின் முள்ளங்கி நீக்குக .
சைனசு உணவுகள் நீக்குக
காபி , தேயிலை , நீக்குக .
சாக்லேட் , ஐசுகிரீம் நீக்குக. .
காரணங்களுக்கு ஏற்றபடி தக்காளி, கொய்யா, பேரிச்சை , முந்தரி , வாதுமை, பட்டாணி , நீக்குக .

ஆசனபயிற்சி கள்

சிறுநீரக கற்கள் சிக்கலுக்கு புஜங்காசனம் ,தனுராசனம் ,முக்தாசனம் , அலாசனம் ,உத்திதான் பாதசனம் செய்க .
சித்தமருத்துவம் காப்போம் நோய் நீங்கி நீடு வாழ்வோம் More than a Blog Aggregator

ஜனவரி 18, 2011

சிறு நீராக செயலிழப்புகள்




சிறு நீராக செயலிழப்புகள்
இன்றைய அவசர வாழ்க்கை முறை மனிதனை பாடு படுத்துகிறது . முறையில்லாத
உணவு முறை நோயாளி யாக்குகிறது எதை எப்படி திண்பது எவருக்குமே
தெரிவதில்லை . எங்கேதேடுவது வாழ்வை ? விடைதெரியாமல் வீணடிக்கிறோம் .
இருக்குமிடத்தை காணுவதற்கு சிரமப்படுகிறோம் . அனால் தேடிநோமில்லை
.
பழமைமறா பண்பாட்டைத் தேடுவோம்

எங்கும் ஓடி ஒழிந்துவிடவில்லை மனித வாழ்வு மண்ணில் புதையலாக
கிடக்கிறது தொடுவோம வாருங்கள் .
இந்திய புள்ளிவிவரம்
இந்தியாவில் ஆண்டு தோறும் 1 .5 இலட்சம் பேர் மிக மோசமான சிறுநீரக
கோளாறினால் பதிக்கப்
படுகின்றனர் . இவர்களில் மூவாயிரத்தைநூறு போர் மட்டுமே மாற்று சிறுநீரகம்
பெற முடிகிறது .
மாற்று சிறுநீரகம் கிடைக்காதவர்கள் டயாலிசீஸ் செய்ய வேண்டியது கட்டாயம் .
வாரத்திற்கு மூன்று முறை செய்யவேண்டி வரும் இதற்க்கு ஆகும் மருத்துவ செலவு
மிகுதி இந்த அதிகப்படியான மருத்துவ செலவினால் பத்தாயிரம் பேர் மட்டுமே
டயாலிசீஸ் செய்து கொள்ளுகின்றனர் . பெரும்பாலோர் நோவுடன் மடிகின்றனர்
என்கிறது 23 திசம்பர் 2010 புதிய தலைமுறை இதழ்

முறையில்லாத உணவும் சரியில்லாத வாழ்க்கைமுறையும்

இன்றைய வழக்கை முறை விரைவை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது . இதில் தன் வழ்வைபற்றி துளியளவும் நினைப்பதில்லை . விரைந்தோடும் நோக்கில் கிடைத்தை உண்டு செரிக்கவேண்டும் என நினைக்கின்றனர் . நம் மனித உடல் என்பது இரும்பினால் செய்யப்பட்டதில்லை .
மாறாக சதையும் எழும்பும் ரத்தமும் கொண்டதாகும் . எனவே இரசாயணம் கலந்த உணவு பழக்கங்கள் மனிதனை பாழாக்க கூடியன எனவே நம் உணவு இயற்கையானதா இரசாயணம் கலக்கப்பட்டதா என்பதை சிந்திக்க வேண்டும் . நாம் இயற்கையானது என எண்ணிக்கொண்டிருக்கும்
உணவுகள் எல்லாம் இன்றைய விரைவு உலகம் நாசப்படுத்திக்கொண்டு இருக்கிறது . வாழைபழம் ஒன்றை எடுத்துக் கொள்வோம் பச்சை வாழைபழம் போலவே இருக்கும் அனால் இப்போது மஞ்சள் நிறத்தில் கிடைக்கிறது இதை பழுக்கவைக்க இரசாயணம் கலக்கப் படுகிறது அப்படி பழுக்கவைக்கபடுவதால் விரைந்தும் நல்ல வண்ணத்திலும் கிடைக்கிறதாம். இவற்றால் சிறுநீரகம்
விரைந்து செயலிழக்கும் என்கிறது ஆய்வுகள் . இன்றய துரித உணவுகள் சிறுநீரகத்தை மட்டுமல்ல புற்று நோயையும் உண்டாக்கும் என்பது எத்தனைபேருக்கு தெரியும் ?
சிறிய சிறிய நோய்களுக்கு எல்லாம் வீரியமிக்க மருந்துகளை உண்பதால் சிறுநீரகம் கெடும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . முறையான வாழ்க்கை முறைக்கு மாறுவோம்
.
கலப்படங்கள்

இன்று மனித நேயமும் உண்மையும் மரித்துப்போன தனியுடமை அமைப்பு முறையாகிவிட்டது . எனவே இங்கு கிடைத்தவரை எல்லாம் நமதே என்ற எண்ணம் கொண்டுவிட்டனர் . எனவே இங்கு பணம் மட்டுமே குறிக்கோள் என்று வந்துவிட்டது . உண்மை , நேர்மை என்பதெல்லாம் கேலிக்குரியவனாக ஆகிவிட்டது . முறையான உணவு பழக்கமும் இயற்க்கைசர்ந்த உணவுமுறைகளும் மனிதனை நோவில் இருந்து விடுவிக்கும் .கலப்பட பொருட்களை இனங்கண்டு அவற்றை எல்லோரும் எதிர்க்க கற்போம் . ஒரு தீமை நடக்கிறது என்றால் அவற்றை அறிவுத்துறையினர் இனங்கண்டு சொன்னால் ஒட்டுமொத்த சமூகமும் எதிர்க்க வேண்டும் . இல்லை என்றால் காட்டுமிராண்டி கூட்டமாக எல்லோரும் மடிந்து போவது தவிர்க்க இயலாது . சிந்திப்போம் விழிப்போம் . நோய் வரின் தூய தமிழ சித்த மருத்துவத்தை கடைபிடிப்போம் நோய் வெல்வோம் .
வாழ்க தமிழர் கலைகள்More than a Blog Aggregator
Related Posts Plugin for WordPress, Blogger...