ஜனவரி 23, 2012

எண்ணைக் குளியல் (oil bath )

            மாறிவரும்  இன்றைய  சூழலில்  பழமையும்  பாரம்பரியமும் மறந்து  வருகிறது . நாற்றமெடுக்கும்  போலித்தனமும்  மேலை  நாகரீகமும்  கடைபிடிக்கப்  பட்டுவருகிறது . இதனால்  நோய்கள்  பெருகுகிறது .பழமையான  நமது  மருத்துவமுறை  சிறந்த  வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டது . அந்த வகையில்  எண்ணெய் குளியல்  இன்றைய  விரைவு  சூழலில் மறந்து  போன  ஒன்றாகி  விட்டது.  வாரம் இருநாள்  எண்ணைக்  குளியல் செய்வது சிறந்த முறையாகும் .

        வேறெந்த  மருத்துவ முறைகளிலும்  இல்லாத சிறப்பு  நமது சித்த மருத்துவத்திற்கு  உள்ளது. அதுதான் மனித வாழ்வியலோடு  இணைந்த  மருத்துவமுறை. வாரம்  இருநாள்  எண்ணெய் குளியல்  செய்க.காரம், புளி குறைத்து  உண்ணுக என  கட்டளையிட்டு  மனிதனை  வழி  நடத்தும் .

        எண்ணைக்  குளியல்  காலை 6 .30  க்குள் தொடங்கிவிட  வேண்டும் .இள வென்நீரில்தான் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் . சீயக்காய்  அல்லது நலுங்குமா  பயன் படுத்தலாம் . எளிமையான  உணவுகள் உண்ணவேண்டும்.  எண்ணைக்  குளியல் செய்த அன்று  பாலுறவு  கூடாது . பகலுறக்கம் கூடாது .கடுமையான  வெய்யலில்  வேலை  செய்யகூடாது  .குளிர்ந்த உணவுகள்  கண்டிப்பாக கூடாது .

எண்ணைக்குளியல்  செய்வதால் பலன்கள் . 

உடற்சூடு  சீராகும் .
அழகுகூடும்.
சருமம்  மென்மைபெரும்.
ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும் .
தலைமயிர்  நன்கு  வளரும் .
நல்ல குரல் வளம்  கிடைக்கும் .
 எலும்புகள்  பலப்படும் . 

 இப்படி  பல பலன்கள்  இதனுள்  பொதிந்து  கிடக்கிறது.  எனவே  முறைப்படி  எண்ணக் குளியல்  செய்வோம் .

சித்தமருத்துவம்  காப்போம்  நோய் வெல்வோம்.
More than a Blog Aggregator

1 கருத்து:

  1. அவசர உலகில் மறந்து வரும் ஒரு பழமையான நல்ல வைத்தியங்களில் இதுவும் ஒன்று...
    பகிர்வுக்கு நன்றிங்க நண்பரே

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...