ஜனவரி 29, 2011

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ? வாழமுடியுமா ? முடியும் என்பதே ...

300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா ?
வாழமுடியுமா ? முடியும் என்பதே ...


பழந்தமிழர்களின் அறிவு வியப்படைய வைக்கக்கூடியது என்பது நாம் அறிந்தது . பழந்தமிழர்கள் எவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்திருப்பார்கள்? வினாக்குறி எழுகிறதல்லவா விடைதேடுவோம் .
தோரயமாக பழந்தமிழர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வியலும் எனது எமது சிறிய அறிவிற்கு படுகிறது .

காரணங்களை தேடுவோம்

பழங்கலங்களில் எல்லாம் பொதுவாக இருந்தது . தனியுடைமை காலமாக அப்போது இருக்கவில்லை .இயற்கையாக விளைந்த உணவுகளை முறையாக உண்டு வாழவேண்டும் என்ற கருத்தாக்கம் உலகில் முதலில் தோன்றிய இனம் என்ற வகையில் இருந்திருக்கலாம் . சித்தர்களின் காலம் என்பது நிலக்கிழாரிய காலகட்டம் .அதற்கும் முன்பாகவே சிந்துவ்ளி காலங்களிலேயே தமிழர்களின் அறிவு மரபு விரிந்து இருந்தது என்பது நாம் அறிவோம் . இந்த காலங்களில் தோன்றிய மருத்துவம் சித்தர்களின் கூறிய மதிநுட்பம் கடுமையான அர்பணிப்பு போன்ற கரங்களினால் நம் சித்தமருத்துவம் செழுமை அடைந்தது .

அறவியலும் அறிவியலும்

உலகினுக்கே அறிவியலை வழங்கியவர்கள் நம் பழந்தமிழர் என்பது நம் அறிந்ததுதான் . சித்தர்களின் அளப்பரிய உழைப்பினால் தம்மையே அற் பணித்துக்கொண்டு மக்களுக்காக கடுமையாக உழைத்தார்கள் . இந்த காலங்களில் தான் மனிதனின் மூப்பை உண்டாக்கும் செல்களை கண்டறிந்து அவற்றை கல்பமருந்து களினால் செழுமையாக்கி மனிதத்தை மூப்பில் இருந்து காத்தனர் . அப்படிப்பட்ட கல்ப மருந்துகள் நூற்றி எட்டு என வகுத்தனர் . இந்த மருந்துகள் மனிதனை நோய் இன்றி வாழ வைத்தது நீண்ட நாட்களுக்கு நோய் இன்றி வாழ்ந்தனர் . இந்த காலங்களில் மனிதன் இராசயனங்களை கண்டிருக்கவில்லை அனால் சித்தர்கள் கடுமையான இராசயனங்கலையே முறையாக தூய்மை படுத்துதலின் காரணமாக மருந்துகள் ஆக்கி மனிதத்தை வழவைத்தனர் .

300 ஆண்டுகள் வாழ்வது முடியுமா?

மனிதன் 300 ஆண்டுகள் வாழமுடியுமா என வியப்படையலாம் மருத்துவர் வீரபாகு என்பர்
ஒருகணக்கு ஒன்றை கட்டுகிறார் பார்போம்.பிறந்த முயல் மூன்று மாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோட தொடங்குகிறது , அதன் அகவை இருபது
மாதம் . பிறந்த ஆடு ஆறுமாதத்தில் பூப்பு எய்தி குட்டிபோடுகிறது அதன் அகவை பத்து ஆண்டுகள் . ஒரு பசு கன்று ஈன்று ஒருஆண்டில் பூப்பு எய்தி கன்று ஈனுகிறது அதன் அகவை இருபது ஆண்டுகள் . இந்த மாதிரி பிறந்து பதினைந்து ஆண்டுகளில் பூப்பு எய்தும் மனித இனம் இருபது மடங்கு வாழமுடியும் தானே பழங்கால மனிதன் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க இயலும்தனே ?
எல்லாம் சரி
மனிதன் 300 ஆண்டு வழவியலுமா?

வாழமுடியும் எங்ஙனம் எனில் இயற்கையாக மனிதன் வாழ தொடங்க வேண்டும் . கண்டதை எல்லாம் கண்ட நேரங்களில் தின்பதை நிறுத்தி
இயற்கையோடு இணைந்த வழக்கைமுறையை கடைபிடிக்க வேண்டும் . அது என்ன முறை அடுத்து காண்போம் .
இது குறித்த விமர்சனங்களை siddhadhaya@gmail .com மின் அஞ்சல் செய்க .

அடுத்த எமது இடுகை காதல் என்பது ... காதல் என்பதை இன்றய இளைஞ்சர்கள் எப்படி புரிந்து
கொடிருக்கிரார்கள் . இன்றைய சீரழிவுகளுக்கு காரணம் என்ன என்பதை விளக்குவதே இந்த இடுகை ...
நோய் வெல்வோம் நீடு வாழ்வோம் .
More than a Blog Aggregator

6 கருத்துகள்:

  1. பெயரில்லா5:21 PM, ஜனவரி 29, 2011

    you can give the tips to live for 300 years :)

    பதிலளிநீக்கு
  2. //300 ஆண்டுகள் வாழ்ந்தார்களா//
    இதிலென்ன சந்தேகம்.ஆதி மனிதர்கள் ஏறக்குறைய ஆயிரம் வருடங்கள் வாழ்ந்திருக்கின்றனர். வாழ்நாட்களின் நீளம் படிப்படியாகத்தான் குறைந்து
    வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. நண்பர் பிரேம்குமார் ,மாதவ சீனுவாச கோபாலன் , மற்றும் அரபுத்தமிழன் ஆகியோரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி . தமிழ கலைகள் ஆயிர மாயிர ஆண்டுகள்பழமையவை ..

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான் தயா....300 ஆண்டுகள் வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது எனக்கும்.

    ஏனென்றால் அனுபவபூர்வமாக அனுபவிக்கிறேன்.
    இந்த நாட்டில்.ஊரில் இருக்கும்போது ஓரளவு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தோம்.இங்கு எதுவுமில்லை.தண்ணீர்,காய்கறி தொடக்கம் சுவாசிக்கும் காற்றுவரை எதுவும் எதுவும் இயற்கையாக இல்லை.என் அம்மா அப்பா இருக்கின்ற உடம்புச் சுகம்கூட என்னிடம் இல்லை இப்போ.ஆகவே அவர்கள் வாழ்நாள் காலத்தைவிட என் வாழ்நாள் காலம் குறையும்தானே !

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கும் கருத்து களுக்கும் நன்றி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

வணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...